ரொறன்ரோ தமிழ்ச் சங்க இலக்கியச் சந்திப்பு: ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்!
தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும்.
தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும்.
ஓவியம் - chatGPT AI
[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ‘அமெரிக்கா’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘ பனியும் பனையும்’ சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதை தாயகம் (கனடா) பத்திரிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளது. எனக்குப் பிடித்த எனது சிறுகதைகளில் ஒன்று. பத்திரிகைகள் பலவற்றில் மீள் பிரசுமான கதை. சிறுகதை.காம் தளத்திலும் இடம் பெற்றுள்ள எனது கதைகளில் ஒன்று. ]
ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித ‘டென்ஷ’னுமின்றிப் பின்னால் ‘ஹோர்ன்’ அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘ஹோர்ன்’ அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. ‘நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை’ இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். ‘நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்’ என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.
‘ஓல்ட்வெஸ்டன்’ றோட்டைக் கடந்து ‘கீல் இண்டர்செக்ஷ’னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் ‘கனடாபக்கர்ஸி’ன் ‘ஸ்லோட்டர்’ ஹவுஸ்’ பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.
- ஓவியம் AI -
1. பால்ய வடுக்களின் ஈர்ப்பு.இந்த அகாலத்தில்
கிளர்ந்தெழும்
அன்பை
மடை மாற்ற முயலும் பொழுது
வீசிய தென்றலின்
வாசனையில்
இழுத்துச் சென்றுவிட்டது
பால்ய கால
பள்ளி நிகழ்வுகளுக்குள்
விடாமல்.
சிதிலமடைந்த
கட்டிடத்தில்
சிலேட்டுகளில்
நாங்கள் கிறுக்கி
விளையாடியபொழுது
மேசை மீதமர்ந்து
மேல வீட்டு
ஜோதியக்கா
லிங்கம் வாத்தியாரிடம்
என்ன சொன்னதென
தெரியாது.
நாற்காலியில்
இருக்கும் வாத்தியாரின்
உள்ளங்கையில்
உள்ள தோலை உரித்து
ஒவ்வொன்றாக வீசி.
செல்லும்போது
சிரித்து
கையசைத்தது
அக்கா
காட்சியாக கடக்கிறது
தாவணியில் பேரழகியாக
இப்போதும்.
ஆகஸ்ட் 10 அன்று அகவை எண்பது காணும் ஆசானுக்கு வாழ்த்து! மனிதமே உருவும்; என்றும்
மனதிலே கனிவும்; மேவும்
புனிதமே செயலும்; நாளும்
பூவெனச் சிரிப்பும்; எந்தைத்
தனிமுக வடிவும்; பெற்ற
தாயவள் தயைவும்; நாவின்
நுனிதனில் கவியும் கொள்ளும்
நுஃமானே என்றும் வாழ்க!
குருவென ஆகி நின்றே
குவலயம் அறியவைத்தாய்!
பெருமனதோடு நல்ல
பெற்றிகள் எய்த வைத்தாய்!
'உருவது உண்மை' என்றே
ஊன்றி நீ பதிய வைத்தாய்!
குருவென நின்றாய்! எந்தன்
குருபர நுஃமான் வாழ்க!
