ஆய்வு: கம்பராமாயணத்தில் மான்கள்! - முனைவர். க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை. -
முன்னுரை
பெண்களின் கண்களுக்கு மானின் கண்களை ’மருளுதல்’ என்பதற்கு உவமையாகப் புலவர்கள் குறிப்பிடுவர். கம்பராமாயணத்தில் கவரிமான், நவ்வி மான், புள்ளிமான் என மான்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. தன் காவியத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாகக், கம்பர் உவமையைக் குறிப்பிடும்போது, மானை பற்றி சில இடங்களில் கூறிச் சென்றுள்ளார். மான் கூட்டம் போன்ற மங்கையர்கூட்டம், புலியைக் கண்ட புள்ளிமான் போல, புலி தன்னைத் தின்ன வருவதைக் கண்ட மான் போல, வலையில் அகப்பட்ட மான் போல, என்றெல்லாம் குறிப்பிடுகிறார். முனிவர்கள் மான் தோலைப் பயன்படுத்தினர் என்பதையும், மான் ஊடல் கொண்டது குறித்தும், குறிப்பிடுகிறார். சீதை மானைக் கேட்டு அடம்பிடித்ததையும், இலட்சுமணன் தடுத்தும் இராமன் மானின் பின் சென்றதையும், மாயமான் இறுதியில் அழிந்தது குறித்தும், கூறிச் செல்கின்றார். மான் பற்றிய செய்திகள் கம்பராமாயணத்தில் அமையும் விதம் குறித்து ஆராய்வோம்.
மான் கூட்டம் போல மங்கையர் கூட்டம்
மிதிலை நகரத்தில் இராமனைக் காண பெண்கள் வந்தனர். அவர்கள் மனம் இராமனைச் சென்று சேர்ந்தது. பள்ளத்தை தண்ணீர் தேடிச் செல்வதைப்போல, இராமனை நாடிச் சென்ற பெண்களின் கருங்குவளைக் கண்களைப் ’ பூத்த வெள்ளத்துப் பெரிய கண்ணார்’ என்கிறார். குடிக்கத் தண்ணீர் இல்லாத வறண்ட காலத்தில் சிறிதளவு பருகத்தக்க நீரைக்கண்டு, அதைக் குடித்துத் தாகம் தீர்க்க ஓடிவரும் மான் கூட்டங்களைப்போல மங்கையர்க் கூட்டம் இராமனை நோக்கி ஓடி வந்தது.
“மண்ணின் நீர் உலந்து வானம் மழை அறவறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார்” (உலாவியற்படலம் 1013)
மான் போன்ற மருண்டப் பார்வை
பெண்கள் மான் போன்ற கண்களை உடையர்கள் . பெண்களின் கண்களை வர்ணிக்கும்போது மானின் பார்வை போன்றது என்பர்.
“மான் அமர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி வாயால்” (களியாட்டுப்படலம் 2772)
“மாப்பிறழ் நோக்கினார் தம் மணி நெடுங் குவளை வாட் கண்” (களியாட்டுப்படலம் 2775)
இராமன் கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதையைக் கண்டு காதல் கொண்டு, அவளின் நினைவால் துன்பம் அடைந்தபோது, மான் விழிச் சீதையோடு சென்ற நெஞ்சமே என்று கூறுகிறான். இளமானின் பார்வையையுடையவளே என்று இராமன் சீதையின் பார்வைக் குறிப்பிடுகிறான்.




ஒரு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் அதன் மூலம் மட்டுமே இன்னொரு துறையில் எளிதாகப் பெயர்பெற்றுவிடுவது வழக்கமாக நடக்கும் ஒன்று. திரைப்படத்துறையினர் இலக்கியவுலகிலும் அரசியல்வெளியிலும் தனியிடம் பிடித்துவிடுவதை இதற்கு உதாரணங்காட்டலாம். அன்றும் இன்றும் இலக்கியவுலகைச் சேர்ந்தவர்கள் திரைப்படத்துறையில் பெயர் பெற்றிருப்பதும், பெற முயற்சிப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது.
இராமாயணத்தில் இராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்ததாகச் சொன்னபோது பக்தர்கள் கதிகலங்கிப் போனார்கள், இந்தக்கதை பழைய வரலாற்றில் இடம் பெற்றிருந்ததால் அந்த சம்பவம் முக்கியம் பெற்றிருந்தது. ஆனால் அதைவிட அதிக காலம் அதாவது 33 வருடங்கள் வடஇலங்கைத் தமிழ் மக்கள் அஞ்ஞாத வாசம் இருந்ததைக் கேள்விப்பட்ட போது யூரியூப் தொலைக்காட்சி நண்பரான தணூரன் என்பவர் கண்கள் கலங்கி நின்றதைக் காணமுடிந்தது.

வாடாத மல்லிகையாய் வாணி அம்மா

நான் காலையில் கண்விழித்தேன் _
“உக்ரைன்-ரஷ்ய அரசியல் யுத்தமானது, மாறிவரும் ஒரு உலக ஒழுங்கினை, வெளிப்படுத்துவதில் ஓர் சீரிய சமிக்ஞையை தரவே செய்கின்றது” என்பது இன்றைய பரவலான அபிப்ராயமாக இருக்கின்றது. நலிவடைந்து போயுள்ள தன் பொருளாதாரத்தினை, முட்டுக்கொடுத்து, முன்தள்ளி, அதனை ‘இன்றைய’ சீன அல்லது ரஷ்ய பொருளியல் பூதங்களோடு, (இயல்பான சந்தை பொருளாதார) விதிகளுக்கு ஏற்ப, மல்லுக்கட்ட செய்ய முடியாத ஒரு நிலையில், ஒரு கொவிட் பெருந்தொற்று அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பொருளாதார தடை அல்லது இவை இரண்டினூடும் கிடைக்கப்பெற்ற, உலகின் உற்பத்தி அல்லது வினியோக பாதைகளை தடம்புரள செய்து, அதற்கூடாக ஒரு இயல்பான போட்டி நிலையை திட்டமிட்டு இல்லாதொழித்து, அதற்கூடே தன் கோடீஸ்வரர்களை காப்பாற்றி கொள்ளலாம் என்ற திட்டமும் பெரிதளவில் கை கொடுக்காமல் போன நிலையில், ஓர் உக்ரைனிய-ரஷ்ய யுத்தம், புதிதாய் ஓர் பெர்லின் சுவரை மீள கட்டமைத்து கொள்ள, வசதியையும் வாய்ப்பையும் தருவதாகவே உள்ளது என்பதன் அடிப்படையிலேயே, இப்பத்தியில், (பதிவுகளில்) நாம் இதுவரை எழுத துணிந்திருந்தோம். 







இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவானார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக்குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் இந்தியாவில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப் போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் விதைத்துவிட்டுச் சென்றிருப்பவருக்கு 02-10-2023 ஆம் திகதி 153 ஆவது பிறந்த தினம். 1869 ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ... அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகளும் & வ.ந.கிரிதரன் மின்னூல் படைப்புகளும்

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









