பயணத்தொடர் : கரிபியன் பயணம் (2) - போட்டரிகோ! - நடேசன் -

பனாமா கால்வாயைக் கடந்து அத்திலாந்திக் பெருங்கடலுக்குள் நுழையும்போது நாம் சந்திப்பது கரிபியன் கடலாகும். நமது இந்து சமுத்திரத்தில் அரபிக் கடல் எவ்வாறு முக்கியமோ, அதுபோலவே இந்தக் கடலும் அமெரிக்கக் கண்டத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவற்றால் வளைக்கப்பட்ட இந்தக் கடல், பவளப் பாறைகள் நிறைந்த பிரதேசமாகவும், பெரிதும் சிறிதுமாக 7,000-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. உஷ்ண வலயத்தில் அமைந்துள்ளதால், ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அதேசமயம், உலகின் முக்கிய உல்லாசப்பயணப் பகுதிகளில் ஒன்றாகவும் கரிபியன் கடல் திகழ்கிறது.
இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரிய தீவு கியூபா ஆகும். அமெரிக்காவிலிருந்து செல்லும் எந்தக் கப்பலும் நேரடியாக கியூபாவிற்குச் செல்வதில்லை. அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டிற்கு மிக அருகில் ஒரு சிறிய நாடாக இருப்பதே, கியூபாவுக்கு விடுதலை இல்லாத ஒரு பெரிய சாபமாக அமைந்துள்ளது.
நாங்கள் பனாமா கால்வாயைக் கடந்தவுடன் கப்பலின் முக்கிய தரிப்பிடம் போட்டோ ரிக்கோ. இது ஒரு பெரிய தீவாகவும், தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. சுமார் 3.5 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர். கப்பலிலிருந்து இறங்கியவுடன் எங்களை முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். இது கோட்டைகள் நிறைந்த தீவாகும். பல கோட்டைகள் அழிந்துவிட்டாலும், இன்னும் பல அழியாத கோட்டைகள் இங்கு காணப்படுகின்றன.


சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஆங்கிலேயருக்கு சொந்தமான (Princess Elizabeth) பயணக் கப்பலில் ஏறினோம். இது எங்களுக்கு கரிபியன் தீவுகளுக்கான ஒரு மாதக் கடற் பயணம். அடிமனத்தில் முதல் பயணமாதலால் எப்படி பயணம் இருக்கும்? 

கோடை காலத்தில்,மத்தியானம் ஆனதும் ஊர்போல வெயில் கொளுத்தி எரிக்கும். உடல் முழுக்க வேர்த்து, வேர்வை ஒட்டிக்கொள்ளும்.தேகம் பிசுபிசுக்கும்.‘நா'வரண்டுபோகும். காற்று வராதா? வந்து எம்மை வருடாதா? என்று ஒவ்வொரு மனசும் எதிர்பார்க்கும்.சிலவேளைகளில் அதுவும் சாத்தியமாகும்.






















பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









