* ஓவியம் - AI
அவனுடைய பார்வை கனகவல்லிக்குப் பிடிக்கிறதில்லை . '' அதிலே இருக்கிற ஒரு வெறி சுடுகிறது ,. எதையும் கூறுகிற அம்மாவிடம் வந்து கூறினாள் . '' எடியே ! நான் உங்க அப்பரைப் பார்க்கிறதுக்கும் , நீ பார்க்கிறதும் வேற மாதிரி இருக்கிறது அல்லவா , திட்டி , புறு புறுத்தாலும் என்னுடையதில் என்ன இருக்கும் சொல்லு ..'' என்று உணர்ச்சிப்படாமல் கேட்ட்டார். ''அன்பு இருக்கும் '' என்று இழுக்க , '' அதில்லையடி ,நாம ஒரே பட்ஜ் ! . நமக்குள் ஒரு சமநிலை இருக்கும் . உனக்கும் அவனுக்கும் பல வயசு .வித்தியாசம் , அதனால் குழப்பமடைகிறாய் . நல்ல வேலை , வாழ்க்கைக்கு ...அத்திவாரம் . அதன் மேலே தான்டி கனவுகள் வரையிறது நடக்கிறது . இப்பத்தைய பெடியள் நீரிலே மூழ்கிற படகுகள் மாதிரி பாலையிலே நிற்கிறாங்கடி . வெளியேற முடியாத முடக்கு, சந்திகள் அனேகம் . . உன்னிலே ஒரு விருப்பம் வந்திருக்கிறது .கிடைக்க மாட்டாய் எனத் தெரியும் . எனவே வெறித்துப் பார்க்கிறான் .. இந்த இனப்பிரச்சனை .. அவனையும் பாதிக்கிறதடி ‘’ என்கிறார் .
'' அம்மா , 'தாயே , நீ என்னென்னவோ எல்லாம் பேசுகிறாயே ‘’' கத்தினாள் .’’ நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணுறே '' எனச். சிரிக்கிறார் . '' எடியே , அவனும் எனக்குப் பிள்ளை தான்டி . தம்பி இல்லையா , விளங்கிக் கொள்றது ஒன்றும் கஸ்டமில்லை . வயசு வித்தியாச வாட்டம் . '' . அம்மா பேசுறது ஒன்றும் புரியவில்லை ,. எரிச்சலுடன் '' அப்ப , அவன் கனவிலே நான் நடனம் செய்கிறேனா ?'' என்று கேட்க . ''சரியாய் சொல்லி விட்டாய் '' என்று பெலத்துச் சிரிக்கிறார் .
அவளுக்கு திடுக்கென்றது . திரைப்படக்கதையா கதைக்க ''என்னம்மா ! இதெல்லாம்..'' என்று சிணுங்கினாள் . '' உன்னிடம் இருக்கிற திறமை , நடனம் அவனை ஆச்சரியப்படுத்துகிறது . அவனுள் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது .. அவளுக்கு நோக்கும் தெரியாது . உன்னிடம் ஏதாவது பேசினனா ? இருக்கமாட்டான் .. நீ சிறுமி என்பது அவனுக்கு புரியும் . ‘’ . ‘’ நான் சிறுமியா , எட்டாம் வகுப்பு படிக்கிறேன்’’ என்று சொல்ல , முந்தி இங்கே படிக்கிற போதும் பார்த்திருப்பான் . நகரப்பள்ளிக்கு ...விலகிய பிறகு கற்பனை பறக்கிறது போல .'' என்று மடக்கி னார் . யோசித்துப் பார்த்தாள் . ' முந்தி என்னைப் பார்த்தானா? ' தெரியவில்லை . அந்த பள்ளிக்கூடத்திலே புதிதாய் சேர்ந்து குட்டிப்பத்மினியாய் நடனம் ஆடிய ஒரே பொண்ணு அவள் ஒருத்தி தான் . அம்மாவிற்கு நடனம் வரவில்லை என்ற குறை . பிறந்தவுடனேயே தை , தை… என...பழக்க தொடங்கி விட்டார் . அப்ப அவள் குழந்தை . அம்மா அதையே குறிப்பிட்டார் . '' நீ இப்ப , அழகாய் இருக்கிறேயாயடி '' . ' பெண்ணாகி விட்டால்… முறைத்து , முறைத்துப் பார்ப்பினமோ ?' கோபமும் வருகிறது .
‘’உன் அப்பாவைப் பார் ! போக்கற்றவர் ..என்ற ஆத்திரம் எனக்கு இருக்கிறது . கல்யாணம் கட்டியே 15 வருசம் கடந்து போய் விட்டிருக்கிறது .. இந்த ஆம்பிளையங்க இப்படி தான் குறுக்கு மறுக்கா முடிவெடுக்கிறாங்கள் .. நினைச்சபடி தங்களுக்குள்ளே ... முடிவெடுத்துக் கொள்ளுவாங்க . இவனும் . அப்படி எடுத்திருக்கலாம் '' . '' அம்மா , உன்ர அரசியல் தலையைச் சுத்துது'' என்று சொல்ல சிரிக்கிறார் . , குரல் தணிய ‘’ ஆம்பிளையங்களை அரசியல் பாதிக்கிறதடி '' என்கிறார். '' அதுக்கும் என்னைப்பார்க்கிறதுக்கும் என்ன சம்பந்தம் '' என்று சினக்க , . '' இவங்களுக்கு இதிலே வாழ்வே இல்லையடி .. தப்பிப் பிழைத்து வாழ வேண்டும் . என்ற வேதம் தெரியாதடி. கிடைத்ததை இழந்து விடவேக் கூடாதடி . நாம் ஒன்றுக்கு தடவை யோசிப்போம் . இதுகள் யோசிப்பதில்லை '' என்கிறார் . '' நீ , உ ன்ர புருசனின் பிரச்சனையை ஏன் இதுக்குள்ள இழுக்கிறாய் '' என்று சொல்ல மேலும் சிரிக்கிறார் .
'' இங்கே , கல்வியை 'இலவசக்கல்வி ' என் று சொல்கினம் . கல்வித்தரப்படுத்தலுக்குப் பிறகு , உண்மையில், வடக்கு , கிழக்கில் அப்படி இருக்கவில்லை .. நீ வரும் வருசம் நகரத்திற்கு உயர்க்கல்வி படிக்க போற போது நான் உனக்கு டியூசனுக்கு (பணம் ) அழவேண்டி இருக்கும் . உயர் வகுப்புக்கல்வி இலவசம் இல்லையடி . சட்டரீதியாக ஊழல்களை கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள் . ஏன் இங்க வந்து புகுத்த வேண்டும் ? . . நம்ம காலத்தில் இப்படிஒரு குழப்பம் நிலவவே இல்லை . படிப்பது , குழம்பினாலும் ..' டியூசனுக்கு போக வில்லை ‘ டியூசன் ஒன்று இருக்கிறது தெரியாது ., பழையதிண்ணைப்பள்ளி முறை கட்டணத்துடன் புதிய டியூசன் முறையாக உயிர் பெற்றிருக்கிறது . எங்கட காலத்தில் , இருக்கிற படிப்பே போதும் அல்லது ஏதாவது புதிதாகப் படித்தும் வேலை எடுக்கலாமடி . வேலையில் சேர்ந்த பிறகும் கூட உள்ளேயே படித்து , படித்து மேலுக்கும் வரலாம் . என்பதால் யாரும் படிக்கிறதென்று அதிகம் காலத்தையும் , காசையும் வீணாக்குவதில்லை . காதல் , கல்யாணம் , குழந்தை ...என வாழ்வும் சுகமாக அமைந்து இருந்தது . சாதியமும் கூட வாழ்கிறது என்று கொஞ்சப்பேர் விமர்சனம் வைக்க த்தான் செய்தார்கள் .
ஒவ்வொரு சாதியத்திலும் பங்காளிச்சண்டை இருந்தாலும் உள் மோதல்கள் குறைவடி . ஒருவிதத்தில் , சாதியம் சொந்தக்காரர்காரர்கள் போன்றது . மற்றது அயல்வீட்டினர் போன்றது . சமயமும் சாதியத்தை வலியுறுத்தவில்லை என்றே தோன்றுகிறது . அது வரலாற்றையே கூறி நிற்கிறது . காந்தி , கூறிய நல்லிணக்கம் , அகிம்ஷைக்கருத்துக்களையெல்லாம் எங்கே இருந்து பொறுக்கினார் . இந்த சமயத்திலே இருந்து தானே . முற்போக்காக இருக்க வேண்டியது சாதியமில்லை மனிதர்கள் தாம் . ஜனநாயக உரிமைகளை மதிக்கப்பட வேண்டும் என்றே அங்கேயும் வலியுறுத்தப்படுகிறது . ஒருபுறம் அரசியல் அமைப்புச்சட்டம் போன்ற ஒரு பைல் , மற்றொருபுறம்... அமுலாக்க கள்ளங்கள் . இரண்டையும் நம்மால் திருத்திவிட முடியாதா ? என்ன ! எல்லோருமே ஜனநாயக உரிமைகள் நிலவ ‘ சுய அரசியல் அதிகாரம் ‘ கையில் இருக்க வேண்டும் என்பதையே தணிவாகவும் , கோபமாகவும் , வன்முறையிலும் சொல்லிப் பார்க்கிறார்கள்.கேட்பவர் தான் இல்லர் . காந்தி , ''சுயராஜ்யம் , கிராம ராஜ்யம் , ராமராஜ்யம் '' என அதை அழகியலுடன் கூறினார் .
