வாசிப்பு அனுபவம்: பவானி சற்குணசெல்வத்தின் 'மனச்சோலை'கட்டுரைத் தொகுதி! (பகுதி 1:) - ரஞ்ஜனி சுப்ரமணியம் -

பூஞ்சோலைகள் மனதுக்கு ரம்மியமும் மகிழ்வும் தருவதை அனைவரும் அனுபவத்தில் உணர்ந்திருப்போம். புறத்தில் இருக்கும் சோலைகளை விட அகம் என்ற மனதினையே நறுமணம் கமழும் சோலையாக்கி விட்டால் வாழ்வு எத்தகைய இன்ப நுகர்வைத் தரும் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? நாம் எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம். எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நம் எண்ணம் தூய்மையடையும் போதுதான் மகிழ்ச்சியும் நிழலைப் போல விலகாமல் நம்மைத் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதும் ஞானிகள், அறிஞர்கள் கூற்றாக நாம் அறிந்ததுதான்.
"மெய்யறிவு நற்பண்பினால் தூய்மையடைகிறது. நற்பண்பு மெய்யறிவினால் தூய்மைபெறுகிறது. எப்போதும் ஒன்றிருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும். பண்புடையவன் மெய்யறிவு உள்ளவனாக இருக்கின்றான். மெய்யறிவுடையவன் பண்புடையவனாக இருக்கின்றான். இரண்டும் சேர்ந்திருப்பது உலகிலேயே மிக மேன்மையானது". - கெளதம புத்தர் பொன்மொழி
மெய்யறிவும் நற்பண்புகளும் அனைத்து மானுடர்களுக்கும் தானாக அமைந்து , அகம் என்பது அழகான சோலையாக உருவாகி விடாது. அதற்கான சில வழிமுறைகள் பயிற்சிகள் வீட்டில் தொடங்கி நாடாளாவிய, தேசமளாவிய கல்வி முறைமைகளில் இருந்தும் பயிற்சிகளில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும்.
இலங்கையின் ஒற்றையாட்சியும், தமிழ் அரசியல்வாதிகளும் , தமிழ்த்தேசியமும் பற்றி... - நந்திவர்ம பல்லவன் -

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2021.05.21 அன்று இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் குருநாகல் மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை. இனவாதம், மதவாதத்துக்கெதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் என் கவனத்தை ஈர்த்தன. இவ்விதமாகத் தேசிய மக்கள் சக்தி கடந்த ஐந்து வருடங்களாகத் (தேசிய மக்கள் சக்தி 2019இல் ஆரம்பிக்கப்பட்டது) தென்னிலங்கை மக்கள் மத்தியில் நாட்டு அரசியலைப்பற்றி விமர்சித்து வந்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்டு நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பேராதவரவு அளித்திருக்கின்றோர்கள். ஆனால் இதுவரையில் எம் மக்கள் மத்தியில் எம் அரசியல் பற்றி எம் அரசியல்வாதிகள் எவரும் சுயவிமர்சனம் செய்யவில்லை. தொடர்ந்தும் எதற்கெடுத்தாலும் ஜேவிபியைப் பற்றி எமக்குத் தெரியும் என்பார்கள். தமிழ்த்தேசியம் தேசியம் என்று கூச்சலிடுவார்கள்.
முதலில் தமிழ்த்தேசியம் என்று கூறி வாக்குகள் கேட்டுவரும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களைத் தம் அரசியல்நலன்களுக்காக ஏமாற்றி வருகின்றார்கள். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ்த்தேசத்துக்கான உரிமை பற்றியது. தமிழீழ விடுதலைப்புலிகள் தனிநாட்டுக்காகப் போராடினார்கள்.இறுதிவரை போராடி மடிந்தார்கள். அப்போராட்டம் தமிழ்த்தேசியப் போராட்டம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்த்தேசியம் பேசுவது ஏமாற்று வேலை. தமிழர்கள் பலருக்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி முறையைக்கொண்டுள்ள இலங்கையின் அரசியல் அமைப்பை ஏற்பதாகச் சபதம் எடுத்துக்கொண்டே பதவியை ஏற்கின்றார்கள். அதனால் வரும் பயன்களை அனுபவிக்கின்றார்கள். இவர்களால் ஒருபோதும் தனிநாடு கோரிக்கையை முன் வைக்க முடியாது. இவர்கள் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டவர்கள். பிரிவினை கேட்பது தேசத்துரோகம்.
தமிழ்க்கட்சிகளுக்கு மத்தியில் தொகுதிப்பங்கீட்டுடன் கூடிய கூட்டணியொன்றின் அவசியம்! - நந்திவர்ம பல்லவன் -

