(1963 இல் தமிழ் இலக்கியக் களத்தின் நிகழ்வுகளால் மையப்படுத்தப்பட்ட கதை. தினகரன் பத்திரிகையில் வெளியானது. அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 24. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அனுப்பி வைத்த சிறுகதை. அவருக்கு நன்றி. )


அன்புள்ள செயலாளருக்கு,

தங்கள் எழுத்தாளர் சங்கம் நடத்துகின்ற அகில இலங்கைச் சிறுகதைப் போட்டிக்கென, எனது ‘ஒரே வழி’ என்ற கதை இத்துடன் வருகிறது. போட்டியின் பெறுபேற்றை உரிய காலத்தில் அறிவிக்கவும்.

செல்வி ரோகினி, 28- 4- 63

அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
 
நாம் நடத்திய சிறுகதைப் போட்டியில் தங்களின் ‘ஒரே வழி’ என்ற கதை, ‘இரண்டாம் பரிசுக்குரியதென’ நீதிபதிகளால்  தெரிவு செய்யப்பட்டுள்ளது. பரிசளிப்பு வைபவம், மட்டக்களப்பிலே இம்மாத ஈற்றில் நடைபெறும் முத்தமிழ் விழாவின் ஓர் அங்கமாக இது அமையும். தாங்கள் நேரில் வந்து பரிசு பெற வேண்டும் என விரும்புகிறோம்.  
 
தங்களின் கதை, நமது வெளியீடாக விரைவில் வரும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெறவுள்ளது. ‘பாஸ்போட்’ அளவிலான தங்கள் புகைப்படமொன்றைச் சீக்கிரம் அனுப்பவும்.

சண்முகதாசன். 11 - 8 – 63

குறிப்பு: மட்டக்களப்பில் தங்குவதற்கும், உணவுக்கும் வேண்டிய ‘வசதிகள்’ செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் பரிசு ரூபா 1500.
                                
வாமதேவன். 11- 3- 63


அன்புள்ள செயலாளருக்கு,
   
தங்களிடமிருந்து வர வேண்டிய பரிசுத் தொகை இதுவரை கிடைக்க வில்லை. பத்திரிகை ஒன்றில், ‘ரோகினிக்கு பரிசு வழங்கப்பட்டு விட்டது’ என்ற தங்கள் அறிக்கை வந்திருக்கிறது.
   
பரிசை உரிய காலத்தில் அனுப்பியிருப்பினும், தபால் பட்டுவாடாவின் சீர்;கேட்டினால் சில வேளை தாமதமாகிறதுபோலும்.
இதனைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதன் மூலம், தக்க நடவடிக்கை எடுத்து அனுப்பி வைக்க அனுகூலமாயிருக்குமெனக் கருதுகிறேன்.
                              
ரோகினி  2-9- 63  

  
அன்புள்ள செயலாளருக்கு,
     
எனது ‘ஒரே வழி’ என்ற கதை ‘இரண்டாம் பரிசு பெற்றதென்ற தங்கள் கடிதம் கிடைத்தது. தங்கள் வேண்டுதற்படி, குறிப்பிட்ட தினங்களில் பரிசளிப்பு விழாவிற் கலந்து கொள்ள வசதிவராது. மன்னிக்கவும். கதையைப் பிரசுரிக்கும்போது ‘செல்வி ரோகினிக்குப் பதிலாக ‘ரோகினி’ என்று பெயரை மட்டுமே குறிப்பிடவும்.
   
புகைப்படம் அனுப்பிவைக்க முடியவில்லை. குறிப்பிட்ட பரிசுத் தொகையை உரிய காலத்தில் அனுப்பி வைக்கவும். தங்கள் எழுத்தாளர் சங்கம் நடத்தும் இலக்கிய விழா, சகல வகையிலும் சிறக்க என்; வாழ்த்து.
                                
ரோகினி 19-8-63

    
அன்புள்ள செயலாளருக்கு,
    
இன்றுவரை எனது கதைக்கான பரிசுத் தொகை கிடைக்கவில்லை. இதுபற்றி இரண்டு கடிதங்கள் அனுப்பியிருந்தேன். பரிசை அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமலே மௌனம் காத்து வருகிறீர்கள். அதேவேளை பத்திரிகைகளில் ‘மூன்று பரிசுகளும் வழங்கப்பட்டன’ என்ற அறிக்கைகளைப் போட்டி போட்டுக் கொண்டு விடுகிறீர்கள்;.
    
