தாய்வீட்டார் அழைப்பிதழ்! தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் - 2024 - திலீப்குமார் -
கடந்த 17 ஆண்டுகளாக அச்சு, இணைய இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த தாய்வீடு இதழ், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒலி இதழாகவும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
தாய்வீடு மாத இதழானது சமகாலத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் சமூக அரசியல் நிகழ்வுகளையும் வரலாறு, பண்பாடு, வாழ்வியல், இலக்கியம், ஆவணப்படுத்தல் சார்ந்த பல்வேறு விடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் உரையாடற் பரப்புக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.
வாகசர்களதும் அறிவுஜீவிகளதும் விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கிப் பயணிக்க வேண்டியது பொறுப்புள்ள ஊடகம் ஒன்றின் கடமை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள தாய்வீடு, அந்த நோக்குடன் 'தாய்வீடு இதழ் உரையாடலும் விமர்சனமும் – 2024' எனும் சந்திப்பை எதிர்வரும் 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, இல.128, டேவிட் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'கலைத்தூது அழகியல் கல்லூரி' அரங்கில் நடத்தவுள்ளது.