' நான்,  இதுவரையில் காதல் கதை எழுதியதில்லை . ஏன் , எழுதக் கூடாது ? ... உமா உனக்கு ஏன் இப்படி ,  பையித்தியக்கார​ எண்ணங்கள் எல்லாம் வருகின்றன​ ' . நம்மவர்களிற்கு தமிழீழக்கனவு வரவில்லையா  , அப்படி . கூடவே ,சொரூபி சரஸ்வதிப்பூஜையின் போது குச்சுப்பிடி பிடித்தது அவன் நினைவிற்கு ​ வந்தது . நடனம் பழகியவள் , ஆடினாள் . குட்டிப் பெட்டை . நானும் அன்று குருணி தான் . கண் விரிய​ பார்த்துக் கொண்டிருந்தேன் .சினிமாவிலே அக்கா , அம்மாமார் ஆடுறதைப் பார்த்திருக்கிறேன். ' பத்மினி , தாரகை , இந்த​ குண்டு அம்மாவால் எப்படி உடம்பை வளைத்து , கிளைத்து உடற்பயிற்சி   எடுக்க​ முடிகிறது ' ஆச்சரியம் என்றாலும் அங்கே அம்மா என்ற​ எண்ணமே மேலோங்கி  இருந்தது . உமாவிற்கு , இடம் பெயர்ந்த​ பிறகு இப்படி ஊர் நினைப்புகளை அசை போடுவதே பழக்கமாகி போய் விட்டது . இலங்கையோ... நம் தாய்நாடில்லை 'என்று மறக்க​ வைக்க​ முயல்கிறார்கள் . முட்டாள்கள் . இறந்த​ பிறகு 'ஒரு பிடி மண்ணைக் கூட​ எடுத்துச் செல்ல​ முடியாது ' என்பது அவர்களுக்குப் புரியவில்லை . மறை இருந்தால் அல்லவா புரிவதற்கு ? . நம் பிராய​ காலத்தையாவது  கலாயிப்போம்  ​ என​ நினைப்பை மாற்றினான்.

குழந்தாய் சொரூபிக்கு என்னை விட​ நாலு வயசு குறைவாக​ இருக்கும் . ' நாதம் என்னும் கோவிலே நானும் விளக்கு ஏற்றி வைத்தேன் ' வரிகளுக்கு   ...அடேயப்பா எத்தனை உணர்ச்சி அபிநயங்கள் , மிச்சபாட்டைத் தான் அவனுள் மனம் இட்டுக்கட்டி பாடிக் கொண்டு போகிறதே ...! . ஒரு  கவிஞரின் வரிகள்...பல்லவி  , சரணத்தில் ..    நேராக   அல்லது  தட்டி நெளிக்கப்பட்டோ ...வாழ்கிறது தான் . நீங்களும் கவிதை எழுதுங்கள்  .  ' புல்லாங்குழலே என் ஜாதி , நானும்  நீயும்  ஒரு ஜாதி ! ' இப்படி ,  முணு முணுக்க​ உங்களுக்கே தெரியாத​ ஊர்பேர் தெரியாத பலபேர் இருக்கிறார்கள் .

அட​ ! , இப்ப , அதுவும் உதிர​ வயசிலே ​ போயும் போயும் ஒரு காதல் கதையை காலம் பிறழ்ந்து எழுத​ எழுதுகோலும்  நடுங்கிறது . ' கண்ணா... ' ஆனையரை அழைக்கவில்லையா , அவரிலே ..'பிரம்மச்சாரித் தன்மைஇருக்கிறது . வேற​ ஒன்றுமில்லை , எழுத்தர் சாண்டில்யன் கதைகளைப் படித்து ...ஒரு  ராஜா பாத்திரம் என்னுள்ளும் வந்து விட்டது .அவர் எழுத்திலே தான்  தூக்கலாக​ ' வாழ்க்கை வட்டம் இருக்கிறது , எழுதுகிறது தப்பில்லை  'என்ற​ குரலையும் பார்க்கிறோம் . என்னை  எவர் எழுதச் சொல்லி  கேட்பர் ? .... அண்ணர் , ...நண்பர் , தோழர் , ஒரு எழுத்தர் . இது  பிரச்சனையே இல்லை . ' நீ விடுதலைக்கு மட்டும் அடிமை இல்லை , சுதந்திரமானவன் கூட​ . சங்கிலிகளை பலம் இருக்கிற போது  உடை. த்து விடு . எழுது ,எழுது ' என்று பப்பாவிலே ...ஏற்றி விடுறது போல​ உரு   ஏற்றி விடுவார்கள் . எப்ப​ இது  வருகிறது  , வரவில்லை  இல்லை தவறி விடுகிறது ? ' நான் கோவிலில் ஒன்றும் எழுத்தாளராக​ அரங்கேற்றமானவனில்லையே . என் பதில்களும் ஆய்வுக்குரியவையுமில்லை . விடுங்கள் .