இலங்கைத் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஏற்படும் வரையில் தமிழர்கள் மத்தியில் தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், ஏனைய தேசியக் கட்சிகள் எனப் பல கட்சிகள் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தனிநாட்டுக் கோரிக்கையடுத்து தமிழ்கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒன்றுபட்டுத் தேர்தல்களைச் சந்தித்து வந்தன. தற்போது மீண்டும் தனித்தனிக் கட்சிகளாகத் தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இது தவிர்க்க முடியாத நிகழ்வு. நாட்டில் மீண்டுமொரு தமிழர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறினால் ஒழிய இந்நிலை மாறப்போவதில்லை.
அதே சமயம் தமிழ்க் கட்சிகள் பலவும் தம் தனித்துவத்தை இழக்காமல், தம் வாக்கு வங்கிகளுக்கேற்பத் தொகுதிகளைப் பிரித்து கூட்டணி வைத்துக்கொண்டால் (தமிழகத்தில் கட்சிகள் செய்வதைப்போல்) நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பெரு வெற்றி அடையும் சாத்தியமுண்டு.
இவ்விதம் பல கட்சிகள் இருப்பதை நான் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. ஜனநாயகச் சூழலில் இதனை ஆரோக்கியமாகவே பார்க்கின்றேன். எல்லாக் கட்சிகளுக்கும் மக்கள் மத்தியில் தம் செயற்பாடுகளை, நோக்கங்களைக் கூறுவதற்குப் பூரண உரிமையும், வசதிகளும் உள்ளன. இவற்றைப்பயன்படுத்தி மக்களைத் தம் பக்கம் திரும்ப வைப்பதில்தான் அவற்றின் திறமை தங்கியுள்ளது.
'கரையில் மோதும் நினைவலைகள்' - தர்மினி -

. வெளியீடு மகிழ் பதிப்பகம்( கிளிநொச்சி) டிசம்பர் 2023 -
தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது ஏதாவது ஒரு சொல்லில் கண்டுபிடித்து விடுவார்கள். 'நீங்க சிலோனா?இலங்கையா? ஈழமா?' என்று கேட்டு அடுத்துக் கேட்பது 'நாட்டு நிலமைகள் எப்படியிருக்கு?' உரையாடல் தொடரும். பொது மக்கள் கவலையோடும் அக்கறையோடும் விசாரிப்பது உண்மை. ஓலா ஓட்டுனர் ஒருவர் சொன்ன விடயம் மறக்க முடியாதது, படிக்கும் காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி பின் தன் படிப்பு இடையில் நின்று தன்னுடைய வாழ்வு எப்படிப் பாதிக்கப்பட்டதென்று கவலையாகப் பேசினார். இப்படிப் பலர் உண்மையாகவே உறவுகளின் துன்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று களமிறங்கியதும் உதவியதும் பதவிகள் இழந்ததும் அறிவோம்.
பக்கத்திலிருந்து ஆயுதப்பயிற்சி கொடுத்து இச்சிறு தீவில் விளையாடியவர்களின் அரசியலும் நோக்கங்களும் வேறு. இனவாதம் எப்போதும் அருவருப்பானது, பயங்கரமானது. ஈழத்தமிழர், ஈழம் என்று சாதாரண மக்கள் கொண்ட பற்று இந்த அரசியல் சூதுக்களை அறியாத நிலை. ஆனால், அப்போது பயிற்சிகளை எடுத்த இயக்கங்களின் மத்திய குழுக்களும் தலைவர்களும் இதையெல்லாம் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால் அந்த அரசியலும் தெரியாமல் தான் தனி நாடு கேட்டுப் போராடியிருக்கிறார்கள் என்பது அவலமானது. ரோவும் கியு பிராஞ்சும் இயக்க அலுவலகங்களுக்குப் போய் வந்து எல்லாவற்றையும் பார்த்து நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் எழுதிய நுால்களும் கட்டுரைகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆயுதங்களை நம்பி நீதியைப் பெற முடியாது என்ற பாடத்தை அடுத்த சந்ததியினர் கற்றுக் கொள்ள இது உதவும்.
நடந்து முடிந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் பற்றி ... - நந்திவர்ம பல்லவன்-
இலங்கையென்னும் நாட்டில் அனைத்து மக்களும் சரிக்கு சமமாக இணைந்து வாழ்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையினை நீக்குவோம். புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம். அதுவரை மாகாண சபையினை இயங்க வைப்போம். அரசியல் கைதிகளை விடுவிப்போம். ' இவ்விதம் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்குகளைக் கேட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இன, மத, மொழி பேதமின்றி மக்கள் 2/3 அறுதிப் பெரும்பான்மையினை வழங்கியிருக்கின்றார்கள். பெரு வெற்றியை ஈட்டிய அவருக்கும் , ஏனையோருக்கும் வாழ்த்துகள். அநுர குமார திசநாயக்கவுக்கு இனித் தன் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்குத் தடைகள் எவையுமில்லை. அவர் அவற்றை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்.
அவருக்குப் பெரு வெற்றியைக் கொடுத்த தமிழ் மக்கள் மட்டக்களப்பு மூலம் எச்சரிக்கையொன்றையும் கொடுத்திருக்கின்றார்கள். தன்னை நம்பி வாக்களித்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம். மகிந்த ராஜபக்சவுக்குக் கொடுக்காத வெற்றியை அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வெற்றியைப் படிக்கல்லாக வைத்து நாட்டின் அனைத்துப் பிரச்னைகளையும் அவர் தீர்க்க வேண்டும். தீர்த்தால் வரலாற்றில் சரித்திர புருசனாக நிலைத்து நிற்பார். தவறின் வரலாறு மீண்டுமொரு தடவை சுழலும் பழைய இடத்தை நோக்கி.
இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 3 - ஶ்ரீரஞ்சனி -

