நனவிடை தோய்தல்: அந்தக்காலத்து அரிக்கன் லாம்பு! - இந்து லிங்கேஸ் -

மாலை நேரத்தில் சூரியன் மறைந்து,வெளிச்சம் மெதுவாகக் குறைந்து இருள் படரத் தொடங்கியது.அந்த மாலைக் கருக்கலில் கிணற்றடியில் துலாவில் அள்ளி அள்ளி தண்ணீரை தொட்டிக்குள்ளும், பெரிய வாளிக்குள்ளும் இறைத்துக்கொண்டிருந்தேன்.
அம்மா உடுப்புக்களை தோய்த்துக்கொண்டிருந்தார்.
அம்மாவுக்கு இப்படியாக ஒத்தாசை செய்வது மட்டுமன்றி,தோய்த்து அலம்பிய துவாய்களைப் பிழிவதென்றாலும்,அங்கே என் கைகளின் பலம் வேண்டும் அம்மாவுக்கு! அம்மாவுக்கும் எனக்குமான அமைதியான சம்பாஷணைகள் இங்குதான் அநேகமாக அரங்கேறும்.அதற்குள் சோகங்களும்,கூடவே சுகங்களும்கலந்திருக்கும். மாறாக எதிர்காலத் திட்டங்களையும் இந்தக் கிணத்தடியில்தான் அம்மா ஆரம்பித்துவைத்தார் என்றும் சொல்லலாம்.இல்லத்திற்குள் மட்டும்தானா நம் சுகவாழ்விருந்தது? இல்லையே! வாழ்ந்த காணி, ஆட்டுப்பட்டி, மாட்டுத்தொழுவம், கோடி, மூலை முடக்கென வளவிற்குள் சுற்றிவர இருந்த நம் பாதம் பதித்த எல்லா இடங்களிலும் எமக்கொரு கதையிருந்ததே! மாமரத்தின் நிழலில்,.வேம்பின் கீழே போட்டிருந்த கட்டிலில். வாழை மரங்களிற்காய் வாய்க்கால் வெட்டி, பாத்திகட்டி தண்ணீரை ஓடவிட்டுப்பாத்திருந்த அந்தப்படிகளில்.கிணற்றடியில் நின்ற கமுகு மரங்கள்.எங்கள் வேலிக்கும் அடுத்த வீட்டுப் பூரணம் அக்கா வீட்டுக்குமான குறுக்குவழிப்பொந்து.


ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.


ஞாபகங்களை மீட்பதென்றால்,அதேபோல இன்றும் அத்தகைய சூழ்நிலைகள் அமைதல் அவசியம்.அப்படித்தான் இன்று என் பெயர்த்திகளுடன் கூடியிருந்து,ஒரு A4 கடதாசியை எடுத்து மூத்தவளிடம் காண்பித்து "உனக்கு என்னம்மா இந்தக் கடதாசியில் ஐயா செய்து தரவேணும்?"என்று கேட்டேன்.
இராஜ அரியரத்தினத்தின் அழகுவின் கதையை தமிழுக்கு கொண்டுவந்த (“சேதுப்பாட்டி”) முயற்சிக்குப் பிறகு, அழகுவின் ஆங்கிலக் கதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கான அடுத்த முக்கிய முயற்சியாக 1973ஆம் ஆண்டு மல்லிகை மார்ச் மாத இதழில் (அழகுவின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்ட இதழ்) அழகுவின் The Scholar என்ற ஆங்கிலக் கதை “பட்டதாரி மாணவன்” என்ற தலைப்பில் ராஜஸ்ரீகாந்தனால் மொழிபெயர்க்கப்பட்டது.


இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று மகனாகப் பிறந்த நோயல் சின்னத்தம்பி நடேசன்ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றவர் நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். நோயல் நடேசன் ஏப்ரல் 1984-இல் 'உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை 'உதயம்' பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார். 1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் வண்ணாத்திக்குளம் என்ற முதலாவது நாவல் 'மித்ர 'பதிப்பகத்தினால் வெளியானது. இந்நாவல் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

எழுத்தாளர் ஜெயமோகனை நெருங்கவைத்தது அவரது இரண்டு கட்டுரைகள்தான். அதற்கு முன்பாக அவரது கதைகளையோ நாவல்களையோ நான் வாசித்ததும் இல்லை. ஏன் அவரைக் கேள்விப்பட்டதும் இல்லை.
சட்டத்தரணியும், எழுத்தாளரும், தமிழ் இலக்கியத் தோட்ட இயக்குநர்களில் ஒருவருமான மனுவல் ஜேசுதாசன் அவர்கள் மறைந்த செய்தியினை அறிந்தேன். பதினாறு ( சிறுகதைத்தொகுதி), 90 நாட்களுள் (நாவல்) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவர்தம் புனைகதைகள் புகலிடத் தமிழர்களின் பல்வகை வாழ்க்கைச் சவால்களை வெளிப்படுத்துபவை. 
- எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் அவர்கள் மறைந்தார் என்னும் தகவலை அறிந்தோம், துயர் அடைந்தோம், அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரிலும் பதிவுகளும் பங்கு கொள்கின்றது. அவர் நினைவாக , கலைம், இலக்கியத்திறனாய்வாளர் மு.நித்தியானந்தன் மாத்தளை வடிவேலனின் சிறுகதைத்தொகுப்பு பற்றி எழுதிப் பதிவுகளில் வெளியான கட்டுரையை மீள் பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -

கட்டுரையாசிரியர் - முனைவர் ரா.பிரேம்குமார், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைகோவில், திருச்சிராப்பள்ளி-05 -
இனி எமது நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கலாமோகனிற்கான வரவேற்பும் அங்கீகாரமும் எவ்வளவு தூரம் இருக்கின்றது என்று பார்ப்போமானால் ஒரு தெளிவற்ற சித்திரம் ஒன்றே எம்முன் தென்படுகின்றது. கலாமோகன் பல சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். அவற்றில் சில தமிழின் மிகச்சிறந்த கதைகளகாக் கொண்டாடப்படுகின்றன. அவரது சிறுகதையான 'மூன்று நகரங்களின் கதை' தமிழின் மிகச்சிறந்த 100 கதைகள் என்ற பட்டியலிற்குள் தமிழகத்து இலக்கிய ஆளுமைகள் பலராலும் வகைப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலிற்குள் வெறும் நான்கைந்து ஈழ எழுத்தாளர்கள் மட்டுமே அடங்கியுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு அசாத்தியமான சாதனையாகவே எமக்குப் புலப்படுகின்றது. மேலும் தமிழக விமர்சகர்கள் ஈழ-புகலிட இலக்கிய ஆளுமைகள் என்று பட்டியலிடும்போது இவரது பெயர் இரண்டாவது அல்லது மூன்றாவதாக எஸ்.பொன்னுத்துரை,மு.தளையசிங்கம், மற்றும் சட்டநாதனிற்கு அடுத்ததாக அல்லது அதற்கு முன்னதாக முன்னிறுத்தப்படுகின்றது. இவரது சிறுகதைகள் பலவும் இன்றளவும் பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன.
தமிழர் ஆரியச் செல்வாக்குக்கு உட்படமுன்னரே ஊரறிய திருமணச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். உறவினர்கள், ஊரவர்கள் கூடி மிகச்சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ஆரம்ப காலத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்துக் காதல் திருமணம் செய்யும் முறையும் பெற்றோர் மணம்பேசு திருமணம் செய்துவைக்கும் முறையும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. காதலன் காதலியைக் கண்டு மனம்விரும்பி தாய் தந்தையார் உறவினர் யார் என்று தெரியாத நிலையில் காதல் வயப்பட்டு மணம் முடித்துள்ளனர். இருவர் ஓரிடத்தில் ஒருவரை ஒருவர் எதிர் கொள்கின்றனர். தங்கள் மனதைப் பறிகொடுக்கின்றனர். கண்டதும் காதல் சங்ககாலத்திலும் இருந்துள்ளது. உனது தாய் தந்தை யார் என்று அறியேன், உனது ஊர் எதுவென அறியேன் எனது தாய் தந்தையருக்கு அவர்கள் என்ன உறவோ என்றும் அறியேன் ஆனால் உன்மீது காதல் பிறந்துவிட்டதே எங்கள் இருவரது நெஞ்சளும் கலந்துவிட்டனவே பார்வையில் என செம்புலப் பெயல் நீரார் என்னும் புலவர் பாடடிய பாடலைப் பார்த்தால் காதல் மணம் அன்றே நடந்துள்ளதை அறியமுடிகிறது:
என்றும் அழியாத நல்ல நாமத்தோடும் புகழோடும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருந்கக் கூடியவர்கள் கலை இலக்கியத்தினூடக தமது ஆற் றல்களை எப்போதும் புதிய பரிணாமங்களுடன் வெளிப்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்களே என்றால் அது மிகையாகாது.
பெண்ணிய எழுத்தாளரான தாமரையின் 'கதவும் கள்ளிப்பாலும்' எனும் கவிதையின் தொகுப்பில் 'தொலைந்து போனேன்' கவிதையில் பெண்ணின் மனவெளிப்பாட்டினை வெளிப்படும் நோக்கில் அமையப் பெற்றதாகும்.

தமிழ் இலக்கிய மரபில் நூல் விமர்சனம் என்பது ஒரு தனித்துவமான அறிவுச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அது வெறும் தனிநபரின் விருப்பு–வெறுப்புகளை வெளிப்படுத்தும் முயற்சியாக அல்ல; வாசக சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ள பணியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நூலைப் பற்றி சொல்லப்படுகின்ற கருத்துகள், அந்த நூலின் மதிப்பை மட்டுமல்லாது, இலக்கியச் சூழலையும் சமூகச் சிந்தனையையும் நேரடியாகப் பாதிக்கக்கூடியவை என்பதால், விமர்சனத்திற்கு தெளிவான வரையறைகளும் ஒழுங்குகளும் தேவைப்படுகின்றன.
நண்பர் இப்னு அஸுமத் என்னுடைய பல கவிதைகளை சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாரம் "நினைவிழந்த காதலின் சாம்பல் மணம்" என்ற என் கவிதையை மிக நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். அதனை படித்தபோது இந்த விளக்கத்தை எழுதியே முடிவது என்ற முனைப்போடு இதனை எழுதுகிறேன். ஏனென்றால், அவர் என் கவிதை ஒவ்வொன்றையும் மொழிபெயர்த்து அனுப்பும்போது, விரிவாக எழுத நினைப்பேன். ஆனால் எழுதுவதில்லை….


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