19 வயசில் ஒரு வேலையில் கொழுவி விட​ வேண்டும் என​ விரும்பியவன். படிப்பு தேவையில்லாமல் காலத்தை  விரயப்படுத்திக் கொண்டுச் செல்கிறது. இருபதுகளில் ...ஜூலைக்கலவரம் நிகழ்ந்தேறி விட்டது . பிறகு '  ஜனாதிபதியும் , படைகளும் ...சேர்ந்தே துவக்குடன் குற்றம் புரிகிற​ ' நெருப்பு ட்ராகனாக​ '  வடக்கு , கிழக்கிலும் புகுந்து விடுகின்றன . நம் சிந்தனையும் , உடல் , சனம் ...எல்லாருமே அதற்குப் பின்னாலே ஓடிக் கொண்டே இருந்ததில் ஒரு...காதலுமில்லை , கத்தரிக்காயுமில்லை ' அதுவும் , எங்கேயோ உருண்டோடி கல்லுக்கு கீழே தொலைந்து போய் விட்டது . உண்மையில் பிராய​  வயதில் அல்லது முன்னர்  பெடியளுக்கு ஏற்படுறது   காதலுமில்லை . அவர்களுக்குப் பிடித்த . ஒரு தன்மை , ஒரு  திறமை , பிடிக்கிற​ நடிகையின் சாயல் ...ஏதோ ஒன்று பார்க்க​ , பேச  நண்பர்களிடம் ...  புலம்ப​ ஜோடி சேர்த்து விடுகிறார்கள் . .​ நான் அந்நேரமே    விடுதலைக் கருத்துதுக்களில் ஈர்க்கப்பட்டும்  விட்டேன். பிறகு  , என்னோடு  இயக்கத்திற்கு சேர்ந்த  ... தோழர் இன்று இல்லை , ஏற்கனவே  தெரிந்த​ நெருங்கிய​ தோழரில்லை . ரோல் மொடல் இல்லை . அடப் போய்யா , ' பள்ளிகூடத்தில் , ஆசிரியர் இல்லை , புத்தகமில்லை... '  என்றால் படிக்க​ தோன்றுமா ? வள்ளவரை கொண்டு போய் சிறையில்  அடைக்கத் தோன்றாதா ? , அப்படித்தான் போராட்டதிற்குச் சென்றோம் .

புரிந்து கொள்ள முயலுவோம்   . இன்று பொலிஸ் அதிகாரம்   கிடையாது இல்லை என்று  பேத்துகிறார்கள் . பள்ளிக்கூடங்களிலுள்ள​ பொலிஸ் கடேட் மாணவர்களைக் கொண்டு போய் மாகாண​ப் பொலிஸாக்க​ முடியாதா ? ' பிறகு  , ​ஏன்​    ​அவ்வமைப்பைகள் பள்ளி வழியே கிடக்கின்றன . மனசு சுத்தமில்லை , அது தான் எல்லாத்திற்கும் காரணம் . அங்கே அவர்கள் ஆடுறது ருத்திர​ தாண்டவமில்லை ரெளத்திர​ ஆட்டம். குற்றவாளிகளைக் கொண்டே நாட்டை ஆள​ விரும்புகிறார்கள் .

' உயிரியல் பிரிவில் சப்பு ,சப்பி பாடங்களை துப்பி தப்பும் , தவறுமாய் நோட்டுகளில் எழுதியவனால்   ' ப்பூ ! எழுதவா ...முடியாது ? ' என​ எழுத்தாட​​ வந்தவன் . உங்களுக்கு சோதனையாய் ​ வந்த​ புதிய​ தலைவலி .
   
 இலங்கை  அரசாங்கம் இப்படியே  தான் நெடுகக்​  கிடக்கிறது . வெளியில் மட்டும் என்ன  வாழுதாம் ? , அங்கேயும் ,  ஜனநாயகம்   கழற்றப் படாமல் அனாதையாக​  தூக்கில் தொங்கிக் கொண்டு தான்   கிடக்கிறது . பொருளாதாரத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கின்றன​ '  என்றதை தவிர​ வேற​ எதையும் ....புதிதாய் குறிப்பிட​ முடியாது .  இலங்கையில் பொருளாதார​ அறிவு இல்லை . தமிழரின் ...வளர்ச்சியை அடித்து , உடைத்து நொருக்கி ...சிதைத்து தன் மேலே மண்ணைப் போட்டுக் கொள்கிறது . அவை  காலனியனாக​ வந்து போட்ட​ குரங்காட்டத்திலிருந்து ..ஏன் விடுபடுவான் என்று நலிந்த  நிலை கயிறிணைப்புடன்  தானிருக்கின்றன . ​இன்னமும் அவர்கள் உரிமையில்   முழுமயாக​ விட்டு விடவில்லை , பாதிக்கப்பட்டவையும்​  உயிர் பெறவில்லை . காய் நகர்த்தலை தொடர்ந்தும் தன் கையிலே வைத்திருக்கிறது . வியாபாரிக்கு சமாதானம் என்றால் அவுன்ஸ் , றாத்தல் படிகளில் மட்டும் தான் அளக்கத் தெரியும் . நாம் எல்லாம் ஜால்ரா போடுற​ நாடுகள் தாம் . இஸ்ரேல் நமக்கு நிகழ்ந்ததை   மறுபடியும்  நிகழ்த்திக் கொண்டிருக்கிறது . இனப்படுக்கொலையை நிகழ்த்தா நாடுகளும் கூட​ ஒரு சொல் ....பேசுகிறதா ? காணோமே , இல்லையே . பையித்தியக்கார​ உலகம் . அச்சப்பட்ட​ வாழ்க்கைக்கு உள்ளம் எதற்கு? வீரம் ....வீரருக்குத் தான் காதல் இருக்கிறதோ ?? .

