வலது கன்னத்தில் குழி விழ, அழகாகச் சிரித்தபடி,  “லுக் அற் யுவர் பியூட்டிபுல் சண்”, எனச் சொல்லி, அந்தத் தாதி என் கையில் தந்த என் மகனை இனம்புரியா மகிழ்வுடனும் பதட்டத்துடனும் வாங்கி என் மடியில் வைக்கிறேன், நான். பஞ்சிலும் மிருதுவான அந்தக் கால்கள் என் கைகளில் பட்டபோது என் மனதில் பல வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறக்கின்றன.

இவன் என் மகன், எனக்குச் சொந்தமானவன், என் அன்பில் நனைந்து பதிலுக்குத் தன் அன்பில் என்னை முழுக வைக்கப் போகிறவன் என்ற நினைப்பே இனித்தது. அவன் நெற்றியை என் உதட்டருகே எடுத்து மெல்ல முத்தமிடுகிறேன்.

இவனை உருவாக்குவதில் நானும் ஒரு பங்கு வகித்திருக்கிறேன். என் ஒரு பகுதி இவனில் வாழ்கிறது என்பது நம்ப முடியாத அதிசயமாக மனதில் படபடப்பையம் நிறைவையும் தந்ததில் மனசு மிகவும் சிலிர்த்துப் போகிறது.

அரைத் தூக்கத்திலிருந்து விழித்த என் மனைவி சர்மி, என்னைப் பார்த்து மிகுந்த காதலுடன் புன்னகைக்கிறாள். களைப்பாகவும் மருந்து மயக்கத்தில் ஆயாசமாகவும் இருந்தாலும் கூட, அவள் முகத்தில் தாய்மையின் ஜோதி தெரிந்தது. மகனுடன் அவளருகே போன நான் மகனை அவளருகே வளர்த்தி விட்டு, அவள் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுக்கிறேன்.

 “சர்மி, என்ன அமைதியாக, எவ்வளவு நிறைவாக என் மகன் நித்திரை கொள்கிறான் பாரேன். என்னால் இவனுக்கு ஒரு நல்ல அப்பாவாக, இவன் வாழ்வுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக, இவனின் நிம்மதிக்கு இடைஞ்சல் இல்லாத உறவாக வாழமுடியுமா?” சொல்லும் போது என் நாக்கு தளுதளுக்க கண்கள் பனிக்கின்றன.

”சும்மா இருங்கோ...., நீங்கள் நல்ல அப்பாவாக மட்டுமன்றி உற்ற தோழனாகவும் இருப்பீங்கள்.” என் முதுகை இதமாகத் தடவிக் கொடுக்கிறாள் சர்மி. குனிந்து அவள் உதட்டில் நன்றியுடன் முத்தமிட்ட போது அவளின் இறுக்கமான அணைப்பு எனக்கு மிகவும் தேவையாக இருந்தது.

எத்தனை பெரிய பொறுப்பொன்று என் கையில் - நிபந்தனையற்ற அன்பைக் கொடுத்து, சுயமதிப்பை வளர்த்து, விழும்போதெல்லாம் கை கொடுத்து, கலங்கும் பொழுதுகளில் சாய்வதற்கு தோள் கொடுத்து, சுற்றுப்புறப் பொறிகளிலிருந்து பாதுகாத்து, எது சரி எது பிழை என விழுமியங்களைக் கற்பித்து....... அவனை நல்ல முறையில் வளர்த்தெடுக்க என்னால் முடியுமா?...............

எண்ணக்கோர்வைகளின் இடையில் என் அப்பாவின் முகம் எட்டிப் பார்த்தது. நான் பிறந்தபோது அவர் மனதில் என்ன எண்ணங்கள் இருந்திருக்கும் -----?

