பதிவுகளில் அன்று: டொராண்டோ பத்திரிகைக் கட்டுரைகளுக்கான எதிர்வினை! நன்னூலாரின் ‘ஓட்டைக் குடங்களும், எருமை மாடுகளும், பன்னாடைகளும்’ - என்.கே.மகாலிங்கம் -
- ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள் பற்றிய விவாதமொன்று பதிவுகள் இணைய இதழில் 2005-2006 காலப்பகுதியில் நடந்தது. அதில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'காலம்'செல்வம்' , கவிஞர் செழியன் ஆகியோர் பங்கு பற்றினர். அதில் வெளியான கட்டுரைகள்.-
பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72
சந்திரனைக் காட்டிய விரலைப் பார்த்து அதுவா? என்று கைவிரலைப் பார்த்த அதிபுத்திசாலியின் கதையின் வெளிப்பாடு தான், சமீபத்தில் ரொறொன்ரோ கல்விச் சபையின் தமிழ்ப் பாடநூல்கள் பற்றி பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினைகளாக வெளிவந்த பிதற்றல்கள். அதை எழுதியவர்களில் ஒருவர் ‘ஆவி எழுத்தாளர்’ (ghost writer). ‘முப்பது காசுக்காக’ தன் ஆன்மாவை விற்றவர். மற்றவர், குழப்பவாதி. என் கட்டுரையின் நோக்கத்தையோ அதை ஒழுங்காக வாசித்துப் புரிந்து கொள்ளாமலோ, முட்டையில் மயிர் புடுங்குகிறார். ஆனால். அவர் சொல்லியதில் நான் புரிந்து கொண்டது, அது ‘வரைவு’ என்பதால், அதில் பல நூற்றுக் கணக்கான பிழைகள் உள்ளன, அவற்றை நாம் திருத்துவோம் என்பதே. அந்த அளவுக்காவது தங்கள் பிழையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.
மற்றது. என்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ எழுதும் அவதூறுகள், அநாகாரிகமான தாக்குதல்கள், ‘வன்பொருள்’ பாவிப்போம் என்ற பயமுறுத்துதல்கள், கனடிய நாட்டின் குற்றவியல் சட்ட திட்டங்களோ, பத்திரிகைச் சட்ட திட்டங்களோ மனித உரிமை மீறல் சட்டதிட்டங்களோ தெரியாத இனவாதிகளின் (racist utterances) எழுத்துக்கள். ஆன்மாவை ‘முப்பது காசுக்காக’ விற்றவருக்காகவோ, நன்னூலாரின் கடை மாணாக்கா;களுக்காகவோ, இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. இதை நான் எழுதுவது இரண்டு காரணங்களுக்காக.
ஒன்று, இங்கு தமிழ் கற்பிப்பதற்குத் தகுதியும் திறமையும் அனுபவமும் பெற்ற பல நூற்றுக்கணக்கான தமிழாசிரியர்களின் மனம் புண்படும்படியாக மடத் தமிழாசிரியர்களை என்று அவர்களை அவதூறு செய்து ஒரு அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இலங்கையிலும் மற்றும் நைஜீரியா, மாலைதீவு, எதியோப்பியா, செசல்ஸ். சாம்பியா, தென்னாபிரிக்கா, லண்டன் போன்ற பல நாடுகளிலும் கல்வி கற்பித்து நிறைய அனுபவம் பெற்றவர்கள்;, ஆசிரிய பயிற்சியை இலங்கையில் முறையாகப் பெற்று, அங்கு வகுப்பறை ஆசிரியர்களாக பல தசாப்தங்களாகக் கல்வி கற்பித்த அனுபவம் பெற்ற, இங்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், ரொறொன்ரோ, பீல், டர்ஹம், யோர்க் போன்ற கல்விச் சபைகளில் தங்கள் தகைமைகளினால் முறையாக நேர்முகப் பரீட்ஷைகளில் தெரிவு செய்யப்பட்டு, பெற்றோர்களாகவும் அதேவேளை நல்லாசிரியர்களாகவும் தங்கள் பணியை ஒழுங்காகவும் கடமையுணர்ச்சியுடனும் செய்து வரும் பல நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் சார்பாகத்தான் இதை எழுதுகிறேன். கல்வித் துறையில், நேற்றடித்த கச்சான் காற்றுக்கு இன்று கரையடைந்த சிப்பிகளும் சோகிகளும் அல்ல, அவர்கள்.


இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' என்ற நூல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்' மாலதி மைத்ரியின் 'சங்கராபரணி' மற்றும் குட்டிரேவதியின் 'முலைகள்' தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் 'ஒப்பந்தம்' என்ற கவிதையில் கூட



35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது.
“இலக்கியப்போக்குகள் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்களைப்பெற்றே வளர்ந்துள்ளன. நமது சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியப் போக்கின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இது விளங்கும். இலக்கிய வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் மிக முக்கியமானது. ஆனால், தமிழைப்பொறுத்தவரையில் ‘ வரலாறு ‘ என்பது கண்டுகொள்ளப்படவேயில்லை. தமிழ் இலக்கியத்தை நமது இலக்கணத்தில் கூறப்படுவது போல் ஐந்திணைகளில் இப்பொழுது அடக்கிவிடமுடியாது. தென்குமரி, வடவேங்கடம் வரையிருந்த தமிழ் வேறு, இன்றுள்ள தமிழின் பரப்பு வேறு. ஐந்திணைகளில் பனிகொட்டும் நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தை நாம் அடக்கிவிடமுடியாது. வடவேங்கடம் தென்குமரிக்கு அப்பால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகின் ஐந்து கண்டங்களிலும் தமிழ் இலக்கியம் அதனதன் போக்கில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. “ என்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நூலகர் என். செல்வராஜாவின் மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும் என்ற நூலில் ( 2016 ) தனது கருத்தை எழுதியிருக்கும் எமது இலக்கியக்குடும்பத்தினைச் சேர்ந்த எழுத்தாளர் மலேசியா சை. பீர்முகம்மது இன்று அதிகாலை ( செப்டெம்பர் 26 ) மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.
மலேசியத் தலைநகரான குவாலலம்பூரில் 1942ல் பிறந்த சை.பீர்முகம்மது 1959 முதல் எழுதி வருகிற மூத்த எழுத்தாளர்களுள் முக்கியமானவர். கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக இவர் ஏதோவொரு விதத்தில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொண்டு வந்திருக்கிறார். 12 வயதுமுதலே தன் எழுத்தார்வம் தொடங்கியதாகச் சொல்லும் இவர் மலேசியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட வெடிச் சத்தத்துடன் பிறந்ததாக வேடிக்கையாகச் சொல்வார். தனது கட்டுமானத்துறை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் இவர் தனது குடும்ப உணவகங்களையும் கவனித்துக் கொள்பவராக இருந்து வருகிறார்.
"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற மானுக்குப் பினஂனால் ஓட கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை பொய் ' என விளக்க முற்பட்டார் . " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல விசயங்கள் தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த , மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது . ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம் அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில் பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள் சகஜம் . பகை குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது போல கூறுகிறது .









சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. இக்காப்பியங்களில் பிற சமயங்களின் கருத்துகள் உள்ளன என்றும் பிற சமயங்களின் தாக்கத்தினால் உருவானவை என்றும் அறிஞர்கள் கூறுவர். எனவே, தமிழ்மொழியில் உள்ள காப்பியங்களை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