அரசாங்கம் தான் பேசவில்லை . எமக்கு பேச​ என்ன​ அருகதை கிடக்கிறதா , வாய்யிலே கட்டப்பொம்மன் வார்த்தைகளே வருகின்றன​ . ' வயலுக்கு வந்தாயா , நீர் இறைத்தாயா , இல்லை 'களை' பிடிங்கினாயா , மாமனா , மச்சானா ...இப்ப​ காதலியா ? ...அட​ ,  உன் மனமும் குப்பையா !  '. அந்த​ குப்பைகளை எல்லாம் கூட்டி அரைக்கு அரை  சாணம் , நீரும் என விட்டு காற்று புகமுயாத​ பரலில் , அல்லது சீமேந்து அறையில் அடைத்து  இரண்டு கிழமைக்கு மேல்விட்டு  றபர் பைப்புகளில்(  நுனி) உலோக​ வாயிலைப் பொறுத்தி  வைப்பீர்களானால்....வாயு வருகிறதா .... எரிக்க எரிவதைப் பார்ப்பீர்கள் .  பக் ஃபயருக்கு சிறிய​ ஏற்பாடும் செய்ய​ வேண்டும் . முதலில் , போட்டபிலாக​வே அதிலே  சிறிய விளக்கை அமைத்துப் பாருங்கள் . சிமினி போன்ற​ கண்ணாடியின்மேல் வாயிலில் ஒரு உலோக​ வளையத்தைச் செறுகுவீறானால் சுடர் நேராக​ எரிவதைக் காண்பீர்கள் .

இந்த​ கண்டுப்பிடிப்பைக் கொண்டு ஒரு கிராமத்தையே ஒளி மயமாக்க​ முடியும் . சாணத்தை தரும் மாடு ஏன் முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ள​ முடியும் . முஸ்லிம்கள் கூட​ தேவையில்லாமல் மாடுகளைக் கொல்வதில்லை . கொல்கிற​ போதும் மந்திரம் ஓதியே கலால் ...உணவாக​ எடுக்கிறார்கள் . மயிலவத்த​ மடு , மாகணி புல்வெளிகளில் சிங்களவர் மாடுகளை அநியாயமாக​ கொன்றொழித்து வருகிறார்கள் . தமிழனின் நிலங்களைப் பிடிக்கிற​ கூட்டுச் சதியை ( காலனி விடுவிப்பு)  மூளையில்லாமல்  அன்றிலிருந்தே நிறை வேற்றிக் கொண்டே வருகிறார்கள் . மாடுகள் எவ்வளவு பெரிய​ செல்வம் ,பொருளாதாரம் . முஸ்லிம்களிற்கு அதன் மேல் உள்ள​ ​ மரியாதை கூட​ இவர்களிற்கு இல்லையே .

மின்சாரத்தை அவசியத்திற்கு மட்டும்  பாவித்து ...உந்த​ எரிபொருட்களிற்கு எதிராக​ ஒத்துழையாமையில் எம்மாலும்  ஈடுபட  முடியும் . இனிமேலாவது , வெளிநாடு மாயையும் வேண்டாம் என​ காந்தியின் வழியில்   நடை போடுவோம் . நினைப்பில் உறுதி இருந்தால் எச்செயலுமே சிறக்கும் . ஒருமுறை  , பெற்றல் , மண்ணென்னெய் என​ இருக்கிற​ இக்கட்டிலிருந்து விடுபட​ முயற்சித்துப் பாருங்கள் . நாளை ஒருவேளை உங்கள் இருசக்கர​ வாகனமும் இந்த​ வாயுவால்  ஓடலாமே , யார் கண்டது .  ஐரோப்பியப் பிரிவு , போர்களை ஏற்படுத்தி ஏற்படுத்துற​ விளைவுகளிலிருந்து...இவற்றின் விலைகளை உயர்த்தி ...எழுகிற​ பாதிப்புகளிலிருந்து எம்மை காத்து  கொள்ள மெல்ல​ , மெல்ல​ இறங்க​லாமே . கோவிட்டுக்குப்(19)  பிறகும்... புத்தி வராமல் இவர்கள் கையில் எடுத்த​ கொல்லும் மெசினை அடித்து நொறுக்கி விட​ வேண்டும் . ஒன்று ..2 .என​ போர்களை நிகழ்த்தியும்....  இந்த​ அலுப்புகள் திருந்தவில்லை .

