பதிவுகள் முகப்பு

அஞ்சலி: வரலாற்றுப் புனைகதைச் சேகரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணன் மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சரித்திரப் புனைகதைச் சேகரிப்பாளர் திரு.சுந்தர் கிருஷ்ணன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். துயருற்றேன். இவர் முகநூல் அறிமுகப்படுத்திய என் முகநூல் நண்பர்களில் ஒருவர். தமிழ் சரித்திர நாவல்கள் மீது தீராத பற்று மிக்கவர். அவற்றைப்பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதற்காக 'தமிழ் சரித்திர நாவல்கள்' என்னும் வலைப்பதிவினை வைத்திருந்தார்.

இவ்வலைப்பதிவின் முதற் பக்கத்தில் சுந்தர் கணேசன் பின்வருமாறு கூறியிருபார்:

"தமிழ் சரித்திர நாவல்கள் வணக்கம் இன்றைய உலகில் தமிழ் நாவல்கள் அதுவும் சரித்திர நாவல்களின் தகவல்கள் இங்கு சேமித்து கொடுக்கப்படுகின்றன. இதுவரை 752 நாவல்கள் கிடைத்துள்ளன. இந்த வலை பதிவு சரித்திர நாவல் பிரியர்களுக்கு உரிய தகவல்களை ஒரே இடத்தில் தரவேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்..உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் சுந்தர் கிருஷ்ணன்"

மேலும் படிக்க ...

அஞ்சலி: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின - தன் கொள்கையில் நோக்கில் தெளிவும் திடமும் மிக்க தலைவர்களில் ஒருவர். சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக்குரலாக ஒலித்த தென்னிலங்கை அரசியல்வாதி. - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
25 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தென்னிலங்கை அரசியல்வாதிகளில் மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின தொடர்ச்சியாக இலங்கையின்  அனைத்து  மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தவர். தனது கொள்கைகளில் தெளிவுடனிருந்தவர். திடத்துடனிருந்தார். நாடு இனவாதச் சேற்றில் மூழ்கியிருக்கையில் அதற்கெதிராகச் செயற்பட்டவர். நடைபெற்ற யுத்தத்திற்கு ஒருபோதுமே நிதிப்பங்களிப்பு செய்ய மாட்டேனென்று அவர் மேல் மாகாண சபையில் ஆற்றிய உரை முக்கியத்துவம் மிக்கது.

இலங்கையின் சிறுபான்மை மக்களின், குறிப்பாகத்  தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி, அவர்கள் அடைந்த இன்னல்கள் விடயத்தில் தெளிவுடனிருந்தவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின. எப்பொழுதும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர். தனது உறுதியான , தெளிவான அவரது அரசியல் செயற்பாட்டால், நோக்கால் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் பல. பதவி இழந்தார். தலை மறைவாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இவற்றாலெல்லாம் அவர் கலங்கி  அடிபணியாமல் தான் கொண்ட கொள்கையில், சிந்தனைகளில் உறுதியுடன் இருந்தார். இதுவே அவரது மிக முக்கியமான ஆளுமை அம்சம்.

மேலும் படிக்க ...

இரவு மெதுவாக வந்தது (The Night Came Slowly) - மூலம் ஆங்கிலத்தில் கேட் சோபின் (Kate Chopin) | தமிழில் அகணி சுரேஸ் -

விவரங்கள்
- மூலம் ஆங்கிலத்தில் கேட் சோபின் (Kate Chopin) | தமிழில் அகணி சுரேஸ் -
சிறுகதை
25 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                                    - Kate Chopin -

நான் மனிதர்கள் மீதான ஆர்வத்தை இழக்கிறேன்; அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் செயல்களின் முக்கியத்துவத்தில். பத்து புத்தகங்களைப் படிப்பதை விட ஒரு மனிதனைப் படிப்பது சிறந்தது என்று யாரோ ஒருவர் சொன்னார். எனக்கு புத்தகங்களோ ஆண்களோ வேண்டாம்; அவர்கள் என்னை கஷ்டப்படுத்துகிறார்கள். அவர்களில் ஒருவரால் என்னுடன் இரவு - கோடை இரவு போல பேச முடியுமா? விண்மீன்களைப் போல  அல்லது  தழுவிச் செல்லும் காற்றுப் போல ? பேச முடியுமா?

நான் ஆலமரத்தடியில் படுத்திருந்தபோது இரவு மெதுவாக, மென்மையாக வந்தது. நான் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு அது தவழ்ந்து, பள்ளத்தாக்கிலிருந்து திருட்டுத்தனமாக ஊர்ந்து வந்தது. அருகிலுள்ள மரங்கள் மற்றும் இலைகளின் வெளிப்புறங்கள் ஒரே கருப்பு நிறத்தில் ஒன்றிணைந்தன, மேலும் இரவும் அவற்றிலிருந்தும், கிழக்கு மற்றும் மேற்கிலிருந்தும் திருடப்பட்டது, வானத்தில் ஒரே ஒளி இருக்கும் வரை, மேப்பிள் இலைகள் மற்றும் ஒரு நட்சத்திரம் வெறித்தனமாக கீழே பார்க்கிறது.

