இந்தியப் பயணத்தொடர்: நர்மதை நதியின் ஓசை! - நடேசன் -

மத்தியப் பிரதேசத்தின் யபல்பூரில் (Jabalpur) நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நர்மதா நதி ஓடிக்கொண்டிருந்தது. வழிகாட்டி கூறியபடி, இந்த நதி இந்திய உபகண்டத்தின் பழமையான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதைக் கேட்டு நான் ஆச்சரியத்துடன் சிந்திக்கத் தொடங்கினேன்.
கங்கை, யமுனா, பிரமபுத்திரா போன்ற இந்தியாவின் பிரசித்தி பெற்ற நதிகள் அனைத்தும் இமயமலையிலிருந்து தோன்றியவை. இமயம் உருவானதே இந்திய உபகண்டம் தெற்கிலிருந்து நகர்ந்து ஆசியப் கண்டத்துடன் மோதியதில் ஏற்பட்ட புவியியல் விளைவாகும். இந்த மோதல் சுமார் 50 மில்லியன் வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. அதன் விளைவாக இமயமலை மற்றும் திபெத்தியப் பீடபூமி உருவாயின. பின்னரே இந்தியாவின் முக்கிய நதிகள் தோன்றின. ஆனால் நர்மதா பாயும் பகுதிகள், இதைவிடச் சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பே நிலமிருந்த பாறைத்தட்டுகளில் அமைந்தவையாகும். அங்கு கிடைக்கும் தொல்லியல் (fossil) எச்சங்களும் பாறைகளும் இதற்குச் சாட்சியாய் உள்ளன என்று வழிகாட்டி விளக்கினார்.
இதனை விளக்குவதற்காக அவர் நர்மதா நதிக்கரையிலுள்ள( Narmada Marble Valley) ஒரு இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு புறத்தில் கறுப்பு கற்கள், மற்றொரு புறத்தில் சுண்ணாம்பு படிவ பாறைகள் காணப்பட்டன. சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு, நர்மதா நதியின் இரு கரைகளிலும் உயரமாக பளிங்குப் பாறைகள் உயர்ந்து தெரிந்தன. வழிகாட்டி, முழுநிலவின் ஒளியில் இக்கற்கள் பளிச்சிடும் எனக் கூறினார். நாங்கள் சென்றது மதிய நேரம். எழுத்தாளரானதால் நிலவை கற்பனையில் பார்த்தேன். நடுப்பகலான போதிலும் வள்ளத்தில் அரைமணி நேரம் பயணித்தபோது பாறைகளின் இயற்கை அமைப்பு கண்கவர் அழகாக இருந்தது.






எங்கள் பயணம் ஐஸ்லாந்தின் தென் திசையிலிருந்து கிழக்குத் திசையில் அதாவது நோர்வே பக்கம் இருந்தது .நோர்வேயையும் ஐஸ்லாந்தையும் பிரிப்பது அத்திலாந்திக் சமுத்திரம். இதைக் கடந்து தான் வைக்கிங் குழுவினர் அக்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் ஐஸ்லாந்து மட்டுமல்ல, கிறின்லாந்து மற்றும் அமரிக்காவரை சென்றார்கள். ஐஸ்லாந்தில் ஆயிரம் வருடங்கள் முன்பாக குடியேறினார்கள்




















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









