அஞ்சலிக்குறிப்பு: தன்னலம் கருதாத சிவராசா மாஸ்டர்! இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அர்ப்பணிப்புமிக்க தோழர்! - முருகபூபதி -

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.
அதனைப்படித்தவேளையில் சிவராசா மாஸ்டர் அவர்களுடனான முதல் சந்திப்பும், அவருடனான தொடர்பாடல்களும்தான் நினைவுக்கு வந்தது. அவர் குறித்த அஞ்சலியுடன், இந்த நனவிடைதோய்தற் குறிப்புகளை எழுதுகின்றேன்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஆயுதக்கிளர்ச்சி நடந்தது. அக்காலப்பகுதியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – கலாநிதி என். எம். பெரேரா மற்றும் பீட்டர் கெனமன் ஆகியோர் தலைமை தாங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சமசமாஜக்கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த கூட்டணி அரசு பதவியிலிருந்தது.
ஆயுதம் ஏந்திய இயக்கமாக ஜனதா விமுக்தி பெரமுன உருவாகி, அதில் அங்கம் வகித்த ஏராளமான சிங்கள இளைஞர்களினால், அந்த கிளர்ச்சி எழுச்சிகொண்டது. எனினும் அரசின் அடக்குமுறையினால் அந்தப்போராட்டம் முறியடிக்கப்பட்டு, பலர்கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிறைவைக்கப்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை, போகம்பர, மகஸின், அநுராதபுரம், யாழ்ப்பாணம், உட்பட பல பிரதேசங்களில் அமைந்திருந்த சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் கொழும்பில் நீதியரசர் அலஸ் தலைமையில் குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நடைபெற்றது. அக்காலப்பகுதியில் இலங்கை ஊடகங்களில் அந்த விசாரணைகள் தொடர்பான செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இன்று போல், அக்காலப்பகுதியில் உடனுக்குடன் செய்திகளை படிப்பதற்கான ஊடக சாதனங்கள் இருக்கவில்லை.





[எழுத்தாளரும், ஞானம் சஞ்சிகையின் பதிப்பாளரும், ஆசிரியருமான திரு.தி.ஞானசேகரனின் மறைவையொட்டி, எழுத்தாளர் முருகபூபதி ஞானசேகரன் அவர்களின் எண்பதாவது வயதையொட்டிப் பதிவுகள் இணைய இதழில் அன்று எழுதிய கட்டுரையின் முக்கிய பகுதிகள் மீள்பிரசுரமாகின்றன.]


அவுஸ்திரேலியா – மெல்பனில் எம்மத்தியில் வாழ்ந்த முன்னாள் ஆசிரியரும், மூத்த எழுத்தாளருமான திருமதி கனகமணி அம்பலவாண பிள்ளை ( மெல்பேர்ண் மணி ) அவர்கள் மறைந்துவிட்டார், என்ற துயரமான செய்தி அறிந்தவுடன், அன்னாரின் புதல்வி இசை ஆசிரியை திருமதி ரமா சிவராஜா அவர்களை தெடர்புகொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்துவிட்டே, இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.










அவுஸ்திரேலியா – மெல்பனில் நீண்டகாலம் மருத்துவராக இயங்கிவரும் சியாமளா நடேசன் அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள , புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் அறக்கட்டளையின் வருடாந்தக் கூட்டம் கடந்த ஆண்டு ( 2024 ) இறுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறிப்பிட்ட அறக்கட்டளையின் இயக்குநர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களுக்கமைய, கடந்த வருடத்திற்கான செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:








பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