இரவு புனிதமானது மற்றும் மர்மம் என்று பொருள்படும்.

மேலும் படிக்க ...

வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 41ஆவது நினைவு தினம்! 1983 ஜூலை 25 – 27 – 28 ஆம் திகதிகளில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக ! தாயகம் முதல் புகலிடம் வரையில் அலைந்துழலும் ஈழவிடுதலைக் கனவைச் சுமந்த ஆத்மாக்கள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஐந்து வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில், எனது மதிப்பிற்குரிய ஆசான் ( அமரர் ) பண்டிதர் க. மயல்வாகனன் அவர்களின் நூற்றாண்டு விழா நடந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் அதற்கு என்னையும் அழைத்திருந்தனர். அங்கு பயணமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், எனது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவந்த ஒரு அன்பர் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்புகொண்டார். அவரது பெயரைப்பார்த்துவிட்டு, அந்தப்பெயரில் இலங்கையில் எவரையும் எனக்குத் தெரியாதிருந்த நிலையில், “ தமிழ்நாட்டில் நீங்கள் எவ்விடம்? “ எனக்கேட்டிருந்தேன். அவர் தமிழ்நாட்டில் சிறிதுகாலம் வசித்திருந்தாலும், அவரது பூர்வீகம் இலங்கையில் வடபுலம்தான் என்பதை தெரிந்துகொண்டேன்.

இலங்கையில் நீடித்த இனப்பிரச்சினையும் இனவிடுதலைப் போராட்டமும் அவரையும் ஓட ஓட விரட்டியிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் அவரும் ஒரு இயக்கத்தில் இணைந்திருந்தவர். அத்துடன் அறிவுஜீவி. தொடர்பாடலின் ஊடாக அவரும் பிரான்ஸிலிருப்பதை அறிந்துகொண்டேன்.

நான் அங்கு சென்றதும் என்னைத்தேடி வந்து சந்தித்தார். அவருக்கு நான் ஏற்கனவே எழுதியிருந்த சொல்லமறந்த கதைகள், சொல்லவேண்டிய கதைகள் ஆகிய நூல்களை கொடுத்தேன். அவற்றைப் பார்த்துவிட்டு, தன்னிடமும் சொல்லவேண்டிய கதைகள், சொல்ல முடியாத கதைகள் ஏராளமாக இருப்பதாகச் சொன்னார்.

மேலும் படிக்க ...

கறுப்பு ஜூலை நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
23 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

     -  1983 கறுப்பு ஜூலையில் நாடே பற்றியெரிந்தபோது...

ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜூலை மாதம் எனக்கு மிக மிக முக்கியமானது. அத்துடன் மறக்க முடியாத மாதம். இந்த மாதத்தில்தான் 1951 ஆம் ஆண்டு 13 ஆம் திகதி நான் பிறந்தேன். 13 ஆம் இலக்கம் அதிர்ஷ்டம் அற்றது என்பது பொதுவான கருத்து. சில நாடுகளில் அமைந்துள்ள உல்லாசப்பயண விடுதிகளில் 13 ஆம் இலக்கத்தில் விருந்தினர்கள் தங்கும் அறையும் இருக்காது என்பார்கள். 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கொலிவூட் நடிகர் ஹாரிசன் போர்ட் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதிதான் கவிப்பேரரசு வைரமுத்துவும் பிறந்தார். இவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் அற்றவர்களா..? நான் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை பிறந்தேன். சில நாடுகளில் ஆங்கிலேயர்கள் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்தால், அதனை கறுப்பு வெள்ளி துரதிர்ஷ்டமான நாள் எனச்சொல்லிக்கொண்டு வேலைக்கும் செல்ல மாட்டார்களாம் ! இது எப்படி இருக்கிறது..?

கவியரசு கண்ணதாசன் “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..?“என்று தொடங்கும் பாடலை இயற்றியிருக்கிறார். அவர் இந்த வரிகளை தனது சொந்த அனுபவத்தில்தான் எழுதியிருப்பார். எனக்கும் இந்த ஜூலை மாதத்தை பல காரணங்களினால் மறக்க முடியவில்லை. எனது முதல் சிறுகதையும், கனவுகள் ஆயிரம் , 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் மல்லிகையில் வெளியானது.

மேலும் படிக்க ...

சொற்களின் வழியே கடந்தகாலத்திற்குச் திரும்பிச் செல்லுதல் - த.அகிலன் -

விவரங்கள்
- த.அகிலன் -
நூல் அறிமுகம்
22 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தேவகாந்தனின் மொழி அதிகமும் அழகான உரையாடல் தருணங்களால் நிரப்பப் படாதது. ஆனால் கனதியான கதைத் தருணங்களால் வாழ்வையெழுதும் சொற்கள் அவருடையவை. ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் தேவகாந்தன் ஒரு முதிர்ந்த யானையைப் போல இருக்கிறார். மெதுவான நடை ஆனால் தேங்காத பயணம், எல்லாத்திசைகளிலும் வழியறிந்த யானை. தமிழ்ச்சமூகம் அவரைக்கொண்டாடியது போதாது என்று அவரைப் படிக்கும்தோறும் தோன்றிக்கொண்டேயிருக்கச் செய்பவை தேவகாந்தனின் சொற்கள். நான் முன்பொருமுறை சொன்னதைப்போல அரசியல் சதிர்களுக்கப்பால், போர்க்களத்தின் முன்பும் பின்புமான தமிழ்நிலத்தின் வாழ்வை அவருடைய சொற்கள் தீண்டியிருக்கின்றன. ஓயாமல் தமிழ் நிலத்தின் வாழ்வைப் பாடும் பாணன் அவர். இங்கே எழுதப்பட்டிருக்கும் இயக்கச் சண்டைகள், கட்சிச் சண்டைகள், சேறடிப்புக்களைத் தாண்டி தமிழ் வாழ்வையறிய எதிர்காலத்தின் வரலாற்றைக் கற்பவர் தேவகாந்தனைத்தான் படிக்கவேண்டும்.  