' நான், இதுவரையில் காதல் கதை எழுதியதில்லை . ஏன் , எழுதக் கூடாது ? ... உமா உனக்கு ஏன் இப்படி , பையித்தியக்கார எண்ணங்கள் எல்லாம் வருகின்றன ' . நம்மவர்களிற்கு தமிழீழக்கனவு வரவில்லையா , அப்படி . கூடவே ,சொரூபி சரஸ்வதிப்பூஜையின் போது குச்சுப்பிடி பிடித்தது அவன் நினைவிற்கு வந்தது . நடனம் பழகியவள் , ஆடினாள் . குட்டிப் பெட்டை . நானும் அன்று குருணி தான் . கண் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன் .சினிமாவிலே அக்கா , அம்மாமார் ஆடுறதைப் பார்த்திருக்கிறேன். ' பத்மினி , தாரகை , இந்த குண்டு அம்மாவால் எப்படி உடம்பை வளைத்து , கிளைத்து உடற்பயிற்சி எடுக்க முடிகிறது ' ஆச்சரியம் என்றாலும் அங்கே அம்மா என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது . உமாவிற்கு , இடம் பெயர்ந்த பிறகு இப்படி ஊர் நினைப்புகளை அசை போடுவதே பழக்கமாகி போய் விட்டது . இலங்கையோ... நம் தாய்நாடில்லை 'என்று மறக்க வைக்க முயல்கிறார்கள் . முட்டாள்கள் . இறந்த பிறகு 'ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது ' என்பது அவர்களுக்குப் புரியவில்லை . மறை இருந்தால் அல்லவா புரிவதற்கு ? . நம் பிராய காலத்தையாவது கலாயிப்போம் என நினைப்பை மாற்றினான்.
குழந்தாய் சொரூபிக்கு என்னை விட நாலு வயசு குறைவாக இருக்கும் . ' நாதம் என்னும் கோவிலே நானும் விளக்கு ஏற்றி வைத்தேன் ' வரிகளுக்கு ...அடேயப்பா எத்தனை உணர்ச்சி அபிநயங்கள் , மிச்சபாட்டைத் தான் அவனுள் மனம் இட்டுக்கட்டி பாடிக் கொண்டு போகிறதே ...! . ஒரு கவிஞரின் வரிகள்...பல்லவி , சரணத்தில் .. நேராக அல்லது தட்டி நெளிக்கப்பட்டோ ...வாழ்கிறது தான் . நீங்களும் கவிதை எழுதுங்கள் . ' புல்லாங்குழலே என் ஜாதி , நானும் நீயும் ஒரு ஜாதி ! ' இப்படி , முணு முணுக்க உங்களுக்கே தெரியாத ஊர்பேர் தெரியாத பலபேர் இருக்கிறார்கள் .
இலங்கையில் முன்னர் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் இந்த வாரம் அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு கல்வி நிதியத்தின் அம்பாறை மாவட்ட தொடர்பாளர் அமைப்பான பாண்டிருப்பு மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் தலைவர் திரு. ந. கமலநாதன்( ஓய்வு நிலை அதிபர் ) அவர்களின் தலைமையில் இருதினங்கள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் நிறுவகத்தின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.
தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப் பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.
வலிமையான பாரதத்துடன் ஏற்படுத்திய 13 அம்ச ஒப்பந்தத்தையே இதுவரையில் நடைமுறைப் படுத்தாமல் இலங்கை அரசு இருக்கும் நிலையில், முதலில் செய்ய வேண்டியது அதனை நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்துவதுதான். அவ்விதமானதொரு சூழல் எற்பட்டால், அத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டால், காலப்போக்கில் இலங்கையில் மாகாண சபைகள் நன்கு செயல்படத் தொடங்கினால், மாகாண சபைகளின் குறைபாடுகளை மேலும் நிவர்த்தி செய்யும் கோரிக்கைகளை வலியுறுத்தலாம். அடுத்த கட்டமாக மாகாண சபைகளை மாநில அரசுகளாக மாற்றும்படி , சமஷ்டி முறையிலான மாநில அரசுகளாக மாற்றும்படி வலியுறுத்தலாம்.
ஓவியம் AI -
காக்கைவிடுதாது ஆசிரியா பாந்தவூர் வெண்கோழியார் ஆவார். புறப்பொருள் பற்றிய தூது நூலாகும். 1937-39ஆ ம் ஆண்டு வரை சென்னை மாநில முதலமைச்சராக பள்ளிகளில் கட்டாயமாக்கப் பெறவில்லை. ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது அந்திலையில் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் இந்தி மொழியினைக் கட்டாயப்பாடமாக்க உத்தரவிட்டார். அப்பொழுது தமிழ் விருப்பப்படாமாகவே இருந்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்காமல் அயல் மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்குதல் கூடாது என மறைமலை அடிகளார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பேராசிரியர் சோமசுந்தரபாரதியார், தமிழ்வேள் உமாமகேசுவரம் பிள்ளை போன்றோர் இத்திட்டத்தினை எதிர்த்தனர் மூதறிஞர் இராசாசி அவர்கள் நமது கட்சிப் பெரும்பான்மையைக் கொண்டு தமது திட்டத்தை கைவிட வில்லை இதிட்டத்தை எதிர்த்து பெரியார், துறவிகள், பெண்கள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சூழலில் 1989 ஆம் ஆண்டில் பாடப்பெற்றதே காக்கைவிடு தூது என்னும் நூலாகும்.
