முகநூற் குறிப்புகள்: யாழ்ப்பாணத்திற்கான நீர் பற்றிய சிந்தனைகள் - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -

- சமூக, அரசியற் செயற்பாட்டாளரான சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவரது முகநூற் பக்கத்தில் அண்மைக்காலமாக எழுதி வரும் யாழ் மாவட்டத்துக்கான நீர்ப்பற்றாக்குறை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. இலகு நடையில் , எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்படும் பதிவுகள் அவை. தரை அமைப்பு, நிலக்கீழ்க்கற்கள், நீரைத் தேக்கி வைக்க உதவும் களிமண் படை, குழாய்க்கிணறுகள், தனிக்கிணறுகள், அவை சமூக வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள், நன்னீரைப் பெறுவதற்கான வழிகளின், கலந்துரையாடல்களின் அவசியம் எனப் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் என்பதால் முக்கியமானவை. இவ்விடயத்தில் மேலும் சிந்தனையைத் தூண்ட வைப்பவை.
இவ்விதமான இலகு நடைப் பதிவுகள் சாதாரண மனிதர்களை இவ்விடயத்தைப் புரிய வைக்கின்றன. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. விவிப்புணர்வு அவர்களை இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரான மழை நீர் போன்றவற்றைத் தேக்கி வைக்கும் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவ்விடயத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை அவதானிக்க, விமர்சிக்க வழி சமைக்கின்றன..அதனால் அப்பதிவுகளை இங்கு பதிவுகள் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கின்றோம். -
துஞ்சுதல் என்ற சொல்வழக்கு ஒன்று எம்மிடத்தில் புழக்கத்தில் இருக்கின்றது. இது அதிகம் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் புழக்கத்தில் உண்டு. அதுவும் மழைக் காலத்தில் அதிகம் பாவிப்பர் இந்த சொல்லாடலை. கன மழை பெய்து பயிர் உள்ள தரையில்(தோட்டத்தில்) ஒரு நாளிற்கு மேலாக நீர் தேங்கினால் தரையில் உள்ள பயிரின் வேர்கள் அழுகி பயிர் செத்துவிடும். இது அதிகம் வெங்காயம் மிளகாய் இன்ன பிற உப உணவுச் செய்கையில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும். முழுப் பயிரும் நாசமாகிவிடும். ஆனால் யாழ்ப்பாணத்து மண் அதிலும் சிறப்பாகச் சிவப்பு மண் சில இடங்களில் உள்ள இருவாட்டி மண்ணில் இருக்கும் பயிர்கள் இவ்வாறு கன மழையினால் அதிகம் துஞ்சுதல் என்றதாக பயிர்கள் செத்துப் போவது இல்லை. காரணம் பயிரின் வேர் பகுதி 24 மணி நேரம் என்றாக நீரால் சூழப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இங்கு இல்லாததே காரணம். இதனால்தான் இந்த வகை மண்ணில் விவசாயம் செய்பவர்கள் அதிகம் கன மழை போன்றவற்றினால் பயிர்கள் நாசமாகி பொருளாதார இழப்புகளை சந்திப்பதில்லை. பொருளாதார நலிவிற்குள் உள்ளாகுவதில்லை.
காரணம் எமது நில அமைப்பு அவ்வாறானது.
சல்லியும், சுண்ணாம்புக் கற்களையும் படைகளாகக் கொண்ட நிலத்தடியைக் கொண்டவையாக பெரும்பாலும் காணப்படுகின்றன. இதனால் பெய்யும் (கன)மழையை வேகமாக நிலத்திற்குள் கீழ் படையால் உள்வாங்குவதாக பயிரின் வேர் பகுதியைத் தாண்டி கீழ் இறக்கிவிடும். இந்த நீர் நிலத்தடியில் ஆழத்தில் இருக்கும் சமுத்திரத்திற்கு இணைப்பாக இருக்கும் வாய்கால்கள் ஊடாக நீர் மட்டங்களுக்கு ஏற்ப சென்று விடும் அல்லது தேங்கிவிடும். ஆனால் இந்த முறை பயிர் செய்கையிற்கு பாதுகாப்பான உகந்ததாக இருக்கும் அதேவேளை மழையால் பெறப்படும் நிலத்தடி நீர் அதிகம் தொடர்ந்தாற் போல் பல மாதங்களுக்கு அங்கேயே சேமித்து வைப்பதற்கான வாய்ப்பையும் இல்லாமல் செய்கின்றது என்ற மறுபக்க எதிர்விளைவுகளையும் கொண்டிருக்கின்றது. எமது மண் வளம் அவ்வாறானது.






ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.

எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் பதிவொன்று என் மனத்தைக் கவர்ந்தது. 'நானும் எழுத வந்தேன்' என்பது தலைப்பு. எழுத்தாளர் திக்குவல்லை கமால் வில்லிதேவசிகாமணி விருது பற்றி ஹனிபாவுக்குக் குறிப்பிட்டு அவரது 'மக்கத்துச் சால்வை' நூலை அவ்விருதுக்காக அனுப்பும்படி கூறுகின்றார்.

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் 30-03-2017 இல் இந்த நூல் இலங்கையில் இலங்கை கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் முதல் முறையாக வெளியிடப்பட்டது . இந்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நாடகமும் அரங்கிலும் பயிலும் மாணவர்கள், நாடக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்த நூலுக்கு நான் எழுதிய தொகுப்புரையை இன்று முகநூலில் பதிவு செய்கிறேன். நாடக மாணவர்களுக்குப் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். இது ஒரு நீண்ட விபரமான பதிவு. ஆர்வமுள்ளவர்கள் வாசியுங்கள்.


பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கன்பூஷியஸ் காலத்திலேயே எது அழகு என்பது குறித்த தேடல் தொடங்கிவிட்டது. அழகு குறித்த இத்தேடலைத் தத்துவ சாத்திரத்தின் ஒரு பகுதியாகவே உலகம் முழுவதும் இன்று வரை வளர்த்து வந்திருக்கிறார்கள். இத்தகைய தத்துவார்த்தத் தேடலை ‘அழகியல்’ (AESTHETICS) என்று பெயர்சூட்டி வளர்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் இது நிகழவில்லை. தமிழ் அழகியல் எனும் ஒரு துறையை நாம் வளர்த்தெடுக்கவில்லை. தொல்காப்பியர் என்கிற ஒருவரை நாம் ஓர் இலக்கணவாதியாகத்தான் இனம்கண்டிருக்கிறோமே தவிர, அவரை ஓர் அழகியல்வாதியாக நாம் இனம்காணவில்லை. சம்ஸ்கிருதத்தில் ‘நாட்டிய சாஸ்திரம்’ எழுதிய பரதமுனியை அழகியல் வாதியாக புரிந்துகொள்வதுபோல, காஷ்மீரத்தைச் சேர்ந்த அபினவகுப்தர் ஓர் அழகியல்வாதியாக அடையாளம் காணப்படுவதுபோல, ஐந்திணைக் கோட்பாடுகளை விரிவாக விளக்கியிருக்கும் தொல்காப்பியரைத் தத்துவார்த்த முறையில் நாம் ஆராயத் தவறிவிட்டோம். தொல்காப்பியர் ஓர் அழகியல்வாதி என்பதைத் தமிழர்களாகிய நாம் சொல்லத் தவறுகிறபோது, அவர் எப்படி ஓர் உன்னதமான அழகியல்வாதி என்பதை மலையாளக் கலை இலக்கியவாதியான அய்யப்பப் பணிக்கர்தான் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.
- வ.ந.கிரிதரனின் 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.' என்னும் கட்டுரைக்கு முகநூலில் கிடைத்த எதிர்வினைகள்! எதிர்வினைகளில் சிலவற்றில் பதிவுகள் இணைய இதழ் ஏற்கமுடியாத சொற்பதங்களுள்ளன. அவை தவிர்க்கப்பட்டுள்ளன. - பதிவுகள் -
- விஞ்ஞான கம்யூனிசம் என்னும் வலைப்பதிவிலிருந்து இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. இவ்வலைப்பதிவினை உருவாக்கிப் பராமரிப்பவர் - A.K.ஈஸ்வரன் --
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
உலகறிந்த மார்ச்சிய தமிழ் அறிஞர் பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. 1933 ஏப்ரல் 05 ஆம் திகதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த கைலாசபதி, 1982 டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு பொது வைத்தியசாலையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். மரணிக்கும் போது அவருக்கு 49 வயது மட்டுமே நிரம்பியிருந்தது.
ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆள்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர். ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார். ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார். 1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது” என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது. அவர் அக்காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது எழுதிய கதையாக இது இருக்கலாம். 
- வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தில் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்களிப்புகளை, இந்திய உளவுத்துறையின் பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைக்கின்றன. இது இவரது தனிப்பட்ட அனுபவங்களின் உளப்பதிவுகள். அதனையும் வாசிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் இவ்வகையில் விரிவான பதிவுகள் எவையும் இதுவரையில் வெளிவரவில்லையென்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் சம்பவங்களை இவர் ஆவணப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துக்கேற்பப் பதிவு செய்து வருகின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வனுபவங்களில் இவர் தெரிவிக்கும் கருத்துகள் இவரது கருத்துகள். பதிவுகளின் கருத்துகளல்ல. இவற்றில் குறிப்பிடப்படும் பலர் இவற்றுக்கு மாற்றுக் கருத்துகள் கூறக் கூடும். ஆயினும் இவற்றின் முக்கியத்துவம் கருதி இவற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டுமென்னும் அடிப்படையில் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள் -
- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. சந்திரா நல்லையா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -
பதினேழாம் நூற்றாண்டில் 1692 தொடக்கம் அமெரிக்காவில் Massachusetts, Salem போன்ற பகுதிகளில்( witch-hunt ) சூனியக்காரிகளை அழித்தல் எனும் சம்பவம் நடந்ததை வரலாறுகளினூடாக அறிய முடிகிறது. இந்த சம்பவம் பெண்ணிலைவாதிகளினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு விமர்சித்தவர்களில் Silvia Ferederic என்பவர் குறிப்பிடத்தக்கவர் எனலாம். இதே சம்பவமானது ஐரோப்பாவில் 15, 16, 17 நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேர்மனி , சுவிஸ்லாந்து , பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற இடங்களிலும் நிகழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. ஆதலால் இந்த வரலாறு பற்றி சற்று முன்நோக்கி பார்ப்பது அவசியமாகிறது.
காலாற நடந்துகொண்டிருந்தேன்.
இம்மாதம் ஒன்பதாம் திகதி (09-06-78) மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ரென்னஸி வில்லியம்ஸின் (த கிளாஸ் மெனேஜரி) என்ற நாடகத்தின் தமிழாக்கமான “கண்ணாடி வார்ப்புகள்” மேடையேறியது. யாழ். வளாக இலக்கிய மன்ற நிதிக்காக க. பாலேந்திராவினால் தயாரிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட இந்நாடகம் சமீப காலத்தில் யாழ்ப்பாணத்தில் மேடையேறிய ஒரு சில தரமான நாடகங்களிடையே முதன்மை வகிக்கிறது என்று துணிந்து கூறலாம். ரென்னஸி வில்லியம்ஸ் என்ற அமெரிக்க நாடகாசிரியரது புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்றுதான் (த கிளாஸ் மெனேஜரி) ரென்னஸி வில்லியம்ஸை ஒரு நாடகாசிரியராக பொதுமக்களிடையே ஜனரஞ்சகப்படுத்தியதும் பலதடவை வெற்றிகரமாக மேடையேற்றி புகழ்பெற்றதுமான இந்நாடகம் உலகப் புகழ்பெற்ற நாடகங்களின் வரிசையில் தவறாது இடம்பெறுவதாகும்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