“ஆனந், யுவர் டாட் லவ்ஸ் யூ. கீ வான்ற்ஸ் ரு பி பாட் ஒவ் யுவர் லைவ்”, மிக அமைதியான, இங்கிதமான குரலில் சொல்கிறார் மிசிஸ் ஜோன்.--- கோட்டினால் எனக்கென என் நல்வாழ்வை உறுதிப்படுத்த நியமிக்கப்பட்ட சேவையாளர்.

“நோ, நோ!' திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

“யூ நீட் கிம் ரு காவ் எ கெல்தி லைவ்”.

“கீ டசின்ற் லவ் மீ, கீ கேற்ஸ் மீ”, என பலத்து அழுகிறேன்.

மிசிஸ் ஜோன் எவ்வளவோ தன்மையாக, பல காரணங்கள் காட்டியும் நான் என் முடிவில் உறுதியாக நின்றது, இன்னும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.  முடிவில், மேற்பார்வை உள்ள விசிற்ரேசனுக்கு சிபாரிசு செய்யப்பட அதனால் ஆத்திரம் கொண்ட அப்பா ஏதோ வர வேண்டும் என்பதற்காக ஒரு சில தடவைகள் வந்தார். பின் நான் ஒட்டிக் கொள்ளாமல் விட்டதாலோ, இல்லை தன் கர்வம் பாதிக்கப்பட்டதாலோ அல்லது அம்மாவுக்கு முழுமையான கஸ்ரடி கிடைத்த கோவத்திலோ, என்னவோ அதை நிற்பாட்டி விட்டார்.

அப்பா எனக்கு என்ன செய்திருக்கிறார். அவர் என்ரை கவலைகளைக் காது கொடுத்து கேட்டிருக்கிறாரா? அல்லது என் விருப்பு வெறுப்புக்களில் அக்கறை கொண்டிருக்கிறாரா? இல்லை எனது பள்ளிக்கூடப் பாடங்களில் உதவி செய்திருக்கிறாரா? அவரை எனக்கு என்னத்துக்கு தேவை? நான் செய்வது பிடிக்காவிட்டால் கத்துவார். கையில் அகப்பட்டதால் அடிப்பார் --- எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

மகனை அணைத்த வண்ணம்,  “சாரங்கள் என்று பெயர் வைப்போமா?”, என்கிறாள் சர்மி. சூழ்நிலை அழுத்தத்தை மாற்றலாம் எனப் போலும்....

உள்ளத்தில் உவகைபொங்க அவன் தலையை வருடிபடி, 'சாரங்கன்’ என்று நான் அழைத்த சத்தம் கேட்டதாலோ என்னவோ, கண்விழித்து என்னைப் பார்க்கின்றான், அவன். அவனின் அந்தப் பார்வை, 'உன்னை நம்பித்தான் நான் இவ்வுலகிற்கு வந்துள்ளேன்’, என்று எனக்குச் சொல்வது போல் எனக்குப் பட்டது.

கதவில் மெல்ல தட்டும் சத்தம் கேட்டு, 'come in’ என்கிறேன். நண்பன் சுரேன், மனைவியுடனும் மகளுடனும் வந்திருந்தான்.

 “உங்கள் மூவருக்கும் பயன்படக்கூடிய ஓர் அன்பளிப்பு இது”, என பெற்றோர்த்துவம் பற்றி ஒரு புத்தகமும் கசற்றும் தருகிறான்.

அது பழைய நினைவு ஒன்றை மீட்ட வைக்கிறது.

 “ஒரு குட் நீயூஸ் மச்சான் நான் அப்பாவாகப் போகிறேன்”, ஒரு வெள்ளிக் கிழமை வேலை முடிந்து ஒன்றாகப் போகும் போது நண்பன் சுரேனுக்கு சொல்கிறேன், “வாழ்த்துக்கள் மச்சான்!, ஒரு பிள்ளைக்கு அப்பாவாகவோ இல்லை அம்மாவாகவோ ஆவதில் கிடைக்கும் சந்தோசம் எதிலும் கிடையாது”, என்கிறான்.