தாங்கள் தவறவிட்ட தருணத்தை, மனிதர்களை, இளைமையை, ஆசையை மறுபடியும் சந்திக்கும் மனிதர்களின் கதைகள் இவை என நான் எண்ணகிறேன். அத்தருணங்கள் சிலருக்கு அதுவாய் அமைகிறது, சிலர் அமைத்துக் கொள்கிறார்கள். அத்திரும்பிச் செல்லுதல் சில விடுகதைப் புதிர்களை அவிழ்க்கிறது, சில முடிச்சுக்களைப் போடுகிறது, ஓர் ஆறுதலை அல்லது வெறுமையை கதைமாந்தருக்கும் வாசகனுக்கும் அளிக்கிறது. இந்தத்தொகுப்பை படித்து முடிக்கையில் எனக்கு உடனடியாக வந்த மனப்பதிவு இதுதான். இத்தொகுப்பின் பொதுத் தன்மையாய் நான் கண்டடைந்திருப்பதும் அதுவே.  

மேலும் படிக்க ...

இருபத்தி நான்காம் வயதில் பாரதி - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1

ஆன்ம உணர்த்திறன்

மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.

மனுக்குலத்தின் மீது அவன் கொள்ளும் பேரன்பு சமூகநீதிக் கோரி, அவனைச் சமரசம் இன்றி தேடலுக்கு உட்படுத்தி, அவனுக்கு ஆன்மப் பக்குவத்தை அளிக்கக்கூடும். இருந்தும் இந்நகர்வில், அவனுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் - அவன் தரக்கூடிய விலை, அவன் எதிர்க்கொள்ளவேண்டிய துன்பங்கள் - இவையனைத்தும் உடன் நிகழ்வதே ஆகும்.

சுருங்கச் சொன்னால், இப்பயணிப்பின் போது அவன் சுமக்க முனையும் சுமையின் எடை அசாதாரணமானது எனக் கூறலாம். இத்தகைய ஓர் சமன்பாட்டில்தான், பாரதி எனும் இவ் இருபத்து நான்கு வயது இளைஞன், ஏற்கனவே வகுத்தளிக்கப்பட்ட, கறாரான திட்டங்கள் ஏதுமின்றி இச்சுமையைத் தூக்க சம்மதிக்கின்றான்.

இக்காலப்பகுதியில், இவ்இளைஞன், தன் ஆன்மாவைக் கட்டியெழுப்பும் விதம் எமது கவனத்துக்குரியது. பல் கூறுகளாய் அமையக்கூடிய அவனது தேடல்களின், ஒரு கூறு கடவுள் சம்பந்தமானது.

ஒருசந்தர்ப்பத்தில் மகா கலைஞன், மக்சிம் கார்க்கி கூறுவான்: “உனது கடவுள் யார் என்ற கேள்விக்கு நேர்மைமிக்க எந்த மனிதனும் விடையளிப்பது சற்றுச் சிரமமானதே” (1898).

பாரதி பொருத்து, ஆழ ஆய்வு செய்யும், பேராசிரியர் கைலாசபதி கூறுவார் : “இவன் ஒரு சாக்த பக்தன்” என.

மேலும் படிக்க ...

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பு பற்றிய குறிப்புகள்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மலையக மக்கள் பற்றிய இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

1. "கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்."

மேலும் படிக்க ...

திரைப்படம் விமர்சனம்: இந்தியன் – 2 - சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வட இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் ஹாத்ரஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து, அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில் பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில் சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில், தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில், சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல் செலவுசெய்து அதில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில், இந்திய தேசத்தில் நீடித்திருக்கும் ஊழலை, சொத்து சேகரிப்பை , கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து, கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது. இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது.

மேலும் படிக்க ...

காலமும் கணங்களும்: இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 )! நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
21 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

( ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒலிக்கும் ஐ. ரி. பி. சி. வானொலியில் “ எம் தமிழ் உறவுகள் “ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய உரை. நேர்கண்டவர்: எஸ்.கே. ராஜென் )


பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள்.

தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்து - உழைப்பிலிருந்து பிறந்த பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச் சுருக்கமாகச்சொன்னேன்.

மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி எனது காலமும் கணங்களும் தொடரில் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

உழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு
உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு
மழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்
மனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்

இந்தக்கவிதையை இயற்கையும் பசுமையும் கொஞ்சும் மலையகத்தை சித்திரிக்கும் ஒரு Picture Postcard இல் எழுதி 1988 ஆம் ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார் நண்பர் கே.கணேஷ். இலங்கை மலையகத்தில் பெண்கள் கொழுந்து பறிக்கும் அழகியகாட்சி அந்த அட்டையில் பதிவாகியிருந்தது.

மேலும் படிக்க ...

யி டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
20 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எனது இசைப்பாடல்களை 'வ.ந.கிரிதரன் பாடல்கள் (V.N.Giritharan Songs) என்னும் யு டியூப் சானலில் நீங்கள் கேட்டு மகிழலாம். அதற்கான இணையத்தள முகவரி - https://www.youtube.com/@girinav1

வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள். எனது பாடல் வரிகளை பல்வகை வாத்தியக் கருவிகளுடன், பல்வகை இசை வடிவங்களைக் கலந்து பாடல்களாக்கி உள்ளேன். இதற்காகக் குரல் தந்ததுடன், இசையமைத்துத்  தந்ததற்காகவும் செயற்கை நுண்ணறிவான 'சுனோ'வுக்கு ( AI SUNO) என் மனம் நிறைந்த நன்றி. என் பாடல்களை இன்னும் பல்வேறு நாடுகளின் இசை வடிவங்களில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்க வேண்டுமென்பது என்  அவா.

தனது பாடல்களை இவ்விதம் பாடல்களாக்குவதற்கு இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கான சாத்தியம் அற்ற என்னைப்போன்ற பாடலாசிரியர்கள் இவ்விதம் இசையமைத்து பாடல்களை உருவாக்கி, பரீட்சித்துப் பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவுகின்றது. அவ்வகையில் இத்தொழில் நுட்பத்தை ஆரோக்கியமானதொரு தொழில் நுட்பமாகவே பார்க்கின்றேன்.

மேலும் படிக்க ...

பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
19 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இசை & குரல் - AI SUNO --

பாடலைக் கேட்க

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. ]

பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வனம், வாவி நிறைந்த குருமண்காடு.
வளமான பூமி என் குருமண்காடு.
காடு  இன்று அங்கில்லை.
அந்த வனப்பு அங்கில்லை.
அந்த வளம் அங்கில்லை.
என்று நான் காண்பேன்?
எங்கு நான் காண்பேன்?
என் நினைவுகளில் நிற்கும்
இன்னுலகம் என் குருமண்காடு.

மேலும் படிக்க ...

கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? - வ.ந.கிரிதரன்--

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கலை
19 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


                       - இசை & குரல் - AI  SUNO  -

[இக்கவிதை எனது கவிதைத்தொகுப்புகளான 'எழுக அதிமானுடா', 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. யு டியூப்பிலும் இக்கவிதையை நீங்கள் கேட்கலாம் - https://www.youtube.com/watch?v=_9Ilsgy2T7I ]

'காங்ரீட்'!  'காங்ரீட்'!  'காங்ரீட்'!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

மேலும் படிக்க ...

இது பாட்டுக் கேட்கும் நேரம் : 'அனுபவம் புதுமை' - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
15 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

காதலிக்க நேரமில்லை' தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வரும் படங்களில் முதலில் நிற்பது. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் திரைப்படம். இருவருமே தமிழ்த்திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ரவிச்சந்திரன் நான், இதயக்கமலம், காதலிக்க நேரமில்லை  என வெள்ளிவிழாப் படங்களைத் தந்தவர். ஒரு சமயம் குட்டி எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.

நடிகர் ரவிச்சந்திரன் சிங்கப்பூரிலிருந்து நடிக்க வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். 'அனுபவம் புதுமை' என்னுமிந்தப்பாடலில் அவருடன் இணைந்து நடித்திருப்பவர் ராஜஶ்ரீ. சிறந்த நர்த்தகி. இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் கண்ணதாசன். பாடியிருப்பவர்கள் - பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா. இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி.

மேலும் படிக்க ...

நூல் மதிப்பீடு: வெலிகம ரிம்ஸா முஹம்மதின் "விடியல்" ஆய்வு நூல் ஓர் எளிய மதிப்பீடு! - சிறீ சிறீஸ்கந்தராசா -

விவரங்கள்
- சிறீ சிறீஸ்கந்தராசா -
நூல் அறிமுகம்
15 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக் கற்கை நெறிக்காக ஆய்வு ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வை ஒரு சில மாற்றங்களோடு "விடியல்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இந்த விடியல் என்ற நூலினையே இங்கே ஓர் எளிய மதிப்பீட்டிற்காக நான் எடுத்துக்கொள்கின்றேன். ஏனைய இலக்கிய வடிவங்களைப் போன்று ஆய்வுத் துறையானது தொடக்கம், வளர்ச்சி, உச்ச கட்டம், முடிவு போன்ற வளர்ச்சிப் படிமுறைகளைக் கொண்டதல்ல.

