ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் - நூல்களைப் பேசுவோம்!



கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் - 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது. கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான ஓட்டப்போட்டி, பந்தெறிதல், கயிறு இழுத்தல், வேகநடை போன்ற பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றன. அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் உளரீதியாகவும் ஒன்றுகூடி மகிழ்வதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களின்பின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு உரையாட முடிந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்திருந்த பழைய மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.


இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. 14-08-2022 அன்று கம்பத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் பாரதன் தலைமையில் எழுத்தாளர் ஜீவபாரதி பரிசினை வழங்க எழுத்தாளர் குரு அரவிந்தன் சார்பாக பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில் இடம் பெற்றது. புலம் பெயர்ந்து வந்த இங்குள்ள இளம் தலைமுறையினரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு இயங்கிவரும் இந்த சொப்கா மன்றம், ஒன்று கூடலின் போது மிசசாகா உணவு வங்கிக்காகவும் உணவுப் பொருட்களைச் சேகரித்தது குறிப்பிடத் தக்கது. அங்கத்தவர்கள் மனமுவர்ந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேகரித்தனர். உணவு வங்கிக்கு உணவு சேகரித்துக் கொடுக்கும் இந்த வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்தும் சொப்கா மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காலம்: ஆகஸ்ட் 20, 2022 மாலை 5மணி- 9 மணி.
இடம்: 3600 Kingston Road, Scarborough Community Centre


இன்று 3600 கிங்ஸ்டன் 'றோட்'டில் அமைந்துள்ள ஸ்கார்பரொ சமூக நிலையத்தில் நடு இணைய இதழாசிரியரும், எழுத்தாளருமான கோமகனின் நினைவு கூரல் நிகழ்வும், நடு 50 இணைய இதழ் வெளியீடும் நடைபெற்றது. நேரிலும் ZOOM செயலி மூலமும் எழுத்தாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். எழுத்தாளரும் , பதிவுகள் இணைய இதழ் ஆசிரியருமான வ.ந.கிரிதரனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வு அமரர் கோமகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆரம்பமானது.
முதலில் வ.ந.கிரிதரன் கோமகனுடனான தனது அனுபவங்களையும், அவரது பன்முகப்பட்ட ஆளுமைகளைப்பற்றியும் , அவரது இலட்சியக் கனவான நடு இதழ் .அதன் எதிர்காலம் பற்றிய அவரது எண்ணங்களையும் குறிப்பிட்டு, நடு 50 இதழ் படைப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். நடு 50 இதழானது சிறந்த வடிவமைப்பில் மானுடரின் சமூக, அரசியற் சீர்கேடுகள், போர், சீதனப்பிரச்சினை, பொருந்தா மணம், சட்டரீதியாகத்திருமணம் என்னும் பெயரில் நடைபெறும் பாலியல் வன்முறை, இயற்கைச் சீரழிவு, காமம் அதன் விளைவுகள், பணியிடத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியற் பிரச்சினைகள், போர்ச்சூழல் ஏற்படுத்திய அழிவுகள், அது பெண்கள் மேல் ஏவிவிட்ட பாலியல் வன்முறை, இளைஞர்கள் மேல் ஏற்படுத்திய வன்முறை எனப் பலவற்றைப் பேசுமொரு காத்திரமான இதழாக வெளிவந்துள்ளது என்று கூறியதுடன் , நடு இதழில் வெளியான படைப்புகள் சிலவற்றைப்பற்றிய தனது கருத்துகளையும் எடுத்துரைத்தார்.
அடுத்துப் பேசிய 'காலம்' இதழின் ஆசிரியரும், சிறந்த புனைகதை ஆசிரியருமான செல்வம் அவர்கள் பாரிசில் தான் சந்தித்த கோமகனுடான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன் புலம்பெயர் இலக்கியமென்பது அக்காலகட்டத்து மக்களின் வாழ்வைப் பதிவுசெய்கின்றது. அவ்விலக்கியத்தில் கோமகனின் பங்களிப்பு முக்கியம் மிக்கது என்னும் கருத்துப்பட தன் கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் நடு இணைய இதழ் மூலம் பல்வேறு கருத்துகளைக்கொண்ட படைப்பாளிகளையெல்லாம் அரவணைத்துச் சென்றார். புதிய படைப்பாளிகள் பலரை (ஓவியர்கள் உட்பட) அறிமுகப்படுத்தியது அது முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Meeting ID: 810 8733 4304
Passcode: 521902
நடு இணைய இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், நடு பதிப்பக வெளியீட்டாளருமாகிய திரு. கோமகன் அவர்களை நினைவு கூரும் முகமாகவும், நடு சஞ்சிகையின் அச்சு பிரதியான 50 வது இதழை கனடாவில் வெளியிடும் முகமாகவும், எதிர்வரும் ஜூலை 16 ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுரோவில் கூட்டம் ஒன்று கோமகனின் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரொறன்டோ நேரம் :- மாலை 5.30 மணி
லண்டன் நேரம் :- இரவு 10.30 மணி
ஐரோப்பிய நேரம் :- இரவு. 11.30 மணி
இலங்கை நேரம்:- காலை 3.00 மணி ( ஞாயிற்று கிழமை )
அவுஸ்ரேலிய நேரம். காலை 7.30 மணி ( ஞாயிற்று கிழமை )
அக்கூட்டத்தினை 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியரும், எழுத்தாளருமாகிய வ. ந. கிரிதரன் தலைமையேற்று நெறிப்படுத்த உள்ளார்…
மேற்படி கூட்டத்தில் கோமகனின் நண்பர்களும் எழுத்தாளர்களுமாகிய
1) ஶ்ரீரஞ்சனி
2) செல்வம் ( காலம் சஞ்சிகை )
3) ஜயகரன்
4) கோமகனின் பால்ய கால நண்பர்கள்
என பலரும் உரையாற்ற உள்ளனர்.
- இத்தகவல் இறுதி நேரத்தில் கிடைத்ததால் உரிய நேரத்தில் பிரசுரிக்க முடியவில்லை. ஒரு பதிவுக்காக பிரசுரிக்கின்றோம். - பதிவுகள்.காம் -