 “நாங்கள் வளர்ந்தமுறை எப்படியோ எங்கடை பிள்ளை வளர்ப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற உண்மை மனசிலை பீதியை ஏற்படுத்துகிறது...... ”, இது நான்

இந்த உரையாடலை நினைவு வைத்திருப்பான் போலும்....

அன்று அப்பா ஓடிப்போன போது மனதில் வந்த அமைதிக்கு ஈடுஇணை எதுவுமில்லை. கோடைகால விடுமுறைக்கு முன் நடந்த பாடசாலை விழாவில் என் பங்கு நிறைவாக அமைந்த மகிழ்ச்சியில் பக்கத்துக் கடையில் வாங்கிய ஐஸ்கிறீம் சாப்பிட்டுக் கொண்டு அம்மாவுடன் போய் வீட்டைத் திறந்த போது அது அதிசயமா? இல்லை அதிர்ச்சியா?, என நம்ப முடியவில்லை. அப்பா வீட்டை விட்டு வெளியேறி விட்டார் எனப் புரியும் வகையில் பொருட்கள் அப்புறப் படுத்தப்பட்டிருந்தன.

தன் கூட வேலை செய்யும் பெண்ணுடன் போனதில் அவருக்கும் மகிழ்ச்சி, தினமும் அழுது அழுது தனக்குள் வெந்து போன அம்மாவுக்கும் விடுதலை, பயந்து பயந்து செத்துக் கொண்டிருந்த எனக்கும் நிம்மதி, என்று ஆயாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

அம்மாவுக்கு புருசனைக்குள் கைக்குள் வைத்திருக்கத் தெரியாது. அம்மா சரியாக இருந்தால், வீட்டுச் சாப்பாடு சரியாயிருந்தால் ஏன் வெளியில் அவர் போகிறார் - என்றெல்லாம் தமது நாக்கை விரும்பிய விதமெல்லாம் வளைத்து ஆக்கள் பல கதைகள் கதைத்து முடிய பல வருடமானது. அவருக்கு அப்படி ஒரு தொடர்பு இருக்குது என்று தெரிந்தாலும் இப்படி ஓடிப் போவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அம்மாவை எப்ப டிவோஸ் பண்ணி எங்கள் வாழ்வுக்கு விமோசனம் தருவார் எனக் காத்திருந்த எனக்கோ வார்த்தையில் வடிக்க முடியாத ஆறுதல் கிடைத்தது.

பாத்திரங்கள் உடையும் ஒலியும், பலத்த சத்தத்தில் அப்பாவின் உறுமலும் கேட்டு நித்திரையில் இருந்த நான் எத்தனை நாள் திடுக்கிட்டு எழும்பி, எழும்பிய வேகத்தில் குசினிக்குள் ஓடியிருக்கிறேன். உதட்டிலோ, முரசிலோ இரத்தம் வழிய அழுது கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்;து இரத்தக்கண்ணீர் வடித்திருக்கின்றேன் என்றெல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். எப்போதும் என்மனம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக என்னைக் கண்டதும் எதுவும் நடக்காதது மாதிரி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, 'ஆனந் முகத்தைக் கழுவிக் கொண்டு வா சாப்பிட, அம்மாவுக்கு வேலைக்கு நேரம் போகுது’, என்பார். வழமை போல் நான் அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவேன். எனக்கு அப்பாவில் மிகுந்த ஆவேசம் வரும். உடம்பெல்லாம் என்னையறியாமல் நடுங்கும். என்ன செய்வது எனத் தெரியாது அசையாது நிற்பேன். 911க்கு அழைக்க வேண்டும் போல வேகம் வரும்.

 “உன்ரை அம்மா ஒரு வேசி”, என்று என்னவெல்லாமே சொல்லி அப்பா கத்துவார். நான் அம்மாவின் பக்கம் நிற்கிறேன் என்ற கோவத்தில், அந்த ஆற்றாமையில், பொறாமையில் பின் என்னிலும் ஒரு பிழை கண்டு பிடித்து எனக்கும் அடிக்க வருவார். அம்மாவைத் தப்பான ஆளாக எனக்குக் காட்டுவதன் மூலம் தான் என்னத்தைத் தான் சாதிக்க நினைக்கிறாரோ என பல தடவைகள் நான் சலித்துக் கொண்டதுண்டு.
 