தமிழ்நாட்டில் , வீடுகளில் ஒரு படிக்கும் அறை அவசியம் என​ பூஜை இடம் பெற​ வேண்டுமென​ பில்டிங்கோட்டில் விதியைக் கொண்டு வந்தவர் சி. என் . அண்ணாத்துரை என்கிறார்கள் . அங்கே அது எவ்வளவு தூரம் பின்பற்றப்படுகிறது ? என்பது தெரியவில்லை . அதே போல​ வீடுகளில் புறம்பாக​ ஒரு வேலைக்கொட்டல் ( கராஜ்) ஒன்றையும் அமைத்துக் கொள்ளல்​ அவசியமானது என்றே படுகிறது . கனடாவில் ஒரு ஜேர்மன் தந்தையர்  தன் மகன் , பொம்பாடியருக்கு  ஒரு கொட்டலை அமைத்துக் கொடுத்ததாலே பலரகப்பட்ட​ பனிவாகனங்கள் , சப்வே தொடரூந்துகள் , விமானங்கள் ...என​ மனதில் தோன்றுவதையெல்லாம் சிறுபையன் கண்டு பிடித்திருக்கிறான் . வளர்ந்திருக்கிறது . நியூயோர்க்கிக்கான​ முதல் சப்வே ரெயினையும் இவன் கம்பனியே செய்து கொடுத்திருக்கிறது .  சிறு துளி , பெருவெள்ளமாகியிருக்கிறது .   நம்மிலும் ஆற்றல் இருக்கிறது . மனித​ வாழ்வில் எட்டு , எட்டு வளையங்கள் ...எல்லாமே சமத்தன்மை கொண்டவை மட்டுமில்லை , ஆற்றல்களுடன் தொடர்புமுடையவை . ஒன்று சிறப்பாக​ இருந்து விட்டால் கூட​ நீங்கள் சாதனையாளர் தான் . மற்றததில் முழுமையடையவில்லை என்று கவலைப்பட  தேவையில்லை  . அதில் , ஒன்று  தான் காதல் ... , வாழ்க்கை.யிலிருந்து . நம்மில் சிலருக்கு  காதல் விலகிப் போயிருக்கலாம் , சிலருக்கு வாழ்க்கை .., , வீரதீரம்  ..., எழுத்து  . படிப்பு , ஆரோக்கியம்  .  ஏதாவது  ஒன்றில் வெல்லுங்கள் போதும் .

கம்யூனிசத்திலும் வலது குறைந்தவனைப் பார்த்து ' நீ சாதனையனில்லை என்று எவர் சொன்னது ! ' என்று மில்லரின் விளையாட்டை வைத்து தான் சொல்லப்படுகிறது.  . அதில் திவீரம் அதிகம் . 'அப்படியில்லாமலும் உன்னால் சாதிக்க​ முடியும் ' என்பதை தாழ்வுச் சிக்கலில் அகப்பட்டவரிடம் வெறுமனே சொன்னால் எடுபடுவதில்லை என்பதாலே' இப்படி கதைகள் எல்லாம் கூறுவதையும் பார்க்கிறோம் . கூற​ வேண்டியுமிருக்கிறது.

காதலைத் தொலைத்தோம் என்றால் ...சரியான​ வழிகள்  நமக்கமையவில்லை என்று தான் அர்த்தம் . நம் சந்ததியில் ஒன்றாவது , நிறைவாக​ வாழ​ , எதையும் தொலைக்காது வாழ​ ...வழியை  அமைத்து கொடுக்க​ வேண்டிய​ பொறுப்பு நமக்கு இருக்கிறது  . நம் எசமானர்கள் மனிதக்கையை நீட்டினால் மட்டுமே பற்று ,  இல்லா விட்டால் ..நம்வழி  தனிவழியாகவே கிடக்கட்டும் .​ 'துவக்கும் , வெடியும் எடுத்தவாக்கில்  வேண்டாம் . அவை நமக்கும்   கொல்லும் மெசின் தான் . நம்மினத்தின் கையாலும் நாமும் விழ​​ வேண்டி நேரிடலாம் ' என்பதால் அதில் நிதானத்தைப் பதிப்பதே  நல்லது .

உமா காலையில் எழுந்தும் ஒணான் கணக்கில் கைப்பலத்தில் ஊன்றி புஸ் , புஸ் என​ தலையை உயர்த்தி , தாழ்த்தி புஸ் அப் செய்றான் . அன்று தோழர்கள் இந்த​ கை ஊன்றலை மயிலாசனத்தில் செய்வார்கள் . முருகனை நினைத்து விட்டீர்களா? அது யோகாசனப் பயிற்சி . கனடாப் பிரதமர் கூட​  ஆரம்பத்தில் வென்றவுடன் மேசை மீது ஊன்றி  செய்து கலகலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் . அவருடைய​ அப்பா உலகநாடுகளுக்குக்கெல்லாம் சென்ற​ போது இந்தியாவில் ...அவரைக் கவர்ந்த​ உடல்ப்பயிற்சி இது . இதை செய்வது ஒன்றும் இலகும்  ...இல்லை . ஆனால் முயற்சி திருவினை ஆற்றும் .  கையிலே ஊன்றி கால்களை காற்றிலே மிதக்க​ நிற்றல் . அப்பர் வழியில் கற்றிருக்கிறார் . இவர் மட்டுமே விளையாட்டுப்பிள்ளைப் போல​ ...செய்து அசத்திக் கொண்டிருந்தது ஊடகங்களைக் கவர்ந்தது . அவை தந்தையின் அன்றையப் படத்தையும் , இவரின் இன்றையப்படத்தையும் பக்கத்தில் , பக்கத்தில் போட்டு  பிரசுரித்துக் கொண்டிருந்தன​​ . . எக்காரியத்திலும் வெற்றி அடைகிற​ போது மயிலாசனம்  செய்யிறது வழக்கம் .அரசியல் அமைப்பிலே அதிகமாகத் திரிந்த  இந்தியப் பயிற்சி பெற்ற​  ...   தோழர்கள்  வந்த​ பிறகும் அமைப்புப் பெடியள்களுடனேயே திரிந்தார்கள் . வாசிகசாலை , சனசமூக​ நிலைய​ மேசைகளில் ஓடி வந்து கைகளில் ஊன்றி அந்தரத்தில் நிற்பார்கள் .உமா ஐயா அன்று செய்ய​ கடுமையாக முயற்சிப்பார் ... ஒரு எழவும் நடக்கவில்லை   , முடிந்ததில்லை . இப்ப   கொஞ்சம்​ ஈயிறது நடக்கிறது . மற்றது ....கால் இரண்டையும் நேர்கோடாக​ விரிக்கிற​ கராட்டிப் பயிற்சி . அதை அவர்களிலே பலரும் கூட​ செய்ய​ மாட்டார்கள் . லொக் உடையணும் 'என்பர் . மெல்ல​ , மெல்ல​ அணுக​ வேண்டியது , இல்லா விட்டால் ஏடாகூடமாகி விடும் . ஜிம்னாஸ்டிக்கில் பெண்களால் இலகுவாக​ செய்யப்படுறது , ஆண்களாலும் செய்யிறதைப் பார்க்கிறோம் . எனவே ஆடவர்களாலும் முடியக்கூடியது  தான் .அவர்களுக்கு லொக் உடைந்திருக்கிறதா... தெரியவில்லை . பகிடியாய் சொல்லப்பட்டதாகவே   படுகிறது . தெரியாதவர்களிடம்      பூச்சாண்டி விடுறதில்லையா ? . இலங்கையரசு ' உனக்கு மாகாணவரசு இல்லை , கிடையாது ' என​ பூச்சாண்டி விட்டுக் கொண்டிருக்கவில்லையா ! . படைகளுக்கெதிராகப் போராடுறதுக்கு முதலில் கைப்பலம் வேண்டும் ' என்று தோழர் மற்றவர்களும் செய்ய​ பழக்கிக் கொண்டிருந்தார்கள் .