பல சிரமங்களுக்கு மத்தியில் பரிசுத் தொகையை அனுப்பி வைக்கத் தாமதமாகலாம் என்பதாலும், விரைவில் பரிசை அனுப்புவீர்கள் என்ற திடமான நம்பிக்கையிலும் பத்திரிகைகளுக்கு மறுப்பே எழுதாமலிருக்கிறேன். காலந் தாழ்த்தாமல் பரிசுத் தொகையை அனுப்பவும். இது எனது மூன்றாவது கடிதம்.
                                   
ரோகினி   2-9-63

அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
    
தங்கள் கடிதங்கள் கிடைத்தன.
    
நாங்கள் வெளியிடவிருக்கும் சிறுகதைத் தொகுதியில் பரிசுபெற்ற மூன்று எழுத்தாளர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய குறிப்புகளையும் பிரசுரிக்க எண்ணியுள்ளோம்.
    
கைவசம் புகைப்படமில்லாவிடின் எங்கள் எழுத்தாளர் சங்கத்தின் செலவில் ஒரு படம் பிடித்து அனுப்பும்படியும் தங்கள் வாழ்க்கை, எழுத்துலக சாதனைகள் பற்றி, ‘வாசகர் விரும்பக் கூடிய முறையில்’ எழுதியனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன். படத்துடன் புகைப்படப் பிடிப்பாளரின் பற்றுச் சீட்டை அனுப்பினால், அதில் குறிப்பட்டுள்ள தொகையையும் அனுப்பிவைப்போம்.
                                     
வாமதேவன் - 8- 9. 63
   
    
அன்புள்ள செயலாளருக்கு,
    
தங்கள் கடிதங்கள் கிடைத்தன. பரிசுத்தொகை பற்றி ஒரு வாசகமும் குறிப்பிடாமல், கடிதம் ‘அத்து மீறி’யிருக்கிறது. கதைக்கான பரிசை அனுப்பாதவரை, அக்கதையைப் பிரசுரிப்பதற்கு நான் அனுமதியளிபபதற்கில்லை. எனது பரிசை உடனே அனுப்பவும்.
                                   
ரோகினி  -  10.-9-63


அன்புள்ள ஐயா,
     
தங்கள் ஸ்தாபனம், பரிசு பெற்ற எனது ‘ஒரே வழி’ என்ற கதைக்கான பணத்தை இலக்கியப் போட்டி நடத்திய எழுத்தாளர் சங்கத்துக்குச் சன்மானமாக வழங்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன்.
     
அந்த எழுத்தாளர் சங்கம் பரிசை இதுவரை எனக்கு அனுப்பவில்லை. முடிந்தால், சன்மானம் அளிக்கும் தாங்களே அதனைப் பெற்று எனக்கு அனுப்புங்கள்.
     
எழுத்தாளர் சங்கம் பரிசை அனுப்பாதவரை எனது கதையைப் பிரசுரிப்பதற்கு நான் அனுமதியளிக்கவில்லை என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  
                                
ரோகினி  -  10- 9- 63
 
அன்புள்ள செயலாளருக்கு,
     
‘கலைமணி’ சஞ்சிகையில் தங்கள் எழுத்தாளர் சங்க விளம்பரத்தின் பிரகாரமே சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன். போட்டியில் கதை தேர்வாகி பரிசுக்குரியதாகியும் விட்டது. கதைக்கான பரிசுத் தொகையையும் தங்கள் விளம்பரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட பெயருக்கு நேர்மையாக அனுப்ப வேண்டியதே யோக்கியமான செயல். இதர சமாச்சாரங்கள் உங்கள் ‘வேண்டுதல்’களேயன்றி ‘நிபந்தனை’களன்று. வேண்டுதல்களை அங்கீகரிப்பதும் நிராகரிப்பதும் கதை எழுதியவனை பொறுத்த விஷயம். சிறுகதைப் போட்டி தரமான இலக்கிய நிர்ணயிப்புக்கு நடத்தப்பட்டதேயன்றி, எழுத்தாளர்களுக்காகவல்ல.
    