அவர் சொன்னது போல் வேலைக்குப் போக முன் குளியலறையைச் சுத்தம் செய்ய நேரமில்லை என்று அம்மா சொன்னதோ, இல்லை அவர் சொன்ன ஏதோ ஒன்றுக்கு அம்மா மறுப்பு தெரிவித்ததோ இப்படி ஒரு பூகம்பத்தில் வந்து முடிந்திருக்கிறது எனப் பின்னர் தெரியவரும்.

இப்படிப் பல நிகழ்வுகள். 'வேண்டாப் பெண்டாட்டி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம்’, என்ற மாதிரித்தான்.

'வா கடைக்குப் போவோம், உனக்கு toys வாங்கித் தருகிறேன்’, என்று எப்போதாவது அப்பா அன்பாகக் கேட்டாலும் கூட, அங்கு நான் ஏதாவது பிழை செய்து அவர் கோபத்துக்குக் காரணமாகி விட்டால் என்ன நடக்குமோ என மனதில் பீதி வரும். மிகக் கடுமையாக மறுப்பேன். அழுவேன். அதற்கும் அவர் அம்மாவைத்தான் வசை பாடுவார். 'உன்ரை அம்மா ஒரு கிறேசி வுமன், அவள் தான் உனக்குத் தேவையில்லாத கதை சொல்லி உன்னை என்னிடம் இருந்து பிரிக்கிறாள்’, என்பார்.

எந்த மனித மனமும் தன்னுடன் ஒத்திசையக்கூடிய, பிறழ்வு இல்லாமல் செயல்படக்கூடிய, இயல்பாக, போராட்டமின்றி வரும் அன்பைத் தானே நாடும். தன் செய்கைகளைக் கூட விளங்காத ஆளைப் பார்த்து நான் என்றுமே பரிதாபப்பட்டதே கிடையாது. சில வேளைகளில் வீட்டுக்கு வரவே பிடிக்காது. ஆனால் அம்மாவுக்காக வரவேண்டியிருக்கும்.

என் மகனை மடியில் வைத்துக் கொண்டு எப்படி அவள் பிறந்தாள் என விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த சுரேனிடமிருந்து தான் பிள்ளையை வாங்க அடம்பிடித்த, அவன் மகளின் அழுகைச் சத்தம் என்னை என் நினைவிலிருந்து மீட்டது.

'உமாக்குட்டி, உன்ரை மடி சின்னனம்மா. குட்டிக் கையாலை பேபியைப் பிடிக்க இயலாதெல்லோ. இந்தா பார். உமாக்குட்டி பேபியிலை அழுத மாதிரி இப்ப அப்பா அழப் போறாராம்’, அவனின் விளக்கத்திலும் திசைதிருப்பலிலும் உமா தன்னை மறந்து சிரித்தாள். அதைச் சாக்காக்கி அவர்கள் வெளியேறினர்.

என் பிள்ளைப் பருவத்தில் நான் அடம் பிடித்தவொரு சம்பவம் ஒன்றை உமா நினைவுட்ட, “யூ கிரேசி சைல்ட், மூவ் எவே||, என்ற அப்பாவின் கரகரப்பான குரல் என் காதுகளில், அவர் கை என் முதுகில், பியர் வாடை என் நாசியில் வந்து போனது..