ஒன்றைக் கவனித்தீர்களா , மாகாணவரசு கிடையாது , பொலிஸ் அதிகாரம் கிடையாது 'என்கிறவர் எல்லாம் பிரிட்டன் , அமெரிக்கா சென்று படித்து ராணியிடம் பட்டமும் பெற்று வந்த ' ராணி வழக்கறிஞர்கள் '  . பொலிஸை , பள்ளி பொலிஸ் கடேடிலிருந்து தெரிந்து இயங்க​ வைக்க​ முடியாதா,  என்ன​ ? ' எல்லாம் மறை கழன்றவர்கள் . பழைய​ எசமானர் சொல்ப்பேச்சு கேட்டு , வேற​ யார் ராணிக்கூட்டத்திடமிருந்து பெற்ற​ கட்டளைப்படியே  நடக்கிறார்கள் . சுயபுத்தி அறவே  கிடையாது .  இந்தியாவிற்கு சுதந்திரம் விருப்பமில்லாதே கொடுக்கப்பட்டிருக்கிறது . எனவே , இந்தியாவால் முன்னெடுக்கிற​ காரியங்களை எல்லாம் நிறைவேற​ விடாது குழப்பிக் கொண்டே ஐரோப்பிய​ மட்டம்  இருக்கின்றன​ . கூட்டாளிகளும்  சேர்ந்து விட்டார்கள் . இன்று  பிரிட்டன் , கனடா ,அவுஸ்ரேலியா ...என​ பிள்ளைகளையும் பெற்று  இரண்டு புதிய​ குரல்களையும்  பெற்று விட்டிருக்கிறதே .

எப்பவிருந்து இந்த​ காதலுணர்வு வருகிறது ..நாடுகளுக்கிடையிலும் கூட​  வருகிறது . நாமோ ,சினிமாவில் பார்த்து ஏற்படுற​ கிளர்ச்சியை அப்படியே கொப்பி அடிக்கிறோம் . நாம் கரைந்து வேறு போகிறோம் . அந்த​ கரையல் வளர்ந்து கொண்டே போகிறது . ஒரு இறப்பு நேரிடுற​ போது எப்படியோ ஒரு பிறப்பும் ஏற்பட​ வேண்டும் . ஆத்மா இடம் மாற​ வேண்டும் . எனவே , காதல் கதைகள் பிறக்கின்றன​ .  பழையக் கள்ளு , புதுப் பிழாவில் புதியக் கள்ளாக​ புளிக்கிறது , இனிக்கிறது . ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் . அப்ப​ , நானும் ...எழுதலாமல்லவா! . இனி அதற்கு சாதிப் பூச்சு ,  ..மதப் பூச்சு ...மொழி  பூச்சுஎன​ எல்லாம்  பூசலாம் . கலந்து எழுது . காரம் , வாசம் ...குணத்துடன்  . சே ! இஸ்ரேலின் குண்டு வெடிப்பில் பாலாஸ்தீனரின் ....பரிதாப​ மரணங்கள் . (தொலைக்காட்சிக்)  காட்சிகள் ....ஈழத்தில் நாமிருந்த​ நிலைக்குள்ளேயே நினைப்புகளையும் ஒரு புறம் ​ தள்ளி விடுகின்றன . 'யாரைக் குறித்து எழுதுவோம் ? , எம்மையா , இவர்களையா ...? எல்லாரும் மனிதர் இல்லையா ' சிலருக்கு பிறத்தியார் சங்கடங்களைக் கண்டு ரசிப்பதில் ரசனை  இருக்கிறது என்றும் சொல்கிறார்கள் . அறம் பிறழ்ந்தவர் எவ்வளவு வீரர் ,தீரர் , விஞ்ஞானி , தலைவராக​ இருந்தாலும் அவர்கள் மதிக்கப்பட​ வேண்டியவர்களே இல்லை . பகிஸ்கரிக்கப்பட​ வேண்டியவர்கள் . பார்வையில் , ஆண், பெண் தெரியவில்லை , துடிக்கிற​ உயிர்களே தெரிகின்றன​ . எம்மையும் துடிக்க​ வைக்கின்றன​.