உங்களைச் சந்திப்பதற்காக பாமட்டும்தான் வருகிறோம், Yosemite National Park ஐப் பார்ப்பதற்கு நேரம் வராது என ராஜாவை அழைத்துக் கூறிவிட்டுத்தான் படுக்கைக்குச் சென்றிருந்தோம். அடுத்த நாள் Fresnoக்குப் போகமுதல், Golden Bridgeஐப் பார்த்துவிட்டுப் போவோமா, கார் இல்லாமல் அதனைப் பார்ப்பது சிரமமென்றா மகள். சரியென, வழியில் யூகலிப்பரஸ் மரங்களால் நிறைந்திருந்த 909 அடி உயரமான Mount Sutroஇல் பார்த்துவிட்டு Golden Bridgeக்குப் போனோம். அது மனதைக் கொள்ளைகொள்ளும் அளவுக்கு மிகவும் அழகாக இருந்தது. பொன் கண்டுபிடித்த காலத்தின் அடையாளத்தில் இதுவும் ஒன்றென்றனர்.
அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரமாகப் பயணித்தபோது, என் வேகத்தில் Fresnoஐ அடைய ஐந்து மணிக்கு மேலாகிவிடுமென்பது தெரிந்தது. ஐந்து மணிக்குப் பின்னர் அங்குபோய் காலையில் 7 மணிக்கு அங்கிருந்து நாங்கள் புறப்படுவது சிரமமாகவிருக்கும், திருமணமொன்றுக்காக அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு அவர்களின் வீட்டிலிருந்து வெளியேற வேண்டியிருந்ததால்
அவர்களுக்கும் அசெளரியமாகவிருக்குமென்ற யதார்த்தமும் புரிந்தது. எனவே அவர்களை அழைத்து எங்களுக்காகச் சிரமப்பட்டு உணவு தயாரித்திருப்பீர்கள், வராமல் விட்டால் மன்னிப்பீர்களா என நிலைமையை விளங்கப்படுத்தினேன். சமையலுடன் தொடர்ந்தும் வேறுபட்ட சிற்றுண்டிகளையும் அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர். சாப்பிடுவதற்கோ, சந்திப்பதற்கோ கொடுத்துவைக்கவில்லையென மிகவும் வருத்தமாக இருந்தது. சரி, பரவாயில்லை, அடுத்த ஆண்டில் நாங்கள் கனடா வருகிறோம். அப்போது இதற்கான தண்டனையாக உங்கள் வீட்டில் வைத்து எங்களை உபசரியுங்கள் எனப் பகிடியாகச் சொன்னார் ராஜா.
தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளரும், தலித்தியச் சிந்தனையாளருமான பேராசிரியர் ராஜ் கெளதமன் மறைந்தார்!