காந்தியை தோல்ஸ்டோய் பட்டை தீட்டினார்....என்பதை …. ஒப்புக் கொள்ளலாம் . உள்ளே அமைதி நிலவினால் ..அடுத்தடுத்த படிகளில் தெளிவாகவும் ... துணிவாகவும் காலை வைக்கலாம் ‘என்று வழிகாட்டிச் சென்றிருக்கிறார் . வன்முறையென்பது எமக்கு ஏற்படுற கோபம் போன்றது . நிதானமிழக்கச் செய்து விடுகிறது . அதனுள்ளே தலைகீழாக கருத்துககள் பதிந்து விட்டால் வெளிய ...வரவே முடியாது . இங்கே விடுதலையில் ஒன்றிணையாததிற்கு உள்ளே இருக்கிற குழப்பங்கள் பெரிதும் காரணம் என்று தோன்றுகிறது. ஒன்றையொன்று வெல்வதில் குழப்பங்களில் போய் சிக்குப்பட்டு விட்டன . ஏன் போட்டி வேண்டும் . படிக்கிற உங்களுக்கே போட்டி பொறாமை வேண்டாம் என்று சொல்லப்படுகிறது . தனித்தன்மையை , மற்றவர்களை மதிக்க வேண்டுமென்பதற்காக வலியுறுத்தப்படுகிறது . அங்கே , அப்படி ஒருஆசிரியர் இல்லை . நன்மை விளையிறதுக்கு ஆசிரிய அமைப்புகளை கட்டாயம் கட்டிக் கொள்ள வேண்டும் . எல்லாத்திலேயும் பட்டுத் தெளியிறது தான் துரதிஷ்டவசமாக இருக்கிறது . அதற்கிடையில் வல்லூறுகளும் , வஞ்சக அரசியல்களும் புகுந்து சூழலை மோசமாக்கியும் விடவும் பார்கின்றன . பெடியள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் . தாம் விடுற சிறு தவறும் புதைகுழியையே ஏற்படுத்துகிறது . அதை மனதில் ஏற்றி விட்டால் ..விடுதலை நிச்சியம் ஒருநாள் கிடைக்கும் . இல்லாவிட்டால் நிலமெல்லாம் கால் வைக்க அஞ்சுமளவிற்கு போய் விடும் . அவளுக்கு , அம்மா பேசுற ஜனநாயக உரிமைகள் ஓரளவு புரியிற வயசு தான் .
இங்க , வேலைகளையே பொறி போல நிச்சியம் , நிரந்தரம் என்பறில்லாமல் எல்லாமுமே அழிக்கப்பட்டுப் போகிறது . நீ பள்ளிக்குப் போகுறாய் . சிங்களப்பகுதிகளில் வருகிற தினசரிகளிலே டியூற்றரிகள் பற்றிய விளம்பரம்... வருகிறதா ? , விளம்பரங்கள் அத்தனையும் . வடக்கு , கிழக்கிலே தான் வருகின்றன 'பொன்ட், ....' என்று இங்க எத்தனை … எத்தனை ! ..
அவர்கள் டியூசனுக்கு போக மாட்டினம் . தமிழர்களைத்தான் பிடித்து எல்லாத்திலேயும் தள்ளுவினம், இங்கே நிலங்களையும் பிடித்துக் கொண்டு கடைசியில் கடலிலும் தள்ளி விட கங்கணம் கட்டி நிற்கினம் . இங்கே , தரப்படுத்தல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு. வரலாறு புரன்டு விட்டது . புதிய பிரச்சனைகள் பல எழுந்து விட்டன , சிவக்குமார் மருத்துவப்பிரிவில் படித்தவன் , சத்தியசீலன் பல்கலைக்கழ மாணவர் சங்கத்தின் தலைவர். ' சமூகத்தின்; கல்விக்கு விடியலை ஏற்படுத்த முதலில் ஆயுதம் தூக்கி போராட வெளிக்கிட்டார்கள் . பல்கலைக்கழகத்திலிருந்துதான் போராடமே கிளம்பியது . ஜனநாயக ஆட்சியாகவும் மாகாண ( த்தின் கையில் கல்வி உரிமைகளும்) ) ஆட்சி முறையாகவும் இருந்திருந்தால் இந்தப் போராட்டங்களே தேவையில்லையடி . அவரவர் படிப்பு ,வேலை , வாழ்வு என போய் கொண்டு இருப்பர் . கலவரத்தின் மூலம் வேறு பொருளாதாரத்தை நாசம் படுத்தினர் . அதன் மூலம் நம் ஆற்றல்களை நாசப்படுத்துகினார்கள் .’’ அம்மா பேசிக் கொண்டே போகிறார் .
கலைநிகழ்ச்சிகளும் குறுக்கீடுகள் இல்லாமல் . இயல்பா வளர விட வேண்டுமடி . உன் காலில் சதங்கையைக் கட்டி விட ஏன் ஆசைப்பட்டேன்? . பள்ளி முறையில் பெண்களுக்கு உடற்பயிற்சிகள் ஒழுங்காக இல்லை . கராட்டி போல …ஆனால் , இது . கவிநயம் மிகுந்தது . உன்ரபாட்டி எனக்கு பழக்கணும் என்று ஆசைப்பட்டா .நிறை வேறவில்லை . உங்கப்பா முற்போக்கானவரி .ஆனால் கொஞ்சம் புத்தி மந்தம் . ( சிரிக்கிறார்) என்னை ஆடக் கூடாது என்று சொல்லவில்லை . சிறு வயதிலே , அயலில் பழக்கிறவர் யாருமிருக்கவில்லை . எனக்கு அமையவில்லை . உனக்கு அமைந்திருக்கிறதடி ‘’ . என்கிறார் .. ஒருதரம் , அம்மா ஆடியிருயிருந்தால்…’ கற்பனையில் நினைக்கிறாள் .. ' என்ற அம்மா எனக்கு எப்பவும் அழகி தான் ' .
‘’ இதெல்லாம் நம்ம அரசுக்கு அமைச்சுக்களுக்கு புரிய மாட்டாதரி . கிராமம் , நகரம் என்ற வேறுபாடு வேற இருக்கிறது . அரசியல்வாதிகள் வேற உலகத்திலே சஞ்சரிக்கிற அசுரர்கள் . மக்களுக்கு உரிமைகளை அளித்து தேவர்களாக மாற மாட்டார்கள் . . எத்தனை தரம் யாழ்ப்பாணத்தை எரித்து நம் மகிழ்ச்சியை அழித்திருக்கிறார்கள் தெரியுமா . வதைகளாக எத்தனை ஆண்டுகளாக (இனச்) கலவரங்களைப் புரிந்து நம்மை ….அழ வைத்து கொண்டேயிருக்கிறார்கள் . இவர்களுக்கு நம்மக்களில் மேல் கைவைப்பதற்கும் , கொல்லுறதுக்கும் யார் உரிமைகள் எல்லாம் கொடுத்தது ?, இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டங்களை வைத்திருக்கிற வரையில் நம்முடைய பகிரங்க எதிரிகள் தாம் . அவர்களின் சட்ட ங்கள் நம் அனைவரையும் 'பயங்கரவாதிகள் ' என்றே கூறுகிறது . வடமாநில பாதாளக்குழுவின்( முன்னைய சண்டியர்) கையில் ஆட்சியை கொடுத்தது மாதிரியான காட்டாட்சி தானே மேடையேற்றி வருகிறார்கள். இவர்களின் நீதிவிசாரிப்புகள் ....தலைகீழாகவே கிடக்கின்றன ? . சர்வதேச விசாரணைகள் ...அது வேற ஒரு கேலிக்கூத்து . பாலாஸ்தீனர்களை எல்லாம் கொன்று குவிக்கிறவையிடம் இரஞ்சுவது சாயம் இழந்தது . உள்ளூரில் நடக்க வைக்க ஒரு தகுதி வேணும் . அது இவர்களிடம் இல்லை . விடுதலைப் பெற்ற தெற்கு ஆபிரிக்கா ...போன்ற வர்களின் சிலரின் முன்னிலையில் நடைபெற வேண்டும் . இவர்கள் ஒப்புக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் இந்தியாவும் கூட காந்திநாடு தான் . அவரின் கொள்கைகள் இன்னமும் அங்கே வாழத் தான் செய்கின்றன .
வறண்ட குரலில் ‘’ கடவுள் தான் காபாற்ற இனி இறங்கி வர வேண்டும் '' கையை சாமியறையை நோக்கி காட்டுகிறார் .
சிங்கள அலுப்புகள் நினைப்பது போல இங்குள்ள எல்லாரும் கழுகு குழுவில் இருப்பவரில்லை , அதன் மேல் நம்பிக்கையும் வைத்திருப்பவரில்லை . இந்தபவியே… தாமரைட ஆள்.
‘’சட்டரீதியாக தாம் வேற சமூகம் என கூறுகினம் . தாங்கள்’ புது ச் சாதி ‘ என்கினம் . வடபகுதி சாதிபேதங்களை சமன் செய்வது மாதிரி அதுவும் சமன் செய்யவே ...வேண்டும் . இங்கே யாரும் கடவுளின் மனிதர்கள் கிடையாது . தமிழர் பிரதேசத்திற்குள்ளே . முழுதாகவே , இனப்பிசாசுகள் நுழைந்து விட்டன. அபாயமும் என்றுமில்லாதவாறு அதிகரித்து விட்டது . அவனை பெரிசுப்படுத்தாதே, நீ ஆடுறதையும் படிக்கிறதைப் பார் .. இங்கே. எங்களுக்கு எந்த வகைக் கல்வியாக இருந்தாலும் கட்டாயம் கல்வி தேவையடி. '' . அதிலும் நைந்து போன நம்பிக்கைகளை எங்கேயோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டே கிடக்கின்றன . அலை அடித்து ஒய்ந்தது போல இருந்தது. கனகவல்லிக்கு ஏண்டா அவனைப்பற்றி சொன்னோம் என்று ஆகி விட்டது .
