இன்று, ஏப்ரில் 10,  சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.

சகோதர உறவின் மேன்மையைக் காட்டும் பல்வேறு திரைப்படங்களும் கதைகளும் வெளிவந்திருக்கின்றன. செம்புலப் பெயல்நீர் போல எனக் காதலுக்கு உறுதிகூறும் சங்ககாலத் தலைவனின் வரிகளை ஓட்டி,

“செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது”

எனக் கவிஞர் கண்ணதாசன் சகோதர உறவின் இறுக்கத்தையும் சிறப்பையும் மிக அழகாக வர்ணித்திருப்பார். இந்தப் பந்தத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் 1995 முதல் கொண்டாடப்படும் சர்வதேச சகோதரர் நாள் வலுவிழந்த சகோதரர்களுக்கான நாளாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், சகோதர வாஞ்சையுடன் பழகும் இரத்த உறவற்ற உறவுகளும் கொண்டாடக்கூடிய ஒரு நாளாகவே இருந்து வருகிறது.

சகோதர உறவுகளுக்கான கொண்டாட்டம் இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்துக்கள் இதனை Raksha Bandhan என்றும் சீக்கியர்கள் இதனை Rakhardi என்றும் அழைக்கின்றனர். Sravana (ஆகஸ்ட்) மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தில் பெண்கள் ஆண்களின் கையில் தாயத்து போன்ற ஒன்றைக் கட்டிவிடுகின்றனர். பின்னர் ஆண்களும் பெண்களுக்கு அன்பளிப்புக்களை வழங்கி ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்வதாக உறுதிசெய்து கொள்கின்றனர். இரத்த உறவில் இல்லாதவர்களும் இப்படிச் செய்வதை திரைப்படங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம். உண்மையில் அப்படியான அர்ப்பணிப்புள்ள ஒரு சகோதர உறவைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்தான்.

‘இரத்தம் தண்ணீரைவிடக் கனமானது’ என்றும் ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்றும் கொள்கையளவில் சகோதர உறவுகள் கருதப்பட்டாலும்கூட சிலரிடையே இப்படியான பிணைப்புக் காணப்படுவதில்லை என்பது துரதிஷ்டமே. இன்னும் சிலரிடையே அந்த உறவு அன்பும் வெறுப்பும் கலந்ததாக அல்லது பகைமை கொண்டதாக அமைந்திருப்பதைக்கூட நாங்கள் பார்க்கிறோம். இப்படியாக உறவுகள் மாறிவிடுவது வலிமிகுந்த அனுபவமாக இருக்கும் என்பது உண்மையே. சகோதர உறவுகளின் பிணைப்புக்கு அடிப்படையாக இருப்பது அவர்கள் வளர்க்கப்பட்ட முறைதான் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொதுவில் பெற்றோரின் கவனிப்புக்கான தேடுதலே சகோதரங்களிடையேயான சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. இரண்டாவது பிள்ளை பிறந்ததும் போட்டி மனப்பான்மையும் பொறமையும் துளிர்விடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். முடிவில் அந்தப் பொறமையும் போட்டியும் வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் வித்திடுகின்றது. இப்படியாக ஆரம்பிக்கும் உறவுச் சிக்கல்களை ஒழுங்கான முறையில் கையாளாவிட்டால், அவை தொடர்ச்சியாக நிகழும் சண்டைகளாகி, பின்னர் நீண்ட காலம் நிலைத்திருக்கும் சகோதர வெறுப்பாக மாறுகின்றன.

சகோதரர்களிடையேயான பாசத்தையும் அந்நியோன்யத்தையும் வளர்ப்பதில் பெற்றோருக்குப் பெரும் பங்குண்டு. பொறமையை அல்லது போட்டியை உணரும் பிள்ளையின் உணர்ச்சிகளை விளங்கி அவற்றை ஏற்றுக்கொள்வதும், அந்தப் பிள்ளையின் தேடல்களுக்கு வழிசெய்வதும் முக்கியமாகும். மாறாகப் பெற்றோர் ஒரு பிள்ளைக்கு மேலதிக பாராட்டோ, ஊக்கமோ, கரிசனையோ வழங்கினால், அந்தப் போட்டியையும் பொறாமையையும் அவர்கள் மேலும் வளர்ப்பதாகத்தான் முடியும். ஏதோவொரு காரணத்துக்காகப் பெற்றோர் ஒரு பிள்ளைக்கு அதிக கவனம் செலுத்துவதையும், ‘பாமா நல்ல கெட்டிக்காரி,’ ‘பாலா எப்பவும் குழப்படிதான்,’ என்றெல்லாம் வெளிப்படையாகக் பேசுவதையும்கூட நாங்கள் பார்க்கிறோம். இவையாவும் பிள்ளைகளிடையே வன்மத்தை வளர்க்கவும், எதிர்மறையான கவனிப்புக்கான செயல்களைத் தூண்டவும் காரணமாகலாம் என்பதுடன், வளர்ந்த பின்பும் அவர்களைத் திறமையற்றவர்களாக உணரவைக்கலாம் அல்லது சகோதரர்கள் மீது பொறாமையுள்ளவர்களாக மாற்றலாம்.