எந்த நேரமும் சிகரட் மணமும் பியர் வாடையும் அடிக்க வலம் வரும் அப்பா, எப்போதும் என்னைத் தாழ்வாகப் பேசும் அப்பா, அம்மாவில் பிழை காணும் அப்பா, தான் மட்டும் தான் சரி என எல்லாத்துக்கும் உச்சஸ்தாயிக் குரலில் கத்தும் அப்பா, வெருட்டிப் பயப்படுவதன் மூலம் தன் வழியில் தான் நினைப்பதைச் சாதிக்க நிற்கும் அப்பா. காலையில் எழுப்பப் பிந்தினால் என் முதுகில் பளார் என அறைவதன் மூலம் அலறலுடன் எழும்ப வைக்கும் அப்பா. ஒருநாள் அம்மா ரீ போட்டுத் தரவில்லை என பிரளயம் நடத்தி என்னைப் பள்ளிக்கூடம் கூட்டிப் போக மறுத்த அப்பா. என் பள்ளிக்கூட வேலையில் உதவுவது தன் வேலையல்ல அது ரீச்சர்மாருடைய வேலை என நியாயம் சொல்லும் அப்பா-------  இதுவே என் நினைவில் நிற்கும் அப்பா.

அவருடன் இருக்கும்  பொழுதுகளில் எப்பவும், எந்தச் செய்கை, என்ன சொல் அவரைக் கோவப்படுத்துமோ என்று ரென்சன் இருக்கும். சூழவுள்ள சிறுவர்கள் தங்கள் அப்பாமாருடன் கொஞ்சிக் குலாவுவதை நான் ஏக்கத்துடன் பார்த்த பொழுதுகள் எண்ணிலடங்காதவை. அவரை என்னால் என்றுமே மன்னிக்க முடிந்ததில்லை. சில வேளைகளில் அம்மா எனக்கு அவரில் உள்ள சில நல்ல இயல்புகளை சொல்லி எப்படியும் உன் அப்பா அல்லவா என வக்காலத்து வாங்க முயற்சிக்கும் பொழுதுகளில் எனக்கு அம்மாவில் கூட எரிச்சல் வரும்.

அப்பா எங்களுடன் இருந்த போது என் பிறந்த நாளை பலருடன் சேர்ந்து குடித்துக் கொண்டாடி மகிழ்வது தான் தன் கடமை என நம்பினார். பெரியப்பா, மாமா, மாமி, சொந்தம், பந்தம் எனப் பலரும் வந்து பெரிதாக அன்பைச் சொரிவது போல் கட்டிப் பிடித்து, படங்களுக்கு 'போஸ்’  கொடுத்து பல அன்பளிப்புக்கள் தந்தனர். பின் அப்பாவும் போக உறவுகளும் போய் விட்டன. சில மானம் போனதாக ஒதுங்கிக் கொள்ள, வேறு சில அம்மாவில் பிழை கண்டு விலக்கிக் கொண்டன.

எனக்கென ஒரு உறவும் இருக்கவில்லை. எல்லாம் போலி என்ற உண்மை புரிந்தபோது, அந்த நிதர்சனம் உறைந்த போது என் கண்ணீரும் வற்றிக் கொண்டது. நடந்து முடிந்த வாழ்வின் அவலங்களை நினைத்து கலங்கிக் கலங்கி முடிவில் அத்தனையும் மறந்து  ‘அம்னீசியா’ நோயில்  ஒரு பொய் வாழ்வு வாழும் நிலைக்கு அம்மா வந்ததில், ஒடிந்து போன என் உள்ளத்துக்கு, என் வாழ்க்கு, ஒத்தடம் தர வந்த தென்றல் தான் சர்மி.

'உடம்புக்கு வருத்தம் வந்தால் டொக்டரிட்டை போற மாதிரி இதையும் நினைத்தால் தயக்கமிருக்காது. மனதில் உள்ள புண்களை ஆற்றினால் தான் வேதனையில்லாமல் வாழலாம். சூழவுள்ளவர்களையும் வாழ விடலாம்’, என்று கவுன்சிலிங் பற்றி, வீட்டுக்கு போகும் போது வானொலியில கேட்டவை என்னையும் சிந்திக்க வைத்தது. ஒரு நல்ல அப்பாவாக இருக்க என் மனதில் ஆழமாக பதிந்திருக்கும கோவத்தை, வெறுப்பை வெளியில் எடுப்பது அவசியம் என உணர்கிறேன்.