அவளுக்கு அம்மா தான் குரு .., எல்லாமும் ! , ..அவரிடமே வந்து அறிந்தவற்றையும் கொட் டா விட்டால் தூக்கம் வராது .; சின்னதிலிருந்து நிலாவைக் காட்டி ... சோற்றுக்கவளம் தீத்தி விட்டதுமில்லை ,, பலதையும் புரிய வைத்தும் வருகிறவர் . முதல் ஆசிரியர் . அது சரி ! அப்பா , ஏன் ஸ்ரைக் பண்ணினார் ? . அம்மா கூறினார் . '' ஸ்ரைக் பண்ணினது தப்பில்லையடி , சிங்களவரோடு சேர்ந்து ... ஈடுபட்டாரே . அது தான் பிடிக்கவில்லை . அது , எப்பவுமே பொறிக்கிடங்குகள் கிடக்கிற பகுதி . ஒன்றாய் வேலை செய்தவர்களே தனிமனித பொறாமை , காழ்ப்புக்குணங்களினால் பலரை காட்டிக் கொடுத்து வெட்டிக் கொல்ல காரணமாக இருந்திருக்கிறார்கள் . இப்படி தெரியாத பச்சைக் குழந்தையாய் இருக்கிறாரே , அது தான்றி கோபம் '' என்கிறார் . நீர்கொழும்பில் இருக்கிற போதுஅப்பாவின் நண்பரான நிமால் அங்கிள் , மடியில் வைத்துக் கொண்டு .'' லல்லு நாங்கள் எல்லாம் இருக்கிறோம் . பயம் தேவையில்லை..'' என்பார் லல்லு அவளின் வீட்டுப் பெயர் .. குட்டிப்பிள்ளையான அவள் மீது அவருக்கும் பாசம் அதிகம் . அம்மாவிற்கு பதில் சொல்லுறது மாதிரி தைரியம் கூறுவார் . அவருடைய சிட்டு மாலினி அவளுடைய பெஸ்ட் பிரென்ட் . இருவரும் சேர்ந்து விட்டால் மகிழ்ச்சி பிடிபடாது .. மாலினி இப்ப என்ன செய்கிறாளோ? நண்பர்களின் பேச்சைக் கேட்டு பெரிதாக நடைபெற்ற ' அனைத்து அரச ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் ' அப்பரும் ஈடுபட்டார்.
அரசு சரியாயே பழிவாங்கி விட்டது . ஆமதுருமார் சமரசம் பேசினர் . 'மன்னிப்புக்கடிதம் ' கொடுத்தால் திரும்ப சேர்த்துக் கொள்ளப்படுவர் ' முடிவாகியது . அப்பா ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தார் . சிங்களம்.. என்று அவருடைய ஒபிஸ் கூறியது . பொறி பறந்தது . தமிழர் எல்லோரும் தமிழிலே எழுதிக் கொடுத்தார்கள் . சிங்களம் என ..திரும்ப , திரும்ப கூறினார்கள் . சிங்களம் பேசமட்டும் தெரியும் .எழுதத் தெரியாது '' என்று சொல்ல. '' நண்பர்களிடம் எழுதி வாங்கி வா '' என்றார்கள் . முதல் தடவையாய் அப்பா '' இங்கே தமிழும் ஒபிசல் லாங்கியூஸ் இல்லை யா '' என்றார் . '' இல்லை சிங்களம் மட்டும் தான் '' பதில் வந்தது . கடிதத்தை அவர்கள் முன்னால் கிழித்தெறிந்து விட்ட ..... அப்பாவிற்கு பென்சனுமில்லை , ஒன்றுமில்லை . ஆனால் , வாழ்க்கை ஒன்று இருக்கிறதல்லவா . '' மச்சான் சிங்களத்தில் எழுதித் தாரோம் . முதலில் வேலையில் சேருங்கள் பிறகு அரசியலைப் பார்ப்போம் ''என்றார்கள் . எங்களுக்காக பேசினாலும் , சப்போர்ட் பண்ணினாலும் சிங்கள நண்பர்கள் வேலிக்கு அப்பாலேயே நின்று விட்டார்கள் . அவர்கள் தமிழரின் ஜனநாயக உரிமைகளுக்காக , கொள்கைகளுக்காக ஒன்றும் செய்ய முடியாதவர்கள் . ஒருவேளை நாக்கை சுழற்றி , சுழற்றி பேசுவதால் கொள்கைகளும் அவர்களுக்கு சரிவர புரியாமலும் கூட இருக்கலாம் . விறாப்புடன் யாழ்ப்பாணம் வந்ர்கள்
சிங்கள இளைஞர்கள் பலர் இனக்கலவரம் நடைபெறுவதை விரும்பவில்லை .என்றாலும் ஜனநாயக உரிமைகள் தமிழருக்கு அளிக்கப்படுவதையும் விரும்பவில்லை . பிறகு , என்ன கோலமாக்கள் தாம் . வடக்கு கிழக்கு இணைப்பையும் அறுத்தும் என்னவோ ... …கூத்தும் அரங்கேற்றியும் விட்டிருக்கிறார்கள் . அவர்களின் இந்திய எதிர்ப்புக்குப் பின்னால் மலையகத்திற்கு எதிரான குரூர முகமும் ஒளிந்திருக்கிறது .
இந்தியா கச்சைத்தீவைக் கொடுக்கப்பட்டதால் மலையகத்திற்கு ‘ பிரஜைகள் என்ற உரிமை’ கொடுக்கப்பட்டிருக்கிறதே அன்றி உண்மையில் மாறுமுகம் வேற . மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் . ஈழத்தமிழரையே வேற சாதி என நினைக்கிற சாதி இவர்களை எப்படி தூக்கி நிறுத்தும் ? இந்திய மீனவர் பிரச்சனை உண்மையிலே ஈழத்தமிழரின் மேல் உள்ள கறலை வெறுப்பை பிரதிபலிக்கிறதொன்று . அதை தமிழ் மீனவரின் பின்னால் ஒளிந்திருந்து கச்சிதமாகத்...தொடர்கிறது . மக்களிடமே விட்டு ' ஈழத்தமிழர்களோடு பேசி தீர்வுக்கு வர விடுங்கள் . அது சாதனையையே நிகழ்த்தி விடும் . பழமையிலேயே கிடக்கிறார்கள் .
தனிநாடு கேட்பவர்கள் மக்கள் மட்டுமில்லை . தமிழ் அகிம்ஸைவாதத் தலைவர்(கள்) செல்வா , வரைபு ,இனிமேல் செல்லாது . கண்ட பிறகு , தமிழர்க்கு தனிநாடு தான் ஒரே சொய்ஸ் ''என முழங்கிய பிறகு ஒவ்வொரு தமிழருமே ...'தனி நாடு பற்றி பேசலாம் ', பேச உரிமையும் கிடக்கிறது . இந்தச்சிக்கல் சிங்களவர் தனிநாடு கேட்ட பிறகே ஏற்பட்டது . ஆமாம் ! , முதலில் தனிநாடு கேட்டவர்கள் சிங்களவர் தாம் ' அதைப் பற்றி அநாகரிக தர்மபாலா பிரலாபித்த போது தான் அங்கே , '' முழு 'ஈழமும் அவர்களுடைய நாடு ' என்ற பையித்தியக்காரமாக உளறத் தொடங்கினார்கள் . கதாநாயகத் தலைவர்கள் அடுத்தடுத்தபடிகளில் காலை வைக்கவே கூசவில்லை . ‘ 24மணிநேரத்தில் சிங்களம் ஆட்சிமொழி ‘ . ‘ தனிநாடு கேட்பது குற்றம் ‘ என்ற 6வது சட்டம் தொடர்ச்சியாக அரசியலமைப்புச் சட்டங்கள் எல்லாம் ஏற்படுகின்றன . தொடர்ச்சியான கலவரங்கலவரங்கள் , புதைகுழிகள் ...தீர்வை நோக்கிச் செல்லாத வெட்டிப்பேச்சுக்கள், பூனைகளுக்கு யாரும் மணி கட்டாத சூழல்கள் கொண்டாட்டங்கள் , எலிகளுக்கோ வேதனைவியல் 'என்ற நிலமை , 'எதையுமே குருக்கள் செய்தால் பாவமில்லை ' என்பது போல அவர் மதக்குருக்கள் கூறினால் குற்றமற்று போய் விடுகின்றன . இன்றிருக்கும் ... , சிங்கள நட்புமுகங்கள் நாளை குருகள் பாடம் செய்யும் போது மாறிப் போய் விடவே போகின்றன .