பரிசையே அனுப்பாமல் பத்திரிகைகளுக்கு, ‘பரிசு வழங்கப்பட்டது’ என்று பொய்யான அறிக்கை விடுத்து இலக்கியவாதியான என்னை மட்டுமன்றி, எனது அபிமானிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றியுள்ளீர்கள்.
     
இந்தப் பரிசுகேடுக்காக ஐந்து தடவை நினைவுபடுத்தவேண்டிய சங்கடத்தை  எனக்கேற்படுத்தினீர்கள். கதைக்கான பரிசை அனுப்புகிறீர்களா? இல்லையா? இறுதியான முடிவை உடனே தெரிவிக்கவும்.
                               
ரோகினி – 14 - 9- 63

அன்புள்ள ரோகினிக்கு,
    
தங்கள் அஞ்சலட்டையும் கடிதங்களும் கிடைத்தன.
    
ஓர் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் என்ற வகையிலும் இலக்கியவாதி என்ற முறையிலும் தங்களை ஏதாவது ஒரு வகையில் அடையாளங் கண்ட பின் பரிசுத் தொகையை அனுப்பி வைக்க முயன்றேன். தங்கள் ‘ஒத்துழைப்புக் கிடைக்காத’ காரணத்தால் செயற்குழுவின் அனுமதியின்றித் தங்கள் பரிசுக்குரிய பணத்தை அனுப்பத் தயங்குகின்றேன். தங்கள் பரிசுத் தொகையை வழங்காமல் தங்கள் கதையைப் பயன் படுத்தமாட்டோம் என்பதை உறுதியளிப்பதோடு, இனி நேர்முகமாகத் ‘தங்களோடு தொடர்பு’ கொள்ள முயல்கிறேன்.
                               
வாமதேவன் - 14- 9 – 63

அன்புள்ள செல்வி ரோகினிக்கு,
      
தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியின் பரிசு பெற்ற எழுத்தாளர் மூவருக்கும் ‘பாராட்டு விழா’ ஒன்றினை நடத்த எமது இலக்கியக் குழு முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க இவ்வழைப்பிதழ் தங்களுக்கு அனுப்பப்படுகின்றது.
      
21-9-63 சனிக்கிழமை மாலை 5 மணிக்குக் கவிஞர் நடராஜன் அவர்கள் தலைமையில் பம்பலப்பிட்டி ‘கிரீன் லண்ட்’ ஹொட்டலில் ஒரு பாராட்டு விழா நடைபெறும்.
     
தாங்களும் சமூகந் தந்து விழாவைச் சிறப்பிக்க அழைக்கின்றோம்.
                         
விழாக் குழுவினர் - 17 - 9- 63
     
அன்புசால் விழாக் குழுவினருக்கு,
     
சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்களை கௌரவிக்கு முகமாகத் தங்கள் இலக்கியக் குழுவினர் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் கிடைத்தது.
      
குறிப்பிட்ட எழுத்தாளர் சங்கம் இதுவரை எனது கதைக்கான பரிசுத் தொகையை வழங்கவில்லை. எனவே தாங்கள் நடத்தும் ‘பாராட்டுவிழா’வில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.
     
இலக்கியம் என்றால் பாராட்டுவதே சம்பிரதாயமெனின், அத்தகைய ஒரு சம்பிரதாயத்துக்காகவேனும் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தாக்களுக்குப் பாராட்டு விழா நடத்துவதுபோல், தாங்களே முன் வந்து வழங்கப்படாத எனது பரிசுத் தொகையை அந்த எழுத்தாளர் சங்கத்திடமிருந்து பெற்றுத் தருமாறு வேண்டுகின்றேன்.

அமலதாசன் (ரோகினி) 19-9-63
 
அன்புள்ள ரோகினிக்கு,
      
நாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசுக்குரிய சிறுகதைக்கான பரிசு வழங்கப்படமாட்டாது.
      