'வாழ்த்துக்கள் ஆனந், உன் வாழ்க்கையில் இனி எத்தனை மாற்றங்கள் பாரேன்!, எந்தவித முன் அனுபவமும் கேட்காமல் 24/7 வேலை கிடைத்திருக்கிறது, அதற்கு நீ தயாரா?”, என்றான் சிரிப்புடன் தொலைபேசியில் நண்பன் கதிர்.

 “சின்ன வயதில் ஏற்படும் மனப் பாதிப்புக்கள் வயதானதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது அல்லது வாழ்விலிருந்து ஒதுங்க வைக்கிறது, பயங்களும் மனப்பாதிப்பும் குறைய 'கவுன்சிலர் யாருடனுமாவது கதைத்துப் பாரேன் ஆனந்”, மிகவும் நிதானமான வாழ்க்கை பற்றி ஆழமான கருத்துக்கள் கொண்ட, அமைதியான சுபாவமுள்ள நண்பன் கதிர், இப்படிப் பலமுறை சொல்லியிருப்பான்.

பாடசாலையில் குடும்ப வரலாறு படிக்கும் போது, பிள்ளைகளின் வளர்ச்சியில் சூழ்நிலைகளின் தாக்கம், பிள்ளைகளின் அடிப்படை உரிமைகள் என்றெல்லாம் கலந்துரையாடி பொழுதுகளில் வெறுமையும், விரக்தியும் பலமுறை தோன்றியிருக்கின்றன.

பூரணமானதொரு மனிதனாக நான் உருவாகுவதற்கு எனது அப்பா என்ற பாத்திரத்தைப் பற்றி ஒரு அறிவும் விளக்கமும் தேவையோ எனக் குழம்பியபோது, ஓடிப் போன பொம்பிளையுடன் பலாத்காரமில்லாமல் வாழ்கிறாரா என விடுப்பு அறியும் உந்துதல் வந்தபோது, எங்களுடன் ஏன் அப்படியான ஒரு வாழ்வு வாழந்தார். அதன் பின்னணி என்ன என்று ஆராய முனைப்பு உருவானபோது, இலங்கைக்குப் பயணம் போனவிடத்தில் சாலை விபத்தில் அவர் காலமான செய்திதான் கிடைத்தது.

ரீவி யை திருகிவிட்டு 'ரீ போடுவதற்காகத் தண்ணீரைச் சுட வைக்கிறேன். 'பிள்ளை வளர்ப்புக் கலை பிறப்பில் வருவதல்ல, அது ஒரு கற்றறிய வேண்டிய திறன்’, என்ற முத்தாய்ப்புடன் ரோக் சோ ஆரம்பமானது.

ஒரு நல்ல ஆண்மாதிரி இல்லாமல் வளர்ந்த நான் என் மகனுக்கு ஒரு மாதிரி மனிதனாக அமைய எனக்கு 'கவுன்சிலிங் மட்டுமல்ல, பிள்ளை வளர்ப்புமுறை வகுப்புக்களும் கூட மிக முக்கியம் என்பது மிகத் துல்லியமாகப் புரிகிறது. என் சுவடுகள் என் மகனின் மனதில் காயத்தை ஏற்படுத்தாமல் பார்ப்பது என் தார்மீகக் கடமை. அதைச் சரிவரச் செய்ய அத்தனை உதவிகளையும் பெற்றுக் கொள்வேன் என எனக்கு நானே உறுதி செய்து கொள்கிறேன். அதனால் மனம் சற்று இலேசாக, 'ரோக் சோவைச் செவிமடுத்தபடி, சுரேன் தந்த பெற்றோர்த்துவம் புத்தகத்துடன் சோபாவில் சாய்ந்து கொள்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here