பேராசிரியர் ராஜ் கெளதமன் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர். தலித்தியச் சிந்தனையாளர். நாவலாசிரியர். மொழிபெயர்ப்பாளர். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரும் இழப்பு. தமிழ்ப் பண்பாடு, தலித் இலக்கியம் என்றால் நினைவுக்கு வரும் ஆளுமைகளில் ஒருவர். தனது எழுத்துகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் அவர். அவரது மறைவால துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் பங்குகொள்கின்றோம்.
அவரை நினைவு கூரும் முகமாகப் பேராசிரியர் அ.ராமசாமி தனது வலைப்பதிவில் பதிவேற்றியிருந்த 'ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்' என்னும் கட்டுரையினை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.
காலமும் மனிதனும் - முனைவர் சி. இரகு, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம். -

'காலமே காலமே
நீ எப்படி இயங்குகின்றாய்?'
'நான் நானகவே
இருக்கின்றேன்.
யாருக்கும் பாரபட்சம்
பார்ப்பதில்லையே…! – அதனால்
எல்லோருக்கும்
என்னைப் பிடிக்கும்.'
'ஏன் எல்லோருக்கும்
உன்னைப் பிடிக்கும்?'
'அனைவருக்கும்
சமமான நேரத்தைதான்
கொடுக்கின்றேன்.
அன்போடு நடத்துகின்றேன்.
எல்லோருடைய வாழ்விலும்
யான் இன்றியமையாத
பங்களிப்பாக இருக்கின்றேன்.
கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் கனடாவில் கார்த்திகைக் காந்தளும் பாப்பி மலரும் - குரு அரவிந்தன் -

கனடாவில் நினைவுதினம் என்பது போர்க்காலத்தில் நாட்டுக்காக உயிர் தந்தவர்களையும், அக்காலத்தில் போர்முனையில் தம் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியவர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அனுசரிக்கப்படுகின்றது. இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மரணித்த போர் வீரர்களும் அடங்குவர். இந்த வாரம் முழுவதும் கனடியர்கள் சிகப்பு நிறத்திலான பாப்பி மலர்களை அணிவதன் மூலம் மரணித்தவர்களை நினைவேந்தல் மூலம் கௌரவிக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மொய்னா மைக்கேல் என்பவர்தான் சிவப்பு பாப்பி மலரை 1918 ஆம் ஆண்டு இதற்காக அறிமுகம் செய்தார். 1921 ஆம் ஆண்டு கனடாவில் இந்த சிவப்பு பாப்பி மலர் இதற்காக அறிமுகமானது. கனடாவில் சில அமைப்புக்கள் வெள்ளை பாப்பி மலரை அறிமுகம் செய்தாலும் அது பெரிதாக மக்களிடையே பிரபலமடையவில்லை.
இதற்கு முன்பு தென்னாபிரிக்கப் போரின் நினைவு நாளாகக் கனடாவில் இந்தத் தினம் இருந்தது. முதலாம் உலப் போரின் போது சுமார் 61,000 கனடியர்கள் கொல்லப்பட்டனர். 1918 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் தான் போர்நிறுத்தத்திற்கான கையெழுத்திடப்பட்டது. இதன் காரணமாக 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 திகதி கனடியர்கள் போர் நிறுத்தத் தினத்தை நினைவேந்தல் தினமாக நினைவு கூர்ந்தாலும், உத்தியோக பூர்வமான நினைவேந்தல் 1931 ஆம் ஆண்டுதான் இத்தினத்தில் இடம் பெற்றது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளும் வெவ்வேறு பெயர்களில் இந்தத் தினத்தையே கடைப்பிடிக்கின்றன.
இந்த நினைவேந்தல், இரண்டாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர், அமைதி காக்கும் பணிகள் மற்றும் பிற சர்வதேச இராணுவ ஈடுபாடுகளின் போது போரில் இறந்தவர்களின் நினைவாகவும் இடம் பெறுகின்றது. இதுவரை சுமார் 118,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு மோதல்களில் இறந்துள்ளதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2020-2021 ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக பொது இடங்களில் நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறவில்லை.
ஓராயம் அனுசரணையுடன் கிளிநொச்சியில் விதைப்பந்து வீசும் நிகழ்வு!