பல எழுத்தாளர்கள் ‘அக்கதை தங்களுடையது’ என்று உரிமை பாராட்டுவதாலும், ஒருவரேனும் தங்களைப் பற்றி விபரங்களையோ படத்தையோ அனுப்பி வைக்கத் தவறியதாலும், எங்கள் எழுத்தாளர் சங்கச் செயற்குழு மேற்படி முடிவுக்கு வந்துள்ளது.
      
இரண்டாம் பரிசுக்குரிய கதையைத் தவிர, போட்டிக் கதைகள்’ என்ற தலைப்பில் மிகுதி ஒன்பது கதைகளும் தொகுக்கப்படுகின்றன. இதன் வெளியீட்டு விழா அடுத்த மாதம் ‘வெகுவிமரிசை’யாகக் கொண்டாடப்படும்.
      
எமது செயற்குழுவின் இம்முடிவினை 20-9-63 இல் வெளியான ‘செய்திக் குறிப்பையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இதனைவிட ஏனைய பத்திரிகைகளுக்கும் எம்மால் தயாரிக்கப்பட்ட ‘அறிக்கை’ அனுப்பப்பட்டுள்ளது.
                              
வாமதேவன் 28 - 9 - 63  

குறிப்பு : எங்கள் சங்கத் தலைவர் தங்கள் முகவரிக்கு நேரில் வற்த போதும் நிலைமை தெளிவாகவில்லை. எனவே  பரிவுத் தொகையை நன் கொடையளித்தவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படவிருக்கிறது – வா.
     
அன்புள்ள செயலாளருக்கு,
     
அதிக நாட்களாக நிஷ்டையிலிருந்த நான் மௌன விரதத்தைக் கலைத்து விட்டு இதனை எழுதுகிறேன்.
     
தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் விரிவான விவரங்கள் வேண்டியிருந்தன என்ற தோரணையில் எழுதியமையால் நானும் விஷயத்தை விளம்புகிறேன்.
    
தாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘ரோகினி’ என்ற பெயரில் எழுதியது நானே. ரோகினி எனது பத்துமாதப் பெண் குழந்தையின் பெயர். பதிரிகைகள் குறிப்பிட்டதுபோல இக்குழந்தை எட்டு வயதுப் பாலகியல்ல: தாங்கள் கருதியதுபோல் பதினெட்டு வயசு பருவக் குமரியுமல்ல.
    
அக்கதைக்கு ‘பல எழுத்தாளர்கள் உரிமை பாராட்டினார்கள்’ என்று வேறு ’திடீ’ரெனக் கரடி விட்டுக் கயிறு திரித்தமைக்காக இலக்கியவாதி என்ற வகையில் வருந்துகிறேன். எழுத்துலகில் ‘திடீர் திப்’பென்று தோன்றிய அந்த நவயுக இலக்கியப் பிரமாக்கள் யாரையா?
     
29- 9 – 63 தினசரியில் ‘ஒரே வழி’என்ற அக்கதை பிரசுரமானதே. அப்போதாவது அந்தப் பல எழுத்தாளர்களும் கொதித்தெழுந்து உரி;மைப் போராட்டத்தில் குதித்திருக்கலாமே? அந்தப் பிரமாக்கள் ஒரு சேர இறந்து விட்டார்களா?  
     
தங்கள் எழுத்தாளர் சங்கத்தின் ;பெருந்தலைவர்’ பணத்துடன் எனது வசிப்பிடம் நாடி வந்தார் என்று குறிப்பிட்டிருப்பதும் இது போன்ற திருகுதாளமே. எனது முகவரிக்குத் தங்கள் தலைவர் எந்தச் சந்தர்ப்பத்திலாவது வரவில்லை என்பதைத் தெரிவிப்பதுடன், எந்த நேரத்திலும் எந்த எழுத்துலகப் பிரம்மாவையும் சந்திக்கக் காத்திருக்கின்றேன். எனது முகவரியைத் தவிர வேறு முகவரியை நான் தங்களுக்கோ இலக்கிய உலகிற்கோ ஒருபோதும் தெரிவித்ததில்லை.
    
