துயரச்சித்திரம்

அத்தானே அத்தானே!
எந்தன் ஆசை அத்தானே!
கேள்வி ஒன்று கேட்கலாமா.... உனைத்தானே!.. – வான்
ஓலியில் கமழ்ந்து இனித்த அந்தக் குரலின்
துயரம் என்னை அதிர வைத்தது!
புரட்சியில் வடிவெடுத்து
புது யுகங்களில்...
கலை இலக்கியங்களை
வகைப்படுத்தியவளே!
விதைப்புகள் தகர்ந்ததால்
சடுதியாய்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டு முனகினாயோ...
அதிசயமான அதிசயனின்
அரவணைப்பில் ஆழ்ந்தவளே...
உயர்ந்த கருத்துக்களில்
பொங்கிய விழுமியங்கள்
ஆழ்கடலின் மௌனம்போல்
அகவயத்தில் தொலைத்து
பூமியின் மடியில் மௌனித்து ஆழ்ந்தாயோ!


கவி யாற்றலை வளமுடைத் தாக்கி !


உன்னை நினைவு கூறுவதற்கு



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