ஆய்வின் நோக்கம், ஆய்வின் பொருள், முன்னர் ஆய்வு செய்யப்பட்டதா? அப்படியாயின் மீள் ஆய்வு  செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இத்தகைய ஆய்வின் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன? போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு ஆய்வு இருக்க வேண்டும். ரிம்ஸா முஹம்மத் இளம் ஆய்வாளர், கவிஞர், பன்னூலாசிரியர், சஞ்சிகையாசிரியர், ஊடகவியலாளர் என்ற வகையில் மூத்த எழுத்தாளர் மூதூர் முகைதீனின் கவிதைகளைத் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத், முதலாவது அத்தியாயத்தில், கவிதை பற்றிய அறிமுகத்தைத் தந்துவிட்டு தான் எடுத்துகொண்ட ஆய்வின் பிரச்சனைகள், ஆய்வின் வரையறை, உள்ளடக்கம் பற்றிக் கூறுகின்றார்.  இரண்டாவது அத்தியாயத்தில் கவிதையின் வரைவிலக்கணம், கவிதையின் வகைகள், மரபுக் கவிதைகள் நவீன கவிதைகள் பற்றியும் பேசுகிறார். மூன்றாவது அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அவர் பெற்ற விருதுகள், பரிசில்கள், கௌரவங்கள் பற்றி மிகச் சிறப்பான முறையில் எழுதிச் செல்லுகிறார். நான்காவது அத்தியாயத்தில் "பிட்டும் தேங்காய்ப் பூவும்", "இழந்துவிட்ட இன்பங்கள்", "ஒரு காலம் இருந்தது" ஆகிய 03 கவிதைத் தொகுதிகளிலுள்ள கவிதைகள் பற்றியும் மிகவும் சிறப்பான எடுத்துக் காட்டுகளோடு பதிவு செய்து விளக்குகிறார். ஐந்தாவது அத்தியாயத்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புகள் பற்றியும், வாசகர்கள் மத்தியில் கவிதை நூல்களுக்கான வரவேற்புப் பற்றியும் தனக்கே உரித்தான பாணியில் கூறுகிறார்.

மேலும் படிக்க ...

தமிழ்நாடு கலை, இலக்கிய, சமூக ஆர்வலர் தாமரை சி. மகேந்திரனுடன் சந்திப்பு!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
15 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

Join Zoom Meeting  | Zoom Meeting ID: 897 1209 2206 | Passcode: 914664

மேலும் படிக்க ...

பானுபாரதியின்(நோர்வே) உன்னத சங்கீதம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நூல் அறிமுகம்
14 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நோர்வே மொழியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட பானுபாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்தபோது ஒவ்வொரு கவிதையையும் வாசித்து விட்டு கண்ணை மூடியபடி ஆழ்மனத்தில், ஓர் ஆணாகச் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் உலாவிவிட்டே மீண்டும் அடுத்த கவிதையை வாசித்தேன். மிகவும் ஆழமான, ஆனால் நமக்குச் சமீபமான விடயங்களை அந்தக் கவிதைகள் பேசுகின்றன.

மூலக்கவிதைகளை நான் படிக்காதபோதும், மொழிமாற்றம் மிகவும் அழகாக, அமைதியாக மனதில் வந்து குளத்தின் கரையின் அலையாக ஈரலிப்பைத் தருகின்றன. பெண்களின், பெண்களுக்கே உரிய காதல் , தாய்மை உணர்வுடன் எழுதப்பட்ட கவிதைகள், அதாவது அகத்தின் வெளிப்பாடுகள் என்றாலும் சில பட்டினி, போர் எனும் புறவய வெளிபாட்டை பேசுபவையாக உள்ளன. அவை பெண் குரலாக நமக்குக் காதில் ஓங்கி அறைகின்றது. ஒரு குறுகிய இனமோ நாடோ அற்று மொத்தமான மனித வாழ்வின் தேறலை பிளிந்து நமக்குத் தருகின்றன. ஆண்கள் சிந்திக்காத கோணத்தில் இருந்து அவைகள் வருவதே எனக்குப் பிடித்தது.

முதல் கவிதையே சிறு குழந்தைக்குத் தலையில் ஊற்றிய ஒரு குடம் வெந்நீர்போல் என்னைத் திக்கு முக்காடப்பண்ணியது.

மேலும் படிக்க ...

முல்லைஅமுதன் கவிதைகள் மூன்று!

விவரங்கள்
முல்லைஅமுதன்
கவிதை
14 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1. அழைப்பிதழ்!

அழைப்பு வந்திருந்தது.
பிரித்துப் படித்ததில் ஆச்சரியம்..
கண்களுடன்,
மனதும் வியந்தததுடன்
ஒருவித அச்சமும் வந்தது.
மனைவியிடம் கொடுத்தேன்.
இதில் உங்கள் பெயர் இல்லையே
என்றாள்.
அப்படியாயின்
உனக்காக இருக்குமோ?
அவள் பயந்தாள்.
இருவரும் எதுவும் செய்ததில்லையே..
நல்லது செய்தாலும் அச்சமே நண்பன் சொல்லியிருந்தான்.
நாளை உனக்கான தண்டணை நிறைவேற்றப்படும்.
அவை கடுமையாக இருக்கும்..
ஆயுதங்களின் கடிதங்களை யாரிடமும் காட்டிக்கொள்ளமுடியாது..
கடவுளின் தண்டணையைவிட
ஆயுதங்கள் முன் தன்னைப் பலியிடுதல் என்பது
கொடூரம்தான்..
நாங்கள் முழந்தாளிட்டுள்ளோம்.
பரமபிதாவே!