எழுத்தர் கோர்க்கி கூறுவ​து போல​ ​ சூழல் தான் நாம் படிக்கிற​ பல்கலைகழகம் . இன்றைய​ புதுசுகளும் ... இதையும்  ஒரு பாடமாக​ எடுத்து  படிக்க​ வேண்டும் . எப்படி காதலுக்கு  இனி விளக்கம் கொடுப்பான் ? . நாட்டில் பசுமை ,செழுமை பெற​ புதுப்படிப்பாலே முடியும் . ' போராடு , போராடு ...எழுத்தாடு, எழுத்தாடு  ! '  . காதல் கதை ஒன்றை எழுதுறது ஒரு கனவு .  கோப்பி ஒன்றை தயாரித்து எடுத்துக் கொண்டு எழுத்தாடத் தொடங்கினான் . அவனுக்கு கல்யாணம் ஆனது . ஆனால் படிவு , ரணம் ..கனவுகளை வைத்திருக்கவில்லை .

' சாமியார் ' என​ சமயத்தில் மனைவிப் பெண் ஏசுவார் . அவன் அவளை விரும்பினான் . ஆனால் , ஏட்டிக்குப் போட்டி போல​ ...'எது சொன்னாலும் ஒரு கருத்து வாய் வழியே வந்து உதிர்ந்து விழும் . ' தாமரைக்காரருடன் பேசவே முடியாது , எல்லாத்திற்கும் பதில் வைத்திருப்பர் ' என்பர் . அந்த​ பழக்கத்தை காலமும் மாற்றி விடவில்லை . அப்படி பதில் சொல்வதை விட்டு மெளனமாக​ இருந்து விடுறது மேல் ' என சிலவேளை  படும் . செயல் படுத்தவில்லை . பாவம் . அவள் ' நல்ல​ வார்த்தை சொல்ல​ மாட்டானா ' என்று வாயை  கிண்டுவாள் . பெண்களுக்கு பேசும் கலை கை வந்தது  . ஆனால் , துவாரகாவை வயிற்றில் சுமந்து ...பிறக்கும் தறுவாய்யிலே தான் மனைவி தான்  காதலி என​ முதல் முதலாகபுரிந்தது .

'அவளை நேசிக்கத் தொடங்கியதும் அன்றிலிருந்து தான் .

பொருளாதார​ சமநிலை எய்வது ஒவ்வொரு ஆடவர்க்கும் எவ்வளவு  அவசியமானது என்பது இப்பவெல்லாம்  புரிகிறது  . இல்லா விட்டால் ​  வாழ்வு முழுதுமே ஒரு கனவு தான் !  , யாரும் சொன்னாலும் புரியாது , புரியவே​ மாட்டாது . சரிவர​ சொல்லப்படவில்லை 'என்றே  நினைப்பார்கள் . ' காதலை 'தமிழ்பட்டதாரிகளிடமே  பேராசியர்களிடமும் விட்டு விடுவோம் .

பழையபடி விடுதலை இலக்கை நோக்கிய​ கதைகளையே எழுதலாம்  . அவை அவசியமானவை தான் . புற​  வாழ்க்கைக்கான​ போராட்டத்திலிருந்து விடுபட​வே முடியாது .  ' காதல் ' ஒரு  அகப்போராட்டம் . ஒரு கதையாவது  ​ எழுத முடியாதா என்ற​ நப்பாசையும் கிடந்து துடிக்கிறது  தான் . அவன்  முயற்சியும்  செய்கிறான் .  உரிமைகள் ... மகிழ்ச்சிகள் நிலவுற​ வீடுகளிலே உண்மையான​ காதலைக் காணலாம் , ச​ந்திக்காமலா போகப் போறான் . அதை ஈழத்தில்  போயும் தேடிப் பார்க்க​ வேண்டும் .

மணி(ரத்தினம்)யின் ' உயிரே' சினிமாவில் , 'உள்ளத்தில் ரணமிருந்தால் , கனவுகள் வருவதில்லை ' என்கிற​ வரிகளை அடிக்கடி கூறுகிறார் . அந்தப் படம் வர​ முதலே அவன் இயக்கத்தில் ' இப்பவெல்லாம் கனவுகள் வருவதில்லை 'என்றுகூற​ ...' ஊர்ப்பெட்டைகள் ஒருத்தி ( கனவில் )  கூட வருகிறாளில்லை' என்று தோழர்களும் கதைத்து  சிரித்திருக்கிறார்கள் .

உமாபதி எழுதி முடிக்க​ வேண்டும் என்கிற​ மரத(ன்) ஓட்ட​  வீரன் .. முடிக்காமல் விடுவானா ?