அண்டங்காக்கை - பெயர்க்காரணம்
கருங்காக்கையை அண்டங்காக்கை என நிறத்தை மையப்படுத்தி மனிதர்கள் கூறுவதுண்டு ஆனால் ஆசிரியரோ கடவுளுக்கும் கருமை நிறம் உண்டு உனக்கும் கருமைநிறம் உண்டு. அண்டம் என்றால் உலகம், காக்கை என்பதற்கு காத்தல் என்று பொருளும் உண்டு. ஆக அண்டங்காக்கை என்பது உன் நிறம் குறித்துக் கூறுவதன்று. உன்னைப் பெருமைப்படுத்தும் பெயர் என்கிறார். இதனை,
"அண்டங்காக கையென்ன ஆயினாய்
மண்டு நிறத்தைக் கருதாது
நின்பெருமை நின்னை யுறவே
கருங்காக்கை யென்பர் திறல்சேர்
கருமைநிறத் தானுங் கடவுளமைத்திட்ட
பெருமை யடையாளப் பேரே"
என்ற பாடலடிகள் வழி அறிந்து கொள்ளலாம்.
ஓசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=w9bSBvRq-Zk வ.ந.கிரிதரன் பாடல்கள் அனைத்தையும் கேட்க - https://www.youtube.com/@girinav1
விண்ணைப் போன்றதொரு நூலகம்
விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?
விரிந்திருக்கும் விண் எனக்கு
விளக்கும் ஓர் ஆசான்.
இருப்பை விளக்கும் ஆசான்.
இங்குதான் சிந்தனைகள் விரிவடையும்.
விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?
விரிந்து செல்லும் விண்ணுக்கு
எங்குண்டு ஒரு முடிவு?
அன்றொரு நாள் பெருவெடிப்பில்
இன்றுள்ள விண் தோன்றியதாம்.
விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?
தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணர்
இசை & குரல்: AI SUNO
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6tzw0IE3y-I | தேவநேய பாவாணரின் திரவிடத்தாய் -
தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.
திரவிடம் மூலம் தமிழம்
திராவிட மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின் குழந்தைகளே.
தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.
தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.
- ஓவியம் AI -
அப்பாச்சி அடிக்கடி சொல்வாள்.
சரியான இடம் அவள் ஞாபகத்தில் இல்லை.
அப்பாவும் பெரிதுபடுத்தவில்லை.
இரவுக்காட்சி பார்த்துவிட்டு பயத்தில்
மாட்டுக் கொட்டிலில் படுத்துத் தூங்குகையில்
கைவிளக்குடன் வந்த அப்பா
வீட்டினுள்ளே அழைத்துவந்தார்.
அம்மாவுக்கு அருகில் தூங்கினேன்.
விளக்கின் ஒளியில் அம்மாவின் முகம் தெரிந்தது.
தூரத்தே சிறுவெளிச்சமாய்...
அப்பா சுருட்டை நான்காவது தடவையாகவும்
பற்றவைத்துத் தோற்றுப்போகிறார்.
ஒருநாள் சுற்றிவளைத்த சப்பாத்துக்கால்கள்
அதே மாட்டுக்கொட்டிலில் சுட்டுவிட்டுச் சென்றனர்.
அப்பாச்சியின் அம்மா புதைத்த இடத்தில்.
