சிறுகதை : சாத்துபவர்கள் சாத்தான்கள்! - கடல்புத்திரன் -
[இக்கதையில் ஆசிரியர் கழுகு, தாமரை என்று குறிப்பிடுவது அக்காலகட்டத்தில் இலங்கையில் இயங்கிய தமிழ் அமைப்புகளில் இரண்டை. - பதிவுகள் -]
''அருள், இந்த உக்ரேன் பிரச்சனை...என்ன, ஒன்றுமே விளங்க மாட்டேன் என்கிறதே? '' கட்டடியிலே சபேஷ், கேட்க கூடி இருந்த உமா,யோகி, நாகேஷ்...எல்லார் மூஞ்சியிலும் அறியும் ஆர்வம் சுடர் விட்டது. அருளர் பழைய தொழில்சங்க அமைப்பில் இருந்தவர். அவனுடைய காலத்தில் அவர் ஒன்றாய் ஒரே விடுதலைக்குழுவில் புழங்கியவர் .மற்றவர்களுக்கு தான் புதியவர் . யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்த பிறகு எவரும் தெரிந்தவர் எனக் காட்டிக் கொவள்தில்லை. கழுகால் தடை செய்யப்பட்டு , பல வருசங்கள் ஓடி விட்டன . யாரும் எவரையுமே இப்பவெல்லாம் தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை .
அன்று , மானிப்பாய்யில் அவரவர் கிராமத்திற்க்குப் போக தீர்மானமின்றி தேனீர்கடை ஒன்றில் சைக்கிளைச் சாத்தி விட்டு நின்ற போது எதேச்சையாக வந்த குலம் இவர்களை கண்டு விட்டு இறங்கி வர '' அண்ணே இன்னொரு தேனீர் '' என்று அவனை வரவேற்றார்கள் . '' எப்படியடா இருக்கிறீர்கள் ? உயிரோடு உங்களைக் காண்கிறதில் ரொம்ப சந்தோசமடா ,எங்கடா இங்கே? ''எனக் கேட்க ''எங்கட இடத்தை ஒருக்கா எட்டிப் பார்த்து விட்டு வருவோமா என நினைக்கிற போது நீ வருகிறாய்'' என்று உமா கூறினான் . '' டேய் ,கடைசி வரையில் போகாதீங்கடா , பொறுப்பாளர்களைத் தான் அவங்கள் பிடிக்கிறாங்கள் . ''என்று எச்சரித்தான் . பக்கத்திலே தான் திரிந்த நிலம் , உயிர் கிராமம் இருக்கிறது . 'போக முடியவில்லை என்ற மனவருத்தம் ' உள்ளே வெகுவாக அரித்தது . '' உனக்கொன்றும் பிரச்சனை இல்லையா குலம் ? ''என்று சபேஷன் கேட்டான் . '' நான் கல்யாணம் கட்டியவன் . சங்க வேலைகளை அப்பையே நிறுத்தி விட்டோம் . குழுவைச் சேர்ந்தவனில்லை , தொழில்ச்சங்கம் வேற என்பது அவங்களுக்கு தெரியும் . தப்பித்திருக்கிறேன் '' என்றவன் இரண்டொரு மாதங்களிலே முடிந்து போனான் .கிராமத்துத் தோழர்கள் ,'இவர்கள் கொழும்புக்கு எப்பவோ போய் வெளிநாடும் போய் விட்டார்கள் ' என்றே பதிலளித்து வருகிறார்கள் . சாடைமாடையாய் தெரிந்திருந்தாலும் மூச்சு விடுவதில்லை .ஒருமுறை பயணித்த பஸ் வயலில் இறங்கிய போது சபேஷன் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்க்கு இழை பிடித்ததுடன் ,குலத்தின் அபாயக்குரல் நினைவில் வர 'தலைவாறலையும் கொஞ்சம் மாற்றி , உடையையும் மாற்றி விட்டிருந்தான் . முன்பெல்லாம் யூனிபோர்ம் போல ஒரே சாரத்துடன் திரிந்தவன் . தாடியும் , சாரமுமே அவன் அடையாளங்கள் .கல்யாணமாகிய பின் முதலில் செய்தது தாடியை வழித்தது தான் .மாறிய முகம் .மீசையை நரைக்கும் வரையில் காத்திருந்து இப்பத்தான் எடுத்திருக்கிறான் . தெரிந்தவர் கூட மட்டுக்கட்டுவது சிரமம் தான் .

இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின. 

“கௌதம், படிப்படி என்று தொண்டைத் தண்ணி வற்றுகிற அளவுக்குக் கத்துறேனே! கொஞ்சமாவது இந்த அம்மா மீது கரிசனை இருக்கா?”
ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்' என்றேன்.
இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன்.


“செக்கூரட்ரி.... மதுரையிலயிருந்து வசந்தன் வந்தால், காம்பவுண்டுக்குள்ளை எலவுட்பண்ண வேண்டாம்.... இதோ உங்க ரூம்ல அவன் ட்ரெஸ்சு வெச்சிருக்கிற சூட்கேசை வெச்சிருக்கேன்.... இந்தா பாருங்க, உங்க டேபிள்ள ரூவா ஐயாயிரம் வெச்சிருக்கேன்....



