'எஸ்.ரி.ஆர் (சி.தியாகராஜா)  - நினைத்ததை முடித்தவர்' நூல் எனக்கு நேற்று கிடைத்தது. அதற்காக எஸ்.ரி.ஆர் அவர்களின் புதல்விகளிலொருவரான திருமதி விஜிதா கேதீஸ்வரநாதனுக்கு நன்றி. நூல் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நூலின் ஆக்கங்களை விஜிதா கேதீஸ்வரநாதனும், 'தமிழ்த் தேசியப் பசுமை இயக்க'த் தலைவரும், சூழலியலாளரும், நண்பருமான பொ.ஐங்கரநேசனும் தொகுத்துள்ளார்கள்.

எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நினைவு மலர் பல வகைகளில் முக்கியத்துவம் மிக்கது. நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுள்ளது. முதற் பகுதியில் கலை, இலக்கியும், சமூக மற்றும் அரசியல் ஆளுமைகள் பலரின் எஸ்.ரி.ஆர் பற்றிய நினைவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. பொ.ஐங்கரநேசன், கம்பவாரிதி ஜெயராஜ், மறவன்புலவு க.சச்சிதானந்தன், வீ.ஆனந்தசங்கரி, மாவை சோ.சேனாதிராசா, டாக்டர் வி.ஜி.சந்தோஷம், நவரத்தினம் கிரிதரன், கலோபூஷணம் ராசையா பீதாம்பரம்,  மாலி, சங்கர், தேசமானுய வீ.ஶ்ரீசக்திவேல், வே.கந்தசாமி, செ.இராகவன், சி.கந்தசாமி, தம்பு துரைராஜா, தம்பி ஐயா தேவசாஸ், அனந்த பாலகிட்ணர் 7 எஸ். ராஜேந்திரன் செட்டியார் ஆகியோரின் நனவிடை தோய்தல்கள் நூலிலுள்ளன.

- எஸ்.ரி.ஆரின் இளமைத்தோற்றம். -

எழுத்தாளர் தம்பி ஐயா தேவதாஸின் நினைவு கூரலில் எஸ்.ரி.ஆர் 1982இல் நல்லூர் மனோகரன் என்பவருடன் இணைந்து  'நெஞ்சுக்குத் தெரியும்' என்னும் தமிழ்த்திரைப்படத்தைத் தயாரித்த விடயத்தையும்,  1983 இனக்கலவரம் காரணமாக அது இடையில் நின்ற விபரத்தையும் அறிய முடிகின்றது. இதுவொரு முக்கியமான ,இதுவரை அறியப்படாத தகவல். சங்கரின் 'தியாகு மாமா' நினைவு கூரலும் முக்கியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. கஸ்தூரியார் வீதியிலமைந்துள்ள இரு மாடிக்கட்டடமான பெரிய வீடு பார்ப்பதற்கே திரையரங்கு போன்றது.  அதன் மாடியில் நூறு பேர் பார்க்கக்கூடிய திரையரங்கு,  தேக்கு மரப்பலகைகளால் மறைக்கப்பட்ட சுவர்கள், 75 பேர் அமர்ந்து உரையாடக் கூடிய விருந்தினர் கூடம் இவற்றையெல்லாம் விபரிக்கும் இம மனப்பதிவிலிருந்து இன்னுமொரு விடயத்தையும் அறிந்துகொள்கின்றோம். எஸ்.ரி.ஆரின் திரையரங்குகளில் விற்பதற்காக கச்சான், ரொபி போன்றவற்றைத் தயாரிக்கும் சிறியதொரு தொழிற்சாலையும் அவ்வீட்டின் பின்புறம் இயங்கிக்கொண்டிருந்த விபரம்தான் அது.  மேலும் திரையரங்கச் சுவரின் ஒரு பக்கம்  முழுவதும் சிவன் - பார்வதி ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதனை வரைந்தவர் எஸ்.ரி.ஆரின் நண்பரான ஓவியர் மணியம்.  ஓவியர் மணியம் அக்காலகட்டத்தில் யாழ் நகரத் திரையரங்குகளுக்குக் 'கட் அவுட்டு'கள் வரைந்து கொண்டிருந்தவர். காவல்காரன், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், பட்டிக்காடா பட்டணமா, நாளை நமதே, நீரும் நெருப்பும்  ஆகிய திரைப்படங்களுக்கான அவரது 'கட் அவுட்டு'கள் மறக்க முடியாதவை.