அப்பாச்சிக்கு புதையல் பற்றிய
ஞாபகம் இப்போது வந்திருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
முன்னுரைஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயன்படும் ஊர்தியே தேர்.அந்தத் தேரை ஓட்டுபவர் தேர்ப்பாகன் என்று அழைக்கப்பட்டார். நால்வகை படைகளில் ஒன்று தேர்ப் படையாகும். தேரில் நகர்ந்து தாக்கும் படை தேர்ப் படை. தேரில் குதிரைகள் பூட்டப்பட்டன. அதைத் தேர்ப்பாகன் செலுத்தினான். தேரை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். .சங்க இலக்கியத்தில் தேர்ப்பாகன் குறித்து நிறைய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கம்பரும் தன் இராமாயணத்தில் தேர்ப்பாகன் குறித்து கூறியுள்ள செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கைகேயி ஒரு தேரோட்டி
போரில் வெற்றிபெற தேரோட்டி மிகவும் வல்லவனாக இருக்கவேண்டும். சம்பராசுரனுடன், தசரதன் போர் புரியும்போது கைகேயி அவனுக்கு உதவினாள். பாடலில் ’கோல்கொள’ என்ற பகுதிக்குத் தேர் சக்கரத்தின் அச்சாணி கழன்று விழுந்துவிட்டபோது, அந்தத் தேர் சாய்ந்து விழுந்து விடாதவாறு தன் விரலையே கோலாகக் கொண்டு தேரை ஓட்டினாள். என்றும், தேர்ப்பாகன் இல்லாத நிலையில் தசரதனுக்காக குதிரைகளை ஒட்டுகையில் கோல் கொண்டு தேரை ஓட்டினாள் என்றும் கொள்ளலாம். தேர்மீது அமர்ந்து போர் செய்யும் போது தேரைச் செலுத்தும் பாகன் தேர்ப்பாகனாவான்.
“பஞ்சி மென் தளிர் அடிப்பாவை கோல்கொள
வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு
எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ”
(மந்திரப்படலம் 18)
தேர்ப்பாகனின் கடமை
` தேரில் ஏறிய தலைவனின் குறிப்பறிந்து தேரினைச் செலுத்துதல் தேரோட்டியின் கடமை ஆகும். தேரில் ஏறிப் போர் செய்பவர் கருத்தும், குதிரையின் உள்ளமும் ,பகைவர் மனமும், கால நிலையும், காரிய சாதனையும் அறிந்து நடக்கவேண்டும்.போர் செய்பவர் தடுமாறும்போது,உண்மை நிலையை உணந்து எடுத்துக் கூறவேண்டும். தேரில் ஏறிப் போர் செய்பவர் தளர்ச்சியுற்றால்,தொடர்ந்து போர் செய்ய இயலாதநிலையில் அவருடைய உயிரைக் காக்கவேண்டும்.பாகன் ஓட்டும் தேரில் ஏறிப் போர் செய்பவர் மனதில் தவறான எண்ணம் தோன்றினாலும் உண்மைத் தன்மையை எடுத்துக் கூறவேண்டும்.எதிரிகள் தேர்ப்பாகனையே முதலில் வீழ்த்துவர். ஏனெனில் அப்போதுதான் பகைவர் தேர் ஓடாது என்பதால் முதலில் தன் உயிர்க்கே ஆபத்து என்று தெரிந்த நிலையிலும் தன் தேரில் ஏறுபவரைக் காக்கவேண்டும்.
ஐரோப்பியத் தமிழ் ஆவணக் காப்பகமும், ஆய்வகமும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கையேடு. இவ்வாய்வுக் கையேடு இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றிய முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு. 1856 தொடக்கம் 2019 வரையில் வெளியான நாவல்களை உள்ளடக்கிய ஆய்வுக் கையேடு இத்துறை பற்றிய ஆய்வாளர்கள் பலருக்கும் பல்வகைகளிலும் உறுதுணையாகவிருக்கும்.
