இரங்கல் செய்தி - டாக்டர் தி. ஞானசேகரன்! – குரு அரவிந்தன் -

ஈழத்து மூத்த படைப்பாளியும், இனிய நண்பருமான தி.ஞானசேகரன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது (12-4-26) ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த இவர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். ஆயுள்வேத வைத்திய கலாநிதியான இவர், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் என்ற மாதாந்த இதழின் முதன்மையாசிரியராகப் பணியாற்றினார். இலக்கியத்திற்காக சாகித்யரத்னா விருது பெற்றவர். ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டுமல்ல, புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் வெளியிட்டு அவர்களின் இலக்கிய ஆளுமையை உலகறியச் செய்தவர்.
திரு ஞானசேகரன், திருமதி ஞானம் ஆகியோர் கனடா நாட்டுக்கு வருகை தந்தபோது, அவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடியிருக்கின்றேன். எங்கள் அழைப்பை ஏற்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். உதயன் பத்திரிகைக்காக அவரை ஒரு நேர்காணலும் செய்திருந்தேன்.
‘தமிழ் நாட்டில் என்னை அறிந்த அளவிற்கு ஈழத்து வாசகர்கள் என்னை அறிந்திருக்கவில்லை’ என்று சொல்லி, எனது ஆக்கங்களை இலங்கையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று என்னை ஒருமுறை அழைத்திருந்தார்கள். அதனால் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்றிருந்தேன்.


வெலன்ரைன் தினம் என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பலராலும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். பொதுவாக அன்பைப் பரிமாறும் தினமாக இதை எடுத்துக் கொள்வதால், ‘அன்பைப் பரிமாறும் நாள்’ என்றும் குறிப்பிடுவர். இத்தினத்தில் வேறுபாடு காட்டாமல் யாரும் யாரிடமும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்வதால், மனதால் பண்பட்ட யாரும் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 
























பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