இலக்கியம் கிள்ளுக் கீரையல்ல, சமுத்திரம். அது தவமியற்றும் முனிவர்களுக்கு வெளித்து வரும் நட்சத்திரம்போல் எழுத்தாளர்களிடமிருந்து முகிழ்ந்த வரும் சிருஷ்டி – அந்தச் சிருஷ்டிகளைத் திருகுதாளங்களால் ஒரு போதும் மறைத்துவிட முடியாது. ஒன்று சொல்கிறேன். மானிட இதய வேட்கையோடு சத்தியப் பேனா பிடிக்கிற திராணியும் தகுதியும் தங்களுக்குண்டாவதாக. இனியாவது எதிலும் மோசடி புரியாதிருப்பீர்களாக.
                             
அமலதாசன் 7-10-63

எழுத்தாளர் சங்கத்துக்கு ஒரு பகிரங்கக் கடிதம்.
     
அன்புடையீர்,
     
தாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ‘ஒரேவழி’ என்ற கதை ஆசீரியருக்கு அப்பரிசு வழங்கப்படாதெனவும், அறுவர் அதற்கு உரிமை பாராட்டியதால்’ அம்முடிவை மேற்கொண்டதாகவும் 10- 10- 63 ‘புதினம்’ இதழில்; அறிக்கை விட்டீர்கள்.
     
சுய விளம்பரத்திற்காக – பதவி ஆசைக்காக – பிரபல்யப்படுத்துவதற்காகப் இலக்கியப் போட்டிகளும் பாராட்டுக் கூட்டங்களும் இலக்கிய நபுஞ்சகர்களால் - அநாம தேயங்களால் நடத்தப்படுவதை நினைவிற்கொண்டு, தங்களுக்கும் சிறுகதைப்போட்டி யொன்றை நடத்த வேண்டும் என்ற ஆசை ஏற்படலாயிற்று. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்க வேண்டும் என்ற விபரீத எண்ணமும் ஏற்பட்டிருக்கலாம். அந்த ஆசைகளையும் இலக்கியம் போட்டி நிபந்தனைகளுடன் சேர்த்திருந்தால் அமலதாசன் போன்ற எத்தனையோ இலக்கியவாதிகளின் சிரமங்கள் தவிர்ந்திருக்கும்.
      
தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், தங்கள் முகாமிலுள்ளவர்களுக்குமே பரிசுகள் வழங்கப்பட்டு, அவர்களை விளம்பரப்படுத்தி தாங்களும் மகாஜனங்கள் மத்தியில் பிரபல்யமாகிவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இலக்கிய உலகிற்குப் புதியவர்களல்லர். இலக்கியப் போட்டிகளை விளம்பரப்படுத்திவிட்டு, இப்போட்டியில் தங்களுக்குப் பரிசு கிடைக்க வகை வகுக்கப்படுமாதலால் ஏதாவது ஒன்றை எழுதி அனுப்புங்கள்’ என்று சூசகமாக அறிவிக்கின்ற எழுத்துலகச் சிற்பிகள் முதற்கொண்டு, ‘நான் இலக்கிய நூல்களுக்கு முன்னுரையளித்தால் அந்நூல்கள் நிச்சயம் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுவிடும்’ என்று கூசாமல் தம்பட்டம் அடிக்கும் கலாநிதிச் சட்டம்பிமார்வரை எத்தனையோ பெரிய விமர்சன வித்தகர்கள் இருக்கின்றனர். ஒரு பகுதியை வாசித்துவிட்டே முழுநூலுக்கும் ‘விமர்சனம்’ செய்யும் அதிசூரர்களும் இருக்கின்றனர்.
      
ஆனால், மக்களை – வாசகர்களை - இலக்கிய அபிமானிகளை வெறும் முட்டாள்கள்’ என்று நினைத்துக்கொண்டு ‘சும்மா’ அறிக்கைகளை விட்டுக் குழப்பியடித்துத் திட்டமிட்டதைச் சாதிக்க முனைவதுதான் சுத்த ஹம்பக், ஆக வெட்கக்கேடு, பெரும் பரிசு கேடு.
       