இக்கையேடு பற்றிய தனது 'நுழைவாயிற்' குறிப்பில் இக்காலகட்டத்தில் வெளியான ஈழத்தின் கணிசமான தமிழ் நாவல்களை இவ்வாய்வுக் கையேட்டில் காணலாம் என்கின்றார் நூலகர் என்.செல்வராஜா.
இந் 'நுழைவாயிற்' குறிப்பின் இறுதியில் நூலகர் என்.செல்வராஜா அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "ஈழத்தித் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முனையும் அறிமுக ஆய்வாளர்களுக்கும் ஆய்வுத்துறை மாணவர்களுக்கும் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் தமக்குரிய பின்புலத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இப்பட்டியலில் உள்ள நூல்கள் உதவக்கூடும். இந்நூல் ஒரு தனிமனித முயற்சியாகும். வரையறுக்கப்பட்ட சொந்த முதலீட்டுடன் லாபநோக்கின்றி ஆய்வாளர்களின் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இருப்பினைப் பலருடனும் பகிர்ந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.''
நூலகராக இருந்த இவரது அனுபவம் இவர் வெளியிடும் ஆய்வுத் தொகுதிகளில் தெரியும். இலகுவாகத் தகவல்களைத் தேடியறியும் வகையில் பிரிக்கப்பட்டிருக்கும். இத்தொகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. தொகுதியிலுள்ள நாவல்கள் 1. ஈழத்து நாவல்கள், குருநாவல்கள், 2. மொழிபெயர்ப்பு நாவல்கள், குறுநாவல்கள், 3. சிறுவர் நாவல்கள், சிறுவர் கதை நூல்கள், 4. சிறுவர் மொழிபெயர்ப்பு நாவல்கள், சிறுவர் கதைகள், 5. இவ்வாண்டில் வெளிவந்ததாகக் கருதப்படும் நாவல்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. தகவற் தேடலை இலகுவாக்கும் பிரிவுகள் இவை.
சென்ற சனிக்கிழைம யூலை மாதம் 27 ஆம் திகதி 2024 அன்று மலை 6:00 மணியளவில் ரெறன்ரோவில் உள்ள சீன கலாச்சாரமண்டபத்தில் செல்வி சாக்ஸவி திலீபனின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. நண்பர் திலீபனின் அழைப்பை ஏற்று நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இது போன்ற பரதநாட்டிய, இசை அரங்கேற்றங்கள் சிலவற்றுக்குச் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டிருந்தாலும், அன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டது போல இசை, நடன ஆசிரியர்களை நான் ஒரு போதும் இப்படியான நிகழ்வுகளில் சந்திக்கவில்லை. இந்த நிகழ்வில் பல புதிய இசை, நடன ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடவும் முடிந்தது குறிப்பிடத் தக்கது.
சாக்ஸவியின் தாயார் ஸ்ரீமதி சுதர்சினி அவர்கள் நடன ஆசிரியராக இருப்பதும் இவர்களின் வருகைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கனடா வளாகத்தைச் சேர்ந்த டாக்டர் சூரியகலா சந்திரிகா ஜீவானந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த அரங்கேற்ற நிகழ்வுக்கு அற்புத நர்த்தனாலய அதிபர் ஸ்ரீமதி அற்புதராணி கிருபராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் தனது உரையில் ‘செல்வி சாக்ஸவி திலீபன் மிகவும் திறமை உள்ள பாத்திரலட்சணங்கள் பொருந்திய அன்பும், அடக்கமும், பணிவும் உள்ள சிறந்த மாணவி. நல்ல அங்கசுத்தம், சிறந்த வயப்பிடிப்பு, உணர்ந்த பாவம் என்பனவற்றை சாக்ஸவியின் இந்த நடனத்தில் கண்டு மகிழ்ந்தேன். இந்த அரிய கலையைப் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் உள்ள அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு சாக்ஸவி போன்றவர்களிடமே இருக்கிறது, அவரது எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc வ.ந.கிரிதரனின் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1
மேற்கு நாடு நோக்கிப் பொருள் தேடச் சென்ற கணவனைப் பற்றிய தகவல்கள் எவையுமற்று வாடும் பெண் ஒருத்தியின் உணர்வுகள் இவை. அவள் தன் உணர்வுகளை நட்சத்திரத் தோழியரிடம் உரைக்கின்றாள். உதவும்படி கேட்கின்றாள்.
நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -
படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித் தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.
நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.
- எழுத்தாளர் 'ஈழக்கவி' ஏ. எச். எம். நவாஷ் -
ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.
1980களிலிருந்து கவிதை எழுதிவரும் ஈழக்கவியின் ஏவாளின் புன்னகை, இரவின் மழையில் ஆகிய கவிதைத் தொகுதிகள் இவரை குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவர் என நிறுவியுள்ளன. விமர்சகர், ஆய்வாளர் என்ற வகையில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் விரிவாகவும், ஏராளமாகவும். எழுதியுள்ளார். ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு, பிரமிள் கவிதைகள் ஒரு நுண்ணிய உசாவல், அழகியல் மெய்யியல் ஆகிய இவரது நூல்கள் இவ்வகையில் முக்கியமானவை.
ஈழத்துத் தமிழறிஞர்களான பேராசிரியர்கள் சுவாமி விபுலாநந்தர், தனிநாயகம் அடிகளார், க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், ம. மு. உவைஸ் முதலியோர் பற்றிய ஈழக்கவியின் சிறு நூல் வரிசை இவர்கள் பற்றிய பயனுடைய அறிமுகமாகவும், ஆய்வாகவும் மதிக்கத்தக்கது.
ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டையிட்டாய்
கடலைக் கடைந்து
கடலோரம் முட்டையிட்டேன்.சற்றே மாற்றி பாடினால் இவ்வாறுதான் அமையும். ஆனால் இயற்கை அடிப்படையில் மாறாது எனில், மனிதன் இயற்கையோடு தொடுக்கும் போரும் மாறாது. (சாராம்சத்தில்).
காலை ஆறுமணியளவில் பாதையின் வலப்புறமாய் கடற்கரைக்கு அடுத்ததாயிருந்த அந்த பெரிய வீதியில் நடக்க தொடங்கினேன். எனது வலதுபுறத்தில் ஒரு மைதானம் போல் கிடந்தது வயல்வெளி. உண்மையில் அதனை வயல்வெளியென்று சொல்ல முடியாது. வேண்டுமென்றால், புல்வெளியென்று சொல்லலாம். நடக்;க முடியாது - சதுப்புநிலம் என்று விடுதி உரிமையாளன் எனக்கு சொல்லியிருந்தான். எனவேதான் வீதி நெடுக நடக்க முடிவு செய்தேன். ஆனால் வயலை அடுத்ததாய் அந்த பிரம்மாண்டமான குளம் கிடந்தது. பல சிறு சிறு குடில்கள் கரையோரமாய் முளைத்திருந்தன. ஒருவேளை அவை இறால் பிடிக்க வசதி செய்வனவாக இருக்கக்கூடும். பெரிய படகுகள் சிலவேளை அங்கு வந்து இறங்கக்கூடும். தெரியவில்லை.
சிறிது தூரம் சென்றவுடன் பனைமரங்கள் வீதியோரமாய் ஆங்காங்கே, நிற்க தொடங்கி இருந்தன. அதாவது வீதி. அடுத்ததாய் பனை மரங்கள். அடுத்ததாய் வயல்வெளி. அடுத்ததாய் குளம். ஒரு பத்து பதினைந்து பனை மரங்களை கடந்தால் வயல்வெளி. பின் குளம்.
இறங்கி, அந்த பனை மரங்களை கடந்து வயலை அடைந்தேன். சில ஒற்றையடிப்பாதைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடின. ஒன்றின் வழியே குளத்தருகே சென்றேன். இப்போது அவை கரையோடு ஒட்டி இருந்த குடில்களாய் இல்லை. கரையில் இருந்து, ஐந்தாறடி உள்ளே குளத்து நீரில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் ஒன்றின் ஓரமாய் படகொன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை யாரேனும் வந்திறங்கியிருக்க வேண்டும். வந்து என்ன செய்வார்கள்? தெரியவில்லை. தூரத்தே, தீவு போலிருந்த ஒரு சிறு பிரதேசத்தில் நாணற்புற்கள் இடுப்புவரை வளர்ந்திருந்தன.