இன்று பாலாஸ்தீனக்குழந்தைகளின் எலும்புகள் தெரியிற மாதிரியே சொல்லவண்ணா வாதனைப்பட்டு கடந்து வந்த யூதர்களின் ....இளைஞர்கள் , அந்த முன்னைய வரலாறை இஸ்ரேல் என்ற நாட்டிற்காக கல்நெஞ்சத்துடன் அதே குற்றங்களை .... கதாநாயக முகத்துடன் செய்து கொண்டிருக்கிறார்கள் '....ஏன் , நாளை ஈழத்திலும் நடக்காது ?. இன்றைய ( ஊழலற்ற ) அரசு நடைபெறாது என்று கூறினாலும் ( இந்தளவு பேசத் தொடங்கியிருக்கிறார்களே ... அதற்குப் பாராட்டுக்கள் ! ) நாளை நடைபெறும் என்றே வரலாறு எழுதும் என அச்சமாகவே இருக்கிறது
ஒரு நாட்டிலுள்ள விவசாயிகளும் , மீனவரும் தராசு தட்டில் இருபுறமும் ஒரே நிறையில் இருப்பவர்கள் . இரண்டும் பெரும் துறைகள் . மக்கள் கையில் அதிகாரமும் , இவற்றில் சுதந்திரமும் , சுயாதீனமும் இருந்து விட்டால் ...திறமைசாலிகளாகவும் , புத்திசாலிகளாகவும் ஆகி விடுவார்கள் . உறுதியான தூண்களின் மீது எழும் கட்டடம் காலகாலமும் நிமிந்து நிற்கும் . கலவரத்தின் போது நிர்வாணமாக இருந்த பெடியனும் , சூழ கூப்பாடும் , கூத்தும் போட்டுக் கொண்டு நின்ற சக பெடியள்களும் உள்ள கறுப்பு வெள்ளைப் புகைப்பபடம் ஈழத்தின் கறுப்பு அடையாளமாக போய் விட்டிருக்கிறது . அதில் , இதன் வரலாறு முழுதுமே எழுதப்பட்டுக் கிடக்கிறது . நாட்டிற்கு ' நிலமும் , கடலும் முக்கியம் ' என்பது புரியும் எனப்படவில்லை . தமிழ் அடையாளம் கொண்ட எல்லோரும் இந்த இந்த நிலமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் . அரசு , ஊர்காவல் பிரிவை ஏற்படுத்தி தன்னோடு சேர்த்து...முஸ்லிமை தமிழரிடமிருந்து விலத்தி வைக்க பார்க்கிறது . விலகலை மேலும் பெரிதாக்கி திரிசங்கு நிலையை அதில் ஏற்படுத்துகிறது . அவர்களிடம் தமிழுக்கான பங்களிப்புகள் போற்றுதலுக்கும் , பாராட்டுதலுக்குமாக இருந்த , இருக்கிற போதிலும் அஸ்ரப் போன்ற தலைவர்கள் இல்லாதிருக்கும் நிலமை சிக்கலை ஏற்படுத்துகிறது .
தமிழ் மீனவர் எல்லா விதத்தாலேயும் பாதிக்கப்படுகிறார்கள் . தமிழர்களுக்கு சுதந்திரமான நிதிகளை கையாளும் உரிமைகள் இல்லை . எனவே அத்திவாரமற்ற கடல் . எனவே பாதிப்புகளிலிருந்து வெளியேற வழியில்லை . முஸ்லிம் , தமிழ்க்கொளுவல்கள் தந்திரமாக தொடரப்பட்டு வருகிறது . களவாக படைமுகாமிற்கு வரவழைத்து , சிங்கள மீனவர்களிளோடு கல்முனையையும் இறக்கி வடபகுதிக்கடலில் மீன் பிடிக்க விடுதல் மோதல்களையும் ஏற்படுத்தி விடுகிறது . இந்திய மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் என்ற ஒரு குழு கூட இறக்கி ‘காயப்படுத்தி சேதமுற வைக்கப் படுகிறது . முந்தி , யாழ்ப்பாணத்தில் கிரீஸ் மனிதர்களின் நடமாட்டம்..., , போதைப்பொருள் , மதுவகைகளை அதிகளவில் பரப்பி பழக்கப்படுத்ததி விடப்பட்டது , யப்பானிய களைவிதைகளை மேலேயிருந்து இடிபட்ட வீடுவளவுகளில் கொட்ட பட்ட...து ,கிழக்குப்பகுதி தமிழ்க்கிராமங்களில் சிங்களவரைக் குடியேற்றி , சிலவற்றில் முஸ்லிம்களையும் குடியேற்றி விடுதல் எல்லாமே திட்டமிட்டு நடைபெறுபவை . பாலஸ்தீனத்தில் பரீசிலித்த முறைகளை இந்நாட்டிலும் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது , கைக்கட்டிக் கொண்டு பார்ப்பதை என்னவென்பது ? . நிலைமாறா உலகில் , ' நடக்கும் ' என்ற கனவில் வாழும் எம்சாதி , ....வாழ்வதில்லை நீதி !
மக்களுக்கு முழுமையாகவே கிராமத்தை , நகரை , கடலை ஆளும் உரிமைகள் அளிக்கப்படுதல் வேண்டும் . ' ஜனநாயக மறுப்பே ...' ஊழல் எனப்படுகிறது . மறுப்பு ஒவ்வொன்றுக்கும் விலை ...ஏறி இறங்கிறது . ' இலாபம் ' என்பதே ஊழலின் கிழந்தைப்பருவமோ ?..எனத்தோன்றுகிறது . பவி கிறுக்கனாகவே சிந்திக்கிறான் .
இன்னுருபுறம் ,' ஊழலற்ற ..' என பறை சாற்றுகிற . வாய்ப்பந்தல்கள் , பம்மாத்துக்கள் ஒன்ற்கும் இந்த வெட்கம் கெட்ட உலகம் நாணப்படுவதில்லை . ஜே. ஆரையும் , மகிந்தாவையும் மேடையில் விட்டுப் பாருங்களன் ...முழங்கித் தள்ளுவார்கள் . அன்று , ஜே ஆர் யப்பானுக்காக நியாயம் பேசினார் . அன்று ( JVP )க்காக வழக்கு மன்றிலில் நியாயம் பேசிய மற்றவர் . இன்று தமிழரை வென்று விட்டதாக நிலத்தில் மண்ணை முத்தமிடுகிற இரத்தம் முகத்தில் வழியிற காட்டேரியர்களாக நிற்கிறார்கள் . ' தனிநாடு' இஸ்ரேலைப் போல் அநியாயங்களின் மேல் கட்ட விளைகிறது . அதை காப்பாற்ற அவர்களுக்கே தெரிந்த அடக்குமுறை அரசியலமைப்புச் சட்டங்கள் . உச்சநிலைக்கு போய் விடுறதை பார்க்கிற தந்தை செல்வா தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைக்கிறார் . அவரது கொள்கை சமஷ்டி , கட்சி சமஷ்டிக்கட்சி . உண்மையாகவே சமஷ்டியைத் தான் விரும்புகிறார் . அந்த படிகளில் இருந்து தான் ' நாம் எல்லாரும் சகோதரர்களே ' ஏற்படுகிறது .
ஜனநாயக வரையறைக்குள் வராத உறவு நிலைப்பதில்லை. பிரான்சு நாடு பிரெஞ்சுப்புரட்சியை நடத்தியயோடு எல்லாத்தையும் முடிடித்து விட்டார்கள் . . புரட்சியை நடத்தியவர்களை புரட்சிக்காரர்களே போட்டுத் தள்ளியும் விட்டார்கள் . புரட்சி வலி மிகுந்தது தான் . ஜேர்மனி , ரவைகளை சேமிக்கவே விசவாயுவைப் பயன்படுத்தியது , பிரான்சு கில்லட்கத்தியைப் பயன்படுத்தியது( மருத்துவர் சத்திரச்சிகிச்சை செய்ற கத்தியை பிரமாண்டமாக செய்த - கழுத்து வெட்டும் கத்தி ) . பிரிட்டன் பழைய கயிற்று முறையை பயன்படுத்தியது . பிரான்ஸில் பீரங்கி வாயிலில் கட்டி வைத்து வெடிக்கிற முறையையும் முன்னர் இருந்தது , ஈழவரசும் ,விடுதலைக்குழுவும் விடுதலை கேட்ட இளைஞர்களை ...சுட்டே கொன்றது . ஊழலுக்குள் விழுந்தால் நரகம் தான் .
பழைய காலம் , நவீனம் வேண்டாம் .... இயல்பாகவே சாதாரண மனிதர்களாக இருப்போமே ! .
ஈழம் , எப்பவும் பிரிட்டன் கூறுவதையே செய்து வருகிற நாடு . இனப்படுகொலையையும் அனுமதி பெற்றே நிகழ்த்தி இருக்கிறது .
அடிமைத்தனத்திலிருந்து இந்த ஜென்மங்களை கழற்றுவது கஸ்டம் தான். ' நவீன அடிமை ' . ஏன் சமாதானச்சபைகள் செயலிழக்கின்றன என்பது புரிகிறதா ? . ஏன் மற்றயவையைத் திட்டவில்லை? , ..எல்லாமுமே ஒன்றுக்குள்ள ஒன்று இருக்கிற ஒரே களிசரைக்கூட்டம் தான் . பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் ' ஐஆ எ ' தலைவர்களிடம் தான் இந்தப்பிரச்சனைகளை தீர்த்து வைக்க கொண்டு செல்ல வேண்டும் .
இனக்கலவரத்தை வெறுக்கிறவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள் தாம் . உறுதியான நிலைப்பாட்டை காலத்தில் எடுக்காது விடுவதால்... இரத்தம் வடிந்தபடியே சீரழிவுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன . JVPகிளர்ச்சியில் ஈடுபடுகிற போதுகளிலும் தமிழர்களை சேர்த்துக் கொள்ளவில்லை . தற்போது ' புதியவர்களாக காட்டிக் கொள்கிற போதும் குழப்பங்களை. தெளிவு படுத்தப்படுவதில்லை . ஏன் ? . ‘ கள்ளங்கள்...?? , அவை சந்தேங்களை வளர்க்கத்தானே செய்யும் ! . படைத்தரப்பை நாயகர்களாக வழிபடுகிறார்கள் . தவறினால் அவர்களது ஆட்சி ஏற்பட்டு விடும் என்கிற பயம் . கழுகிலும் தலைவர் வழிபாடு , நிறையக் கொலைகளையே நிகழ்த்தியது . இந்த வழிபாடும் கொலைகளுக்கே வழி திறக்கும் . இன்று
அடிப்படையில் கிராமங்களே நகரங்களை விட சிறிதளவாவது சுதந்திரங்களை அனுபவிப்பவை . படிப்பறிவு , செயலூக்கம் அற்றவர்களாக இருக்கிறார்கள் . கிராமத்தில் இவர்களுக்கு நெல்வயல் சிறிது இருந்ததால் தப்பிப்பிழைக்கிறார்கள் , சமாளித்து வருகிறார்கள் . பலரிற்கு ... இந்த நிலை இருக்கவில்லை . சொந்த வீடே இல்லாதவர்கள் இருக்கிறார்கள் . நகரத்தில் வீடு வாங்கிறதை விட கிராமத்திற்குச் வாங்குங்கள் . நசிஞ்சு ,கிசிஞ்சாவது வாழ முடியும் . வெளியில் இருப்பவர்கள் அவர்களின் குறைகளை நீக்க இறங்கி வழிகாட்டினால் அவர்களும் வாழ்வார்கள் , நகரத்தவர்களும் தப்பிப்பிழைக்கலாம் .
