முற்போக்குத் தமிழ் இலக்கியத் தூண்களை நினைவு கூர்வோம்! - வ.ந.கி -
கலை, இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி, எழுத்தாளரும் ,விமர்சகரும், வெளியீட்டளாருமான செ.கணேசலிங்கன், எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் ஆகியோரின் நினைவு தினங்கள் முறையே டிசம்பர் 6, டிசம்பர் 4 & டிசம்பர் 8.
அகஸ்தியரைத் தவிர முதலிருவரையும் நான் சந்தித்திருக்கின்றேன். பேராசிரியர் க.கைலாசபதியை , மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வருடாந்த இதழான 'நுட்பம்' இதழின் ஆசிரியராக நானிருந்தபோது அதற்காக ஆக்கம் வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் அவரது காரியாலயத்தில் சந்தித்திருக்கின்றேன். கட்டுரை தருவதாகக் கூறியவர் கூறிய நாளில் கட்டுரையைத் தந்தார். சஞ்சிகை வெளியானபோது அது பற்றிய சுருக்கமான விமர்சனக் கடிதத்தையும் அனுப்பி வைத்தார். மறக்க முடியாது. அக்கடிதத்தை இன்றுவரை பேணி வருகின்றேன்.