இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின்   கல்வி, அரசியல்,  சமூகம்,  இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக  அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு  நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.

அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால், ஒரு விரிவான நூலே எழுதி விட முடியும். அதற்கான விடயப்பரப்பும் பங்களிப்புக்குமுரிய வரலாறும் நம் கண்முன்னே உள்ளது. அந்தளவிலான விரிந்த இயக்கப் பரப்பு அவருடையது. தமிழ்கூறும் அறிவுலகம் தெரிந்து வைத்திருக்கும் , மதிக்கும் ஒரு ஆளுமை பற்றி  விரிவாக எழுத இந்த பகுதி அதற்கு இடம் வழங்காது!   எதைச் சொல்வது எதைத் தவிர்ப்பது  என்கிற  தெரிவு , அவரைப் பற்றி எழுதுவோருக்கு முன்னிருப்பது தவிர்க்க முடியாததே!

0000

மலையக, இந்திய வம்சாவளி அடையாளாத்தினை கொண்டிருக்கும் ஒருவர், இலங்கைத் தமிழ்ச் சூழலில் ஒரு முக்கிய ஆளுமையாக  மேற்கிளம்பி உரிய இடத்தை பெறுவதற்கு அடிப்படையாக இருந்தவை அவரது அறிவின் விகாசிப்பும் கற்றலுக்குமான அவரது அயராத தேடலுமேயாகும். அவர் தன்னை எப்போதுமே, மேல் நிலையாக்கம் பெற்ற ஒரு கல்வியலாளராகவோ, புத்திஜீவியாகவோ வெளிக்காட்டியதில்லை. இன்னொரு வகையில் சொன்னால் அவர் தன்னை, ஒடுக்கப்படும் மக்களுடனும் , ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்களுடனும் , செயற்பாட்டுகளுடனுமே தன் வாழ்வின் முழுப்பகுதியையும் செலவிட்டு வந்துள்ளார். இந்த தேர்வுக்கு அவரது வாழ்வில் அவர் இழந்தவை அதிகம். இந்த இழப்புகளி இட்டு அவர் துயரமடையவுமில்லை, கலங்கி நிலை குலைந்ததுமில்லை என்பதை அவருடன் நெருக்கமாகப் பழகியோர் நன்கு அறிவர்.

 பாடசாலைக் காலத்திலிருந்தே கலை இலக்கியம், சமூகவியல் , அரசியல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அமைப்பு ரீதியாக இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். காலனித்துவத்திற்குப் பின் இலங்கையில்  உருத்திரண்டு நிலைபெற்ற சிறுபான்மை மக்கள் மீதான சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஒடுக்குதலை , ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் அரசியல் போராட்டங்களின் வழியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அவர் என்றும் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டவராக உள்ளார்.

ஒடுக்கப்படும் மக்கள் தொடர்பான அவரது உணர்வு, அறிவு , அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் அவர், இலங்கை மலையக மக்களின் சமூக, பொருளாதார, கலை, இலக்கியம் தொடர்பிலான முக்கியமான பணிகளை வரித்துக் கொண்டார். தன் சமூகம் சார்ந்து மட்டும் சிந்திக்காது இலங்கைத் தமிழ் மக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்கள்  மீதான அவரது கரிசனை ஆழமானது. தலித்துகள் , பெண்கள், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட  அனைத்து மக்கள் மீதும் , உலகளவில் பரந்து  இருந்தமையை நாம் அவரது வாழ்வின் வழியே , அவரது கருத்துக்களின் வழியே கண்டு வந்திருக்கிறோம். எங்கு மக்கள் மீதான ஒடுக்குதல் நிகழ்கிறதோ  அங்கே அவரது ஆன்மா ஒடுக்கப்படும் மக்களின் ஆவேசமிகு இருப்பாக தனது ஒருமைப்பாட்டினை தழுவி நிற்கும்.  பல வருடங்களாக இங்கு லண்டனில் நடைபெறும் பல்வேறு அடையாள எதிர்ப்பு போராட்டங்களிமும், கூட்டங்களிலும் அவரது பிரசன்னமும் குரலும் இருக்கும். தான் மட்டும் கலந்து கொள்ளாது தனது துணை, மற்றும் இரு குழந்தைகளையும் பங்கு பற்றச் செய்யும் அவரது ஒருமைப்பாடு  விரிந்தது.

0000

1980 களில் இலங்கையில் தோன்றிய இனத்துவ அரசியல் காலத்தில் அவர் பல்கலைகழக ஆசிரியராக ,ஊடகவியலாளராக , கலை இலக்கிய விமர்சகராக , பதிப்பாளராக இருந்தார். கல்வி, அறிவுசார் பணிகளுக்குள்  மட்டும் தன்னை குறுக்கிக் கொள்ளாது , எந்தப் பல்கலைகழக ஆசிரியரும் செய்யாத துணிச்சலான நிலைபாட்டை எடுத்தமைக்காக 1982 இன்  இறுதிப் பகுதியில் அவர் இலங்கை அரசின் சிறைக்குள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார். 1983 ஜூலை சிறைப்படுகொலைகளை நேரடியாக கண்ட சாட்சியாளரானார்.  அவர் அன்று செய்த அரசியல் அர்ப்பணம் அவரது தனிப்பட்ட வாழ்வின் சௌகரியங்களை பாதித்தது.