கனகவல்லி , நிலம் அவசியமானது என்பதை வாழ்விலே பார்க்கிறாளே . அப்பா , ''ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை என்று'' விவசாயியாய் தோள் தட்டுகிறார். அவருடைய அரசுவேலை போனது , போனது தான் . இனி அதைப்பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை . பதுமைப்பயிர்ச் செய்தால் நிலமும் தப்பும் . , இவர்களுடைய ஒரே இலட்சியமாக , எம்மைபிள்ளைகளை படிக்க வைப்பதே ... இருக்கிறது . அவளுக்கு ஆட்டம் வாரது மாதிரி 'படிப்பு' இல்லை . படிக்கிறதில் நெருக்குதல் இருக்கக் கூடாது . . எப்படி கடக்க போகிறாளோ என்று பயமாகவும் இருக்கிறது. . ஒன்றை சொல்லுவாள் அதற்காக எந்த விடுதலைக் குழுலும் போய்ச் சேரவும் மாட்டாள் .
பலர் வீட்டில் அந்த இழை மிகவும் மெல்லியக்கோடாக இருக்கிறது .
காலம் ஓடி , காட்சி மாறித் தள்ளியது . இப்ப நகரப்பள்ளிக்கு போய் வருகிறாள் . அவளுக்கு அரசியல் புரியவில்லை தான் . ஒருவேளை , கால் வைக்காத வரையில் அந்த புரிதல் இருக்கப் போவதில்லையோ ? 'விவசாயமும் , கடல்த்தொழிலும் தேசிய பொருளாதாரத் துறைகள் ' வடக்கு , கிழக்கில் என்ன ஈழம் முழுதிலுமே கட்டாய பயிற்சிப்பள்ளிப்பாடங்களாக ஏன் இன்னமும் சேர்க்கப்படவில்லை . . சாதிப் பிரச்சனை ....அது , இது என்று பேசி குளிர் காய நிறையப்பேர் இருக்கவே செய்வார்கள் . இந்திய சிந்தனையரான ராஜாஜி , சிக்கனமாக ... பொருளாதார மேம்பாட்டிற்காகவே ' குலக்கல்வி முறையை' அறிவித்து விமர்சனங்கள் , கிமர்சனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார் . அதையே எளிதான , உறுதியான தீர்வாவே கடைசி வரை கூறி நின்றார் . ' சமூகச்சிக்கல் ' ஒரு பிரச்சனை அதை மக்களே கடந்தேயாக வேண்டும் என்றார் . வடக்கு , கிழக்கில் முன்னர் படகுக்கட்டுமானமெல்லாம் இருந்தன . பிழையான அரசியல் நகர்வுகளால் ...அழித்து தள்ளி விட்டிருக்கிறார்கள் . குற்றம் பார்க்கில் சுற்றமில்லை . எனவே, மக்களை , மீள கட்டி,.... எழுப்பவே சுதந்திரமாக விட வேண்டும் ! .
எல்லா தொழில்களுமே சமத் தன்மை கொண்டவை தாம் . அவற்றுக்கு துறைமுகங்கள் , போக்குவரத்து நிலையங்கள் எல்லாமே மக்களுடைமை ஆக்கல் வேண்டும் . ஒன்றுமே செய்யாது அதிலே படைமுகாமை கொண்டு போய் நிறுவுவது , காலுக்குள்ளே , கையிக்குள்ளே ஓட விடுவது எல்லாமே குழறுபடிகள் தாம் . ஒபீஸ் வேலைகளுக்கு போறவர்கள் போகட்டும் . தடைகளை நீக்கினால் வாய்ப்புக்கள் பெருகும் . மக்கள் , எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாது பயன்படுத்திக் கொள்வர் . படைத்தரப்பினரின் அதிகாரங்களும் கட்டாயம் குறைக்கப் படவே வேண்டும் . அவர்களால் …கணக்கில் வராது கடலில் கொட்டப்பட்ட தமிழரின் உயிர்களின் தொகை கலவரங்களில் இறந்தவர்களின் தொகையை விட அதிகம் . மறைக்கப்பட்டு வருகிறது .
எப்பவும் நாட்டின் கதாநாயகர்கள் அனைத்து ஈழ மக்களும் தாம் !
ஒப்பந்தம் எழுதவே தகுதியற்ற ஒரு நாடாகவே ஈழம் தன்னை நிரூபித்து வந்திருகிறது .இஸ்ரேலைப் போல பாலாஸ்தீன சாம்பலை ஏற்படுத்தி சமன்படுத்தி ...அதன் மேலேயே ...., இங்கேயும் கூட சவக்குழிகளை சமன் செய்து அதன் மேலே தான் தோட்டங்களை வைக்க விரும்புகிறார்களா ? . அதைச் செய்ய அவர்களுக்கு நிறைய , நிறைய பயங்கரச் சட்டங்கள் வேண்டும் .இந்த அரசுக்கு துணையாக பிறநாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு வரிசை கட்டி நிற்கின . ஒரு ஈழத்தலைவர் கூறினார் . '' தமிழர்கள் சாகிறது , சிங்களவர்களுக்கு மிக சந்தோஷம் அளிக்கிற தாம் '' . பாசிசம் தொடர விட்டுக் கொண்டிருக்கிறார்களே. செயற்கை அழிவு போட்டி போடுகிறது . சிறிய நாடுகளில், அரைவாசி தூதரகங்களை மூடி துரத்தி விட்டால் தப்பிப்பிழைத்து விடும் போலவே இருக்கிறது .
பெடியளின் பேச்சை கேட்டு '' புத்தியில் புரிய வைக்கும் வேலை ஏனடி? ‘’என்று அடிக்கடி கும்மியும் அரசியல் பேசி உசுப்பேற்றியும் வருகிறாள் . . சொந்தம் . நம் மொழியிலே எழுதி , பேசி அரச விவகாரங்களுடன் தொடர்பு கொள்ளகிறது . மரியாதைக் கொடு... ' அப்பாவைப் போலில்லாது , அம்மா நியாயத்தைத் அளந்து பேசுகிறவராக இருக்கிறார் . எப்படி பேசினால் என்ன ?, கடைசி வரை ஈழவரசை எதிர்க்க வேண்டும் ?, கையை மடக்கி பார்த்தாள் . அவளுக்கு புஜம் பொங்கவே இல்லை . போதியதிலை ? . கறுப்புஜூலை ஆயுத போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளியதிலிருந்து விடுபட வழியுமில்லை . பெடியள்களுக்கு. ‘’உங்க சகவாசம் வேண்டவே வேண்டாம். வடக்கு , கிழக்கை எம்நகரங்களாக கட்டி எழுப்புவோமே '’ அந்த கனவை நோக்கி சிந்தனை தீவிரமாக நடை போடுகிறது . போராட்டமோ , காடுகள் எரிகிறது போல , சுனாமி போல நீண்ட சவாலாகவே கிடக்கிறது .
வழக்கம் போல பஸ்சிலிருந்து இறங்கிய போது இருள் கவிந்து விட்டது .முன்னால் பவியும் ,ராமைய்யாவும் பேசிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள் . இருவருக்கும் தெரியாமல் சத்தமில்லாது சிறிது தூரத்தில் அவளும் , கும்மியும் நடந்து வந்தார்கள் . இப்ப இவர்களுக்கு இருளைக் குறித்து பயருக்கவில்லை , வீரிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் . அவர்கள் பேச்சைக் கேட்க பாவமாக இருக்கிறது . '' அரசு அழித்தொழிக்கப்படுவீர் என உச்சமாக பயமுறுத்தி வருகிறது . வெளி அலுப்புகளுக்கு மார்க்சிசம் என்றால் பீத்தல்பயம் . எனவே அதிகமாக கொண்டு வந்து கொட்டித் தள்ளுகிறார்கள் . மன்னிப்போம் தட்டு ஓட்டை , கந்தல்கள் நிறைந்தவையாகி விட்டது .
எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று எம்மை முழுமையாகவே கொன்றொழிக்கப் பார்க்கிறார்கள் . நாம் பயப்படாதவர்கள் என்பதை காட்டியே ஆக வேண்டும் . ''. பவியின் பேச்சு அவளை ஆச்சரிய படுத்தவில்லை . '' மாகாணவரசு இயங்கினாலும் வெளி விவகாரக்கொள்கையை மீற உரிமை கிடையாது தெரியுமோ ? " என்று ராமைய்யா சிரித்தார் . கனகவல்லிக்கு அவனின் வெறித்தப்பார்வையால் ஏற்பட்ட சேதத்தை மீறி கனிவும் எட்டிப் பார்க்கிறது . இருபாலருக்கு இடையில் பொது மையங்களும் இருக்கவே செய்கின்றன . சந்தியை அடைந்த போது தரப்புகள் வேறாகப் பிரிந்து சென்றன .
