மாறும் உலக ஒழுங்கும், தமிழ் கேள்வியும் (2 ,3 & 4) : - ஜோதிகுமார் -

பகுதி ஒன்று (சென்ற இதழ் தொடர்ச்சி)
தனது எல்லையிலிருந்து, கிட்டத்தட்ட 500கி.மீ தொலைவிலுள்ள, ரஷ்ய விமான தளமான, ஏங்கெல்ஸ்-2ஐ, உக்ரைன் 04.12.2022 இல், தனது ட்ரோன்கள் மூலம் தாக்கியதற்கூடாக, ரஷ்ய-உக்ரைன் போரை இன்னுமொரு புதிய தளத்திற்கு, உக்ரைன் கொண்டுசென்று சேர்த்தது என கூறலாம். அதாவது கிரைமியாவின் பால-தாக்குதல், பின் ரஷ்யாவின் கடலுக்கடியிலான, எரிவாயு குழாய் தாக்குதல், இவற்றுக்கு பின்னதாக நடைபெற்றுள்ள ரஷ்யாவின் இவ்விரு விமான தளங்களின் மீதான தாக்குதல்கள் உலக அவதானிப்பை பரந்த அளவில் பெற்றுள்ளது. ரைசன் விமானதள தாக்குதலை விட ஏங்கெல்ஸ் விமான தள தாக்குதல் நிர்ணயகரமானதாக கருதப்படுகின்றது. காரணம், இவ்விரு தளங்களிலும், இத்தளமே, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாய் இருந்தது. இத்தாக்குதல் தொடர்பில், இதுவரை, இரண்டு பொருட்கோடல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, கார்டியன் போன்ற மேற்குலக ஊடகங்களின் கூற்று. மற்றது, மெக்ரோகர் போன்ற யுத்த வல்லுனர்களின் கூற்று.
கார்டியனின் கூற்றுப்படி, இதுவரை பாவிக்கப்பட்டிராத, மிக நுணுக்கமாய் வடிவமைக்கப்பட்ட, முன்னேறிய, 'ட்ரோன்'களை கொண்டு உக்ரைன் தாக்கியது, என்பது ஒரு வகை. அதாவது, புதிய வகை 'ட்ரோன்'களின் புதுவரவு. இப்புது வரவே, இவ்விரு விமான தளங்களின், தாக்குதல்களை சாத்தியப்படுத்தி இருந்தன. உக்ரேனிய எல்லையில் இருந்து, கிட்டத்தட்ட 500கி.மீற்றருக்கு உள்ளே, ரஷ்யாவில் ஆழ அமைந்து கிடக்கும் –அதுவும் ரய்சான் தளம் மாஸ்கோவில் இருந்து கிட்டத்தட்ட, 150கி.மீற்றர் தொலைவிலேயே உள்ளது என்ற சூழ்நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மறுபுறத்தில், மெக்ரோகரின் பொருள்கோடல்: இத்தாக்குதல்கள், உக்ரைனில் இருந்து புறப்பட்ட புதிய வகை 'ட்ரோன்'களால் நடத்தப்பட்டவை ‘அல்ல’. மாறாக, ரஷ்யாவின் உள்ளேயே இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இதுவாகும் என்பதே அவரது பொருள் கோடலின் உள்ளடக்கமாகும்.
முன்னர் குறிப்பிட்ட, கார்டியனின், முன்னேறிய 'ட்ரோன்'கள் பொறுத்த கூற்று, ரஷ்யாவின் 'ட்ரோன்' விடயங்களை திசை திருப்பவும், ரஷ்யாவை தொடர்ந்தும் இருட்டில் ஆழ்த்தவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம். ஆனால் மெக்ரோகரின் பார்வையில், ரஷ்யா ஒரு பிரமாண்டமான எல்லைகளை கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. இப்படி விரிந்து கிடக்கும் ஒரு நாட்டின், எல்லைகளுக்கூடாக, ‘ஆழ ஊடுருவுவது’ என்பது மிக எளிதான ஒரு விடயம்தான் என்பது அவரது கருத்தாகின்றது.


எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் பதிவொன்று என் மனத்தைக் கவர்ந்தது. 'நானும் எழுத வந்தேன்' என்பது தலைப்பு. எழுத்தாளர் திக்குவல்லை கமால் வில்லிதேவசிகாமணி விருது பற்றி ஹனிபாவுக்குக் குறிப்பிட்டு அவரது 'மக்கத்துச் சால்வை' நூலை அவ்விருதுக்காக அனுப்பும்படி கூறுகின்றார்.

இலக்கிய வடிவங்களுக்கு இலக்கணம் வகுப்பது கடினம். ஏனென்றால், எல்லாப் படைப்புகளும் படைப்பின் எல்லா அம்சங்களும் இந்த வரையறைக்குள் அடங்கிவிடும் என்பதில்லை. ஆற்றல் வாய்ந்த கலைஞர்கள் இத்தகைய வரைவிலக்கணங்களை மீறியபடியே, புதுவிதமான அம்சங்களைக் கொண்ட சிறந்த படைப்புகளை அவ்வப்போது உருவாக்கி வருகின்றனர். வரைவிலக்கணங்களெல்லாம் பொருந்தி இருந்துவிடுவதனால் மட்டும், ஓர் இலக்கியப்படைப்பு சிறந்ததாக இருக்குமென்றுமில்லை. இலக்கணங்களெல்லாம் பொருந்தியிருந்தும் அதில் உயிர் இல்லையாயின் - வாசகரின் மனதைப்பிணிக்கும் கலைத்தன்மை இல்லையாயின் – அதிற் பயனேதுமில்லை. இதனூடாக, இலக்கிய வடிவங்களிற்குத் திட்டவட்டமான வரையறைகளைக் கொடுக்கமுடியாதென்பதையும், அவற்றின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை புரிந்துகொள்ளலாம் என்பதையுமே, நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை என்ற இலக்கியத்துக்கும் இது பொருந்தும். 
அறம் என்ற ஒற்றைச் சொல்லால், மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் செயல்படுத்திய, பண்டைத் தமிழரின் அறவோர் வாழ்க்கை நெறி இன்று தனது பழம் வடிவத்தை இழந்து நிற்கிறது. கொடை, நீதி, இன்பம், தலைமை, பொது நலம் என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறைகளால் புதிய வடிவாக்கம் பெறுகின்றன. கொடை என்பது இன்று புகழ் தரக்கூடிய விளம்பரச்சூழ்ச்சி; நீதி என்பது தனது மனதின் எண்ணத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் தலையாட்டி பொம்மை; இன்பம் என்ற பெயரில் தீய அறிவின் வழியே புலன்களை மயக்கம் காட்டிச் செல்வது அழியா இன்பம்; தலைமை என்பது தனக்கென மட்டுமே வாழும் கொள்கை; பொதுநலம் தனது அகராதியின் பொருள் இழந்து காட்சி அளிக்கின்றது. அவ்வகையில் வழக்கிழந்த நீதிகளின் நிலைமைகளை முதுமொழிக் காஞ்சியின் வழி எடுத்துரைப்பதோடு, சமூகத்தில் அறம் தகவு பெற்று, புத்துயிர் பெற வழி காட்டுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
இதற்கு மேலே செல்கிறார்கள் . புளொமின்டன் " லுக் அவுட் " , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது . அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம் . கண் கொள்ளாக் காட்சிகள் கண்களை நிறைக்கின்றன . அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும் இருக்க வேண்டும் . சற்று செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை . ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள் . மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும் . நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும் . மண்ணும் தான் . அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள் இருக்கின்றன .


இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது. 

மானுடப் பிறவிகளுக்கு 


‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.
சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த உணர்வுகளை மென்மையுடனும், புறம் சார்ந்த தோற்றங்களை அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை ஓர்மத்துடனும் வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