நாம் வாழும் இந்த அழகான, வளமான பூமிக்கோளை போர்களினால், தவறான அணுகுமுறைகளினால் சீரழித்து வருகின்றோம். இதனைப்பாதுகாப்பது மனித குலம், சக உயிர்கள் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவசியம். இதற்கு முதற் படி இயற்கை வளங்களைப் பேணுவதாகும். இங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் வாழ்வதற்கு உணவுச்சங்கிலி முறையாகப் பேணப்படுவது அவசியம். இதற்கு முதற்படி காடுகளைப் பேணுவதாகும். அபிவிருத்தி என்னும் பெயரில் காடுகளை அழித்துக்கொண்டே வருகின்றோம். இப்படியே நிலை நீடித்தால், உணவுச்சங்கிலி சீர்குலைந்தால், இந்த நீலவண்ணக் கோளில் உயிரினங்கள் வாழும் நிலையே இல்லாது போய்விடும். இதனால்தான் சூழலியலாளர்கள் சூழலைப்பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார்கள்.
கம்பராமாயணத்தில் வாழ்த்து அணி! - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -

முன்னுரை
’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று வாழ்த்து அணியாகும். தண்டியலங்காரத்தில் வாழ்த்து அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
வாழ்த்து அணி
இன்ன தன்மையுடையவர்களுக்கு இன்ன நன்மைகள் ஆகுக என உரைப்பது வாழ்த்து என்னும் அலங்காரம் ஆகும்.
"இன்னார்க்கு இன்னது இயைக என்றுதாம்
. முன்னியது கிளத்தல் வாழ்த்து என மொழிப"
(தண்டியலங்காரம் 60)
அயோத்தி மக்கள் இராமனை வாழ்த்துதல்
அயோத்தி நகரத்து மகளிர் அனைவரும் வலிமையுடைய ஆடவரும் கௌசல்யா தேவியும், தசரத சக்கரவர்த்தியும் போலவே இக்குமாரர்கள் வாழ்க என்று அவரவர் மனதுக்குப் பொருந்திய கடவுளை வணங்கி வேண்டுவார்கள். 60,000 வருடங்கள் பேரோடும், புகழோடும் நாட்டு மக்களின் நலத்தையேப் பெரிதாக எண்ணி தசரதன் ஆட்சி புரிந்தார். அவ்வாறு பன்நெடுங் காலம் மக்கள் போற்றும் மன்னனாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றனர்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024 - குரு அரவிந்தன் -
* படங்களைத் தெளிவாகப் பார்க்க ஒரு தடவை அழுத்தவும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10--2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், திரு.சி. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.
ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மண்ணிலும் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வத்தோடு இவர்கள் காட்டும் ஈடுபாட்டைப் பாராட்டியும், இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வு கனடாவில் இடம் பெற்றிருந்தது. கனடாவில் ஒரு இணையத்தால் வழங்கப்படும் உயர் இலக்கிய விருதாக இந்த விருது மதிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளைப் பெறுவதற்காகக் கனடா தமிழ் சமூகத்தில் இருந்து மதிப்புக்குரிய ஆறு பெரியோர்களை செயற்குழுவினர் இம்முறை தெரிவு செய்திருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடாப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன செல்வி சோலை இராஜ்குமார், சென்னி இராஜ்குமார், சோழன் இராஜ்குமார், டிலன் கென்றிக் பிளசிடஸ் ஆகியோரால் இசைக்கப்பெற்றன. அடுத்து அகவணக்கம் இடம் பெற்றது. இணையத்தின் துணைத்தலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. இதில் திருமதி வனிதா குகேந்திரனின் கலைக்கோயில் மாணவிகளான செல்வி ஆதுரா கமலராஜன், செல்வி ஆனிரா கமலராஜன், செல்வி வஸ்மிகா ராகுலன் ஆகியோர் பங்கு பற்றினர். இதைத் தொடர்ந்து திரு. க. ரவீந்திரநாதனின் தலைவர் உரை இடம் பெற்றது. அடுத்து செல்வன் தருண் செல்வம், செல்வி வைஸ்ணவி சதானந்தபவன் ஆகியோரது இளையோர் உரையும், காப்பாளர் சிந்தனைப்பூக்கள் திரு. எஸ். பத்மநாதனின் உரையும் இடம் பெற்றன.
வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்

இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI
யு டியூப்பில் கேட்க
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
இரவு வானில் சுடர்கள் ஒளிரும்.
உறக்கம் மறந்து கிறக்கம் கொள்வேன்.
இரவு வான் அறிவியல் புத்தகம்.
இவ்விதமே நான் எப்போதும் எண்ணுவேன்.
இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.
ஐ.நா. தொடக்கம் அறுகம்பே வரை : அய்னாவின் கட்டுரையை முன்னிறுத்தி! - ஜோதிகுமார் -