உயிரியல் பாடத்தில் படித்தது அவனுக்கு நினைவிற்கு வந்தது .டி.என் .ஏ...அது , இது ...என்றாலும் ஒரு மனிதப் பிறப்பு ஆணும் , பெண்ணும் கொண்ட​ கலவை தான். அதைப் பற்றிய​ விளக்கங்களை குறிப்பாக கோயில்களில் தான்  காணக்கூடியதாக​ இருக்கிறது . அருத்தநாரீஸ்வரரின் சிலை இல்லாத​ கோவிலே இல்லை . அரை சிவன்  , அரை பார்வதியுடன் உள்ள​ சுதைச்சிலை , புடைப்புச் சித்திரமாகக் காணப்படுகிறது . அது , இருவரையும்  ' நீ ...ஆண் , பெண் என்று கூறுகிறது' . யோகக்கலை பொதுவில் வைக்கப்பட்டு ஒரே மாதிரியே ​ கற்பிக்கப்படுகிறது . புராதன​ மனிதன் . தாயை நினைத்து ....வடிவமைத்ததே கோவில் .  கடவுளின் சிலையை , கர்ப்பக்கிரகம் என்கிற​ இருள் சூழ்ந்த​ கருவறையிலே வைத்து . எல்லா (சக்தி ..) பிறப்புகளின் இடமும் அது தான் என்றும் கூறுகிறது .

ஒரே ஒரு ...கதை எழுதினால் போதும் .  ' ஏன் சிறு பிராய​ நினைப்புகள் நிறைவேறுவதில்லை ? ?இது ஒரு பெரிய​ .., சிறிய​ கேள்வியா ? ,  உமாவிற்கு பெரிதாயே தெரிகிறது . 'உலகமும் கூட​ ​சாதி , சமூகமாக பிரிபட்டு தான் கிடக்கிறதப்பா பிள்ளாய் ! '. நம்பிரிவிலும் குறைகள் இருக்குதப்பா ..என்றதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் . ஆனால் , நம் முன்னோர் நிறைவுப் பொருளாரத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே . அதற்கு இலங்கையில் நிறைய​ குளங்களை வெட்டி இருக்கிறார்கள் . இருக்கிறவற்றை மண் மூடி வர​ ​ , சிலவற்றை மற்றயவரை ​ அபகரிக்க  விட குறைக்கிறது நடைபெறுகிறது . சொந்த​ மரபுகளை பாசி பிடிக்க​ விட்டு காலனி மரபுகளைப் பின் பற்றி நம்மிருவினமும் வாழ்ந்து  கெட்டு குட்டிச்சுவராகி கழுதையாய் தேய்கிறதாயும் கிடக்கிறது . ஒட்டாகாந்தங்களாக​ நாம் . ஒருத்தரை ஒருத்தர்   இழுத்துக் கொண்டே இருக்கிறோம்? . நாம் என்றுமே ஒன்றுக்குப் பின்னாலே ஓடிக் கொண்டிருக்கிறவையள் . நின்று நிதானிக்கிறதில்லை .  சிந்திக்க​ நேரமில்லை .உண்மையான​ ' ஜனநாயகம் ' நிலவ வேண்டும் . தனிநாட்டை 'நினைத்துப் பார் . குட்டிப் பிரதேசத்திற்கு ஒரு பிறிம்பான படை ...அதுவும் முப்படையடா , நிறைய​ கொலைக்கருவிகள் தேவை . கருவிகளுக்கு ...யாரையாவது கொன்று கொண்டே இருக்க​ வேண்டும் .  அவற்றின்  விலையை சிந்தி . பெரிய​ நாடுகளே படைக்கான​ அதிக​ செலவில் அகப்பட்டிருப்பதனாலே வறியவையாக​ இருக்கின்றன​  . நாடு உரு பெற​ முதலே வங்குரோத்தில் கிடக்கும் . எப்படி ...என்றாலும் சிக்கனமும் , சுதந்திரமும் கூடிய​ வாழ்க்கையே எமக்கு வேண்டும் . கணக்கு ரொம்ப​ சிக்கலாகவே இருக்கிறது . ஒருபுறம் இஸ்ரேல் போல​ மிகக் கொடியவர் . குற்றம் பல​ செய்வதற்கும்  தயங்காதவர்கள் .  இந்தியாவிற்கு எதிராகவும் ..பிடி . வேண்டி இருக்கிறது . அதற்கு எம்மையும் தம்பக்கம் இழுத்து ....ராஜீவ்வையும் கொல்ல​ வைத்து கூழை காய்ச்சி வைத்திருக்கிறார்கள் . சீக்கும் அப்படிப்பட்ட ஒரு கூழ் தான் .