தாங்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘செல்வி ரோகினி: என்ற பெயரில் எழுதி இரண்டாம் பரிசு எழுத்தாளர் அமலதாசன் என்பதனை, கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டபின்பே தங்களுக்குத் தெரிந்தது. எனவே மெல்லவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் விழிபிதுங்கி முழித்தீர்கள். எதிரணி இலக்கியவாதியான அமலதாசனுக்குத் தங்கள் சங்கத்தின் பரிசைக் கொடுக்கத் தங்களுக்கு மனசு வரவில்லை. யாரோ ‘திரி தூண்டி’ விட்டிருக்கிறார். எனவே, உங்கள் சகாக்கள் சிலரையோ ஒருவரையோ பிடித்து வைத்து ‘நான்தான் ரோகினி’ எனக்குப் பரிசை அனுப்பங்கள்’ என்று சில கார்டுகளை – கடிதங்களை எழுதுவித்து அவற்றை ஆதாரமாக வைத்து,                                                                                                                                                                                                                                     ‘அக்கதைக்கு அறுவர் உரிமை பாராட்டினார்கள். அதனால் பரிசு கொடுக்கவில்லை’ என்று அறிக்கைவிட்டு உங்கள் மாளா ஆசையை மீளப்பெற முயன்றீர்கள்.  
        
நியாயத்துக்கும் மனச்சாட்சிக்கும் உங்கள் சங்கத்தினர் கட்டுப் படுவதாகவிருப்பின் கீழே எழுதப்படும் கேள்விக் கணைகளுக்கு ஒழுங்கான பதில் கூறவேண்டும். இன்றேல், யோக்கியமாக எழுத்தாளர் அமலதாசனுக்கு இலக்கியப் பரிசைச் சீக்கிரம் அனுப்ப வேண்டும்.
      
1-.10-63 பத்திரிகையில் ‘எங்கள் சங்கத்தின் பெருந்தலைவர் பரிசுப் பணத்துடன் சென்றபோது வீடு பூட்டியிருந்ததைக் கண்டு அயலில் விசாரித்தளவில், ‘அப்படி யாரும் அங்கில்லை’ என்ற தகவலுடன் திரும்பினார் என்கிறீர்களே!, அப்படியானால் அந்த வீட்டில் வசித்தவர்களின் நாமதேயங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? அந்த அநாமதேயங்கள் யாவை?
       
28- 8- 63 தினசரியில், ‘இரண்டாம் பரிசு பெற்ற ஒரே வழி’ என்ற கதையை எழுதிய செல்வி ரோகினிக்குப் பரிசு வழங்கப்பட்டது என்கிறீர்களே, அப்படியாயின் மட்டக்களப்பு விழாவிற் கலந்து அந்தப் பரிசைப் பெற்றுச் சென்ற நவீன ரோகினி யாரையா?
     
நிரூபர் பிழையான செய்தி அனுப்பினாரெனக் கருதினால், அறிக்ககைகள் விடுவதில் அசகாயசூரரான தாங்கள் அதனை மறித்து மறு அறிக்கை விடாதது ஏன்? ரோகினி உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இதனைச் சுட்டிக் காட்டி வினவியபோது  ஏன் அந்த அறிக்கையை மறுக்கவில்லை. ‘பரிசு வழங்கப்பட்டு விட்டது’ என்ற செய்தி வந்தவுடன் யாவும் ‘கப்சிப்;’பென்று அடங்கிவிடும் என்ற நினைப்பா?
     
எழுத்தாளர் அமலதாசன் ‘கூழ்முட்டைப் போராட்டத்தின் போது யாழ்ப்பாண மண்டபத்தில் நேரிற் சந்தித்துத் தனது கதைக்கான பரிசு பற்றிக் கேட்டபோது, ‘ஐயோ, எனக்கொன்றும் தெரியாது. ஏல்லாம் இந்த எழுத்துலக பூஜாரிகளின் வேலைதான்’ என்று விட்டு நழுவி ஓடியது ஏனோ? ‘ஒரே வழி’ என்ற கதை பரிசுக்குரியதென தேர்ந்தெடுக்கப்பட்டதும், அதை எழுதியவர் ஒரு ‘செல்வி’ என்றவுடன், செயலாளரை முந்திக் கொண்டு அந்தச் செல்விக்குப் பாராட்டுக் கடிதம் -  காதற்காவியமாக எழுதிய எழுத்துலகப் பிரம்மா இவரல்லவா?
    
