சிறுகதை : முருகா ! - கடல்புத்திரன் -

*ஓவியம் - AI
'மயிலியப்புலக்குளம் பற்றிய நினைப்பு ' மனதில் வட்ட அலைகளை ஏற்படுத்த , ஏக்க மூச்சுக்கள் புகையாய் எழ அந்த செந்தாமரைக் கிராமம் ...சித்திரமாக விரிகிறது . அவ்விடத்து வெற்றிக்கழகம் , சட்ட கோப்புகளை வைத்துக் கொண்டு பல விசயங்களை சாதித்து வருகிறது , கோவில் வளவுக்குள் கலை நிகழ்ச்சிக்கான மேடை ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக உப அரசாங்க முறையிலான சிரமதானம் நடைபெற்றது , அந்த குளத்தில் சிறிதளவு கனமண்ணை வெட்டிய போது , செவ்வேலும் வேல்முருகு , பரமானந்தம் ... அவன் என வகுப்பு தோழர்கள் பலருடன் கூடையில் மண்ணை ஒருத்தர் ,மாறி ஒருத்தரிடம் கொடுத்து குளத்து அணையில் கொட்டியது நினைவுக்கு வந்தது . அலுவலகர்கள் வந்து வெட்டியதை பார்வையிட்டு அதற்கான தேனீர்ச்செலவை கொடுப்பர் , அவ்வலுவலகத்தில் வேலை பார்க்கிற கிராமத்தைச் சேர்ந்த தவபாலண்ணரின் புத்தியில் உதித்த புத்திசாலித்தனம் . தேனீர் , வடை ...போன்றவற்றை ஊர்க்காரர்களே வீடுகளிலிருந்து கொண்டு வந்து வழங்கினர் . கிடைக்கிற பணத்துடன் வெளிநாட்டிலிருக்கிறவர்களும் அதற்கு நிதியளிக்க சம்மதித்திருந்தார்கள் . கூட்டு முயற்சி இல்லாமல் இப்படியான திட்டங்கள் வெற்றி பெற முடியாது . கிராமத்தின் தலையாய கால்பந்துக்குழுவும் அவர்களுடையது தான் .
வந்ததிலிருந்து , இவன் , அடிக்கடி இப்படியே கிராம நினைப்புகளில் கரைந்து போய் விடுகிறவன் . ஈழவரசுக்கு எங்கேயிருந்து தான் ' மதம் பிடித்தது போன்ற அந்த உன்மந்தம் பிடித்ததோ ? '..., தமிழரின் வாழ்வைச் சிதைத்து சீரழித்துக் கொண்டே செல்கிறது . 'பக்கத்திலிருக்கிறவன் வாழ்ந்தால் தானும் வாழ்வான்' என்ற செவ்விந்தியரின் சிந்தனை எல்லாம் கிடையாது .' இனப்பகை' என்பது பஞ்சம் பசியில் வீழ்ந்தாலும் போகாத வியாதி , மாறுவதற்குப் பதில் பெருகிக் கொண்டே போகிற ஒன்றாக . காந்தியின் அகிம்ஷை , புத்தரின் ஞானம் , யேசுவின் நேசம் , இந்துக்களின் ஆன்மீகம் எதிலுமே நம்பிக்கைகளை துடைத்து விடுகிற அறுந்த இவர்களின் அரசியலில் அகப்பட்டுக் கொண்டு விட்டோம் . பாலஸ்தீனர்களை அழிக்கும் இஸ்ரேல் போல் , கிரீக் இளைஞர்களைப் பெருமளவில் கொன்ற கிரீக் அரசைப் போல , ஈழத்திலும் கொன்ற ...ஒரு மாற்றப்பட வேண்டிய அரசியலாகக் கிடக்கிறது .