1
இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக, இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் இலங்கையைச் சார்ந்தவர்கள் எனவும், ஒருவர் மாத்திரம் மாலைத்தீவு பிரஜை எனவும் கூறப்படுகின்றது. பிரதான நபர் இன்னும் கைதாகவில்லை எனக்கூறப்பட்டாலும் இன்றுவரை அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்துச் சரியான தகவல்களில்லை. தாக்குதல் தொடர்பிலான கைதுகளும், எழுந்த களேபரமும் கடந்த ஒக்டோபர் மாத இறுதியை ஒட்டி இடம்பெற்ற நிகழ்வுகளாகும்.
தமிழ்த் தீவிரவாதத்தைப் போலவே, இஸ்லாமியத் தீவிரவாதத்தின் தலையெடுப்பும் இலங்கைக்கு ஒன்றும் புதிதானதில்லை. ஆனால், முன்னைநாள் சட்டமா அதிபர் லிவேரா முதல் முன்னைநாள் புலனாய்வு இயக்குனர் ஷானி அபேயசேகர வரையில், எடுத்துரைக்கும் பிரதான விடயம் யாதெனில், இவற்றில் அரச பங்கேற்பு உண்டு என்பதும் இத்தீவிரவாதிகள் அரசால் தீன்போட்டு வளர்க்கப்பட்ட சக்திகளாவர் என்பதுமேயாகும். இவ்அடிப்படையில், இத்தீவிரவாதிகள் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு, ஓர் ஆழமான அரசியல் சதி உண்டு என்பதும் - அதற்கூடு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற (அல்லது மாற்றியமைக்க) செய்யப்படுகிறது, என்பதுமே மேலவர்களின் கூற்றில் முக்கியத்துவப்படும் செய்தியாகிறது.
இது உண்மையாக இருக்கலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அதற்கூடு நாட்டில் இனவாதத்தைத் தலைவிரித்து ஆடச்செய்துவிட்டு, அதற்கூடு கோட்டாபாய ஆட்சிக்கு வந்தார் என, வாதிடுவோரும் உண்டு.
முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைந்தார்!

முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்கள் மறைந்த தகவலினை இணைய வாயிலாக அறிந்தோம். இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் மு.பொ. இவர் எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் சகோதரர். யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல். திறனாய்வு, சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பன்முகப் பங்களிப்பாளர். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர் துயரிலும் நானும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். ஆழ்ந்த இரங்கல்.
புலம்பெயர் தமிழ் இலக்கியத்தில் கனடாச் சிறுகதைகளின் வகிபாகம் குறித்து.- வ.ந.கிரிதரன் -

- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கவிருந்த எனது உரையின் முழு வடிவமிது. அன்று நேரக் கட்டுப்பாடு காரணமாக முழுமையாக , விரிவாக உரையாட முடியவில்லை. -
1. 'டயற்போறா' பற்றிய சிந்தனைகள்...
இன்று புலம்பெயர் மக்களைக் குறிக்கப் பாவிக்கப்படும் டய்ஸ்போறா என்னும் ஆங்கிலச் சொல் ஆரம்பத்தில் புகலிடம் நாடி பல்வேறு திக்குகளாகச் சிதறடிக்கப்பட்ட யூதர்களைக் குறிக்கப்பயன்பட்டது. ஆரம்பத்தில் யூதேயா யூதர்களின் தாயகமாக விளங்கியது. அது தற்போதுள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசம். கி.மு.586இல் பாபிலோனிய மன்னர் யூதேயா மீது படையெடுத்தார். எருசலேமிலிருந்த முதலாவது தேவாலயத்தை அழித்தார். யூதர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினார். யூதர்கள் தம்மிருப்புக்காகப் பல்வேறு திக்குகளிலும் சிதறடிக்கப்பட்டார்கள். இதனைக்குறிக்கவே கிரேக்க மொழியில் இச்சிதறலை diaspeirō என்றழைத்தனர். இதன் அர்த்தம் சிதறல். இதிலிருந்து உருவான சொல்லே டயஸ்போறா (Diaspora).
இவ்விதமாகத் தங்கள் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட யூதர்கள் மீண்டும் தம் தாயகத்துக்கு வந்து குடியேறினார்கள். இரண்டாவது தேவாலயத்தைக் கட்டினார்கள். மீண்டும் கி.மு 63 - கி.பி 135 காலப்பகுதியில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பில் யூதர்களுக்கும், ரோமானியர்களுமிடையில் மோதல்கள் ஏற்பட்டன. ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சிகள் செய்தனர். அக்கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. மீண்டும் யூதர்கள் அவர்களின் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். எருசலேமிலிருந்த அவர்கள்து இரண்டாவது தேவாலயம் அடித்து நொருக்கப்பட்டது.
இயற்கை எழிலும், தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றையொன்று விஞ்சும் San Francisco - 2 - ஶ்ரீரஞ்சனி -