.அதற்குப்பிறகு மாமாவில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன.அம்மா கவனித்தாளோ தெரியவில்லை.அவர் இப்போது நிர்வாணமாக குளிப்பதில்லை..

சாலையோரம் நடந்த சென்று கொண்டிருந்தான். ஒரு பதினாறு வயசு இருக்கும். பனி. அதிகாலை வேளையில் கொட்டி, வானம் இருண்டு போய் கிடந்தது. காரை நிறுத்தினேன். ஏற, உதவி செய்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறானாம். ஸ்டொக்ஹோம் செல்ல வேண்டும். நடந்தால், பஸ் காசும் மிஞ்சும். குறுக்கு வழியாக ஏறினால் நோர்வூட்டிலிருந்து பத்து நிமிசம்தான் எடுக்கும். விவரித்தான்: “அடியான அடி. எல்லோருமாய் சேர்ந்து தான்”. பஸ்ஸில் வரும் போது நடந்த அச் சம்பவம். “தூங்கும் போது, பக்கத்து சீட்டில், கையை விட்டு, - பதினஞ்சாயிரம். அப்படியே அடித்திருக்கிறான். அவனை அடியாய் அடித்து, நாவலபிட்டியில் இறக்கி விட்டார்கள்…”
அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
சுண்ணாம்புத்திண்ணையில் கால்கள் சுகமாய் நேராய்க்கிடக்கின்றன.காலங்களைக்கடந்துவந்த அனுபவங்கள் ஆச்சியின் பாதங்களில் தெரிகின்றன.அந்தப்பாதங்களில் விடைபெறுகின்ற வெயில் கொஞ்சிவிட்டுப்போகுது. உடலில் கொழுப்பென ஒன்றையும் காணமுடியாமல் பாலைவனப்பாறைகளாய் உடல் சதிராடுது. ஆச்சிக்கு எந்த ஆசைகளும் கிடையாது.


அவனுடைய பார்வை கனகவல்லிக்குப் பிடிக்கிறதில்லை . '' அதிலே இருக்கிற ஒரு வெறி சுடுகிறது ,. எதையும் கூறுகிற அம்மாவிடம் வந்து கூறினாள் . '' எடியே ! நான் உங்க அப்பரைப் பார்க்கிறதுக்கும் , நீ பார்க்கிறதும் வேற மாதிரி இருக்கிறது அல்லவா , திட்டி , புறு புறுத்தாலும் என்னுடையதில் என்ன இருக்கும் சொல்லு ..'' என்று உணர்ச்சிப்படாமல் கேட்ட்டார். ''அன்பு இருக்கும் '' என்று இழுக்க , '' அதில்லையடி ,நாம ஒரே பட்ஜ் ! . நமக்குள் ஒரு சமநிலை இருக்கும் . உனக்கும் அவனுக்கும் பல வயசு .வித்தியாசம் , அதனால் குழப்பமடைகிறாய் . நல்ல வேலை , வாழ்க்கைக்கு ...அத்திவாரம் . அதன் மேலே தான்டி கனவுகள் வரையிறது நடக்கிறது . இப்பத்தைய பெடியள் நீரிலே மூழ்கிற படகுகள் மாதிரி பாலையிலே நிற்கிறாங்கடி . வெளியேற முடியாத முடக்கு, சந்திகள் அனேகம் . . உன்னிலே ஒரு விருப்பம் வந்திருக்கிறது .கிடைக்க மாட்டாய் எனத் தெரியும் . எனவே வெறித்துப் பார்க்கிறான் .. இந்த இனப்பிரச்சனை .. அவனையும் பாதிக்கிறதடி ‘’ என்கிறார் .
மலையன் பெற்றோர் யார்? என்பது குறித்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாக மாறியது. அந்த ஆண்டின் பிறந்தநாள் விழாவின்போது தான் அது நடந்தது.

அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவளது தொண்டைக் குழியிலிருந்து விடுபட்ட சொற்களில் அவன் சிதறிப்போனான். அவை நுழைந்து சென்ற செவிவழியெங்கும் பொசுங்குண்டதுபோல் இன்னும் எரி செய்துகொண்டிருந்தன. அம்மாவா சொன்னாள்? அத்தகைய வார்த்தைகள் அவளுக்கும் தெரிந்திருந்தனவா? அவனால் நம்பமுடியவில்லை. ஆனால் அது நடந்துதானிருந்தது. அவனுக்கே நடந்திருந்ததில் அவன் அய்மிச்சப்பட அதில் ஏதுமில்லை.
கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ் இசையை நேசிக்கிறாள். ‘இது மனித குலத்தின் ஆன்மாவின் ஒலி’ என்கிறாள். அவளின் அறை காலியாக உள்ளது அவளுடைய பயணப் பை அங்கு இல்லை. அவளை இழந்த உணர்வு அவளின் வளர்ப்புத் தாயான ஸாராவுக்கு ஏற்படுகிறது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