= தன் மனைவி சரஸ்வதியுடன் எஸ்.ரி.ஆர் -

அடுத்த பகுதி  'எண்ணம் போல் வாழ்வு' என்னும் எஸ்.ரி.ஆரின் சுயசரிதையினை உள்ளடக்கியுள்ளது. இது இம்மலரின் முக்கியமான உள்ளடக்கம் மட்டுமல்ல பலவிதங்களில் முக்கியமானதும் கூட.  தந்தை தில்லையர் தியாகர் சின்னத்தம்பி. நயினாதீவில் பிறந்தவர். தாய் தையலம்மை. புங்குடுதீவைச் சேர்ந்தவர். தன் சுயசரிதையினூடு எஸ்.ரி.ஆர் அவர்கள் யாழ்ப்பாண நகரின் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றை ஆவணப்படுத்தியுள்ளார். குறிப்பாக சுண்டுக்குளி பகுதியில் இயங்கிய மகேந்திரா திரையரங்கு, அதன் பங்காளிகளில் ஒருவராகத் தானுமிருந்த விடயம், அதன் பிரதான பங்காளியான இரத்தினசபாபதி யாழ் ராணி திரையரங்கை ஆரம்பித்த தகவல், யாழ்  மிட்டாய்க்கடைச் சந்தி, யாழ் வைத்தீஸ்வரா வித்தியாசாலை வைத்தீஸவரா கல்லூரியாக மாறிய விபரம் இவ்விதமாக நூல் முழுவதும் தகவல்கள் நிறைந்திருக்கின்றன. நகரில் சண்டியன் தெய்வேந்திரத்தின் ஆதிக்கம் பற்றியும் சிறிது விபரிக்கின்றது. இச்சுயசரிதை மூலம் எஸ்.ரி.ஆரின் பாடசாலைப் பெயர் வீரசிங்கம் என்பதையும் அறிய முடிகின்றது.

இந்நூல் இன்னுமொரு வகையிலும் முக்கியத்தும் மிக்கது.   எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி அண்ணனின் யாழ் பஸ் நிலையத்திலிருந்த ராஜா  கூல்  பாரில் வேலை பார்த்த சிறுவன், எவ்விதம் பஸ் நிலையத்துக்கருகிலிருந்த வாகை மரத்தடியில் தோடம்பழம் விற்று சுய தொழிலை ஆரம்பித்தான்,  பின்னர் எவ்விதம் சொந்தமாக ராஜா ஸ்னோ ஹவுஸ் கடையினை ஆரம்பித்தான் ,  எவ்விதம் ராஜா திரையரங்கு கட்டி, பின்னர் படிப்படியாக வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை என ஏனைய இடங்களிலும்  திரையரங்குகள் கட்டி உயர்ந்தான் என்னும் வரலாற்றை நூல் விரிவாகப் பதிவு செய்திருக்கின்றது. அத்துடன் அவரது முதற் காதல் அனுபவத்தையும், அவ்வனுபவம் வெற்றியடைந்து அக்காதலி சரஸ்வதியே  அவரது  மனைவியாகவும் அமைந்து எவ்விதம் அவரது மண வாழ்க்கை , ஆறு குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கழிந்தது என்பதையும் 'எண்ணம் போல் வாழ்வு' சுவையாக விபரிக்கின்றது.

இச்சுயசரிதையின் இன்னுமொரு முக்கிய அம்சம். எஸ்.ரி.ஆர் தன் சொந்த அனுபவங்களை விபரிக்கையில் ஒளிவு மறைவின்றி விபரிக்கின்றார், எவ்விதம் யாழ் மாநகரசபையிடமிருந்து 'லைசென்ஸ்' போன்றவற்றைப் பெறும் சமயங்களில் தந்திரமாகக் காரியங்களைச் சாதித்தார் என்பதை, தனது வாகனச் சாரதிக்கான அனுமதிப் பத்திரத்தைப்  பெறுகையில் எவ்விதம் பெற்றார் என்பதை ஒளிவு மறைவில்லாமல் உள்ளது உ ள்ளபடியே எடுத்துரைக்கின்றார்.  எவ்விதம் ஊழல் அக்காலத்தில் நிலவியது என்பதை ஒரு வித அங்கதச்சுவையுடன் , அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டே  விபரிக்கின்றார்.