மேலும் படிக்க ...

ஞானிகளின் பரிசு! - ஆங்கிலத்தில் ஓ ஹென்றி ( The Gift of the Magi ) | தமிழில் அகணி சுரேஸ் -

விவரங்கள்
- ஆங்கிலத்தில் ஓ ஹென்றி ( The Gift of the Magi ) | தமிழில் அகணி சுரேஸ் -
சிறுகதை
14 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்கள்(cents ). அவ்வளவுதான். மேலும் அதில் அறுபது சென்ட் பெனிஸ் (pennies ) ஆக இருந்தது. பார்ப்பனியத்தின் மௌனக் குற்றச்சாட்டால், மறைமுகமான கையாளுகையால் அச்சுறுத்தி ஒருவரின் கன்னம் எரிக்கப்படும்வரை மளிகைக் கடைக்காரரையும், காய்கறிக்காரரையும், இறைச்சிக் கடைக்காரரையும் அந்தக் காசு காப்பாற்றியது. மூன்று முறை டெல்லா அதை எண்ணினார். ஒரு டாலர் எண்பத்தேழு சென்ட். அடுத்த நாள் கிறிஸ்துமஸ்.

இடிந்த சிறிய படுக்கையில் விழுந்து அலறுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. எனவே டெல்லா அதைச் செய்தார். இது வாழ்க்கை என்பது அழுகை, முகமூடிகள் மற்றும் புன்னகைகளால் ஆனது என்ற தார்மீக பிரதிபலிப்பைத் தூண்டுகிறது.

வீட்டின் எஜமானி முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருக்கும் போது, வீட்டைப் பாருங்கள். தளபாடத்துடன் கூடிய அறைகள். வாரத்திற்கு $8. அதைப் பற்றிச் சொல்ல இன்னும் கொஞ்சம் இருக்கிறது.

கீழே உள்ள முன்மண்டபத்தில் ஒரு சிறிய கடிதப் பெட்டி இருந்தது. ஒரு கடிதத்தின் அளவை விட சிறியது. மின்சார அழைப்பு மணிக்கான பொத்தான் இருந்தது. ஆனால் அதனால் ஒளி எழுப்ப முடியவில்லை. மேலும், “திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங்.” என்பதைக் குறிக்கும் பெயர்ப்பலகை இருந்தது.

அங்கு பெயர் வைக்கப்பட்டபோது, ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் இற்கு வாரத்திற்கு $30 கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது, அவருக்கு 20 டாலர்கள் மட்டுமே சம்பளமாக வழங்கப்படும் போது பெயர் மிக நீளமாகவும் முக்கியமானதாகவும் தோன்றியது. அது ஒருவேளை “திரு. ஜேம்ஸ் டி. யங்.” ஆகியிருக்கலாம். ஆனால் திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் அலங்கரிக்கப்பட்ட அறைகளுக்குள் நுழைந்தார், உண்மையில் அவரது பெயர் மிகவும் குறுகியதாக மாறியது.

திருமதி. ஜேம்ஸ் டில்லிங்ஹாம் யங் தன் கைகளால் அவரை இறுக்கப் பற்றிக் கொண்டு "ஜிம். நீங்கள் ஏற்கனவே இவளை சந்தித்திருக்கிறீர்கள். இவள் டெல்லா" என்றார்.

மேலும் படிக்க ...

கம்பராமாயணத்தில் ஒற்றர்கள்! - முனைவர் க.மங்கையர்க்க

விவரங்கள்
- முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
ஆய்வு
14 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

ஒற்றன் என்பதற்கு உளவு பார்ப்பவன் உளவாளி என்று பொருள். ஒற்றாடல் ஆட்சியில் இருக்கும் தலைவனின், மன்னனின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.ஒவ்வொரு மன்னனும் தன் நாட்டிலும், பிற நாட்டிலும் ஒற்றர்களை வைத்திருப்பர். தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், வேறு நாட்டில் இரகசியமாக என்ன நடக்கிறது என்பதை, தான் அறிந்து கொள்ளவே இரகசிய ஒற்றர்களை வைத்திருப்பர். ஒரு நாட்டில் வேற்று நாட்டு ஒற்றர்கள் பிடிபட்டால், அவர்களைக் கொலை செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் ஒற்றர்கள் குறித்து ஆராய்வோம்.

புறநானூற்றில் ஒற்றன்

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து நீங்கி, நெடுங்கிள்ளியின் உறையூரை இளந்தத்தன் என்ற புலவன் அடைந்தான். அவனை நெருங்கி ஒற்றன் என கருதி, கொல்லத் துணிந்தான். அப்பொழுது புலவனைக் கொல்லாதவாறு நெடுங்கிள்ளியைத் தடுத்தார் கோவூர்கிழார்.

“ வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி”
(புறநானூறு 47)

இதிலிருந்து பிற நாட்டு ஒற்றர்கள் என்ற ஐயம் ஏற்படின் அவர்களைக் கொலை செய்வதும் இருந்தது என்பதையும், அவ்வாறு இல்லை எனில் அவர்களை விடுதலை செய்ததையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

மேலும் படிக்க ...

மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் பற்றி.. - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
12 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மருத்துவர்  இராமநாதன் அர்ச்சுனாவின் சாவகச்சேரி மருத்துவ  நிலையக் குறைபாடுகள் ,மற்றும் யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் சிலரின் நடவடிக்கைகள் பற்றிய காணொளிகளைப் பார்த்தேன். இவர் கூறும் மருத்துவச் சீர்கேடுகள் முக்கியமானவை. தீர்க்கப்பட வேண்டியவை. இவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.  

அதே சமயம் பொதுவெளியில் நடந்து கொள்ளும் இவரது ஆளுமை அம்சங்கள் விடயத்தில் இவர் சிறிது கவனம் எடுக்க வேண்டும். தனக்குச் சார்ப்பான விடயம் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவர் குழந்தையைப் போல் துள்ளிக் குதிக்கின்றார். ஊடகவியலாளர் ஒருவருடன் இன்னுமொரு மருத்துவர் பற்றி உரையாடும் சமயத்தில் , அவ்வூடகவியலாளர் இவர்  குற்றஞ் சுமத்தும் மருத்துவரை வானலைக்கு அழைக்கையில் அம்மருத்துவர் இணைப்பைத் துண்டித்து விடுகின்றார். அம்மருத்துவர் செய்தது சரியான செயல். உடனே இவர் துள்ளிக் குதித்து 'நான் சொன்னேன் பார்த்தியா' என்பதுபோல் ஏதோ கூறுகின்றார்.

இவர் இன்னுமொரு மருத்துவருடன் அவருக்குத் தெரியாமல் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே , அம்மருத்துவரின் உரையாடலை ஒலிப்பதிவு செய்கின்றார். அம்மருத்துவரோ ஆளுமை விடயத்தில் இன்னும் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றார். பரதேசி என்று வார்த்தைப் பிரயோகமும் செய்கின்றார்.

மேலும் படிக்க ...

முகநூல்: எழுத்தாளர் 'கம்பிகளின் மொழி' பிரேம் அகால மரணம். ஆழ்ந்த இரங்கல். - யோ.புரட்சி -

விவரங்கள்
- யோ.புரட்சி -
இலக்கியம்
09 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர்  'கம்பிகளின் மொழி' பிரேம் அவர்களின்  அகால மரணம் பற்றிய எழுத்தாளர் யோ.புரட்சியின் முகநூற் பதிவு. போர்ச்சூழலில் பாதிப்புகளுக்கு உள்ளாகி, மீண்டும் தன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கையில் எழுத்தாளர் பிரேமுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அவரது மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். - பதிவுகள்.காம் -


கை ஒன்றினையும் கால் ஒன்றினையும் போராட்ட காலத்தில் இழந்த கம்பிகளின் மொழி பிரேம் அவர்கள் 05.07.2024 இரவு மரணித்தார். சிறை வாழ்வும் அனுபவித்தவர். அதன் தாக்கத்தால் 'கம்பிகளின் மொழி பிரேம்' என தன்னை அடையாளப்படுத்தியவர். இப்படம் 2017இல் பிரேம் எடுத்தது. தன்னைப் போலவே போரில் காயமுற்ற ஒருவரை திருமணம் செய்தவர்.  இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆனவர்.

2016இல் 'காய்ந்து போகா இரத்தக்கறை'  எனும் நாவலினை யாழ்ப்பாணம் நெல்லியடியில் வெளியீடு செய்திருந்தோம்.  அந்நாவல் இவர் எழுதியது. இக்காலத்தில் இவர் அச்சு ஊடகம் ஒன்றில் பணியாற்றியிருந்தார் இந்நூலுக்காக பின்னட்டைக்  குறிப்பினை எழுதிக் கொடுத்திருந்தோம். அதன் பின்பு 'மறந்திடுமோ மனதை விட்டு'  கவிதை நூலினை யாழ்ப்பாணத்திலும்,  'பொன்னான பரிசு' நூலினை  மன்னாரிலும் வெளியீடு செய்திருந்தார்.

மேலும் படிக்க ...

பாரதியார் நான் பேசுகின்றேன்!

விவரங்கள்
- வ.ந.கி -
கலை
09 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்
 
பாரதியாரின் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' கவிதையினை அவரே நம் முன் வந்து பாடினால் எப்படியிருக்கும்? இப்படி இருக்கும்.

அலசல் : கருவறுக்கும் அரசியலும்! - மன்சூரின் அண்மித்த கட்டுரையும் - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
09 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


1

சம்பந்தன் இறந்துவிட்டார். அவரின் மரணத்தை ரணில் மாத்திரம் அல்ல – புலம்பெயர் அரசியலும் தமக்கேற்ற வகையில் பயன்படுத்தி அரசியல் செய்ய துணிவது காணக்கிட்டுவதாய் உள்ளது. ஆனால், இதுவரை காலமும், தமிழ்த்தேசியம் பின்பற்றிய சம்பந்தரின் அரசியலும் இறந்துவிட்டதா? – அல்லது அது புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளதா? என்பது தெளிவற்றே காணப்படுகிறது. இதற்கிடையில் அவரது வாரிசான சுமந்திரன், பல்வேறு ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்டு நகர்கின்றார் என்பதிலும் சந்தேகமில்லை.