‘ஒரே வழி’ என்ற கதையை எழுதிய அமலதாசனே செல்வி ரோகினி என்று
1-10-63ஆம் 22-10-63 ஆம் திகதிப் பத்திரிகைகளில் குறிப்பிட்டிருந்ததும், உங்கள் கணக்குப்படி பரிசு கோரிய ஆறு நவீன ரோகினிகளுள் ஒருவர்கூட அந்தச் செய்தியை மறுத்து எழுதவில்லையே ஏன்?
    
29-9-63 இல் ‘ஒரே வழி’ பிரசுரமாகியயோது ஆறு ரோகினிகளும் ஏன் மௌனம் சாதித்தார்கள்? அக்கதையைப் பிரசுரித்த பத்திரிகையிலிருந்து பணம் பெற்றுக் கொண்டவர் எழுத்தாளர் அமலதாசன். அப்படியிருக்க, அறுவரான தேவதூதர்கள் ‘திடீ’ரென்று எங்கிருந்து தோன்றினார்கள்?
    
பரிசுப் பணத்திற்கு உரிமை கொண்டாடுபவர்களுக்குத் தங்கள் கதை எதுவென்று நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால், 29-9-63 தினசரியில் அக்கதை பிரசுரமாகியபோது இந்த ஆறுமுக எழுத்துலகச் சாம்ராட்டுகளும் படை எடுத்துச் சென்றிருக்க வேண்டுமல்லவா?
   
பரிசுத் தொகையைப் பத்திரிகைகள் அறிவித்ததிலிருந்து அமலதாசனுக்கும் செயலாளருக்குமிடையில் ஏற்பட்ட கடிதத் தொடர்பு போன்று இந்த அறுவர்க்குமிடையில் ஏற்பட்டிருக்க வேண்டுமே? தபாற்கந்தோர் திகதியிட்ட கடித உறைகளுடன் கடிதங்களைப் பிரசுரித்து மக்களுக்குப் பிரகடனப்படுத்த முடியுமா?

இலக்கியவாதிகளுக்கோர் அறைகூவல்.
 
அண்மையில் எழுத்தாளர் சங்கத்தினர் நடத்திய இலக்கிய விழாவொன்றில், இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றும் அதன் சன்மானம் பெறாத எழுத்தாளர் அமலதாசன், ‘அநீதியைக் கண்டு கொதித்தெழுபவனே உண்மையான எழுத்தாளன்’ என்று மண்டபமதிரக் கொட்டி முழங்கினார். ஏங்கெங்கு அநீதி இழைக்கப் படுகின்றதோ அங்கெல்லாஞ் சென்று ஜனநாயக முறைப்படி கூழ்முட்டையடித்தும் கொதித்தெழத் தயங்காத இந்த எழுத்துலக மன்னர்கள். தங்கள் சங்கத்தைக் கட்டி எழுப்பிய இந்த எழுத்தாளர் அமலதாசனுக்கு இன்னோர் எழுத்தாளர் சங்கத்தால் இழைக்கப்பட்ட அநீதிபற்றி இதுவரை மூச்சும் விடவில்லையே, ஏன்?
 
மயில்ராவணன் - 20- 10- 63

அன்புள்ள ஆசிரியர் மயில்ராவணனுக்கு,
     
இலக்கியப் போட்டி நடத்திய எழுத்தாளர் சங்கத்துக்கும், இலக்கிய வாதிகளுக்கும் தாங்கள் தங்கள் பத்திரிகையில் எழுதிய பகிரங்கக் கடிதம் பார்த்தேன்.
     
அநீதியைக் கண்டு கொதித்nழுபவனும், கொடுமைகளை எதிர்த்துப் போராடுபவனுமே எழுத்தாளன் பணி என்று, இதே அநீதி புரியும் காரண கர்த்தாக்களையும் மூல நாயகர்களையும் இனங்கண்டு அவர்களை எதிர்த்தத் துவம்சிப்பதோடு அவர்களின் பரிசுகேடுகளை – பாசாங்குகளை – பசுத்தோல் போர்த்த முகமூடிகளைக் கிழித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துபவன்தான் நேர்மையான எழுத்தாளன். அவன் தான் மக்களுக்காகப் பேனா பிடிக்கத் தகமையுள்ள இலக்கியவாதி.
    