வணக்கம்! மணற்கேணி இருமாத இதழைத் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது 57 ஆவது இதழ் தயாராகி வருகிறது. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆய்விதழ்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கெனத் தனித்துவமானதொரு அடையாளத்தை மணற்கேணி உருவாக்கியிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
2010 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் முதல் இதழ் வெளியானபோது கதை, கவிதை என படைப்பிலக்கியத்துக்கும் இடம் அளித்திருந்தது. பின்னர் ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் ஒரு ஆய்விதழாகத் தன்னை மாற்றிக்கொண்டது.

தமிழ் இணையக் கழகம் - தமிழ்நாடு & தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் - இலங்கை இணைந்து நடத்திய “தமிழ் இணையம் 100” நிகழ்வை 2-7 -2022 சனிக்கிழமை சென்னை, அண்ணா நூலக கட்டிட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் தொடக்கமாக தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் அமைப்பின் செயலாளர் சி. சரவணபவானந்தன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து நிகழ்வின் நோக்கவுரையைத் தமிழ் இணைய கழகத்தின் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் அமைப்பின் நோக்கம் குறித்தும் இந்த நிகழ்வின் சிறப்புக் குறித்தும் பேசினார். நிகழ்வின் தொடக்கமாக தமிழ் இணையக் கழகம் நடத்திய இணைய வழி உரையாடல் 100 நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 18 கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை நூலாக்கம் செய்து ஆய்வுக்கோவையாக அமெரிக்காவில் வருகைபுரிந்திருந்த மணி மணிவண்ணன் அவர்கள் வெளியிட சென்னையின் இயங்கிவரும் இந்திய அரசின் தேசியத் தகவலியல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநரும் முனைவர் இ இனிய நேரு அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களுக்கான கவிதைத்தொகுப்பு நூலிற்குக் கவிதைகள் வரவேற்பு! இறுதி நாள் – 10.07.2022 வரை!
அன்புடையீர் வணக்கம்! இலங்கையின் மத்தியப் பகுதியில் வாழும் இளம் மலையகத் தமிழ்க் கவிஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு சிறு முயற்சியாக கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று தமிழகத்தில் வெளியாகவுள்ளது. அதில் மலையகத்தைச் சேர்ந்த இளம் படைப்பாளர்கள் தத்தம் கவிதைகளை எழுதி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் ISBN எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.