ஊதா நிற மண்ணுள்ள அந்தக் கடற்கரையைப் பார்க்காமல் திரும்புவதற்கு எனக்கோ மனமிருக்கவில்லை. தேசிய பூங்கா ஒன்றுக்கு ஊடாகச் சென்று, காடு போன்ற பிரதேசமொன்றைத் தாண்டி Pfeiffer Beachஐத் தேடினோம். அதற்கான பாதையென மிகவும் ஒடுங்கிய வழியொன்றை google map காட்டியது. அதற்குள்ளால் கார் போய்வர முடியுமா என்பது பெரும் சந்தேகமாக இருந்ததால், அது சரியான வழிதானா என மகளுக்குக் குழப்பமாக இருந்தது. எனவே அதனைத் தாண்டிச் சற்றுத் தூரம் போய் வழியிலிருந்த கடை ஒன்றில் Pfeiffer Beachக்கு எப்படிப் போவதெனக் கேட்டோம். அந்த ஒடுங்கிய வழிதான் அதற்கான வழியென்றார்கள். இருட்டத் தொடங்கிவிட்டது, இப்படி ரிஸ்க் எடுத்து அங்கு போகத்தான் வேண்டுமா என்பது மகளின் கேள்வியாக இருந்தது. நானோ போய்த்தான் பார்ப்போமே என அடம்பிடித்து ஒருவாறாக அங்கு போய்ச் சேர்ந்தோம். அப்போது, அங்கிருந்தவர்கள் எல்லோரும் விலகிக்கொண்டிருந்தார்கள். அதனால் கொஞ்சம் பயம் பிடித்துக்கொண்டது. இந்த மண் ஊதாவாக இருக்கிறதா, வந்ததற்குப் பிரயோசனமா என்றா மகள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது, இருப்பினும் நீண்ட நேரம் அங்கிருக்க முடியவில்லை. நன்கு இருட்ட முன்பாக அவசரமாக வெளியேற வேண்டியிருந்தது. வழியில் சூரியன் மறைவதைப் பார்த்தபின் நகருக்குள் நுழைந்தோம்.
அடுத்ததாக இன்னொரு இடத்துக்கும் போகவேண்டுமென்றிருந்தது. அன்று காலை Big Sur போகும் வழியில், Santa Cruz என்ற நகரைக் கடந்து சென்றபோது, ஓரிடத்தில் strawberry விற்றுக் கொண்டிருந்தனர். California strawberriesக்குப் பெயர்பெற்றது என்றா மகள். பழங்கள் மிகவும் பெரியனவாகவும், அடர் சிவப்பாகவும், அழகாகவும் இருந்தன. மாதிரிக்கு ஒன்றைச் சாப்பிட்டுப் பார்க்கலாமென்றிருந்தது. அப்படிக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கட்டுமா என அருகே நின்ற ஒருவரிடம் கேட்டேன். அவர் தன் கையிலிருந்த கூடைகளிலிருந்த பழங்களில் ஒன்றை எடுக்கச்சொன்னார். “மிகவும் சுவையாக இருக்கிறது, என்ன விலை?” என்றேன். “இது உங்களுக்குத்தான்!” என சிறியதொரு கூடை நிறைந்த பழங்களை அவர் எனக்குத் தந்தார். “இல்லை, வேண்டாம், நாங்கள் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம்,” என்றோம். அது தன் அன்பளிப்பு என்றார் அவர். பின்னர் தான் ஒரு கடை வைத்திருப்பதாகவும் அங்கு வந்து தங்களின் strawberry பானத்தைக் குடித்துப் பார்க்கவேண்டுமெனவும் அன்பாகக் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் அவரும் அந்தப் பழக்கடையின் ஒரு வாடிக்கையாளர் என்பது தெரிந்தது. என்னுடன் சேர்த்து தன்னை ஒரு படம் எடுக்கும்படியும், அந்தப் படத்தைக் காட்டினால் கடையில் நாங்கள் அதை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாமென்றும் மகளிடம் சொன்னார். அதனால் திரும்பிவரும்போது, அந்த மனிதரின் அன்புக்கு மரியாதை செலுத்தும்முகமாக, நேரமானாலும் கட்டாயம் அங்கு செல்லவேண்டுமென முடிவெடுத்திருந்தோம்.
ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சி 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி'! எழுத்தாளர் மாத்தளை சோமு கெளரவிப்பு!

