எழுத்தாளர் செ.சுதர்சனின் 'காலிமுகம் 22' கவிதைத்தொகுப்பு!


மெய்நிகர் இணைப்பு | Meeting ID: 895 2954 3173 | Passcode: 202886

வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (14/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு பிரதான 8.00 மணிச் செய்திக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில்(www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் 264 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.பா.நூருல்லாஹ்(மதுரை) (சிறுகதை:வேண்டாத காரணம்..),
கவிஞர்.கவிஜி (கவிதை:இறைவேளை..),
கவிஞர்.பாத்திமா முஜாமளா முபாரக்,
கவிஞர்.ராகினி முருகேசன்(கவிதை:பிரசவிக்கும் வலி..),
எழுத்தாளர்.முபீன் சாதிகா (குறுங்கதை:மயில் பெண்),
எழுத்தாளர்.திருமலை.சுந்தா(குறுங்கதை: பொறுமையும் சினமும்..),
கவிஞர்.வே.சுகந்தி(தமிழகம்)(கவிதை:தென்றலே தூது போ)
கவிஞர்.விக்ரமாதித்தன் (எப்படியும் இருந்துகொண்டே இரு.. நன்றி:ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா'),
எழுத்தாளர். இரா.சம்பந்தன்(கனடா) (கட்டுரை:ஓளவை காட்டும் பெண்கள்),
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும். உங்கள் படைப்புக்களையும் உங்கள் குரலில் (எம் பி 3 ஒலிவடிவில்)ஒலிப்பதிவுசெய்து அனுப்புங்கள்.உங்கல் நண்பர்களின் படைப்புக்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.

மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும் எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு பேருவலை, மருதானையிலுள்ள அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் அப்துல் அஃலாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், இரத்தினக்கல் வியாபாரிகளான அல்ஹாஜ் எம்.ரீ.எம். ஹாரிஸ் மற்றும் அல்ஹாஜ் அஸ்ஹர் ஸவாஹிர் ஆகியோர்கள் நூல்களின் முதல் பிரதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இலங்கையில் அண்மையில் மறைந்த மூத்த எழுத்தாளரும், ஊடகவியலாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாடும் வகையில், அன்னாரை கொண்டாடும் நிகழ்ச்சியினை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் 15 ஆம் திகதி ( 15-10-2022 ) சனிக்கிழமை மெய்நிகரில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அன்புடன் அழைக்கின்றது.
மெய்நிகர் அரங்கு ( 11-09-2022 ) காணொளி - https://youtu.be/9XKG3bJ-77I
வன்னி, கிழக்கு & மலையகப் பகுதிகளைச் சேர்ந்த , 2024 க.பொ.த (உயர்தர விஞ்ஞானம்) கற்கவுள்ள பொருளாதாரரீதியில் பின் தங்கிய மாணவர்களுக்கான அனுமதி பற்றிய யாழ் இந்துக்கல்லூரியின் அறிவித்தல். விடுதி வசதியும் இலவசம்!

கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் - 19 காரணமாக இரண்டு வருடங்கள் தள்ளிப் போடப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இம்முறை நடைபெற்றது. கனடா தேசிய கீதம், தமிழ்வாழ்த்து, கல்லூரிக்கீதம், கொடிவணக்கம், மற்றும் எம்மைவிட்டுப் பிரிந்தோருக்கான அகவணக்கம் போன்றவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து காலை உணவு வழங்கப்பட்டது. அதன்பின் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று மதிய உணவு வழங்கப்பட்டது.
மதிய உணவைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமான ஓட்டப்போட்டி, பந்தெறிதல், கயிறு இழுத்தல், வேகநடை போன்ற பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றன. அங்கத்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் உளரீதியாகவும் ஒன்றுகூடி மகிழ்வதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. நீண்ட நாட்களின்பின் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு உரையாட முடிந்தது. இந்த நிகழ்வில் பிரான்ஸ், நோர்வே, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்திருந்த பழைய மாணவர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 5:00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை 6:00 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.


இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள கனடா எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய 'அறாம் நிலத்திணை" கட்டுரை நூல் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 43 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. 14-08-2022 அன்று கம்பத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் பாரதன் தலைமையில் எழுத்தாளர் ஜீவபாரதி பரிசினை வழங்க எழுத்தாளர் குரு அரவிந்தன் சார்பாக பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

பீல் பகுதியில் உள்ள சொப்கா குடும்ப மன்ற ஒன்று கூடல் சென்ற ஞாயிற்றுக் கிழமை 07-08-2022 மிசசாகா கொம்யூனிட்டி சென்ரர் பூங்காவில் இடம் பெற்றது. புலம் பெயர்ந்து வந்த இங்குள்ள இளம் தலைமுறையினரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு இயங்கிவரும் இந்த சொப்கா மன்றம், ஒன்று கூடலின் போது மிசசாகா உணவு வங்கிக்காகவும் உணவுப் பொருட்களைச் சேகரித்தது குறிப்பிடத் தக்கது. அங்கத்தவர்கள் மனமுவர்ந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேகரித்தனர். உணவு வங்கிக்கு உணவு சேகரித்துக் கொடுக்கும் இந்த வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்தும் சொப்கா மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.