இந்நோக்கோடு இந்த அநீதியை கவனித்துச் சாடிய தங்களுக்குச் சத்தியப்பேனா தூக்கிய மக்கள் எழுத்தாளர் சார்பில் நன்றி நவில்கின்றேன்.
    
இன்றைய இலக்கியப் போட்டி பரிசுகளின் சகல தில்லு முல்லுகளையும் நான் கசடறப் புரிந்தவன். இற்றைவரை பரிசுப் போட்டி  வைப்போரின் பரிசு கேட்டைப் பரீட்சிப்பதும் இலக்கியக் களத்தில் என் பணியாகவிருந்தது.
     
அந்த வகையில் எதிரிகளின் கோட்டைக்குள் சென்று அதனைச் சாதித்து விட்டேன். எழுத்தாளனுக்குக் கிடைக்கிற வெற்றியும் ஆத்ம சுகமும் இது ஒன்றுதான். இலக்கியத்திற்காக அளிக்கப்படுகின்ற பரிசு இலக்கியத்துக்குக் கிட்டும் வரை இலக்கியக் களம் பரிசு கேடாகவே இருக்கும்.
     
தங்களைப் போன்ற எனது அபிமான எழுத்தாளர் ஒருவர் தர்மாவேசத்தோடு எனக்கு எழுதிய கடிதம் ஒன்று தங்கள் பார்வைக்கு இத்துடன் இணைக்கப் படுகின்றது. இற்றைவரை நிகழ்ந்த – நிகழ்கின்ற இலக்கியப் போட்டிகளின் தகிடுதத்தங்களுக்கு இதுவும் ஒரு சான்று.
                          
அமலதாசன் -25- 10- 63.

மதிப்பிற்குரிய எழுத்தார் அமலதாசனுக்கு,
     
அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் ‘இரண்டாம் பரிசு’ பெற்ற தங்கள் கதையைப் படித்தேன். ‘முதலாம் பரிசு’ பெற்ற எனது கதையைவிடத் தங்கள் கதையே சிறப்பாகவிருக்கிறது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி தங்கள் சிருஷ்டி இலக்கியங்கள் அனைத்தையும் விரும்பிப் படித்து வரும் வாசகர்களில்  நானும் ஒருவன். கதைக் களத்தின் மண் வாடை வீசாத தங்கள் சிருஷ்டிகளே கிடையாதெனலாம்.
      
இந்நாட்களில் மண்வள இலக்கியத்தைப் பொதுவாக எல்லா எழுத்தாளர்களுமே எழுதி வருகின்றார்கள். நானும் அப்படித்தான். ஆனால் அன்றையவர்களுக்கும் இன்றையவர்களக்கும், ஏன், எனக்கு முன்பே துணிவுடனும் சிறப்புடனும் மண்வாசைன சரியாக வீசும் உயிர்த் துடிப்பான யதார்த்தப் படைப்பு இலக்கியங்களை எழுதிச் செயல்முறைப்படுத்தி வெற்றியும் பெற்ற முன்னோடிகளில் நீங்களே  முதன்மையானவரெனத் துணிந்து சொல்வேன். இந்தத் துறையில் நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
     
தங்கள் கதையைத் தவிர்த்து எனது கதைக்கு ‘முதற் பரிசு’ என்று பெரிய கொட்டை எழுத்தில் விளம்பரம் கொடுத்து எனது கதையும் பிரசுரமாதே தவிர, முதற் பரிசுக்கான சன்மானம் இன்னும் கிடைக்கவில்லை. நானும் கடிதத்தில் மேல் கடிதம் எழுதிப் பார்த்துக் களைத்து விட்டேன். பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.
     
இலக்கிய உலகில் இந்தப் பரிசு கேடு நீங்க, தயவு செய்து நீங்களே இதனை எழுதுங்கள். அநியாயத்தைப் பொறுக்காது வீராவேசங்கொண்டு கெம்பியெழுகின்ற தங்கள் பேனாவால்தான் அது சாத்தியமாகும்.
                               
எஸ்.ஜே.ராஜன்  -6- 9- 63

1963 – தினகரன்  
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here