இச்சூழலில், மிக அண்மையில் வெளிவந்துள்ள சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்கள் காரசாரமானதாயும் வன்முறை கலாசாரத்தைத் தூண்டுவதாகவும் எதேச்சதிகார போக்கினை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன என்பது துயர்தருவது. உதாரணத்திற்கு :

“இத்தகைய தமிழ்த்தேசிய விரோதிகளைத் துரத்தியடிக்காமல், கருவறுக்காமல் தமிழ்த் தேசியத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது....” (திபாகரன் : தமிழ்வின் : 16.06.2024).

ஆட்டங்கான துவங்கியுள்ளதாய் கூறப்படும், தமிழ்த்தேசியத்தினைப் பாதுகாக்கும் வழிமுறை இதுவெனக் கூறப்பட்டாலும், இப்பார்வைச் சற்றே நிதானிக்கக் கூடியது. இதே காலப்பகுதியில் (ஓர் பத்து நாட்கள் இடைவெளியில்) வெளிவந்துள்ள மன்சூரின் அண்மித்த கட்டுரை ஒன்றும் இது பொறுத்தே கதைப்பதாகவுள்ளது. (விடிவெள்ளி : 27.06.2024).

மேலும் படிக்க ...

எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் எதிர்வினையும் அதற்கான என் பதிலும்... வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
08 ஜூலை 2024
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவரது 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள்' என்னும் என் கட்டுரைத்தொகுதி பற்றி எழுதிய விமர்சனத்துக்கு நான் எழுதிய எதிர்வினைகளுக்குப் பதிலளித்து இன்னுமோர் எதிர்வினையொன்றினை ஆற்றியிருந்தார். நான் என் முதல் எதிர்வினையில் பாரதியாரை அவரது ஆன்மீகக் கருத்துகளூடு, அவரது வர்க்க விடுதலை, பெண் விடுதலை, வர்ண விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல் போன்ற நிலைப்பாடுகளை அணுகுபவன் என்றும், அவனது முரண்பாடுகள் அவனது அறிவுத்தாகமெடுத்தலையும் விளைவுகள் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதனாலேயே என் நூலை என்னை மிகவும் பாதித்தவர்களில் ஒருவரான  அவருக்குச் சமர்ப்பித்தேன் என்பதையும் எடுத்துரைத்திருந்தேன்.

இதற்கான தனது இரண்டாவது எதிர்வினையில் அருண்மொழிவர்மன் பாரதியாரின் இன்னுமொரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: "பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'காலாடியில் பிரதிஷ்டை' என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது.  பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி குறிப்பிடும் "ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.” என்னும் கூற்றை எடுத்துக்காட்டி 'சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது.' என்று கூறுகின்றார்.

இங்கு தற்போது நாம் நடைமுறையில் இருக்கும் வர்ணப்பிரிவுகளைப்பின்பற்றும் , அதாவது பிறப்பால் ஒருவரது வர்ணம் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்னும் அடிப்படையில் போதிக்கும் மதவாதிகளில் ஒருவராக அருண்மொழிவர்மன் பாரதியாரை இனங்காண்கின்றார். இங்குதான் அருண்மொழிவர்மன் தவறி விடுவதாகக் கருதுகின்றேன்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அஞ்சலி: சமூக, அரசியற் செயற்பாட்டாளர் போல் சத்தியநேசன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
  2. 200 வருட வரலாற்றுப் பூர்த்தி! இரண்டு நூற்றாண்டுகளாக மலையக மக்கள் இந்த நாட்டுக்கு செய்த பாரிய பங்களிப்பு! - சட்டத்தரணி இரா. சடகோபன், தலைவர், மலையக மக்கள் ஆய்வு அபிவிருத்தி மன்றம் -
  3. கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -
  4. தமிழறிஞர் த.துரைசிங்கம் நினைவு கூரலும் நூல் வெளியீடும்! - தகவல்: வி.ரி.இளங்கோவன் -
  5. அஞ்சலி: எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் மறைவு!
  6. கவிதை: மழை பொழியும் நள்ளிரவில் படுக்கையில் நான்! - வ.ந.கிரிதரன் -
  7. “காலமும் மனிதர்களும்” நூல் பற்றி.... - இளையராஜா -
  8. முருக வழிபாடும் வெறியாட்டும்! - முனைவர் ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். -
  9. வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்' - வ.ந.கிரிதரன் -
  10. அமெரிக்கா முத்தமிழ் நூல் ஆய்வுப் பேரவை - நூல் ஆய்வு - 34
  11. காலம்: எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் ஒரு சந்திப்பு! 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சி! - தகவல்: 'காலம்' செல்வம் -
  12. அஞ்சலி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்தார்!
  13. எனக்குப் பிடித்த கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்' - வ.ந.கிரிதரன் -
  14. சிறுகதை : ஆசிரியர் என் அயலவர்! இது ஒரு நூல் விமர்சனமும் கூட! - கடல்புத்திரன் -
பக்கம் 31 / 115
  • முதல்
  • முந்தைய
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • அடுத்த
  • கடைசி