ஒரு காலம்
பவி புதிதாக சேர்ந்த போது. கறுவல் , ஒல்லி ,வாடல் என்று அவனுக்குத் தெரியாமல் அழைக்கப்பட்டான் . கரன் கிராமப்பொறுப்பாளர் . அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டு திரியும் சந்தரை பாரதி வாசிகசாலை தான் காக்கிறது என்ற சந்தேகம் கரனுக்கு இருந்தது . கிராமம் பெரிது தான் .ஆனால் அந்த குட்டிப்பகுதியில் தலைமறவாக இருக்கிறான் என்றால்... யாரோ உதவி செய்கிறவர் இருக்கிறார்கள் . அயலில் நிற்கிறான் என்ற செய்தியை தோழர் ஒருவர் தெரிவிக்க அதிரடியாக அவர்கள் குழு ..அங்கே வந்து இறங்கியது. சந்தர் அங்கே இல்லை . ''அவனை ஒளித்து வைத்திருந்து விளையாட்டா காட்டுரீர்கள் '' என்று வாசிகசாலை டுயூப் லைட்டை உடைத்து எச்சரித்துப் போட்டு வந்தார்கள் . பவியின் வகுப்புத்தோழன் வாசிகசாலை த்தலைவர் . 'எங்கே போறார்கள் ?'என்று இழுபட்டு வந்தவனுக்கு அந்தரமாகி விட்டது . ''கரன் , லைட்டை உடைத்திருக்க வேண்டியதில்லை ' யே ' என்று காரணத்தை யும் கூறி சொன்னான் . '' இனிமேல் தாக்குதல் நடத்தவில்லை , சரி வா'' என்றான் .அவன் பேச்சையும் கரன் சிறிது கேட்பவன் .
சந்தர் , பாலைப்பகுதியில் மாடி வீட்டு க்குடும்பத்திடம் வேலைக்கு வந்த மேற்குக்கிராமத்து சிறு பெண்ணிடம் தொடர்பு கொண்டு , வயிற்றில் வளர வைத்து விட்டான் . ஒதுங்கி கொள்கிறான் . அவள் பிரச்சனையை தோழர் மூலம் தெரியப்படுத்தி இருந்தாள் . அவனைப் பிடித்து இவர்கள் தலையிடாமல் அ தே வாசிகசாலையில் வைத்து விசாரித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் . அந்த பெண்ணுக்கு உதவியாக நின்று , தீர்ப்பையும் நிறைவேற்ற உதவியாக நிற்பார்கள் . சந்தர் .சுழித்து , சுழித்துக் கொண்டு திரிகிறான் .
முந்தி , மேற்குப்பகுதியிலே பழைய சண்டியர் ஒருவர்கத்தியால் குத்திப் போட்டு தலைமறைவாகி விட்டிருந்தார் .. இவர்களுடைய பெரிய தலைவரிடம் தெரியப்படுத்த,. 'சண்டியர்' தீவிரமுடையவர் . அயல் பொறுப்பாளரிடம் பாரப்படுத்தப்பட்டிருந்தது . அங்கே இருந்து ஒரு குழு மரப்பலகைதுவக்கை சாக்கால் சுற்றிக் கொண்டு இரவில் போய் இறங்கியது . சொந்தபந்தம் சூழ இருந்ததால் அவரைப் பிடிக்க முடியவில்லை . அவனுடைய தம்பியைப் பிடித்து ... முகாமிற்கு கொண்டு சென்று 3ம் நாள் வைத்து விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டான் .
பிறகு , அங்கே விழிப்புக்குழுவொன்றைக் கட்டி தம்பியை யே தலைவராக நியமித்து , விழிப்புக்குழு கட்டப்பட்டது . . அங்கே இந்தப்பிரச்சனை எடுக்கப்பட்டு நீண்ட நேரம் விவாதித்தார்கள் . கரனும் , பவியும் கூட்டத்தில் இருந்தார்கள் . அவ்விடத்து தோழர்கள் பக்கபலம் . சாமம் வரைநீடித்தது . முடிந்த பிறகு இவர்களுக்கு தம்பி வீட்டிலே இருந்து தேனீர் வந்தது . . தேவாமிர்தமாக இருந்தது . குத்து வாங்கியவரின் ,மருத்துவ மனைக்கு சென்ற கார்ச்செலவு எல்லாம் கொடுத்து ஓரளவு சமாதானமாகிப் போயினர் .
தனி இருவராக ...யாருமேயற்ற நிலவு ஒளியில் இருள்ச் சத்தங்களுடன் சைக்கிளில் திரும்புற போது பவிக்கு அச்சம் ஏற்பட்டது . கோழி ஒன்று கூவ ..கரன் ''சாமக்கோழி கூவுறு '' என்றான் . அதுவரையில் அவன் கேட்டதில்லை . கேட்க பயம் கலைவது போல இருந்தது . இருந்தால்ப் போல் இவர்களுக்குப் பின்னால் ஒளியை வீசியபடி வாகனம் ஒன்று வந்தது . இவர்களுக்கருகில் பிரேக் பிடித்து நின்றது . உள்ளே ஆயுதத்துடன் இருப்பது தெரிந்தது . ''தாமரை இயக்கம் ''என்று கரன் பதில் அளித்தான் . '' சரி போங்கள் ''என ...சென்று விட்டது . '' முல்லை இயக்கம் '' என்றான் கரன் . இரவில் , 'கள்ளர்களோ ? ' என்ற சந்தேகத்தில் ... இப்படி நிறுத்திக் கேட்பது வழக்கம் . அது சென்று மறைந்து விட இவர்களுடைய நிலவுப்பயணம் தொடர்ந்தது . முல்லை இயக்கம் தான் முதல் முதலில் வாகனத்தில் ...ஒரிஜினல் ஆயுதங்களுடன் திரிந்த குழு . ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் . குழுமோதல் இல்லாதிருந்திருந்தால் ... இரவு ராட்சியம் குழுக்களின் கைகளிலே இருந்தது . கள்ளர் , அரசின் புலன் ஆட்கள் நடமாட முடியாத காவல் நிலவும் . ஒன்றயொன்று ...பிரச்சனைப்படாது விலகிச் செல்லும் . இது பெடியளுக்கு பெரும் பலத்தையும் அளித்துக் கொண்டிருக்கும் . இவர்கள் கை வைத்தால் தாக்குதல்க்குழு வரும் . இச்சூழலில் சண்டியர் எவருமே ...ஓடி ஒளிந்து தலைமறைவாகி கிடந்தனர் . ஓரிரண்டு சம்பவமே நிகழ்ந்தன . உதவி என்று கேட்டால் , அல்லது உணர்ந்தும் மற்றயவை ... கைகொடுக்கும் . கரன் போன்ற தோழர்கள் அச்சமின்றி திரிவதற்கு இச்சூழலே காரணம் . இது 85 …வரையில் இருந்தது .
பெடியளின் கால் படாத யாழ்ப்பாண மண்ணே கிடையாது என திரிந்தார்கள் . மூலைமுடக்கு ,குச்சொழுங்கை , மணற்காடு எல்லாம் அத்துப்படி . தெரிந்திருந்ததால் எங்கையும் நிலையெடுத்து எதிர்த்தாக்குதல் நடத்தவும் கூடியதாக இருந்தன . வட பகுதியில் அனைத்து படைத்ததரப்பின் நில நடமாட்டமும் இல்லை , முகாமிலிருந்து அடிப்பது , வான் தாக்குதல்கள் மட்டுமே அச்சமயத்தில் எதிர் கொண்டார்கள் .
.
இப்படி நிறைய தடவைகள் பவி கரனுடன் இழுபட்டான்
. எல்லாக்குழுக்களுமே தாமரையிடமே சமூகப்பிரச்சனைகளை கைகாட்டி விட்டு விட்டார்கள் . தாமரையின் தாக்குதல்க்குழு பெரும் சண்டியர் பலரை போட்டுத் தள்ளி வடமாநிலத்தையே மக்களுக்கு அச்சமற்ற இடமாக ஆக்கி விட்டிருந்தது . இழுபடுறது அவர்களுக்கும் ஒரு துணிச்சலையும் ஏற்படுத்தியது . தாமரை பல விழிப்புக்குழுக்கள் இவர்களிடம் வராமலே நல்லமாதிரி இயங்கின . ஏதும் பிரச்சனை என்றால் இவர்களின் மேல் தலைமையிடம் நேரிலே சென்று ஆலோசிக்கிற து கூட ஏற்பட்டது. அவ்விடத்தில் நீதியான பெரியவர் யாருமிருந்தால் அவரிடம் பாரப்படுத்தி தீர்வுகள் கண்டன . தூரத்திற்கு சைக்கிள் உழக்கி வர வேண்டி இருக்கவில்லை .ஒரு வலையமைப்பு . கட்டப்பட்டிருந்தது . இவர்களுக்கு போதிய உடல்வலு கிடையாது . ஆனால் ,எந்த இடத்திலும் , நேரத்திலும் தோழர் நிற்பார் . , விடுதலைக்குழுச்சண்டை ஏற்பட்ட பிறகும் இவர்கள் ..பின் நிற்கவில்லை . அந்த ஓர்மம் . ஓர் தர்மம் . அதை இழந்து விடவே கூடாது . உடலை வலுவாக்கிறதையும் கலையாகவும் கற்றுக் கொண்டாக வேண்டும் .
