வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் பூபதி அண்ணா! - ஶ்ரீரஞ்சனி -

இரண்டு முறை சாகித்தியப் பரிசு, பிரான்ஸ் வென்மேரி அறக்கட்டளையினரின் இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தினரின் வாழ்நாள் சாதனையாளர் விருது என வேறுபட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார்.
1972 இல், மல்லிகையில் பிரசுரமான ‘கனவுகள் ஆயிரம்’ என்ற சிறுகதையின் ஊடாக இலக்கிய உலகில் தடம்பதித்த அவர் அடுத்த மூன்று வருடத்துக்குள் குறித்த வருடத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான சாகித்தியப் பரிசைத் தனதாக்கிக் கொண்டார் என்பதே அவரின் எழுத்தின் சிறப்பைக் கூறுவதற்குப் போதுமானது. அந்தக் கெளரவத்தை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருந்த ‘சுமையின் பங்காளிகள்’ என்ற அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தின் எண்ணிம நூலகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஏழு சிறுகதைத் தொகுதிகள், பதினைந்து கட்டுரைத் தொகுதிகள், நாவல் மற்றும் சிறுவர் இலக்கியம், விமர்சனங்கள், நேர்காணல்கள் எனத் தன் பல்வேறு படைப்புக்களால் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகுந்த வளம் சேர்த்திருக்கும் முருகபூபதி அவர்கள் இலக்கிய உலகில் தான் மிளிர்வதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. சக எழுத்தாளர்களைப் பற்றிப் பரவலாக எல்லோரும் அறிந்திருக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயல்படும் ஒரு கருமவீரராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் பரந்தமனப்பான்மையும், விரிவான வாசிப்பும், அபாரமான நினைவாற்றலும், மற்றவர்கள் பற்றிய கரிசனையும்தான் அதற்கு அடிப்படையெனலாம்.


எமது ஈழ மற்றும் தமிழகச் சமூகத்தில் சிறை சென்றவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. அத்துடன் ‘சிறை மீண்ட செம்மல்’ எனப் பட்டமும் பெறுவார்கள். சிலர் பிற்காலத்தில் இதை ஒரு முதலீடாக்கி ஆட்சிபீடமேறினார்கள். நமக்குத் தெரியப் பலருக்குச் சிறையைப் பற்றிய அனுபவம் உள்ளது. சிறைக்குச் சென்ற காரணம் அரசியலாகட்டும் அல்லது சங்கிலித் திருட்டாகட்டும். அனுபவம் ஒன்றே. அப்படியிருக்கும் சமூக வெளியில், அவுஸ்திரேலியாவில் அதுவும் பேர்த்திலுள்ள சிறையைப் பற்றி நான் எழுத என்ன அவசியம் உள்ளது ?







கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று பேசுபொருளாக இருக்கின்றன. ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற உயர்திணைப் பாலினம். இப்போது பாலினமே இல்லை. மனிதர் என்ற இனம் மட்டுமே உள்ளது என கொண்டாடப்படுகின்றது. உறுப்புக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆண், பெண் என்று பிரிக்கக் கூடாது என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது. இங்கு ஒருமுறை என்ற வார்த்தை இந்த வாழ்க்கை என்பதற்குள் அடங்கி விடுகிறது. எம்முடைய மனத்துக்கு எது சரி, எது பிழை என்று தோன்றுகிறதோ அதன்படி வாழ்வோம் என்று வாழுகின்ற பண்பு தற்கால இளம் தலைமுறையினரிடம் தோன்றியுள்ளது. ஒரு பலூனை ஒரு பக்கம் அழுத்துகின்ற போது மறுபக்கம் அது தள்ளிக் கொண்டு வரும். அதுபோலவே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தி வைக்கின்ற போது அது மறுபக்கம் வேறுவிதமான குற்றங்களாக மாறுகின்றன. 


- திருப்பூர் சிறுகதைகள்! - தொகுப்பாசிரியர் - பொன் குமார்! விலை ரூபாய் 300 ( 95787 84322 ) -

தாய் நாட்டின் விடுதலைக்காய் 


மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.





உறவினர்களையும், தனக்கு வேண்டப்பட்டவர்களையும் நலம் விசாரிப்பது சிறந்த பண்பாடும், பழக்க வழக்கமாகும். அத்தகைய பண்பாட்டிற்கும், பழக்கவழக்கங்களுக்கும் கொண்ட நலம் விசாரித்தலுக்கு கம்பர் தன் இராமாயணத்தில் முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பதனைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