மனதின் சாளரங்கள் திறப்பதற்கு மாமனிதர்களின் தத்துவங்கள் உதவுவது போல, சில வாசிப்புகளும் உதவுவதை அவள் அறிவாள். இறுகியிருந்த எண்ணங்கள் சிட்டுக் குருவிகளைப் போல சிறகடித்துப் பறக்கவும் , இனிய சங்கீதம் எங்கும் நிறைக்க வல்லதும் வாசிப்பு என்பதை மறுக்க முடியாது.
வானத்தைக் கருமேகங்கள் முற்றாக ஆக்கிரமித்திருந்தன. மார்கழி மாதத்துக் குளிர் ஊசி துளைப்பதுபோல அவளைத் துளைத்தது. மழை நீர் குட்டைகளாக அங்கும் இங்கும் தேங்கியிருந்தது. சேறும் சகதியாக இருந்த தரையில், காலடிகளை ஒவ்வொன்றாகத் தூக்கித்தூக்கி மெதுமெதுவாக அவள் வைத்தாள். “கவனமப்பா, வழுக்கும். விழுந்திடாதையும்,” அவளுக்குள் ஒலித்த நாதனின் குரல் அவளின் கண்களைத் திரையிடச் செய்தது.
“ மதிய உணவுக்கு வாருங்கள் “ சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள்.
மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில்,
கடந்த கால கசப்புகளை மனதிற்குள் விழுங்கியிருந்த சைமனுக்கு கொஞ்ச நாட்களாகத்தான் அவனிடமிருந்து அந்த எண்ணங்களும் நினைவுகளும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி இருந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அவன் கொடியின் மீது கொண்ட அளவற்ற பிரியமே. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்ற சைமனுக்கு ;ஓய்வு நேரம் என்பது மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மேசன் வேலைக்கும், தச்சு வேலைக்கும் போய் வருவான். அப்படிப் போய் வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை அவனுடைய அம்மாவிடம் கொடுப்பான். ஒரு குறிப்பிட்ட தொகையை அவனுடைய கைச் செலவுக்கு வைத்துக் கொள்வான். இவ்வளவு பிரச்சனையும், சிக்கலும் நிறைந்து இருக்கின்ற அவனுடைய வாழ்க்கையில் மலர்க்கொடி மீது தீராக் காதல் எப்படியோ வளர்ந்து உறைந்து கிடக்கிறது. எப்போது அவளைப் பார்க்கின்றானோ அப்போதெல்லாம் தன் உயிரில் அவள் உயிர் உரசியது போல் உணர்வான். அலையற்ற பெண் கடலின் மீது ஒரு சருகொன்று மிதந்து தன் உடல் முழுவதும் ஊர்ந்து செல்வது போல் தோன்றும். அவள் அவனைக் கடந்து செல்லும் போகும் போதெல்லாம் தன்னுள் ஊறும் உயிர் ஒன்று எப்படி தன்னிடம் இருந்து விலகிப் போகும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். காலத்தையும் நேரத்தையும் கடந்து செல்ல முடியாமல் அவள் நினைவில் ஊறிக் கிடந்தது அவனுடைய உணர்வும் உடலும் .
புதிதாக பிறந்த ஒரு தினம். கிராமத்தின் ஒவ்வொரு மூலையிலும் பரபரப்பு. எல்லோரும் அலைமோதுகின்றனர். அன்றைய வாக்குப்பதிவு நாள் என்பதால் மக்கள் நெரிசலாக வாக்களிக்க வருகிறார்கள். கிராமத்தின் வீதிகளெங்கும் வாக்களிப்பு சின்னங்கள் மட்டுமே கண்களுக்குப்படுகின்றன. காகம், மைனா, புறா.



சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.
இறுகப் பொத்தியிருந்த தனது காதுகளிலிருந்து கைகளை லோசாக விலக்கிப்பார்த்தாள் கெப்பி. இன்னும் அலைபேசியின் அழைப்பொலி ஓய்ந்தப்பாடில்லை. மீண்டும் இறுக மூடினாள். அவளின் செவிப்பறை முழுக்க அந்த அழைப்பொலிக்கு அவளது மனமே ‘காடுபோக்க (காட்டுப்பூனை)… காடுபோக்க... காடுபோக்க… காடுபோக்க…’ எனும் வார்த்தையைக் கோர்க்க, இறையத் தொடங்கிற்று.