பொறமையை அல்லது வெறுப்பை அல்லது போட்டியை வெளிக்காட்டும், பழித்தல், குற்றம்சாட்டுதல், அடித்தல், குறித்தவரின் பொருள்களைத் திருடல் போன்ற நடத்தைகளைப் பிள்ளைகள் காட்டும்போது, ‘இரண்டு பேரும் அடிவாங்கப் போகிறீர்கள்’ என அச்சுறுத்துவதோ, ‘அப்பா வரட்டும் பார்’ எனப் பயப்படுத்துவதோ, ‘உங்களால் ஒத்து விளையாட முடியாதா’ எனச் சலிப்பதோ பயனற்றது. மாறாக எதற்காக அவர்கள் சண்டையிடுகிறார்களோ அந்தப் பொருளை அகற்றுவதும், எப்படி அதை இருவரும் பயன்படுத்தலாமென அவர்களாக ஒரு முடிவுக்கு வரும்படி சொல்வதும் பயனுள்ளதாக அமையும். மேலும், அவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் என்பதால் ஒருவருடன் ஒருவர் எந்த நேரமும் ஒத்துப் போகத் தேவையில்லை என்பதையும் விரும்பாவிடில் அதைக் காட்டுவதற்கு வன்முறை ஒரு வழியல்ல என்பதையும் கற்பித்தல் முக்கியமானது.

ஒவ்வொரு பிள்ளையுடனும் தனித்தனிய நேரம் செலவழித்தல், மற்றச் சகோதரத்தைப் பற்றி குறைந்தது மூன்று நல்ல விடயங்களைக் கூறும்படி ஒரு விளையாட்டு விளையாடல், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்துசெய்யும் செயற்பாடுகளைத் திட்டமிடல், அவர்களை ஒப்பிடாமல் இருத்தல், பிழைசெய்பவரை மற்றவரிடம் மன்னிப்புக் கேட்கவைத்தல் என்பனவும் சகோதர்களிடையேயான உறவை வளர்ப்பதற்குப் பெற்றோர் செய்யக்கூடிய விடயங்களாகும்.

“ஆனால், வளர்ந்தபின்பும் உறவு நன்றாக அமையவில்லை, மனதையோ உடலையோ காயப்படுத்துவதாக இருக்கிறது என்றால் உறவுகளைத் துண்டிப்பது சிறந்ததொரு தீர்வாக இருக்கக்கூடும்,” என்கிறார் Dr. Leah Hartman. மேலும், “உறவுகளை துண்டிக்க வேண்டிய நேரம் எது என்பதை ஒருவர் முடிவெடுப்பது அவரது தனிப்பட்ட சூழ்நிலை மற்றும் செள்கரியத்தின் அளவைப் பொறுத்திருக்கலாம்,” என்கிறார் அவர். “உடன்பிறந்தவர் இறந்துவிட்டால், அனைவரும் ஆதரவளிப்பார்கள். ஆனால் தீர்க்கப்படாத பிரச்சனைகளால் உறவற்றுப் போகும்போது எதிர்வினை வேறாக இருக்கும், ஏனைய குடும்பத்தவரும் நண்பர்களும் உங்களைப் பரிதாபமாகவோ அல்லது வித்தியாசமான கண்ணோட்டத்திலோ பார்க்கக்கூடும். அது உங்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்காக நீங்கள் எடுக்கும் முடிவைப் பாதிக்காமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் நீங்கள்ஒன்றாக வளர்ந்ததால் உங்களின் வாழ்க்கையில் என்றென்றும் அவர்கள் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை,” என்கிறார் Dr. Heidi Horsley. “உடன்பிறப்புக்களுடான உறவில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்றால் எங்களுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட உடன்பிறப்புகளைவிட, நாங்கள் தெரிந்தெடுத்த நண்பர்களுடனான உறவைப் பேணுவது நல்லது,” என்றும் அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.

“சகோதரங்களுடனான உறவை நீங்கள் துண்டிக்கும்போது, அவை அர்த்தமற்ற அல்லது தெளிவற்ற இழப்புகளாயின் அது ஒரு சூழ்நிலை இழப்பு ஆக இருக்கலாம். மேலும் தீர்க்கப்படாத உணர்ச்சிகள் கையாள்வதற்குக் கடினமானவையாகவும் மிகுந்த வேதனை தருபவையாகவும் இருக்கலாம்” என்கிறார் Dr.Horsley Gantt. இப்படியொரு அனுபவத்தை வாழ்க்கையில் நான் சந்தித்ததால் பிள்ளைகள் எப்போதும் ஒற்றுமையாகவும், வாழ்க்கைச் சவால்களில் ஒருவருக்கொருவர் உதவுபவராகவும், மனம் விட்டுப் பேசுபவர்களாகவும் இருக்கவேண்டுமென மிகவும் கவனமாகப் பிள்ளைகளை வளர்த்திருக்றேன் என இதுவரை நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அண்மையில் வேலையில் சந்தித்ததொரு சம்பவம் அதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. எண்பது வயதுவரை ஒன்றாக வாழ்ந்த இரண்டு சகோதரிகளை, கனடாவிலும் முப்பது வருடங்களாக ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருந்தவர்களை குடும்பத்தில் நிகழ்ந்த பேரிழப்பு ஒன்று தற்போது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதைக்கூடத் தவிர்க்கச் செய்திருக்கிறது எனும் போது என்ன நடந்தது எனக் கேள்வி எழும்புகிறது. எனினும் எப்போதும் வெளிப்படையாகப் பேசிப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட திறன்களும் அபிப்பிராயங்களும் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்வதும் உறவுகளை அவை எதுவானாலும் செழிக்கவைக்குமென நம்பலாம்.

எனவே இந்தச் சர்வதேச சகோதரர் நாளில், சகோதரர்கள் தங்களின் பிணைப்பைக் கொண்டாடுவதற்கும் அதற்கு நன்றிகூறுவதற்கும், மனஸ்தாபங்கள் உள்ள உறவுகளில் இருப்போர் பழையவற்றை மறந்து உறவுகளைப் புதுப்பிக்க ஆவன செய்வதற்கும் முயன்றால் இந்த நாளுக்கு ஓர் அர்த்தம் இருக்கும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here