ஆஸ்திரேலியாவில் மல்லிகை ஜீவா நினைவு விருது பெறும் கலை, இலக்கிய ஊடகர் யாழ். பாஸ்கர்! - முருகபூபதி -

உள்ளார்ந்த கலை , இலக்கிய ஆற்றல்களை கொண்டிருப்பவர்கள், தமது தாயகம் விட்டு, வேறு எந்தத் தேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்ல நேரிட்டாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியே வருவார்கள். அதற்கு எமது புகலிட தமிழ் கலை, இலக்கிய உலகில் சிறந்த உதாரணமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் எழுத்தாளரும் நாடகக் கலைஞருமான யாழ். பாஸ்கர். இவர் இந்தத் துறைகளில் தடம் பதித்து, வளர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் இதழ் ஆசிரியராகவும் மலர்ந்தவர். யாழ்ப்பாணம் கொட்டடியைச்சேர்ந்த இவர், தனது ஆரம்பக்கல்வியை கொட்டடி நமசிவாயா பாடசாலையிலும், நவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலையிலும் பயின்று, பின்னர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியில் இணைந்தார்.
கல்வியை நிறைவுசெய்துகொண்டு, 1984 ஆம் ஆண்டிலேயே கடலைக் கடக்கத் தொடங்கியவர். இவர் ஒரு கிரேக்க கப்பலில் வேலைக்குச்சேர்ந்து சமுத்திரங்கள் பலவற்றை கடந்து பயணித்திருப்பவர். இவர் சென்று திரும்பிய தேசங்களின் பெயர்களே சற்று நீளமானது. கடலோடியாக அமெரிக்கா, மெக்சிக்கோ, ஆர்ஜன்டைனா, நைஜீரியா, போலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி என சுற்றியலைந்துவிட்டு, இறுதியில் 1988 ஆம் ஆண்டளவில் இந்தியாவை வந்தடைந்தவர்.இலங்கையில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த அக்காலப்பகுதியில் தாயகம் திரும்பாமல், கடல் வாழ்க்கை இனிப்போதும் எனக்கருதியதனாலோ என்னவோ, ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு நிரந்தரமாக வந்து சேர்ந்தார்.
யாழ். பாஸ்கர், ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் ம. பாலசிங்கம் அவர்களின் மருமகனும், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் கலா. மோகன், டென்மார்க்கில் வதியும் இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளரும் அரசியல் பிரமுகருமான டென்மார்க் தருமகுலசிங்கம் ஆகியோரின் நெருங்கிய உறவினருமாவார். 1989 நடுப்பகுதியில் எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா மெல்பனில் நடைபெற்ற காலப்பகுதியில், அதில் உரையாற்றுவதற்கு சிட்னியிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் எஸ். பொ. அவர்களினால், எனக்கு அறிமுகமானவர்தான் யாழ். பாஸ்கர்.




- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப் போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப் பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.
நேக்கு பூனையை பிடிக்காது. தப்பு, தப்பு...... பூனைகளைன்னு மாத்தி வாசியுங்கோ. பூனையாம் பூன. அதென்ன..... நம்ம கண்ணுக்குள்ளயே ஏதோ தேடற பார்வை...
அண்மையில் நண்பர் எல்லாளன் தந்திருந்த நூல்களிலொன்று 'சமாதானத்திற்கான ஶ்ரீலங்கா சார்புக் கனேடியர்கள்' அமைப்பு வெளியிட்டிருந்த மலையகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும், முன்னாட் விடுதலைப் போராளியுமான வரதன் கிருஷ்ணா எழுதிய 'வெந்து தணியாத பூமி' என்னும் சிறு நூல். இந் நூலை வாசித்தபோது ஒன்று புரிந்தது. இது தொட்டிருக்கும் விடயம் தற்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானதொன்று. இது ஆற்றியிருக்கும் பணியும் முக்கியமானது. காலத்தின் தேவை.

திருமணமாகி மதுரை வந்த நாள்முதல் அடிக்கடி இரவு ஒன்பதுமணிக்கு, எங்கள் பெட்ரூமிலிருந்து அம்மாவிடம், வீடியோ காலில்தான் பேசுவேன். அம்மா தனது பெட்ரூமிலயிருந்து பேசுவாங்க. சிலநாட்களில் சமையல்காரப் பையன் எடுத்துப் பேசுவான். தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அத்தானும் பேசத் தவறுவதில்லை.
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.




திரு.கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக் கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.
- தமிழ்புக்ஸ்.காம் தளத்தில் வெளியான அஞ்சலிக் கட்டுரை. அனுப்பியவர் நண்பர் ஸ்நேகா பாலாஜி -

எனது ஐந்து வயதுப்பேரனுக்கு பீட்டர் என்ற முயலின் கதையை (Tale of Peter the Rabbit) சமீபத்தில் வாசித்தேன் . அந்த கதை பலருக்குத் தெரிந்திருக்கும். தாய் முயல் தனது பிள்ளைகளான புளுப்சி, மெர்சி, கொட்டன் ரயில் மற்றும் பீட்டரிடம் , “நீங்கள் போய் விளையாடுங்கள். ஆனால் மிஸ்டர் மக்கிரகரின் தோட்டத்திற்கு போகவேண்டாம் . ஏற்கனவே அங்கு போனதால் திருமதி மக்கிரகர், சில காலத்தின் முன்பு உங்களது தந்தையை தங்களது உணவாக சமைத்து உண்டுவிட்டார்கள். ஆகவே கவனம் ” என எச்சரிப்பார்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