நம்மவர்களிடம் நிலவும் உடல்வலி குறைவை சமப்படுத்தவும் வேண்டும் . சிலம்பு . கிலம்பு ... என ஏராளமாக இருக்கவே செய்கிறது . ஒரு கிராமத்திற்கு தெரிந்தது மற்றதுக்கு தெரியாது . கற்றறிய வேண்டும் .இவர்கள் குறைத்தாலும் மக்களிடம் சண்டியர்களும் ' குறையவில்லை . '' திருப்பி அடிப்போம்'' கதையைப் பரப்பி விடுவர் . ஆனால் , கைவைக்கப் சிறிதளவு பயம் . பெடியள் கைவைப்பவரை சாம்பி விடும் . ஆற்றிலே அடித்தால் குளத்திலே நிச்சியம் அடி விழும் என்ற பயம் நிலவத் தான் செய்கிறது . பலம் சேதப்பட்டு விட்டது .
கழுகு , மற்றதை விட தனியே பறக்க ஆசைப்பட்டது .எல்லாற்றையும் விட மேவி எழவும் விளைந்தது . அது தான் பிரச்சனையாகி போனது .
அதன் சகோதர மோதல்களால் அநியாயமாக தோழர்கள் மாண்டு போனார்கள் . உட்கொலையும் சகோதரக்கொலைகளும் போட்டி போட்டு நடந்தன . ஆனால் , இரண்டுமே ஒன்று தான் . கிடந்த பிளவு மேலும் விரிசலுக்குள்ளாகிப் போனது தான் மிச்சம் . கழுகு 'ஒட்டுக்குழு, ஒட்டுக்குழு' என்றதையே சதா உச்சாடனம் செய்தது . கோயாபல்ஸின் தந்திரம் . பள்ளிப்பாடங்களை மனனம் செய்வது போல மயக்கமூட்டலை ஏற்படுத்துதல் . துரோகக்குழு என்ற படிவு ஏற்பட்டுப் போய் விடும் . பிறகு , துரோகியை கொல்றது தர்மம் என்ற நியாயம் பிறந்து விடும்.
இன்று பிறப்பவர்களுக்கு குழுக்களின் வரைகோடுகள் தெரியாமலே கழுகே மட்டுமே ஒரு ' தலைமைக்குழுவாக' தெரியத் தொடங்கியது . எனவே , அனேகர் ஒரு விதப்பார்வையில் சிக்கிப் போய் விடுகிறார்கள் .
ஈழவரசுக்கு கள்ளம் புரிய , பறைய நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன . புதைகுழிகளை 'நாம் செய்யவே இல்லை ' என கூச்சமில்லாமல் மறுக்கின்றன . இனமுகத்தை வைத்துக் கொண்டு துணிச்சலாகத் தொடர்கின்றன் . முஸ்லிம்களுக்கு கிராமங்களையும் வழங்கி தம் ஒட்டுப் பிரிவாக்கிக் கொள்கிறதும் நிகழ்கிறது . ஒன்றுடன் ஒட்டியது மற்றதுடன் ஒட்டாது . ஒரே கல்லில் பல மாங்காய்கள் . இன்று , ஒட்டாத ஒட்டு மரங்கள் நிறைய , ...தமிழர்களின் ஒற்றுமையை அது வெகுவாக பாதிக்கிறது , சந்தேகப்பட்சிகள் அதிகமாக பறக்கின்றன .
இவற்றுக்குப் பின்னால் ஒளிந்தும் பல சுதந்திரங்களை அடித்து நொறுக்கின்றன . போராட்டம் நெருப்பாறா ஓடுகிறது . வரைபு வலுவிழந்து போகிறது . விடுதலைக்கு வேண்டிய ஒரு பெரிய கட்டமைப்பை கட்டிக் கொள்ள வேண்டிய வேலை கட்டப்படாமலே கிடக்கிறது . முதலில் , நிகழும் உட் கொலைகள் நிறுத்தப்பட்டாலே ...ஓரளவுக்கு மூச்சு விட , சிந்திக்கவாவது நேரம் கிடைக்கும் . கழுகு அதற்கு இடமளிக்காது . ஈழத்தைப் போல கழுகும் ஒன்றின் பேச்சைக் கேட்கிறதோ ? என்ற சந்தேகமும் பிறக்கவே செய்கிறது .
சாதியம்
மேலும் இருவரும் இருளில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் . என்ன தம்பி சொல்கிறாய் ? நீங்க , அனைத்து தோழர்களுமே சாதியம் பார்க்கிறதில்லை . சரி விடுதலைப் போராட்டம் தோற்றுப் போய் விட்டால் எதிரி , பிரித்தாளும் கொள்கையுடையது , சாதியத்திற்கு உயிரூட்ட தயங்க மாட்டாது . எல்லாமே மீள வந்து விடுமே , அவர்களுக்கு இருக்கிற பெரிய ஆயுதம் , பயன்படுத்தாமல் விட மாட்டார்கள் . அப்ப என்ன செய்யப் போறீர்கள் ? '' . '' தெரியலையண்ணே . விடுதலைக் கிடைத்து , சட்டங்களால் சமப்படுத்தி , தோழர்கள் மூலமாக எல்லாத் தொழில்களிலும் காலை வைக்கிற போது , அவர்கள் பிள்ளைகள் , ஒரு சுமூக நிலைக்கு வந்து விடும் என்று நம்புறோம் , அது இப்ப நிகழாமலே போய் விடுமோ என பயமாக இருக்கிறதண்ணை '' என்றான். அவருக்கும் அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.
நாம் கட்டாயம் வெல்ல வேண்டும் . தொடக்கத்திலிருந்தே நம் தோழர்களை சுட்டுத் தள்ள தொடங்கி விட்டினம் . விடுதலைப் போராட்டத்தை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்பதே ...தற்போதைய பெரிய தலையிடியாய் கிடக்கிறதண்ணை '' . அடைத்த குரலில் சொல்கிறான் . ராமைய்யா பதில் சொலுல்வார் ? . அதைக் கேட்க இருவரும் ஆவலுடன் இருந்தார்கள் . இவர்கள் காகிதம் தயாரித்தல் , இயற்கைவாயுவை ஏற்படுத்தி பயன்படுத்துதல் , காளான் விவசாயம் , மரம் நடுகை( குறைவாக நடந்தன) போன்றவற்றில் ஈடுபடுதல் ....போன்றவை இறங்கி இராத துறைகளாகவும் இருந்தன . காடுவளர்த்தல் இயற்கையை காப்பாற்றுவதில் முக்கியமானது . அவசியம் தெரியாதவர்கள் அழித்து தான் வருகிறார்கள் . இவற்றிலும் தோழர்களை பழக்க வேண்டும் . இந்த இலட்சிய நெருப்பு இவர்களுள் எரிகிறது .
ஒருவேளை இந்த போராட்டம் தோல்வியடைந்தால் .. எழுத்தை ஆயுதமாக தூக்கி போராட வேண்டியிருக்கும் . எழுத்துக்கள் , எழுத்துக்கள் . அவற்றிற்க்கு வலிமை பெற சுய காகித உற்பத்தி அவசியம் . ஆயுதங்களிற்க்கு பிறர் கையை நம்பி ஏமாந்தது போல புத்தகங்கள் தடைப்படக்கூடாது . பிரிட்டீஸ் கல்வி முறையில் சிக்கிக் கிடக்கும் நம்மவர்களிற்கு வாசிப்புப்பழக்கம் பூஜ்யம் தட்டிப் போய்க் கிடக்கிறது . கால்வாசி கூட நகராத முள்ளை ...இப்படித் தான் கருதவேண்டிக் கிடக்கிறதை . அரைவாசிக்கு மேலே ஏற்றுகிற போதே தேறி விட்டதாகி விடுகிறது , மூன்றில் இரண்டு பகுதியை தொடுகிற போது வெற்றியாக கூறப்படும் . வாசிப்புபழக்கத்தை ஏற்படுத்துவதும் ஒரு வேலை , போராட்டம் தான் .
நாம் வாசிப்பிலும் தேறினால் தான் விடுதலையை அறிய முடியும் . மண்ணில் சுதந்திரமாக வாழ முடியும் .தென்னைத் தும்புகள் எடுத்து தும்புத்தடி , கிணற்றுக்கயிறுகள் தயாரிக்கிறது , பனை , தென்னையோலைத் தயாரிப்புகள் , வெல்லம் தயாரிப்பு ...என கொஞ்சம் நடந்து கொண்டு தானிருக்கின்றன. குழு மோதல்களால் வேகம் பெற முடியவில்லை . உள்ளே , வெளிய என நிலவுற பிரச்சனைகள் எதிர் நோக்க....மாநாடு , பின்மாநாடு ..என வைக்கவும் செய்கிறது . கேள்விக்குறியாகி இருந்தாலும் சீர்படுகிற வேலைகள் நதை பெறுகிறது . விரய நாட்களும் கூடுகின்றன .
படை போடும் குண்டுகளால் மரங்கள் கணக்கு வழக்கில்லாமல் அழிக்கப்பபடுகின்றன . மகளிர் மரநடுகையை செய்து மீள்விக்க போராடுகிறது . இது எலிக்கு குஞ்சம் கட்டுறது போன்றிருக்கிறது. வேலை . சிறுக என்றாலும் நடைபெறுகிறது நற்குறி தானே ! .
இன்று ,. உத்தமர் . கறை படியாதவர் , நீதி விசாரணை செய்பவர் என்று எருமே இலர் என மயக்கம் காட்டுகிறது .