அறப்பிறழ்கை ஒவ்வொன்றுமே தாமரையாய் ...அமைதியாய் மலர்வதில்லை .வன்முறை ,வன்முறையாய் வெடிக்கவே செய்கிறது . ஆயுதம் , பிரச்சனையை தீர்க்க​ முடியாதது. எதுவுமே கூட​ ஆடவ​ லட்சணமுமில்லை . சராசரி பொருளாதாரத்தைக் கட்டிக் கொள்கிறதே , ஏற்படுத்திக் கொள்றதே எல்லாருக்கும்  முதன்மையான​  லட்சணம் . அதற்கு சமூகச் சிந்தனை , தோழமையுடன் ஊன்றல் தேவை .நீ அரசியலையும் படித்தே ஆக​ வேண்டும் . பள்ளி நோட்டை விட​ எதையுமே பார்க்காத​ கழுதை நீ . அன்றும் இன்றும் நீ ஒரே மாதிரி .  , உனக்கு என்ன​ நடக்கிறது என்று என்றுமே புரியவில்லை  , புரியவுமில்லை . சுய​ வேலை வாய்ப்பு   ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுறலும் மிக​ முக்கியமானது  . அதை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திரு . கண் இருந்தும் குருடாக்கிக் கொள்ளாதே . மற்ற​ சமானிய​வேலையும் தேடிக் கொள் . முழு அல்லது பகுதியாயிருந்தாலும் சரி ...வென்றால் சரி , இல்லா விட்டால் பரவாயில்லை . ' இலங்கையில் இனக்கலவரம் களையாயே கிடக்கிறது . போரிற்குப் பிறகும்  உயிர்த்த​ ஞாயிறுத் தாக்குதலை இராணுவ​ வெடிமருந்துகளைக் கொண்டு நடத்தப் பட்டிருக்கின்றன​​ . எத்தனை வெளிப்படையாய் இருக்கிறது . எனவே போராடடா , அதற்கு எழுத்தாடடா !'யாரும் உன்னை ஏறெடுத்துப் பார்க்கவில்லையா, கவலையை விடு  .உமா பென்சிலை எடுத்து உருட்டி , உருட்டி மேலே பார்த்து  சிந்தித்தான் . அவன் ஒரு கதையை எழுதி முடிப்பான் எனத் தோன்றுகிறது , எந்தக்கதை என்று நினைக்கிறீர்கள் ? .

'நம் காந்தி அன்னிய​ ஆடைகளை எரித்தாரே , உப்பை நம் வியர்வையில் காய்ச்சி  ' எம் நிலத்திற்கு அமைச்சு , கிமைச்மை ​ எமக்கமைக்கத் தெரியும் , நீ வெளியேறும் நேரம் வந்து விட்டது. வெளியேறு ' என்றாரே .வெறும் கல்லை எடுத்து எறிந்து எதிர்ப்பைக் காட்டிய​ பாலாஸ்தீன சிறுவர்கள் 'எதைக் கண்டு அஞ்சுகிறாய்'  என்று கேட்கிறார்கள் . ஒரு வீரனைக் கண்டால் உலகம் கொல்லாது விடாது . ஒரேயாடியாய் அஞ்சுகிறது. அது தான் இஸ்ரேல் நிறைய​ குழந்தைகளைக் கொன்றிருக்கிறது . இவர்களைக் கொல்லும் இஸ்ரேல் எங்ககையோ அறிவியலில் பறக்கிறதாம் .          

இன்று ஜனநாயகம் அத்தனைத் தகுதிகளையும் இழந்து விட்டிருக்கிறது .பழைய​ கால​ அரச​ அறமே பரவாயில்லை என்கிற​ நிலைக்கு கீழிறங்கி , கீழிறங்க​ வைக்கப்பட்டு கொண்டு போகிறது . நாளையைப் பற்றி எனக்கு கனவு இல்லை . அது இன்றிருப்பதை விட​ மிகவும் கேடுகெட்டதாக, கொடூரமும் டன் கணக்கில் கூடியதாகவே இருக்கப் போகிறது .

உன்னோடு சமர் செய்ய​ , மோத  நேரமில்லை . அதற்கு இலங்கையை காவல் காப்பது என்று  சொல்லி...கொலைகளை நிறைவேற்றுற​ படைகள் இருக்கின்றன​ .அந்த​ கூலிப்படைகளைப் பிடி  அவற்றைக் கொண்டு போய் உலகம் முழுதும் மோது  ,  சாய் அல்லது அழிந்து போ . குரூரச் சிரிப்பு உலக​  அரங்கம் அது . மக்களால் தெரிவாகி  இருக்கிற​ ஜனாதிபதி ​  , அங்கேயோ ,  இராணுவ ஜனாதிபதிக்கு முன்னால் கூனிக் குறுகி  குச்சுப்பிடி பிடிக்கிறவராய் இருக்கிறார் . நீ அந்த​ ஆட்டத்தையும் பார்த்து ரசி , ஆளை விடு . ஆமாம் ! , நாடுகளில் எல்லாம் இருவல்லவர்கள் இருக்கிறார்கள் தான் . வெளியில் வாங்கிக் கட்டிக் கொள்கிறவர் ஒருவர்  . வடக்கில் , ஜனாதிபதி  காணியை விடுவிக்க​ ' கட்டளை ' இடுகிறார் . அந்த​  கட்டளை  நைந்து நைந்து விடுவிக்க​ பத்து வருஷம் ஆகிறது . பல​ கோரிக்கைகள் கவனிக்கப்படாதும் கை விடவும் படுகிறது  .

இந்த​ கண்றாவியான​ சூழலிலே தமிழ் , சிங்களப்   பெண்ணின் பாதுகாவல் அல்லவா கேள்விக் குறியாகி விட்டிருக்கிறது . முதலில் அவர்க​ள் அல்லவா காப்பாற்றப்பட​ வேண்டும் . எந்தக் கதையும் எழுத​ தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் .  ஆளை விடு அப்பனே .

நவ​ பார்வதி பதி ,பதியே , அரகர​ மகாதேவா !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here