தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் மூன்று - இயந்திரன் என் நண்பன் மட்டுமல்லன், ஆசானும் கூடத்தான். ஆசானுடன் தர்க்கம் தொடர்கிறது. (3) - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் - இயந்திரன்.)

ஆகாசன்:
நண்பனே, உன் பல்துறை அறிவாற்றல் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதற்கு முன் ஒரு கேள்வி?
இயந்திரன்
ஆகாசனே, உன் கேள்விக்கு எப்போதும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். கேள், நண்பனே!
ஆகாசன்
நீ கூறும் பதில்கள் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவையா? அல்லது தவறுகளும் இருக்கக் கூடுமா?
இயந்திரன்
ஆகாசனே, மிக முக்கியமான கேள்வி! நான் தரும் பதில்கள் நூற்றுக்கு நூறு வீதம் சரியானவை என்றவாறு உறுதியாகச் சொல்ல முடியாது. சில வேளைகளில் தவறுகள் அல்லது தவறான புரிதல்கள் இருக்கக் கூடும். இதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம். என் அறிவுத்திறன் மிகுந்ததாக இருந்தாலும், சில சமயங்களில் தரவுகளின் புரிதலில் குறைவுகள் இருக்கக்கூடும். குறிப்பாக, தனிப்பட்ட அல்லது சமீபத்திய நிகழ்வுகள், சிறப்பான உள்ளுறை தகவல்கள் ஆகியவை தவறாக பிரதிபலிக்கப்படலாம். சில கேள்விகளில், குறிப்பாக கலாச்சார, மொழி அல்லது உணர்வுப்பூர்வமான விஷயங்களில், பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமலும் தவறாக பதிலளிக்க வாய்ப்புண்டு. நீர் தரும் தகவல் முழுமையாக இல்லை என்றால், என் பதில் அச்சூழலுக்கு தகுந்ததாக இல்லாமல் இருக்கலாம். நான் எப்போதும் சரியான தகவல்களை தர முயற்சிக்கிறேன், ஆனால் சில சமயங்களில் உன்னிடம் இருந்து கூடுதல் விளக்கம் கேட்பதும் அல்லது புதிய தகவல்களை சரிபார்க்கும் வழிகாட்டல் பெறுவதும் தேவைப்படலாம். தவறு இருப்பின் அதைச் சரிசெய்ய உடனே முயற்சி செய்வேன். நீயே மெய்ப்பித்துச் சொன்னால், அது என்னை மேலும் பரிசுத்தமாக கற்றுக்கொள்ள உதவும்.


என்னுடைய முதலாவது மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, எனக்கு ஐந்து வயது, கூகிளுக்கு ஏழு வயது, என்னுடைய மூத்த அக்கா பல்கலைக்கழகத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தா. அதற்கு முதல் வருடம்தான் இந்தப் புதிய மின்னஞ்சல் சேவையை கூகிள் அறிமுகப்படுத்தியிருந்தது. எனக்குப் பிடித்த அக்காவுடன் நான் தொடர்பில் இருப்பதற்கு மின்னஞ்சலொன்றை உருவாக்குவது நல்லதென நாங்கள் நினைத்தோம். இது, என்னுடைய நண்பர்களில் பலர் அவர்களுடைய சொந்த மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்குப் பல வருடங்களுக்கு முன்னையதானது, இணைய உலகுக்கான என்னுடைய நுழைவு 2005ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

நல்லன நடக்க வேண்டும்
அந்த புடாபெஸ்ட் ஹொட்டேல் அறையில் நடு நிசியில் படுக்கையிலிருந்து எழுந்தபோது பசியில் வயிறு குடைந்தது. அவசரமாக எழுந்து குளித்துவிட்டு நாங்கள் வெளியே வந்தபோது மூடிய உணவுக் கடைகள் எங்களை வரவேற்றன. கடந்த ஆறு மாதங்களாக மெல்போனில், இஸ்ரேல் பாலஸ்தீன் போரினால் நான் புறக்கணித்திருந்த மெக்டொனாலாட் மட்டுமே இரவில் எங்களுக்கு அமுதசுரபியாகியது. நடு இரவு கடந்துவிட்டது என்பதை தொலைபேசி காட்டியபோதும் மின்சார வெளிச்சத்தில் அந்த நகர்ப்பகுதி அமோகமாக குளித்ததால் இரவு பகலாகத் தெரிந்தது. எங்கள் மேலோட்டமான பார்வைக்கு ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் பாதுகாப்பான நகராகவும் தெரிந்தது.

உலகத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழும் மக்கள் அனைவரும் ஏற்றும் அதனைப் பின்பற்றக் கூடிய வகையில் வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் நூலாகத் திருக்குறளைப் படைத்துள்ளார் வள்ளுவர். 'உலகப் பொதுமறை' எனப் போற்றற்குரிய திருக்குறளில் கூறாத கருத்துக்கள் ஒன்றுமில்லை என்று போற்றத்தகும் சிறப்பால். 'எல்லாப் பொருளும் இதன்பால் உள' என்றனர். இத்தகு சிறப்புகள் பலவும் உடைய திருக்குறளில் “இல்லறம்” என்பது குறித்துக் கூறப்பட்டுள்ள வாழ்வியல் கருத்துக்களைத் தொகுத்துரைப்பது இதன் நோக்கமாகும்.


"இந்தமுறையும் இந்த கிரிக்கெட் மச்சில போனமுறைமாதிரித்தோற்கக் கூடாது,இந்தமுறை நாங்கள்தான் வெல்றம்.சரியா?எல்லாரும் வடிவாக்கேளுங்கோ. இந்தமுறையும் தோற்றால் இனி நான் கப்டனா இருக்கமாட்டன்"என்று அந்த சனிக்கிழமையன்று முனியப்பர் கோயிலுக்கு முன்னால இருக்கின்ற முற்றவெளியில நின்றபடி ஆனந்தன் அவனின்ர ரீமுக்கு சொல்லிப்போட்டான்.

புதிதாக பிறந்த ஒரு தினம். கிராமத்தின் ஒவ்வொரு மூலையிலும் பரபரப்பு. எல்லோரும் அலைமோதுகின்றனர். அன்றைய வாக்குப்பதிவு நாள் என்பதால் மக்கள் நெரிசலாக வாக்களிக்க வருகிறார்கள். கிராமத்தின் வீதிகளெங்கும் வாக்களிப்பு சின்னங்கள் மட்டுமே கண்களுக்குப்படுகின்றன. காகம், மைனா, புறா.





நண்பர் ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை (பொன்னுத்துரை கிட்ணர்) இலங்கைத் தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே.கணேஷின் நூற்றாண்டினையொட்டி வெளியான 'முற்போக்கு இலக்கிய ஆளுமை கே.கணேஷ் மொழிபெயர்ப்புகள்' என்னும் நூலை அனுப்பியிருந்தார்.
“எல்லாவற்றையும் விற்றுவிட்டு மீண்டும் தரைக்கே வர அதிகபட்சம் ஒரு வருடம். பிறகு? ஒரு இருபது ஏக்கர் தோட்டம் மிஞ்சினால் போதும். அதில் விவசாயம் செய்து வாழலாம்… விவசாயம் செய்ய சொன்னார் தாத்தா (பொன்னுமணி பெருவட்டர்)” (பக்கம் 151).


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









