தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (12) - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 12 - காலவெளிக் கூம்புக்குள் ஒரு கும்மாளம்!
"கண்ணம்மா நீ ஓர் அலையடி"
"கண்ணா நான் அலையா?"
"கண்ணம்மா நீ ஒரு துகளடி"
"நான் துகளா கண்ணா?"
'கண்ணம்மா நீ ஓர் அலை. நீ ஒரு துகள். அலை-துகள் நீ கண்ணம்மா."
"கண்ணா, ஓரு விதத்தில் நீ சொல்வதும் சரிதான். நான், நீ, நாம் காணும் இந்த வான், இந்த கடல், இப்பிரபஞ்சம் எல்லாமே அலை-துகள்தான். சக்தி-பொருள்தான். இல்லையா கண்ணா?"
"கண்ணம்மா, சரியாச் சொன்னாய். நீ சரியாகவே இருப்பைப் புரிந்து வைத்திருக்கிறாயடி."
"உண்மைதான் கண்ணா. உன்னுடன் சேர்ந்து என் கவனமும் அறிவியலின் பக்கம் திரும்பி விட்டது. "
"பெரிய இப்பெருவெளிப்பிரபஞ்சமும் சரி, நுண்ணிய குவாண்ட உலகும் சரி கண்ணா பொருள்-சக்தியின் பிரதிபலிப்புத்தான். சக்தியின் நடனம்தான் நாம் காணும் இந்தபொருட் பிரபஞ்சம் கண்ணா."
"சக்தியின் நடனம். அற்புதமான சிந்தனை கண்ணம்மா. அடிப்படைத்துகளின் நடனமே இந்தப்பொருட் பிரபஞ்சம் கண்ணம்மா."
"கண்ணா, உண்மையில் காட்சிகளை உள்ளடக்கியதொரு திரைச்சித்திரமே இப்பிரபஞ்சம். இல்லையா கண்ணா?"
இவ்விதம் கூறிய மனோரஞ்சிதத்தைக் காதல் பொங்க நோக்கினேன்.
"நாம் வாழும் இப்பிரபஞ்சம் உண்மையில் திரைப்படமொன்றின் ஃபிலில் சுருள்போன்றதுதான் கண்ணம்மா."
"ஃபிலிம் சுருள் பல சட்டங்களை உள்ளடக்கியதுதான். அதைப்போல்தானே இப்பிரபஞ்சமும் காட்சிகளைக் கொண்டது கண்ணா?"
"கண்ணம்மா, மிக எளிமையாக, இலகுவாகக் காட்சிகளால் ஆனது இப்பிரபஞ்சம் என்று கூறிவிட்டாய். ஆனால் அதன் பின்னால் நவீன அறிவியலின் அற்புதமானதொரு கோட்பாடுள்ளது கண்ணம்மா."
"காட்சிகளுக்குப் பின் கோட்பாடா? அது என்ன கண்ணா?"



காலையில் குளித்து விட்டு , நேற்றைய , மிஞ்சிய கோழிக்கறி இருந்தது . அதை அவனுக்கு பாணுடன் சாப்பிடக் கொடுத்து விட்டு , முட்டையையைப் பொரித்து சன்விச் செய்து சாப்பிடுகிறார்கள் . பூமலருக்கு சுமி பிறந்ததிலிருந்து நீரழிவு ஏற்பட்டிருக்கிறது . மாத்திரைகளை எடுப்பவள் . " கிழமையிலொரு தடவை இன்சுலின் வேறு ஏற்றிக் கொள்கிறேன் " என்கிறாள் . குட்டித் தங்கச்சியாக இருந்தவளை காலம் எப்படி மாற்றி விட்டிருக்கிறது . உதயனுக்கும் ( அண்ணர் ) , பானுவுக்கும் ( அக்கா ) ..கூட .. நீரழிவு இருக்கிறது . அவனுக்கும் , குணவதிக்கு... இன்னம் தொந்தரவு கொடுக்கவில்லை . வழக்கம் போல கராஜிலிருந்து காரை சிரமப்பட்டு எடுக்க . இட பக்கக் கண்ணாடியை மடக்கி விடுகிறான் . சுலபமாக வெளியே வர பூமலர் வீட்டைப் பூட்டி விட்டு வருகிறாள் . ஒரு தடவை, வீதியில் குறுகலான லேன் என்ற உணர்வில் கரைக்கு இறக்கி விட . தடபுடல் என ...சத்தம் , அவனையும் குலுக்க . ஏன் ஓரங்களை ... சீர்படுத்தாது விடுகிறார்கள் " என ஒரேயடியாய் பற்றிக் கொண்டு வருகிறது . பார்த்து ஓடு " என்கிறாள் பூமலர் . ரொரொன்ரோவில் இந்த குலுக்கல் இராது . ' வரி குறைப்பு ' .... என்றால் அதற்கேற்ப கஸ்டமும் கொடுக்கிறது . போக்குவரத்து அமைச்சராக ஒரு தேடல் உள்ள பொறியிலாளர் ...தெரிவாக வேண்டும் . இல்லாதது சீரழிவாகவே கிடக்கிறது . 
மாயவாத சித்திரிப்பில் எழுதப்பட்டுள்ள நடேசனின் பண்ணையில் ஒரு மிருகம்' என்னும் தலைப்பில் ஜொஸப்பின் பாபா (துணைப் பேராசிரியர், புனித சேவியர் கல்லூரி பாளையங்கோட்டை ) எழுதிய விமர்சனத்தை வாசித்தபோது தமிழகப் பண்ணையொன்றில் கால்நடை வைத்தியராகச் செல்லும் ஒருவரிடம் அங்கு காதற் பிரச்சினையால் காதலன் படுகொலை செய்யப்பட, தற்கொலை செய்துகொண்ட கற்பகம் என்னுமொரு பெண் தன் கதையைக் கூறுவதாகக் கதையோட்டம் செல்வதை அறிய முடிந்தது.
அக்காள் காட்டிய வீடியோ காட்சி, என்னை அதிரவைத்த காரணம், அதிலே அவளின் மகன் தனது இரண்டு கக்கத்திலும் கைத்தடியை வைத்தபடி மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









