நான் சந்தித்த ஆளுமைகள் : Hugo Anthony - ஜோதிகுமார் -

1
அவரது முகத்தில் ஒரு சிறிய புன்னகை இழையோடிக் கொண்டிருந்தது. அப்பப்பா… பிய்த்து எடுத்து விட்டார்கள்… பிய்த்து! இப்போது, ஆழ்ந்த ஓர் அமைதி… நிம்மதி!! பெயர் தெரியாத ஒரு பயங்கர விலங்கின் கவ்வலில் இருந்து விடுபட்டு, அதன் கோரப் பற்களில் இருந்து தப்பி, … இப்போது அவரது இதழோரத்தில் அந்த நிம்மதி குடியிருக்க, அவரது இறுதிச்சித்திரம், அந்த கம்பீரமான, மிக மிக விலையுயர்ந்த அந்த சவப்பெட்டிக்குள், அடக்கமாய் கிடத்தப்பட்டிருந்தது. உண்மை. அவரது வாழ்க்கையும் ஒரு விதத்தில் அப்படித்தான் அமைந்திருந்தது.
2
“ஆ… நீங்கள்… உங்களுக்கு ஏற்கனவே அறையொன்று ஒதுக்கப்பட்டிருக்கின்றது… உள்ளே வாருங்கள்… இப்படி… இங்கே… சாப்பிடுவீர்களா…”
“ஓ… துறவறத்தை அவர் இருமுறை விட்டகர்ந்தார்… வலது கையை முன்னால் நீட்டி, நாயொன்று பாய்ந்து வெடுக்கென கவ்வுவதுப் போல், விரல்களை வெடுக்கென முன்னால் நீட்டி மடக்கி கூறினார் :
“எல்லாமே சாத்தான்தான்… சாத்தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மனிதனைப் பாய்ந்து கவ்வும். சாத்தானிடமிருந்து தப்புவது அப்படியொன்றும் எளிதான விஷயமல்ல. கடினமான காரியம்… அதற்கு தெரியும் - எப்படி வருவது – எப்படி கவ்வுவது என்பது…” முன்பு அது ஏஞ்சலஸ் ஆகத்தானே இருந்தது… அதன் பிறகுத்தானே… அதற்கும் ஆசை வந்தது… தானும் ஓர் கடவுளாக மாற வேண்டும் என்று… அப்படித்தானே இவரும்…“உலகை அழகாக்க கடவுள் மனிதனை அனுப்பினார் பின்னர், மனிதன், பாவம், தனியாக இருப்பானே என்று ஒரு பெண்ணை அனுப்பி வைத்தார்… அந்த இடத்தில்தான் சாத்தானும் வந்து புகுந்தது… அதனால்தானே இவ்வளவு கஷ்டமும் மனிதருக்கு…”
“கடவுள்தான் கூறிவிட்டாரே... மனிதா... உன்னை இவ்வளவு அறிவுடன் படைத்துவிட்டேன்... சாத்தானும் இருக்கின்றான். நானும் இருக்கின்றேன்... இனி தேர்வு செய்ய வேண்டியது நீ... ஹீயூகோ பாவம்... அவர் துறவறத்தை விட்டகன்று... அந்நேரம் நான் இந்தியாவில் படித்துக்கொண்டிருந்தேன்... அவர் பெரியவராய் இருந்த போது நாங்கள் எல்லோரும் சின்னஞ் சிறுசுகள்... உயர்ந்த வளர்ந்த மனிதர் அவர்... சுற்றி சுற்றி வருவார்... அனைத்தையும் பார்க்கும் திறன் கொண்ட ஒரு மனிதர்... நம்ப முடியவில்லை... கேள்விபட்டதும்...’


சில்லையூர் செல்வராசனின் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி (1967), க. கைலாசபதியின் தமிழ்நாவல் இலக்கியம் (1968), நா. சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (1978) போன்ற தமிழ்நாவல் வரலாற்று நூல்வரிசையிலே 1895 முதல் 2020 வரையிலான காலத்தில் எழுந்த நாவல்களை அவை எழுந்த காலப் பின்னணியில் வைத்து நோக்குவதும், கூரிய விமர்சனப் பார்வையை முன்வைப்பதுமான தேவகாந்தனின் இலங்கைத் தமிழ் நாவல்இலக்கியம் - ஒரு வரலாற்றுத் திறனாய்வுநிலை நோக்கு என்ற நூல் (காலச்சுவடு பதிப்பகம், 2021) தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளது.