மாலையின் காற்று தழுவியதுபோல மனதில் ஏதோ ஆழமான வெறுமை. கிராமத்தின் எல்லைக்கே நெருங்கிய அவனது வீட்டின் ஓரத்தில் காற்று ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த காற்று அவன் மனதை எட்டவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதோவொரு வழியில் வாழ்வின் சுவை குறைந்தது போலவே தோன்றியது. வளவின் மதிலோரத்து மரங்கள் கூட இப்போது பசுமையற்றவையாகத் தோன்றின.
மிஸஸ் மல்லார்டுக்கு (Malard ) இதய சிக்கலால் பாதிப்புள்ளது என்பதைப் பார்த்து, அவரது கணவரின் இறப்பின் செய்தியை மிக மெதுவாகச் சொல்ல மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.
அவசரமாகக் குளித்துவிட்டு வினோ வெளியில் வந்தாள். ஆசைதீரக் குளிப்பதற்கோ, ஆற அமரவிருந்து சாப்பிடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை என்ற நினைவில் கசிந்த கண்ணீர்த் துளிகள் அவளின் முகத்திலிருந்த நீர்த்திவலைகளுடன் சேர்ந்துகொண்டன. ஈரமாயிருந்த முகத்தையும் உடலையையும் துவாயினால் உலர்த்தியபடி, குளியலறைக் கண்ணாடியில் முன் நின்றவளுக்கு தான் வரவர அழகில்லாமல் போவதாகத் தோன்றியது. கன்னங்கள் மேலும் உட்குழிந்தும், கண்களின் கீழிருந்த கருவளையங்களின் அளவு பெருத்துமிருந்தது. சர்மிக்கு வரவர என்னைப் பிடிக்காமல் போவதற்கு இவையும் காரணமோ என மனதிலெழுந்த எண்ணம் அவளை மேலும் அழுத்தியது.
(1963 இல் தமிழ் இலக்கியக் களத்தின் நிகழ்வுகளால் மையப்படுத்தப்பட்ட கதை. தினகரன் பத்திரிகையில் வெளியானது. அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 24. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அனுப்பி வைத்த சிறுகதை. அவருக்கு நன்றி. )
(1996- லண்டன் 'தமிழ் டைம்ஸ்' சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தக் கதை நான் ஏன் இலங்கையில் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் பிரச்சாரம் செய்கிறேன் என்பதை விளக்கும்.)
நிர்மலனுக்கு அது கனடாவில் முதல் இரவு.. முதல் உறக்கம். பின்னாள்களில் உறக்கத்தைத் தொலைக்கும் இரவுகள் வர வாய்ப்புகள் உண்டு என்பதைச் சிறிதும் உணராதவன் என்பதால் அவன் உறக்கத்தில் நிம்மதியும் ஒட்டியிருந்தது.

இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.
ஜோதிக்கு சாவு வீட்டுக்குச் செல்லும் சரியானத் தோரணை வந்துவிட்டது. தோரணை என்றால் அதற்கான இணக்கமாக்கிக் கொண்டு சாவு வீட்டுக்குச் செல்வது. முதலில் பொட்டு இடுவதை தவிர்த்து விடுவாள். சாதாரண சேவை உடுத்துவாள். எந்த வகையிலும் கவனம் பெற தக்க வகையில் சேலை இருக்காது. ஜாக்கிரதையாக சோகத்தை வரவழைத்துக் கொள்வாள். சாவு வீட்டுக்குச் செல்வதற்கான சரியான ஏற்பாட்டில் கண்ணீரை உற்பத்தி செய்து கொள்வாள். அப்படித்தான் சுகுமாரன் உறவு சார்ந்த ஒரு சாவிற்கு அன்று செல்ல வேண்டி இருந்தது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் 








