" இளம்தலைமுறையினரே கனவு காணுங்கள் " என்று அறைகூவல் விடுத்தவரின் நீண்ட கால கனவு நனவாகவில்லை. உலகத்தலைவர்களுக்கும் தேசங்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன்
கடல் அலைகள், பொன்மணல்,
புனிதயாத்திரிகர்களின் நம்பிக்கை,
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு,
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ...
என் அன்னையே...
உன் ஆதரவுக்கரங்கள் என் வேதனையை மென்மையாய் அகற்றின
உன் அன்பும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு வலிமை தந்தன.
அதைக்கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர்கொண்டேன்
என் அன்னையே... நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத்தீர்ப்பு நாளில்.

இவ்வாறு தமது அன்னையை நினைத்து கவிதை எழுதிய பாரத ரத்னா அப்துல்கலாம், தமது அன்னையிடமே சென்றுவிட்டார். அவர் மாபெரும் நியாயத்தீர்ப்பு நாள் என்று எதனைக் குறிப்பிட்டார் என்ற விளக்கம் இங்கு அவசியமில்லை. ஒரு விறகு வெட்டியின் மகன் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் மகன் ருஷ்யாவில் அதிபரானார். பாரத நாட்டில் ஒரு படகோட்டியின் மகன் ஜனாதிபதியாகி இன்று மக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டு விடைபெற்றார். இராமேஸ்வரமும் இராமனும் அரசியலாகிய கதை தெரியும். இராமர் பாலம் அமைத்த இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் எனக்கேள்வி கேட்டவரின் தலையை கொய்து எறியப் போனவர்களின் செய்தியும் தெரியும். இராமரா - பாபர் மசூதியா என்ற போர்க்களத்தில் மாண்டுபோன இன்னுயிர்கள் பற்றியும் அறிவோம். இந்தப்பின்னணிகளுடன் இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் கடல் எல்லைக் கடலோரக் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இளம்தலைமுறைக்கு கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த அப்துல் கலாம் என்ற பிரம்மச்சாரி விஞ்ஞானியாகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர்.
எழுச்சித்தீபங்கள் - இந்திய ஆற்றலின் ஊற்றுக்கண் என்ற தமது நூலை ஒரு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கே சமர்ப்பணம் செய்திருந்தார். அவர் அதற்கான காரணத்தையும் இவ்வாறு சொல்கிறார்.

சமகாலத்தில் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தினமும் பேசப்படும் ஊராக விளங்கிவிட்டது புங்குடுதீவு. இந்தத்தீவுக்கு இதுவரை சென்றிராத தென்னிலங்கை சிங்கள மக்களும் மலையக மக்களும், இந்த ஊரின் பெயரை பதாதைகளில் தாங்கியவாறு வீதிக்கு வந்தனர். இலங்கைப்பாராளுமன்றத்திலும் இந்தத்தீவு எதிரொலித்தது. ஜனாதிபதியை வரவழைத்தது. இலங்கையில் மூவினத்து மாணவர் சமுதாயமும் உரத்துக்குரல் எழுப்பும் அளவுக்கு இந்தத்தீவு ஊடகங்களில் வெளிச்சமாகியது. இத்தனைக்கும் அங்கு ஒரு வெளிச்சவீடு நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள், 20 இற்கும் மேற்பட்ட குளங்களின் பெயர்களுடன் இடங்கள். 20 இற்கும் மேற்பட்ட சனசமூகநிலையங்கள் ( வாசிகசாலைகள் உட்பட) பல கோயில்கள் எழுந்திருக்கும் புங்குடுதீவில், இதுவரையில் இல்லாதது ஒரு பொலிஸ் நிலையம்தான்.
ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அவ்வாறு அழைக்கப்படுகிறது. உலகப்பிரசித்தி பெற்றவர்களின் டயறிகள் பிற்காலத்தில் அதிக விலையில் ஏலம்போயிருப்பதையும் நூதன சாலைகளில் இடம்பெற்றிருப்பதையும் அறிவோம்.
இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழுநோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன். சார்வாகன் அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனே சொன்னார். மகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன். 
"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னைத்தானே.? " எனக்கேட்ட கமலினி செல்வராசன் அத்தானிடமே சென்றார். திருமதி கமலினி செல்வராசன் கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி இயல்பாகவே கவலையைத்தந்தாலும், அவர் கடந்த சில வருடங்களாக மரணத்துள் வாழ்ந்துகொண்டே இருந்தவர், தற்பொழுது அந்த மரணத்தைக்கடந்தும் சென்று மறைந்திருக்கிறார் என்றவகையில் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.

கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில் இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர் தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது 32 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட பாடசாலையே இன்று வடமேற்கில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. இதன் ஸ்தாபகர் எஸ்.கே. விஜயரத்தினம் நீர்கொழும்பில் நகரபிதாவாக (மேயர்) விருந்த தமிழராவார். தமிழ் மக்களின் பண்பாட்டுக்கோலங்களுடன், வரலாற்றுச்சுவடுகளுடன் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் கவரும் இந்நகருக்கு அருகாமையிலேயே சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்காவில் அமைந்துள்ளது. கல்லூரி 1954 இல் ஆரம்பப் பாடசாலை தரத்திலிருந்தபொழுது முதல் மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டவரும் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெ. முருகபூபதி விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் 60 வருட நிறைவு வைரவிழாவை முன்னிட்டு தொகுத்து வெளியிட்டுள்ள நெய்தல் - நீர்கொழும்பு வாழ்வும் வளமும் நூல் நீர்கொழும்பில் அண்மையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.












பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