இலங்கை பல்கலைக்கழகங்களிலோ, உயர் நிறுவனங்களிலோ  முக்கிய துறைகளில் பெரும் பதவிகளை வகிக்கக் கூடிய அறிவுசார் புலைமையைக் கொண்டிருந்தும் , இதன் வழியாக தன் தனிப்பட்ட வாழ்வை உயர்த்திக் கொள்ள வாய்ப்பிருந்தும் , அவர்  ஓடுக்கப்படும் மக்கள் மீது கொண்ட உறுதியான  அரசியல் நிலைப்பாடு காரணமாக இவைகளை புறம் தள்ளினார்.  சொந்த வாழ்வில் அவருக்கு கிடைத்திருக்கக் கூடிய பதவிகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் இழந்தார். இந்த தனிப்பட்ட இழப்புகளின் பின்னும், அவை பற்றிய  துயரமும், மனத் தடுமாற்றமும் இன்றுமே அவரிடம் இல்லை என்பது முக்கியமானது. இதற்கு வாழ்வு பற்றிய அவரது பார்வையும், ஒடுக்கப்படும் மக்கள்  மீதான தீரா நேசமுமே அடிப்படையானது.

தான் எடுத்த அரசியல் நிலைப்பாடு காரணமாக , தன் தனிப்பட்ட வாழ்வில் பெற்றிருக்கக்கூடிய நலன்களையும் சுகபோகத்தினையும் துறந்த அவர், சொந்த நாட்டில் வாழக் கூடிய உரிமையையும் இழந்தார். புலம்பெயர்ந்து தமிழகம், ஒல்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ்,  பிரித்தானியா என அகதியாக அலைந்துழலும் வாழ்வையும் ஏற்றுக் கொண்டார்!எந்த நாட்டில் இருந்தாலும் தனது  வாசிப்பினையும் செயற்பாட்டையும்  சிந்தனையையும் கிஞ்சித்தும் கைவிடாத ஒரு அறிவுசார் பங்களிப்பாளனாக அவர் தன்னை வெளிப்படுத்தி வந்திருப்பதையே அவரது பாதை நெடுகக் காண்கிறோம்!.

000

1987 இல் இருந்து புகலிட தமிழ் அரசியல்,  சமூக, கலை இலக்கியத் தளத்தில் அவரது பணி மிக ஆழப்பதிந்தது. புகலிட இலக்கிய சந்திப்பு அரங்குக்கும், அதற்கு வெளியிலும் பல்வேறு பங்களிப்புகளை அவர் வழங்கி உள்ளார். ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் இலங்கை, தமிழகம், புகலிட நாடுகளில் வெளிவந்த  பன்னூறு நூல்கள் பற்றிப் பேசியும் எழுதியும் உள்ளார். இந்த முக்கிய பணியைச் செய்த பங்களிப்பாளர் . அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அவர் ஒரு நூலைப் பற்றியோ, ஒரு விடயத்தினைப் பற்றி பேசுவதோ  அதிக சிரத்தை எடுத்ததாக இருக்கும். அதன் அடி ஆழத்திற்குள் சென்று விடயங்களை பேசும் அறிவும் ஆற்றலுடனும் ,  அறிவை சிந்தனையை தரவுகளை கேட்போருக்கு கொண்டு சென்று சேர்க்கக் கூடிய வல்லமை  அவரது உரைகளின் செப்பமாகும். அத்துடன் அந்த உரைகளில் இருக்கும் அங்கதம் மட்டுமல்ல, கடுமையான விமர்சனத்  தொனியும் மற்றொரு கூட்டுச் சுவையாகும்.  

000
இந்த வருடம் ஜனவரியில், நண்பர் எழுத்தாளர் , அரசியல் செயற்பாட்டாளர்   ரவிக்குமார் அவர்களுக்கு அவரது 60 வயதையொட்டி தமிழகத்தில் ” நூலறிவன் ” எனும் ஒரு கௌரவத்தினை வழங்கினர். நமது  தமிழ் புகலிடச் சூழலில் இப்படி அழைக்கக்கூடிய முழுத் தகுதியும் , வாழ்வும் தேடலும் கொண்டவர்தான் மு. நித்தியானந்தன் அவர்கள்.அனைத்தையும் விட புத்தகங்கள் மீதான  அவரது ஈடுபாடே   அவருக்கு முதன்மையானது.  இதனை பல வருடங்களாக நான் பார்த்து வருகிறேன்.  

 நம் காலத்தில் ,   நம்முடன்  மிகச் சாதாரணமான மனிதராக அவர் வாழ்ந்து  கொண்டிருக்கிறார். ஏழை பணக்காரன், கற்றவன் , கற்காதவன் ,  மேலானவர், கீழானவர் ,  மூத்தோர், இளையோர் என்கிற எந்தப் பாகுபாடுமின்றி பழகுவதற்கும் , எதையும் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும், எதைப்பற்றி உரையாடவும், விவாதிக்கவும் ,  ஒரு பெரும் ஆளுமை  நம் அருகில்  இருக்கிறார் என்பது அவரது நட்பு வட்டத்திற்கு கிடைத்த மகத்தான  வாய்ப்பாகும்.

இறுதியாக, இப்படியான ஆளுமைகளை நமது தமிழ் அறிவுச் சூழல், சமூகத் தளம் எந்தளவு நேர்மையாக  எதிர்கொண்டுள்ளது,  அவர்களின் விரிந்த பணிகளுக்கும் பங்களிப்புகளுக்கும்  நாம்  செய்து   இருக்க வேண்டிய குறைந்த பட்ச மரியாதையை வழங்கி இருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் , சமூக மனிதராக கேட்டுப் பார்த்துக் கொள்வோம்! இந்த நிலை நமது தமிழ்ச் சூழலின் தீ ஊழ்!.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here