இயக்கம் இல்லாமலே செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன . வாய்க்கால்கள்..கால்வாய்கள் இவற்றையெல்லாம் நீர் நிறைய வைத்து , கண்ணுக்கு குளிர்ச்சியாக்கி மீள சீரமைப்பது பெரிய வேலையும் கிடையாது . மக்கள் , வீடுகளில் கிடக்கிற தேவையற்றக் கற்களை , வாய்க்கால் , கால்வாய் , குளக்க்கரையில் கொண்டு வந்துகொட்டி விட்டால் ...வாசிகசாலைப் பெடியள்கள் அவற்றை நிரவி விடுவர் . அவற்றில் மீன்களை விட்டு வளர்த்து வத்தை , படகுகளில் ஓடி மீன் பிடிக்கிறது எழுந்தும் விட்டால் ...அடுத்தடுத்தப் படிகளிலும் கட்டாயம் கால் வைத்து விடவும் வேண்டும் ..சில முக்கிய பகுதிகளிலே மாத்திரமே நகரப்புறங்களிலே , சீமேந்து கட்டுடன் வேண்டிய தேவை இருக்கின்றன . பொறியிலாளர் நேரிலே நிற்க கதவு தடுப்புகள் கட்டுமானங்கள் நடைபெற வேண்டும்அரசும் , அரச அமைப்புகளும் முறையற்ற ஆட்சியும் பாழ் படுத்துவதை மீள உயிர் பெற வைக்க முடியும். இப்படி குழுக்ளின் குறுகிய பொற்காலத்தில் (84 – 85 . களில் ) திட்டமிட்டவை , சிந்தித்தவை அனேகம் . ' ஓடக்கரை ' இடமும் , ஒழுங்கையும் கூட சங்கரத்தை சங்கானை வீதியில் வ்ழுக்கியாற்றுக்கு அயலில் இப்பவும் காண இருக்கிறது . குளங்களில் சிறு வள்ளங்களை செழுத்தி மீன்களை தாராளமாக பிடிக்கலாம் என்றெல்லாம் விரியும் பார்வைகள் . கலாச்சாரங்கள் , பண்பாடுகள் , பாரம்பரியங்கள் இருக்கின்றன . இவற்றை எல்லாம் பவி சொல்ல '' தம்பி , உவையெல்லாம் கனவில் தான் நடக்கும் . நடைமுறையில் காணஇயலாது'' என்று ராமைய்யா சொல்கிறார் . பின்னால் வந்த இருவரும் சிரிக்கிறார்கள் .
அச்சமயம் அனைத்துப் படைத்தரப்புமே வடபகுதியில் செயலிழந்து போயிருந்தன . அவற்றின் உள்ளே உள்ளே நிகழ்ந்த சிற்சில சூடுகளே பெரிய தலைவலியைக் கொடுத்தன . நம்பிக்கைகளுடன் நிலைத்து நிற்க திட்டங்கள் நிறைவேறுகின்றனவோ இல்லையோ தீட்டுவது முக்கியமாகவும் , விரிவாக இருந்தன . பண்டமாறுட னும் இயங்குற மக்கள் கடைகள் கட்டிக் கொள்றதிலும் ஈடுபட்டிருந்தார்கள் . வடிவம் எடுத்து விட்டால் , சைக்கிள் , மாட்டுவண்டிகளே போக்குவரத்துக்கு போதுமானவை . அரைவாசிச் செலவுகள் மாயமாகி விடும் . சுங்கம் கடந்த அரசுகளைக் கண்டது தமிழர் மரபு .
சத்தம் கேட்டு பவி திரும்பிப் பார்க்கிறான் . இப்ப அவன் பார்வையில் வெறிப்பு இருக்கவில்லை . இவள் பார்வையிலும் வெறுப்பு இல்லை . ஒட்டுக் கேட்கிறீர்களா? என்ற சிறு சிரிப்பே ஒட்டி இருந்தது . பாசறை வகுப்புகளில் ஆய்வு ரீதியாக பாடம் நடத்துவது உங்களுக்கெங்கே தெரியும் ' என்று அவன் புருவங்கள் ஏறுகிறது . அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது . ' இவன் இன்னமும் வகுப்புக்கு போறதை நிறுத்தவில்லையா ? ஆயுதத்தை தூக்கிக் கொண்டு திரிவான் என நினைத்தேன்'' என்று தோழியிடம் மெதுவாக கூறினாள் . அவன்குழு ஆதரவாளன் . அவள் வீட்டிற்கு அவளின்அண்ணனை சந்திக்க அடிக்கடி வாரவன் . '' கேட்டு வந்து சொல்லட்டா? '' என்று சினேகிதி கூறிச் சிரிக்க ,. ''வாயை மூடிக் கொண்டு வாடி '' என்று விட்டு இவள் விடு , விடுவென்று நடந்தாள் . தோழியிடம் அவன் சொல்வது கேட்டது . வீட்டிலே வந்து '' அம்மா இன்று பவியைப் பார்த்தேன் . வித்தியாசமான... ஆளாக இருக்கிறான் . எங்களைப் பார்த்து கெதியிலே வீட்ட போய்ச் சேருங்கள் , தேடப்போகினம்' என்கிறான்'' என்றாள் . அவனுக்கு ஏதும் ஆபத்து சூழ்கிறதோ ...என்று அவருக்கு தோன்றியது .
ஒரு அவ்ரோ விமானத்தின் இரைச்சல் தூரத்தே கேட்டது . அயலில் ஒரு கிராமத்தில் அது ஈரானியத் தயாரிப்பான பீப்பாய்க் குண்டை மிதக்க விட்டு , விட்டுப் போகலாம் . அது கிரீஸ் அடைக்கப்பட்ட பீப்பாய். . ஒருமுறை கீழே விழுந்து ஒரு மாட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது . நிலத்தில் விழுந்து ஏற்படுற சிதறலில் … எல்லாமே காட்டுத் தீ போலபரவி எரியும் .மெதுவாக பீப்பாய் மிதந்து வார போது மக்கள் மரங்களில் மறை எடுத்து விடுவார்கள் . ஆட்களின் உடம்பில் தெளிபட்டிருந்தாலும் எரியும் என்கிறார்கள் . கவனம் வேண்டும் . அரபு முஸ்லிம்களும் ஈழத்தமிழருக்கு எதிரிகள் இல்லை . ஆனால் , நாடு , நாட்டுக்கு உதவுற என்ற முறையில் அது உதவுறது . அதைத் தொடர்ந்து கிபீரீன் ஒலி . போர் ஜெட் விமானம் . வானில் எட்டு எழுதிப் போட்டு எவு(எரி)கணையை வீசி விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளது . இதிலிருந்தும் முகாமிலிருந்து எறியப்படும் குண்டுகளிலிருந்து தப்பவே பதுங்குகுழிகள் பரவலாக கட்டப்பட்டன . ஒரியக்கம் , ஓருமுறை நிலத்திற்கு மேலேயேயும் மணல்மூட்டை வைத்து அறைகளைக் கட்டியது . விரைவான நகர்வு வேண்டும் . வயசானவர் பெண்கள் , பிள்ளைகுட்டிகளை இழுத்துக் கொண்டு கீழே செல்ல ...நேரம் ஓடி விடும் . அறைக்கட்டுவது …வெகு சிரமமாக இருக்க , அது..கை விடப்பட்டு விட்டது . காலம் எத்தனையைக் கடந்திருக்கிறது .
, ஒருமுறை , கழுகு மோதலில் ஒரு குழுவைச் சேர்ந்த தோழர்களை தொகையாக சுட்டுக்கொன்றதில் வடபகுதியே உறைந்து போய் நின்றது . விடுதலைக் கிடைக்க முதலே போராளி அழிப்புக்கள் உயிர் பறிப்பு மலிவாக நடைபெறுகிறது . ஈழவரசு எறிகணை வீச்சை நிறுத்தவில்லை .
‘’ எஞ்சியவர்கள் சரணடையிற பட்சத்தில் மன்னிப்பு வழங்கப்படும் 'என ஒலிபரப்பிய போது. சில பெற்றோர் ... தம்பிள்ளைகளை கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினர் , ஏஜெஞ்சிகளின் காலிலே கையிலே விழுந்து கையோடு கொழும்பிற்கு விரட்டினர் . எங்கையிருந்தாலும் உயிரோட இருந்தால் போதும் . என்ற பரபரப்பு பரவி இருந்தது . ஏஜெஞ்சி ஆட்களும் ஈர இதயத்துடன் ...உதவினர் . எங்குமே கழுகுத்தோழர்களின் திமிரான திரியல்கள் . மற்றயவை நோக்கியும் அம்புகள் ...குறி வைக்கப்பட்டிருந்தது தெரியாமலா இருக்கும் . பவித் தோழர்களிலும் பலர் கொழும்பிற்கு விலகினர் . கனகவல்லியின் பெற்றோர் இவன் மட்டும் ஏன் போகாதிருக்கிறான் ? '' என பேசிக் கொண்டனர் . இவளுக்கும் பயமாக இருந்தது .
ஒரு நாள் ராமைய்யாவுடன் நடந்து சென்று கொண்டிருந்த பவியை இருவர் மறித்தார்கள் . பலரும் காணாமல் போய்க் கொண்டேயிருக்கின்றனர் . விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்ட இவனும் உதிர்ந்து விட்டதாக கதைக்க படுகிறது . போய் சேர்ந்து விட்டான் ...,... செய்திகள் அவளை வலிக்கச் செய்கின்றன . நகரத்தில் வங்கிக்கொள்ளை , சூடுகள் , குண்டுவெடிப்புக்கள் ,தீடீரென உயிரிழக்கும் மனிதர்... மத்தியிலும் பள்ளிக்கூடமும் போய் , டியூசன் வகுப்புகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கிறாள் . எய்யப்படும் எல்லா அம்புகளும் ஏகத்திற்கு வலுவிழந்து போய் விட்டன . எங்கோ எய்யிற அம்பு எங்கோ போய் தைக்கிறது போல போராட்டமும் தடமிழந்து பொலிவிழந்து போய் விட்டிருக்கிறது .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.