அஞ்சலி: எழுத்தாளர் த.இராஜகோபாலன் (இராஜகோபாலன் மாஸ்டர்) மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் த. இராஜகோபாலன் (மல்லிகை ஆசிரியர் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவால் இராஜகோபாலன் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவர்) வயது தொண்ணூறுகளைக் கடந்த நிலையில் மறைந்த செய்தியினை அவரது உறவினர் எழுத்தாளர் வதிரி சி ரவீந்திரன் அறியத்தந்தார். இவர் யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் மாணவர் ராஜா மதியழகன் அவர்களின் தந்தையாரும் கூட.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இவரது படைப்புகள் அதிகமாக வெளிவந்ததா என்பது பற்றி நான் அறியவில்லை. ஆனால் இவரது சிறுகதைகள் சில சுதந்திரனில் ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளியாகியிருந்தன. 3.3.1967 வெளியான சுதந்திரனில் இவரது 'எங்கே போவேன்' சிறுகதை வெளியாகியுள்ளது. எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றிய முக்கிய ஆவணச்சிறப்பு மிக்க தகவல்களை உள்ளடக்கிய இவரது கட்டுரையொன்று மல்லிகையின் செப்டம்பர் 1972 இதழில் 'இலக்கிய நினைவு - அமரர் அ.ந.கந்தசாமி' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அ.ந.க பற்றி எங்குமே குறிப்பிடப்பட்டிருக்காத தகவல்களை உள்ளடக்கிய ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை.
த.இராஜகோபாலன் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ஒரு காலத்தில் இவர் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த விபரத்தை இவரை அட்டைப்பட நாயகனாக்கி ஏப்ரல் 2009 வெளிவந்த மல்லிகை சஞ்சிகையில் இவர் பற்றிய எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் கட்டுரை மூலம் அறிய முடிகின்றது.



பல உண்மைகளை மனத்துக்குள் போட்டு மறைத்து, அதனை வெளியே விடாமல் வைத்திருப்போர்களிடம் சில கேள்விகளை நாம் கேட்கின்றோம். அக்கேள்விகள் கொண்டு வரும் பதில்கள் உள் மன ஆழங்களை வெளியே கொண்டு வருகின்றது. மூடி வைத்திருக்கும் பல உண்மைகள் வெளிப்படுகின்றது. வழக்கறிஞன் கேட்கின்ற கேள்விகளே உண்மைக் குற்றவாளியை இனம் கண்டு பிடிக்கிறது. உண்மை நிரபராதிகளை வெளிக் கொண்டுவருகின்றது. சொல் படாமல் எதுவும் வெளிவராது. அதுபோல் உழியில்லாமல் மண் உண்மையைத் தராது.
அவசரமாகக் குளித்துவிட்டு வினோ வெளியில் வந்தாள். ஆசைதீரக் குளிப்பதற்கோ, ஆற அமரவிருந்து சாப்பிடுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை என்ற நினைவில் கசிந்த கண்ணீர்த் துளிகள் அவளின் முகத்திலிருந்த நீர்த்திவலைகளுடன் சேர்ந்துகொண்டன. ஈரமாயிருந்த முகத்தையும் உடலையையும் துவாயினால் உலர்த்தியபடி, குளியலறைக் கண்ணாடியில் முன் நின்றவளுக்கு தான் வரவர அழகில்லாமல் போவதாகத் தோன்றியது. கன்னங்கள் மேலும் உட்குழிந்தும், கண்களின் கீழிருந்த கருவளையங்களின் அளவு பெருத்துமிருந்தது. சர்மிக்கு வரவர என்னைப் பிடிக்காமல் போவதற்கு இவையும் காரணமோ என மனதிலெழுந்த எண்ணம் அவளை மேலும் அழுத்தியது.
(1963 இல் தமிழ் இலக்கியக் களத்தின் நிகழ்வுகளால் மையப்படுத்தப்பட்ட கதை. தினகரன் பத்திரிகையில் வெளியானது. அகஸ்தியரின் பிறந்த தினம் ஆகஸ்ட் 24. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அனுப்பி வைத்த சிறுகதை. அவருக்கு நன்றி. )
‘சொற்கள் வனையும் உலகம்’, ‘தடங்களில் அலைதல்’ நடராசா சுசிந்திரனின் கட்டுரைத்தொகுப்பு நூல்கள் வாசிக்கக் கிடைத்தமை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இரு நூல்களும் ‘சுவடு வெளியீடாக’ 2023 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்களுமே கட்டுரை வடிவத்தைக் கொண்டிருப்பது என்பது அவற்றினை வகைப்படுத்திப் பலவிடயங்களை திரும்பிப்பார்த்து அசை போடுவதற்கும், பலவற்றை அறிந்து கொள்வதற்கும் மிகச் சுவையாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

(1996- லண்டன் 'தமிழ் டைம்ஸ்' சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தக் கதை நான் ஏன் இலங்கையில் சமாதானத்துக்காகவும் ஒற்றுமைக்காகவும் பிரச்சாரம் செய்கிறேன் என்பதை விளக்கும்.)

திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை…

நிர்மலனுக்கு அது கனடாவில் முதல் இரவு.. முதல் உறக்கம். பின்னாள்களில் உறக்கத்தைத் தொலைக்கும் இரவுகள் வர வாய்ப்புகள் உண்டு என்பதைச் சிறிதும் உணராதவன் என்பதால் அவன் உறக்கத்தில் நிம்மதியும் ஒட்டியிருந்தது.



கலாசாதனா கலைக்கூட நடன ஆசிரியை கவிதாலக்ஷ்மி அவர்களது மாணவிகள் ஹரிணி நகுலேஸ்வரதாஸ், தீபிகா மகேசன் இருவரும் 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு நோர்வே ஒஸ்லோ Sandvika Teater இல் ‘’தீதும் நன்றும்’’ எனும் தலைப்பில் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்தித் தந்தனர். அன்றைய பொழுதைக் கலைப் பொழுதாக்கி கண்களுக்கும் மனதுக்கும் இரசனைப் பொழுதாக அமைத்துத் தந்த ஆடலரசிகள் இருவரும் பாராட்டுதல்களுக்குரியவர்களாவர்.


நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸும்ரியின் "நட்பு" சிறுகதைத் தொகுதியின் வெளியிட்டு விழா 2024 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9.30 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
இப்போது முருகேசர் முழுவதுமாகவே மாறிவிட்டார். இதை பெரியவன் சபேசன் அவதானிக்காமல் இல்லை.
மண்ணிலே நல்ல வண்ணம்


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









