அறிதலும் பகிர்தலும் 14 _ அரசின் தோற்றமும் வளர்ச்சியும் | ஒரு சமூக மானிடவியல் நோக்கு நிகழ்விற்கான அழைப்பு! - விதை குழுமம் -




இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

குவியம் கனடா – கொலுசு சஞ்சிகைகள் இணைந்து நடத்தும் 2022 ஆண்டின் மனித உரிமை மீறல்கள் சார்ந்த சிறுகதைப் போட்டி
தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் சிறுகதைகள் விபரம்
முதலாம் பரிசு 6000 ரூபா (இந்தியன்)
இரண்டாம் பரிசு 4000 ரூபா (இந்தியன்)
மூன்றாம் பரிசு 2000 ரூபா (இந்தியன்)
நான்காம் பரிசு 1000 ரூபா (இந்தியன்)
ஆறுதல் பரிசுகள் எட்டு ஓவ்வொன்றும் 500 ரூபா (இந்தியன்)

பயணம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. ஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் ஒவ்வொரு பயணமும் வரலாறாய் பதிவு செய்யப்பட வேண்டும். இனிய நந்தவனம் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு பயணமும் வரலாறாக்கப்படுகிறது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற 16 சிறுகதைகள் அடங்கிய ‘சர்வதேச தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏப்ரல் மாதம், 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெளியிட இருப்பதால், இலக்கிய ஆர்வலர்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம்,
மானிடவியல் என்னும் கல்வித்துறை 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் தோற்றம் பெற்றது. எட்வார்ட் B டைலர் (EDWARD B. TYLOR) 1832 – 1917 லூயிஸ் ஹென்றி மோர்கன் (LOUIS HENRY MORGAN) 1815 – 1881 ஆகிய இருவரினதும் எழுத்துக்கள் நாகரிகத்தில் முன்னேற்றம் அடையாத பழங்குடி மக்களின் பண்பாட்டைப் பற்றிய ஆய்வாக அமைந்தன. டைலர் ‘PRIMITIVE CULTURE’ (புராதன சமூகங்களின் பண்பாடு) என்ற நூலை 1871 இல் வெளியிட்டார். மோர்கன் ‘ANCIENT SOCIETY’ (பண்டைய சமூகம்) 1877 இல் வெளியிட்டார். இவ்விருவரையும் அடுத்து மானிடவியல் ஆய்வுகளை வெளியிட்ட பிரான்ஸ் போவாஸ் (FRANTZ BOAS) 1858 – 1942 அறிவுலகின் கவனத்தை ஈர்த்தார்.

இலங்கையில் நீடித்திருந்த உள்நாட்டுப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் பாதிப்புகள் தொடர்பான விவாதங்கள், விசாரணைகள், ஆய்வுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
அந்த கொடிய போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உடன்பிறப்புகள், உறவினர்கள் நடத்திவரும் அறப்போராட்டங்களும் முற்றுப்பெறவில்லை. அதேசமயம் நீடித்த அந்தப்போரின் உறைபொருளையும் மறைபொருளையும் பின்னணியாக வைத்து நூல்கள் வெளிவருவதும் முற்றுப்பெறவில்லை. தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது தமிழ் ஈழ விடுதலைப்போர் என்பதை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் பல வெளிவந்தன. வந்தவண்ணமிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியில் முக்கிய பொறுப்பிலிருந்து, போர் முடிவுற்ற காலத்தில் சரணடைந்து, புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறிய தமிழினி சிவகாமி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில், விடுதலைப்புலிகளினால் கடல்பரப்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கடற்படையைச் சேர்ந்த கொமடோர் அஜித் போயாகொட எழுதிய காத்திருப்பு, ஆகிய நூல்கள் சிங்கள – தமிழ் மொழிகளில் வந்திருப்பதுபோன்று, மேஜர் கமால் குணரட்ண எழுதிய Road to Nandikadal என்ற நூலும் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.

புத்தகத் திருவிழா என்றதும் பழைய ஞாபகங்கள் சில காட்சியாய் மனதில் ஓடின. எங்க மாணவப் பருவத்தில் இலக்கிய ஆர்வமுள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய நூலகம் கட்டாயம் இருக்கும். அது அறை முழுவதும் பரப்பப்பட்டும் இருக்கும், அல்லது ஒரு அலுமாரிக்குள் அடங்கியதாகவும் இருக்கும். பாடசாலைகளிலும், சனசமூக நிலையங்களிலும் நூலகங்கள் இருந்தன. வீடு தேடியும் இதழ்கள் வரும். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு எங்கள் அடையாளங்களை அழிக்க முற்பட்ட சம்பவங்களும் அவ்வப்போது நினைவில் வந்து போகும். வாசிப்பு என்பது எங்கள் பெற்றோர்கள் எங்களுக்குத் தந்த கொடைகளில் ஒன்றாகும்.
சின்ன வயதில் இருந்தே சிறுவர் இலக்கியத்தில் இருந்து சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்துத் தந்ததால் நாங்களும் வாசிப்புக்கு அடிமையாகி விட்டிருந்தோம். அம்புலிமாமா, கண்ணன், மஞ்சரி, கல்கண்டு போன்ற புத்தகங்கள் கிடைத்தன. வளர்ந்ததும் எங்களுக்குப் பிடித்தமான நூல்களை நாங்களே தெரிவு செய்து வாசித்தோம். இன்று தமிழ் உலகறிந்த ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றியது வாசிப்பு மூலம் எனக்குக் கிடைத்த அனுபவமும் எனது வாசகர்களும்தான். இம்முறையும் சென்னை புத்தகக் காட்சியில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி, கனடிய எழுத்தாளரான எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கடைசியாக நடந்த சென்னை புத்தகக் காட்சியில் ‘என்ன சொல்லப் போகிறாய்?’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ ஆகிய இரண்டு நாவல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தன.