- எழுத்தாளர் மாத்தளை சோமு -
ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் இன்று கனடா நேரம் அதிகாலை 4 மணி தொடங்கி ஏழு மணி வரை நடைபெற்றது. சங்கத்தலைவர் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் வரவேற்புரையினை ஆற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியை எழுத்தாளர் நடேசன் சிற்ப்பாக நெறிப்படுத்தினார். நிகழ்வில் எழுத்தாளர் ந.சுசீந்திரன் புகலிட நாவல்கள் பற்றி\யும், எழுத்தாளர் வ.ந..கிரிதரன் புகலிடச் சிறுகதைகள் (குறிப்பாகக் கனடாச் சிறுகதைகள்), மற்றும் எழுத்தாளர் சிவராசா கருணாகரன் புகலிடக் கவிதைகள் பற்றி உரையாற்றினார்கள்.
நிகழ்வின் பிரதான அம்சம் மூத்த எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களைக் கெளரவித்தலாகும். அவரை பற்றிய கெளரவிப்பு உரையினைப் பாடும்மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் மிகவும் சிறப்பாக ஆற்றினர். தொடர்ந்து ஏற்புரையினை எழுத்தாளர் மாத்தளை சோமு ஆற்றினார். தொடர்ந்து சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், செயலாளருமான எழுத்தாளர் முருகபூபதி நன்றியுரையினை ஆற்றினார். தொடர்ந்து கலந்துரையாடலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.
அ. பால மனோகரனின் நிலக்கிளி. - நடேசன் -

ஒரு கதையை, அதைப் படிப்பவர்களின் மனதில் நீண்டகாலம் தங்கியிருப்பதற்கு ஏற்றவாறு எழுதுவது என்பது பல எழுத்தாளர்களுக்குச் சவாலான விடயம். அதை மொழியில் காட்சிப்படுத்துவது எனலாம் . அதற்காக எழுத்தாளர்களான நாம் சில யுக்திகளைக் கையாள்வோம்.
ஒரு பெண் நடந்து போனாள் என்பதைவிட அவளது கறுப்பு நிறமான காலணிகளின் ஓசை என்னை விட்டு விலகிச் சென்றது என்போம் - இங்கே ஒலி , காட்சி என்பவற்றின் மூலம் வாசிப்பவரின் மனதில் ஒரு குறித்த சம்பவத்தை நிறுத்த முனைகிறோம் .
அதே போல் மேடையில் திரை விழுந்தது என்பதற்குப் பதிலாக சிவப்புக்கோடுகளைக் கொண்ட திரை, நாடகத்தின் முடிவில் மெதுவாக இறங்கி நாடகத்திலிருந்து பார்வையாளர்களைப் பிரித்தது என்று எழுதினால், இங்கே அந்தக் காட்சியை இவ்வாறு விவரிப்பதன் மூலம் மனதில் நிறுத்த முயல்கிறோம்.
அவளது பின்அசைவுகள் எனது இதயத்தை வேகமாகச் சுருங்கி விரியப் பண்ணின எனும்போது – இங்கே இரண்டு செயற்பாடுகளை நாம் காட்ட முயல்வதும் வாசகரின் மனதில் காட்சிப்படுத்தும் முயற்சியே ஆகும்.
கருமேகங்களாகக் கூந்தல் இருந்தது – எனும்போது மேகம், கூந்தல் ஆகிய இரண்டு பொருட்களை ஒப்பிடுகிறோம்.
இப்படியான உத்திகளைக் காளிதாசனிலிருந்து, கம்பன், பாரதி எனப் பலர் எடுத்தாண்டிருக்கிறார்கள். அவற்றையே நாமும் பின்பற்றுகின்றோம்.





இறுகப் பொத்தியிருந்த தனது காதுகளிலிருந்து கைகளை லோசாக விலக்கிப்பார்த்தாள் கெப்பி. இன்னும் அலைபேசியின் அழைப்பொலி ஓய்ந்தப்பாடில்லை. மீண்டும் இறுக மூடினாள். அவளின் செவிப்பறை முழுக்க அந்த அழைப்பொலிக்கு அவளது மனமே ‘காடுபோக்க (காட்டுப்பூனை)… காடுபோக்க... காடுபோக்க… காடுபோக்க…’ எனும் வார்த்தையைக் கோர்க்க, இறையத் தொடங்கிற்று.
மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









