சிலப்பதிகாரக்காப்பியத்தில் நாடகக் கூறுகள்! - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -

கட்டுரையாசிரியர்: - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -
முன்னுரை
தமிழ் இலக்கிய மரபில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் இயற்றிய இக்காப்பியம், கோவலன்–கண்ணகி–மாதவி ஆகிய பாத்திரங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அறம், அரசியல், சமூகம், காதல், பழிவாங்கல் போன்ற பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்துகிறது. இதனை ஒரு காப்பியமாக மட்டுமன்றி, நாடகக் கூறுகள் நிறைந்த இலக்கியமாகவும் ஆராய முடியும். சிலப்பதிகாரத்தில் காணப்படும் நிகழ்ச்சித் தொடர், உரையாடல்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், காட்சியமைப்பு ஆகியவை அனைத்தும் நாடகத் தன்மையுடன் அமைந்துள்ளன. இதனால் இக்காப்பியம் வாசிப்பிற்கும் மேடைக்காட்சிக்கும் ஏற்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள நாடகக் கூறுகளில் உள்ள ஆடல் ஆசான் , இசையோன், புலவன், அறங்காமைப்பு மற்றும் ஆடல் நிகழ்ச்சி பற்றி அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சிலப்பதிகாரம்:
சிலம்பிலே உள்ளத்தை வயப்படுத்தும் கதை அமைப்பு உள்ளது. உள்ளத்தோடு ஒன்றி கலந்து விடும் உயிர்ப்புள்ள கதை மாந்தர்களையும் ஏழிசை இனிதாக இயங்குகின்ற குரவைகள் ஒலிக்கின்ற பண்கள் பயின்று வருகின்றன.தமிழிசையின் தண்ணீகரற்ற உயர்வையும் தமிழகத்திற் கூத்தும் குரவையும் குலாவிய பாங்கையும் தமிழர் மறமேம்பாட்டின் செவ்வியையும் சிலம்பிலே நாம் கண்டு மகிழலாம். நாடக வழக்கு, கூத்து, அவைக்குழாம்என்னும் சொல்லாடல்கள் சிலம்பிலே காணப்படுகின்றன.

முன்னுரை




'அமெரிக்கா' குறுநாவல்
நடையில் நின்று உயர் நாயகன் இராமனின் பெருமை குறித்து கூறும் கம்பராமாயணத்தில் அறிவியல் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல், வானவூர்தியியல், மரபியல், வானியல், கணிதவியல், உளவியல் போன்ற பல துறை சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மருத்துவயியல் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.


மகாகவி பாரதியார் அனைத்துத் துறைகளிலும் சொல், பொருள், வளம், கலை ஆகியவற்றைப் புதிய நோக்கில் தமது படைப்புகளில் தமிழுலக்கு அறிமுகப்படுத்தினார். தாம் வாழ்ந்த முப்பத்தொன்பது ஆண்டுகளில் (1882 - 1921) தமிழ் மொழிக்குப் புதுப்பொலிவையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தினார். இத்தகைய பரிமாணங்களோடு விளங்கிய இக்கவிஞரிடம் காணப்படுகின்ற மற்றொரு வியத்தகு ஆற்றல் வடிவமே கல்வி குறித்து அவர் கொண்டிருந்த சிந்தனைகளாகும்.





