நினைவுக் குளியல்: 4 - பழந்தமிழ் இலக்கிய ஆர்வம்! - தேவகாந்தன் -

இள வயதில் வாசிப்பை நெறிப்படுத்த மூத்தவர்கள் ஓரிருவருடைய உதவி எனக்கு இருந்திருந்தாலும், பின்னால் இலக்கியரீதியான வழிகாட்டலுக்கு யாரும் இருந்திருக்கவில்லை என்பது துர்பாக்கியமாகும். அந்த வெளியைக் கடந்தேனென்றாலும், அது சுலபத்தில் கைகூடியிருக்கவில்லை. பிழைவிட்டு திருந்தி, பிழைவிட்டு திருந்தி… ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கவேண்டி இருந்தது. காலமே, ஒரு சக்தியாகயிருந்து அந்த வெறுமையை நிவர்த்தித்தது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
அக் காலத்திய அரசியல் மேடைகள் இலக்கியமும் பேசின. பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், கம்பன் பற்றியேல்லாம் நான் மேடைகளில்தான் முதன்முதலாக அறிந்தேன். அவர்களது தமிழ்ப் பற்று என் நெஞ்சிலும் மூண்டெழுந்தது.
இளைஞனாக இருக்கும்போது சாவகச்சேரி சரஸ்வதி புத்தகசாலையில் நான் வாங்கிய புத்தகம் ‘பாரதியார் இன்கவித் திரட்டு’ என்கிற ராஜாஜி தொகுத்த புத்தகமாகும். அதில் எவ்வளவற்றைப் புரிந்துகொண்டேன் என்பதையெல்லாம் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால் சுவையான விஷயம் என்னவென்றால், அந்தப் புத்தகத்தின் பெயரை ‘பாரதியாரின்’ ‘கவித்திரட்டு’ என்பதாகவே அப்போது நான் புரிந்துகொண்டிருந்தேன். பின்னால் பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை நான் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தபோது,
அதை ‘பாரதியார்’ ‘இன்கவித்’ ‘திரட்டு’ என சரியாகப் பிரித்து பொருள்கொள்ளத் தெரிந்தேன்.
அப்போதே பாரதிதாசனின் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’, சுத்தானந்த பாரதியாரின் ‘தமிழே தமிழே தமிழர்க்குயிரே’ போன்ற பாடல்களை பொருள் புரிந்து வாசிக்க முடிந்திருந்தது.
இவைபோலவேதான் திருக்குறளும், கம்பராமாயணமும் எனக்கு அறிமுகமானது மேடைகள் வழியாகத்தான்.
இந்தளவு பின்னணியோடு நான் க.பொ.த. உயர்தரம் புகுந்தபோது, தமிழ் பாடத் திட்டத்தில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ‘இலக்கிய வழி’ நூலும் இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே பாலபாடத்திலும், பாலபோதினியிலும், இலக்கிய மஞ்சரியிலும் என் இலக்கிய ரசனை வளர்ந்திருந்ததுபோல், ‘இலக்கிய வழி’ மூலமும் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்தது.





ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், அதை மரபார்ந்த வழியில்; மலையகத் தமிழிலக்கியமெனல் தகும். தேயிலைப் பரப்பின் அழகும் வளமும் கருதி மலையகப் பெண்களின் இச் சிறுகதைத் தொகுப்பையும் ஒரு பெண் படிமமாக்கி ‘மலையகா’வெனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
1997இல் வெளிவந்த அருந்ததி ராயின் The God of Small Things நாவலுக்கு இருபது வருஷங்களுக்குப் பின்னால் அவரது இரண்டாவது நாவலான The Ministry of Utmost Happiness 2017இல் வெளிவந்தது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘பெருமகிழ்வின் பேரவை’ என்ற மகுடத்துடன் காலச்சுவடு பதிப்பாக ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் பெப். 2021இல் பிரசுரமானது. இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே இதை வாசித்திருந்தபோதும், ஏதோ சில தெளிவுகளுக்காக திரும்ப ‘சின்ன விஷயங்களின் கடவு’ளை வாசித்து, மறுபடி ‘பெருமகிழ்வின் பேரவை’க்குள் புகுந்து, மீண்ட பின்னாலும், நாவலின் ஆதாரக் கருத்துநிலை அவ்வளவு அச்சொட்டாய் பிடிபட்டிருக்கவில்லை. அதற்கான சிந்திப்பில் ஒரு நீண்ட காத்திருப்பு தொடர, ஒருபோது மங்கலாகவெனினும் கிடைத்த ஒரு வெளிப்பைத் தொடர்ந்து நூல்பற்றிய மதிப்பீட்டை இங்கு பதிவாக்க விழைகிறேன்.

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: 


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