வாசிங்டன் சதுக்கத்தின் மேற்கே நகரின் ஒரு சிறிய பகுதியில் தெருக்கள் காட்டுத்தனமாகப் போயுள்ளன. அவை வெவ்வேறு திசைகளில் திரும்புகின்றன. அவை "இடங்கள்" என்று அழைக்கப்படும் சிறிய துண்டுகளாக உடைக்கப்படுகின்றன. ஒரு தெரு ஒன்று அல்லது இரண்டு முறை குறுக்கறுத்துச் செல்கிறது. ஓர் ஓவியர் இந்த தெருவில் சாத்தியமான மற்றும் மதிப்புமிக்க ஒன்றைக் கண்டுபிடித்தார். ஓர் ஓவியரிடம் அவர் பணம் செலுத்தாத சில ஓவியப் பொருட்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரிடம் பணம் இல்லை என்று வைத்துக்கொள்வோம். ஒரு மனிதன் பணம் எடுக்க வந்தான் என்று வைத்துக்கொள்வோம். அந்த மனிதன் அந்தத் தெருவில் நடந்து, ஒரு சதமும் பெறாமல் திடீரென்று திரும்பி வருவதைச் சந்திக்கலாம்! நகரின் இந்தப் பகுதி கிரீன்விச் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. பழைய கிரீன்விச் கிராமத்திற்கு ஓவியர்கள் விரைவில் வந்தனர். இங்கு அவர்கள் விரும்பும் அறைகள், நல்ல வெளிச்சம் மற்றும் குறைந்த செலவில் கிடைத்தன. சூ மற்றும் ஜான்சி மூன்று தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் உச்சியில் வசித்து வந்தனர். இந்த இளம் பெண்களில் ஒருவர் மைனேவிலிருந்து வந்தவர், மற்றவர் கலிபோர்னியாவிலிருந்து வந்தவர். அவர்கள் எட்டாவது தெருவில் உள்ள ஒரு உணவகத்தில் சந்தித்தனர். அவர்கள் ஒரே மாதிரியான கலை, ஒரே மாதிரியான உணவு மற்றும் ஒரே மாதிரியான ஆடைகளை விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் அங்கு கண்டுபிடித்தனர். எனவே ஒன்றாக வாழவும் வேலை செய்யவும் முடிவு செய்தனர்.




சாரங்கா என்ற குணாளினியை எனக்கு நீண்ட காலமாகவே எழுத்து மூலமாகவே எனக்குத் தெரியும்! திரு. ஞானசேகரன் அவர்களுடைய ’ஞானம்’ சஞ்சிகையில் இவரும் கவிதை சிறுகதை எழுதுவார்;;. நானும் எழுதுவேன். ‘ஏன் பெண்ணென்று’ என்ற ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார் (2004). அதன் பின்னர் லண்டனில் சாவகச்சேரி ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு நான் மேடை அறிவிப்பாளராக சென்ற வேளைதான் 2005 – 2006 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அவரைக் குழந்தையுடன் சந்திக்க நேர்ந்தது. அது ஒரு மகிழ்வான அனுபவம் ஆனால் அன்றுகூட நேரடியாகப் பேசமுடியவில்லை. அதன் பின்னர் அவரை எனது ‘மகரந்தச் சிதறல்’ நிகழ்ச்சியில் நேர்காணலை மேற்கொண்டபோது மிக அனுபவச்செறிவோடு செய்திருந்தார்.



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், இரு வேலைத்திட்டங்கள், தமிழ் அரசியலின், தீவிர கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன:
குழந்தை இலக்கியம் என்பது ஆணிவேரை ஒத்ததாகும்.எழுதுவதற்கு மிகவும் சிரமாமன இலக்கியம் எது என்றால் அது " குழந்தை இலக்கியமே " குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டால்த்தான் அது சாத்தியமாகும்.குழந்தைகளின் இலக்கியம் இலக்கிய வகைகளிலே மிகவும் முக்கியமானதாகும். சிறிய வயதிலே படிக்கும் பழக்கம் இருந்தால்த்தான் பெரியவர்கள் ஆன பின்பும் படிப்பார்கள். பெரியவர்களின் இலக்கியத்துக்குக் கூட அடித்தளம் "குழந்தை இலக்கியம் " என்பதுதான் மனமிருத்த வேண்டிய உண்மையெனலாம். அவுஸ்திரேலியாவில் குழந்தை இலக்கியத்தை வளர்ப்பதில் குறிப்பிட்ட படைப்பாளர்களேஈடுபடுகிறார்கள்.குழந்தைகளுக்கான படைப்புக்களை படைப்பதை ஒரு முக்கிய பணியாக நினைத்தே அவர்கள் தங்களது படைப்புக்களை படைக்கின்றார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.
அன்புக்கோர் அம்பி என அனைவராலும் விதந்து சொல்லப்பட்ட கவிஞர் அம்பி அவர்கள் நேற்று ( 27 ஆம் திகதி ) இரவு அவுஸ்திரேலியா சிட்னியில் தமது 95 ஆவது வயதில் மறைந்துவிட்டார். தன்னைப்பற்றிய பசுமையான நினைவுகளை எமக்குத் தந்துவிட்டு, விடைபெற்றிருக்கும் கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில் வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி பிறந்தார்.
ஈழத்து சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் கவிஞர் அம்பியின் காத்திரமான படைப்புகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரின் மறைவின் பின்னரும், அவருடைய படைப்புக்கள் குழந்தைகளின் நாக்கினில் தவழும். தமிழ் கூறும் நல்லுலகால் ஈழத்தின் தேசிய விநாயகம் என்றும் குழந்தை கவிஞன் என போற்றப்படும் கவிஞர் அம்பி எனப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகன் அவர்கள் தனது 94 வயதில் இன்று (28/4/24)இயற்கை எய்தினார்.
ஈழத் தமிழர்கள் தம்மை பாலஸ்தீன மக்களுக்கு ஒப்பானவர்களாக கருதிக்கொள்ளுகின்ற ஒரு நிலை இருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவானதொரு போக்கு ஈழத்தில் நெடுங்காலம் நிலவுகிறது. அதேவேளை தமக்கென்று ஒரு நாடற்ற நிலையில் இஸ்ரேலை உருவாக்கிய இஸ்ரேலியர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டென்ற பார்வையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