ராஜா திரையரங்கை  எஸ்.ரி.ஆர் ஃபிலிம்ஸ் என்னும் வர்த்தகப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டபோது ஏற்பட்ட சவால்களை (காணி பெறுவதிலிருந்து கட்டடம் கட்டுவது, திரைப்படங்களைப் பெறுவது வரை) , அச்சவால்களை எவ்விதம் அவர் முறியடித்தார், எம்ஜிஆரின் திரைப்படங்கள் எவ்விதம் அவரது வளர்ச்சிச்கு உதவின எனப் பல விடயங்களை நூல் எடுத்துரைக்கின்றது. எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவ நிலையத்திலிருந்தபோது அவரைச் சென்று சந்தித்த அனுபவத்தையும் தன் சுயசரிதையில் பகிர்ந்திருக்கின்றார் எஸ்.ரி.ஆர். அவர் ராஜா திரையரங்கை ஆரம்பித்துத் திரைப்படங்களைப் பெறுவதற்காக எவ்வளவு சவால்களை அப்போது  பெரிய நிறுவனங்களாக விளங்கிய சினிமாஸ், சிலோன் தியேட்டர்ஸ் போன்றவற்றிலிருந்து எதிர்கொள்ள நேர்ந்தது, அவற்றை எவ்விதம் அவர் முறியடித்து வெற்றிக்கொடி நாட்டினார் என்பதையும் நூல் விரிவாக விபரிக்கின்றது. குறிப்பாக  எம்ஜிஆரின் ஒளிவிளக்கு திரைப்படத்தைத் திரையிடத் திரையரங்குகள் பெறுவதிலிருந்த் சிரமத்தை அவர் விபரித்தபோது அதே ஓளி விளக்கு யாழ் ராஜா திரையரங்கில் இரு தடவைகள் 100 நாட்கள் ஓடிப் பெருவெற்றியடைந்தது என்பது நினைவுக்கு வந்தது. ராஜா திரையரங்கத்தின் வரலாற்றில் மறக்க முடியாத இரு திரைப்படங்கள் காவல்காரன் & ஒளி விளக்கு.

- ராஜா திரையரங்கில் 'ஒளி விளக்கு'  'கட் அவுட்' -

தனது புதல்விகளின் பெயர்களில் 'சாந்தி' , சுகந்தி, அமுதா, வசந்தி ஆகிய திரையரங்குகளை, மனைவியின் பெயரி சரஸ்வதி ஆகிய திரையரங்குகளை எஸ்.ரி.ஆர் ஆரம்பித்ததையும் இச்சுயசரிதை மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்நூலில் வவுனியாவின் 'வசந்தி' திரையரங்கு 1973இல் தொடங்கப்பட்டது என்று எஸ்.ரி.ஆரின் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் வவுனியாவிலிருந்து யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றது 1971இல். அப்பொழுதே வசந்தி தியேட்டர் இயங்கத்தொடங்கி விட்டது. என் மாமா ஒருவரின் நண்பரான அமர்நாத் என்பவர் அப்போது அங்கு மனேஜராக இருந்ததாக நினைவு. நான் நினைக்கின்றேன் வசந்தி இயங்கத்தொடங்கிய ஆண்டு 1970. அச்சுபிழை அல்லது தவறுதலாக 1973 என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது.

இச்சுயசரிதையின் இன்னுமொரு முக்கியமான அம்சமாக  அது விபரிக்கும் எஸ்.ரி.ஆரின் அரசியல் பங்களிப்பைக் கூறலாம்.  எஸ்.ரி.ஆர் தீவிரமான தமிழர்சுக்கட்சி உறுப்பினர். தான் தீவிர தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்பதையும், ஒரு போதும் அவருக்கு வாக்களித்திருக்கவில்லையென்பதை அறிந்திருந்தும் அல்ஃபிரெட் துரையப்பா தன் மீது மிகுந்த அன்பினை வைத்திருந்தார் என்று ஓரிடத்தில் கூறுகின்றார். பின்னர் 1977இல் அவர் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு யாழ் மாநகரபை உறுப்பினராக வெற்றி பெற்றதை விபரிக்கின்றார்.  1989இல் கூட்டணித்தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டபோது , அவர்களது மரணச்சடங்கை யாழ்ப்பாணத்தில் தான் நடத்தியதாக விபரிக்கின்றார். இது முக்கியமானதொரு விடயம். எஸ்.ரி.ஆரின் துணிச்சலான ஆளுமையினை எடுத்துக்காட்டுவது.

 - தன் குழந்தைகளுடன் எஸ்.ரி.ஆர் -

இந்நினைவு மலரிலுள்ள எஸ்.ரி,ஆரின் சுயசரிதையான 'எண்ணம் போல் வாழ்வு' தனி நூலாக வெளிவருவது மிகுந்த பயனை அளிக்குமென்பதென் கருத்து.  பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திய சிறுவன் ஒருவன் எவ்விதம் பல்வகையான சுய தொழில்களையும் செய்து, எதிர்பட்ட  சவால்களையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு, இறுதியில்  வெற்றிகரமான ஏழு திரையரங்கங்களின் உரிமையாளராக  , சமூக, அரசியல் பிரக்ஞை மிக்க ஆளுமைகளில் ஒருவராக வளர்ச்சியடைந்தான் என்பதை விபரிக்கும் இச்சுயசரிதை வாழ்க்கையில் முன்னேற விரும்பும் எவருக்கும் சிறந்ததொரு வழிகாட்டியாகத் திகழுமொரு நூல் என்பதால் இது தனி நூலாக வெளிவருவது மிகுந்த நன்மையினைத் தருமென்பதென் எண்ணம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here