சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தைப் பேச வைப்பதும்தான் கலை, இலக்கியத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். இருக்கவும் வேண்டும். அந்தவகையில் அண்மையில் நான் மெல்பனில் பார்த்து, வியந்த Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகம், எங்கள் சமூகத்தைப் பேசியிருக்கிறது. எங்கள் சமூகம் எனச்சொல்லும்போது, இலங்கையில் வாழும் இரண்டு மொழிகளைப்பேசும் மூன்று சமூகத்தினதும் அரசியல் மயமாக்கப்பட்ட வாழ்கையை பேசியிருக்கிறது. அத்துடன் இனக்கலவரத்தால் தாயகம்விட்டு அவுஸ்திரேலியா வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தின் புகலிட வாழ்வுக்கோலத்தையும் தலைமுறை இடைவெளியினூடாக சித்திரிக்கிறது.

வாக்கு வங்கிக்காக மதம், மொழி, இனம் சார்ந்து அரசியல் நடத்தி, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு வளமான நாட்டை சீரழித்து குட்டிச்சுவராக்கியவர்கள் அரசியல்வாதிகள். மக்கள் பலிக்கடாவானார்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சிக்குள் உருவான வாரிசு அரசியல், மற்றும் அதிகாரப் போட்டியினால், இக்கட்சியிலிருந்து வெளியேறிய எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா தொழிலாளிகள், விவசாயிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பெளத்த பிக்குகளை இணைத்தவாறு , அதற்கு ஐம்பெரும் சக்திகள் ( பஞ்சமா பலவேகய ) எனப்பெயர் சூட்டிக்கொண்டு, தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தார். 1956 ஆம் ஆண்டு அவர் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக தனிச்சிங்களச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்ததையடுத்து, பிரச்சினை உக்கிரமடைந்தது.

அவ்வேளையில் சட்டமேதையும், சமசமாஜக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கலாநிதி கொல்வின் ஆர். டீ . சில்வா, “ஒரு மொழி என்றால், இரண்டு நாடுகள், இரண்டு மொழிகள் என்றால் ஒரு நாடு “என்ற கருத்தியலை முன்வைத்தார். வடக்கிலிருந்த பெருவாரியான தமிழர்கள் அக்காலப்பகுதியில் அவரது கட்சியை ஆதரித்தனர். எனினும் இலங்கையில் விதி விளையாடியது. தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகமும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு – கிழக்கில் ஓரளவு மாநில சுயாட்சி (Regional Autonomy) என்பதை பண்டாரநாயக்கா ஏற்றுக்கொண்டார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர் ஜெயவர்தனா களனியிலிருந்து கண்டி தலதா மாளிகை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் நீண்ட பாதயாத்திரையை மேற்கொண்டார்.

அவ்வேளையில் கம்பகா தொகுதி எம். பி. யும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவரும், இடதுசாரி சிந்தனை கொண்டவருமான எஸ். டீ. பண்டாரநாயக்கா தலைமையிலான குழு ஒன்று அந்த பாதயாத்திரைக்கு எதிராக களத்தில் நின்று போராடி, ஜே. ஆர். தலைமையில் ‘வந்தவர்களை அடித்து கலைத்தது. கடும்போக்காளர்களான பௌத்த பிக்குகள் பிரதமர் பண்டாரநாயக்காவின் கொழும்பு வாசஸ்தலத்திற்கு முன்னாள் திரண்டு, குறிப்பிட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனையடுத்து பிரதமர் அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார். இறுதியில் அவர் வளர்த்த கடாக்களே அவரது மார்பில் பாய்ந்தன. பண்டாரநாயக்கா ஒரு பெளத்தபிக்குவால் 1959 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வரலாற்றுப் பின்னணிகளை நன்கு தெரிந்திருந்தமையினால், Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. எனினும் இந்த அரசியல் வரலாறு இந்நாடகத்தில் முக்கியத்துவம் பெறவில்லை. ஆயினும் இந்த வரலாற்றின் பின்புலத்தில்தான் இந்த நாடகத்தின் கதை நகருகின்றது. 1956 ஆம் ஆண்டுக்கும் 2004 ஆம் ஆண்டிற்குமிடைப்பட்ட காலத்தில் தமிழ்மக்கள் மீது நிகழ்ந்த வன்கொடுமைகள், கலவரங்கள், ஏதிலிகள் உருவாக்கம், புலப்பெயர்வு, கடல் மார்க்கமான அகதிகளின் வெளியேற்றம் பற்றியெல்லாம் பேசுகிறது.