[ 2013இல் ,திருச்சி தேசியக் கல்லூரியில், கனடிய எழுத்துக்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. ‘கனடா: பல இடங்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் இந்திய கனடிய ஆய்வுகள் சங்கம் இந்த மாநாட்டை நடத்தியது. வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த பின்வரும் ஆங்கிலக் கட்டுரை , Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan, முனைவர் ஆர். தாரணியால் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இக்கட்டுரையின் தமிழாக்கம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலக் கட்டுரை இம்மொழிபெயர்ப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது]
ஓர் ஊர் அல்லது ஒரு தலம் அமைந்த இடம், அல்லது ஒரு தலம் குறித்த அதிகளவிலான இடப்பெயர் ஆராய்ச்சி, பல்வேறு நோக்குகளில் நடைபெற்றிருக்கும் எனில், அது ‘கதிர்காமம்’ என்பதற்கே என்பதை, இடப்பெயர் ஆய்வு பற்றிய ஈழத்து எழுத்துக்களை வாசித்தோர் நன்கு உணர்வர். ஈழத்தில், பல்லின பல்சமயச் சங்கமிப்பு நிகழும் இடங்களில், கதிர்காமம் முதன்மையானது. அதனால், அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில், அச்சொல் குறித்த அர்த்தப்படுத்தலும் அது குறித்த அவதானிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்பொருண்மை குறித்த அறிமுகக் கட்டுரையாகவே இது அமைகிறது. ஆகையால், ‘கதிர்காமம்’ என்பதன் இடப்பெயர் அர்த்தம் குறித்;து மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றின் நிலைநின்று, சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயலுகிறது.

இராவணன், குபேரனுடன் போரிட்டு இலங்கை மற்றும் அவனுடைய புட்பகவிமானத்தையும் கைப்பற்றிக் கொண்டு அந்த விமானத்தில் ஏறி வெற்றிக் களிப்புடன் பறந்து வந்து கொண்டிருந்தான். அப்போது கயிலாயமலைக்கு அருகில் வரும்போது, நந்தியம்பெருமான் இராவணனிடம் இது சிவன் வாழும்பகுதி இங்கே பறக்கக்கூடாது என்று கூறினார். கோபம் கொண்ட இராவணன் சிவன்மேல் அதிக அளவு பக்தி கொண்டவன் என்றாலும், ஆணவத்தினால் அந்தக் கயிலாயமலை தனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றான். அதை அறிந்த சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, கைகளுடன் அவன் மலையின் கீழ் மாட்டிக் கொண்டான்.தன் தவறுஉணர்ந்த இராவணன் சாமகானம் பாட, அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு சந்திரகாசம் என்ற வாளும், ஆத்மலிங்கமும் பரிசளித்தார். சிவபெருமான் இருந்த மலையைப் பெயர்க்க எண்ணியதே தவறு. அந்த முயற்சியால் அவன் பல்லாண்டு காலமாகத் துன்பப்பட்டான். இறைவனின் பெருங் கருணையால் உயிரும் வாளும், ஆத்மலிங்கமும் பெற்றான் என்றாலும், ஊருக்குள் வந்து தான் கயிலாயமலையைப் பெயர்த்தேன் அதனை மெச்சியே சிவபெருமான் வாளும், ஆத்மலிங்கமும் தந்தார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான்.என்ன நடந்தாலும் அதனை மறைத்து இது தான் நடந்தது என்றே சொன்னால் மக்கள் நம்புவர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.கம்பராமாயணத்தில் இராவணனும் கயிலாயமலையும் என்பதைக் குறித்து ஆராய்வோம்.



மனிதனின் மெய்யில் தோன்றும் சில உணர்வுகளை அவரவர்களின் செயல்பாடுகள் மூலமாகவும் குறிப்புகள் மூலம் அறியலாம்.பேச்சுமொழித் தோற்றத்திற்கு முன்பே மனிதன் தன் உள்ளத்து உணர்ச்சிகளை உடலைசைவுகளால் வெளிப்படுத்தினான். உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாக உடலின் மேல் தோன்றும் புறக்குறிகள் மெய்ப்பாடுகள் என அழைக்கப்பெறுகின்றன. மெய்யின் படுதல் மெய்ப்பாடு, அதாவது, உணர்ச்சி மெய்யில்(புற உடலில்) வெளிப்படுதல் மெய்ப்பாடு எனப்படும். உண்மைத் தோற்றம் உண்மை நிகழ்ச்சி, உண்மை நிலை என்றெல்லாம் பொருள் விளக்கம் பெறுகிறது. மெய்ப்பாடுகள் என்பவை மிகவும் நுண்மையானவை.அத்தகைய மெய்பப்பாடுகளை குறுந்தொகையில் மூலம் காணலாம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