இந்நாடகத்தின் பிரதியை எழுதியிருக்கும் கலைஞர் எஸ். சக்திதரன், மேலே குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் காலத்தில் இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா தொகுதி எம்.பி.யும் சிறந்த கணித மேதையுமான எஸ். சுந்தரலிங்கம் அவர்களின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரது தாயார் ஆனந்தவல்லி சச்சிதானந்தன் அவர்கள் அவுஸ்திரேலியா சிட்னியில் லிங்காலயா என்ற நடனப்பள்ளியை நீண்டகாலம் நடத்தி வரும் பிரபல நடன நர்த்தகி. நாம் நீண்ட காலமாக நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்காக ஆனந்தவல்லி அவர்கள் 1990 களில் தமது நடனப்பள்ளி மாணவிகளின் சகுந்தலம் நாட்டிய நாடகத்தை சிட்னி பல்கலைக்கழ அரங்கில் நடத்தி, அதன்மூலம் கணிசமாக நிதிப்பங்களிப்பு செய்தவர்.

அவரது வாரிசு இன்று புகழ்பெற்ற நாடகப் பிரதியாளராக மிளிர்ந்திருப்பதுடன் இலங்கை, மலேசியா, இந்தியா , நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் முதலான நாடுகளைச்சேர்ந்த பல தேர்ச்சி பெற்ற கலைஞர்களைக்கொண்டு இந்த நாடகத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். இதன் இயக்குநர் ஏமன் ஃபிளேக் (Eamon Flack). முன்னர் சிட்னியிலும் , அடிலைட்டிலும் பின்னர், இங்கிலாந்தில் பெர்மிங்காமிலும் மேடையேற்றப்பட்டு, தற்போது மெல்பனில் கடந்த பல நாட்களாக மெல்பன் பல்கலைக்கழகத்தின் யூனியன் தியேட்டரில் அரங்கேறி வருகிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் சிட்னியில் மேடையேறவிருக்கிறது. அதனையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நியூயோர்க்கிற்கும் செல்கிறது. அந்த வகையில் எம்மவர் மத்தியில் சமகாலத்தில் பேசப்படும் குறிப்பிடத்தகுந்த நாடகமாக Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு விளங்குகிறது. தமிழ், சிங்கள, மற்றும் பல்லின மக்களும் அவுஸ்திரேலியர்களும் திரண்டு வந்து அரங்கத்தை நிறைத்து பார்த்து ரசிக்கின்றனர். அந்தவகையிலும் இந்நாடகம் வெற்றிபெற்ற கலைப்படைப்பாகியிருக்கிறது. எனது அருமை நண்பர்கள் ஷோபா சக்தி மற்றும் காந்தி மக்கிண்டாயர் ஆகியோரும் இந்நாடகத்தில் பிரதான பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

தமிழ் அரசியல்வாதியாக வரும் பிரகாஷ் பெலவாடி இந்திய கன்னட திரைப்படக் கலைஞர். சூரியா நடித்த சூரரைப்போற்று மற்றும் மெட்ராஸ் கஃபே , உத்தமவில்லன் உட்பட பல கன்னட, தமிழ்ப்படங்களிலும் நடித்திருப்பவர். தொழில் முறை நாடக , திரைப்படக்கலஞர். எமக்கு அன்றைய அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் அவர்களை தனது அட்டகாசமான நடிப்பினால், நினைவுபடுத்துகிறார். தமிழ் அரசியல்வாதி மாணிக்கவாசகர், அவரது மகள் ராதா, இவரின் கணவன் திரு , மகன் சித்தார்த்தா ஆகியோரைச்சுற்றி இக்கதை, இலங்கை – அவுஸ்திரேலியா என நகர்கிறது. ராதாவின் கணவராக நடிக்கும் ஷோபா சக்தி, எமது புகலிட இலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி. பிரான்ஸில் வதியும் ஷோபா சக்தி, தனது தாயக வாழ்க்கையில் பள்ளிப்பருவத்திலேயே நாடகம், கூத்து முதலான கலைவடிவங்களில் பங்களித்திருப்பவர்.

ஷோபா சக்தி முன்னர் நடித்த செங்கடல் (2009) திரைப்படம் இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் தேர்வானதுடன், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகளை பெற்றிருக்கிறது. ஷோபாசக்தி பிரதான பாத்திரமேற்று நடித்த தீபன் திரைப்படம் (2015) சிறந்த படத்திற்கான தங்கப்பனை விருதை கேன்ஸ் திரைப்படவிழாவில் பெற்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. படைப்பு இலக்கியத்திலும் பதிப்புத்துறையிலும் தொடர்ந்தும் ஈடுபட்டவாறே திரைப்படங்களிலும் குறும்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார். இவர் நடித்த மற்றும் ஒரு தமிழகத்திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் வதியும் கலைஞர் காந்தி மக்கின்டாயர், வாத்தியார் என்ற நாடகத்தில் அந்தப் பாத்திரம் ஏற்று தனிநடிப்பில் புகழ்பெற்றவர். அத்துடன் பல ஆங்கில திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். இவர்களுடன் சேர்த்து 19 பேர் பங்கேற்றிருக்கும் Counting and Cracking – எண்ணிக்கை, இல்லையேல் கையோங்கு நாடகத்தில் அனைவருமே தேர்ச்சிபெற்ற தொழில் முறைக்கலைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இவர்களையே பல பாத்திரங்களிலும் தோன்றவைத்து நாடகத்தை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கும் நாடகப்பிரதி எழுதிய சக்திதரனும் இயக்குநர் ஏமன் ஃபிளேக்கும் ( Eamon Flack ) பாராட்டப்படவேண்டியவர்கள்.

மூன்றரை மணி நேரம் இடம்பெறும் இந்த நாடகத்திற்கு இரண்டு தடவை இடைவேளை விட்டார்கள். எனக்கு அருகிலிருந்த ஒரு சிங்கள நண்பர், இடைவேளையின்போது, இந்நாடகத்தில் வரும் மாணிக்கவாசகர் பாத்திரத்தை குறிக்கும் இலங்கை தமிழ் அரசியல்வாதி யார்..? எனக்கேட்டார். சி. சுந்தரலிங்கம் எனச்சொன்னதும், அவர் உடனே கூகிளில் தேடிப்பார்த்து அன்னாரின் வரலாறை தெரிந்துகொண்டார்.

நவீன நாடக உத்திகளை கையாண்டிருப்பதும் இந்நாடகத்தில் மற்றும் ஒரு சிறப்பு. தமிழ், சிங்களம், அரபு மொழிகளில் பாத்திரங்கள் பேசும்போது, உடனுக்குடன், மேடையிலிருக்கும் மற்றும் சில பாத்திரங்கள் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பினை தருவதனால், எவரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில காட்சிகள் கண்ணீர் சிந்த வைக்கிறது. இந்நாடகத்தில் பங்கேற்ற அனைத்துக்கலைஞர்களும் தமது பாத்திரத்தின் இயல்புகளை நன்கு புரிந்து நடித்திருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினையின் ஊற்றுக்கண்ணின் வெட்டுமுகத்தோற்றத்தை காண்பித்திருக்கும் இந்நாடகம் முழுமைபெற்ற ஒரு கலைப்படைப்பு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

 
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here