ஓவியம் AI
- இசை & குரல்: AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=syd_-1rqcL4
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.
இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.
இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.
- ஓவியம் AI -
கடந்த ஆனி மாதம், சீக்கிய மத முறையிலான திருமணம் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இது நான் பார்த்த முதலாவது வேற்று இன, மத திருமணம் என்பதால் அது சம்பந்தமான எனது மன உணர்வுகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே சீக்கிய இனத்தவருடன் எனக்கு இருந்த தொடர்பு பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் போட்ஸ்வானாவில் சீக்கியர் ஒருவரோடு மூன்று மாதங்கள் ஒரே வீட்டில் வசித்திருக்கிறேன். வீடு விற்பனை முகவராகக் கனடாவில் வேலை பார்த்த அவர், அக்காலப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாகத் தொழில் தேடி போட்ஸ்வானாவிற்கு வந்தார். கனடாவில் இருக்கும் எனது சகோதரரின் பரிந்துரையோடு வதிவிடம் தேடி எனை நாடி வர, இந்திய அமைதிப் படையின் அடடூழியங்களை நேரடியாகப் பார்த்திருந்தாலும், வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன். எனினும் அவருடன் நான் வசித்த அந்த மூன்று மாதங்கள், சீக்கிய சமுதாயம் பற்றிய எனது எண்ணத்தை முற்றாக மாற்றி விட்டன. அன்று தொடங்கிய எமது நட்பு, நான் போட்ஸ்வானாவை விட்டு வரும் வரை தொடர்ந்தது.
சுவாரசியமாகப் பேசவும் சுவையாகச் சமைக்கவும் கூடிய அவரோடு நடந்த உரையாடல்களில் இருந்து சீக்கிய மதத்தின் வரலாறு, சீக்கியர்களின் வாழ்க்கைமுறை பற்றி விபரமாக அறிந்து கொண்டேன். ஒரு இந்துத் தகப்பனுக்கும், இஸ்லாமியத் தாய்க்கும் பிறந்த குரு நானக்(1469-1539) எனும் குருவினால் சீக்கிய மதம் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து வந்த 9 சீக்கிய மத குருமார்களினால் அது மெருகூட்டி வளர்த்தெடுக்கப்பட்டது. பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், அவர்களுடைய புனித நூலான குரு கிரந்த் சாஹிபை தனக்கு அடுத்த குருவாக பிரகடனப்படுத்த, இன்று வரை அந்தப் புனித நூலையே குருவாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் உள்ள பிரதான மண்டபத்தில் உள்ள தர்பார் சாஹிப் என்று அழைக்கப்படும் சிறு மேடையில் குரு கிரந்த் சாஹிபை வைத்து, கவிதை வடிவில் அதில் உள்ள சுலோகங்களைப் பாடித் துதிப்பது, அவர்களின் வழிபாட்டு முறையாகும். இந்து, இஸ்லாம் இரண்டினதும் வரலாறு, இறையியல்த் தடங்களை சீக்கியம் தன்னகத்தே கொண்டுள்ளது. சீக்கியம், எப்படி வாழவேண்டும் என்று பல நல்ல விடயங்களைக் கூறி இருந்தாலும், தியாகம், மனித நேயம் மற்றும் நேர்மையான நடத்தை என்பவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
- ஓவியம் AI -
இசை & குரல்: AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=RUxx8ili1gM
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.
என் பால்ய காலத்து நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.
பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக் கழித்த பொழுதுகள் தெரிந்தன.
இலக்கியங்கள் குறிப்பிட்ட காலத்தைச் சோ்ந்த படைப்பாளிகளால் படைக்கப்படுவதாகும். ஆதலால் இலக்கியங்கள் யாவும் அவை தோன்றிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை, முழுமையாக சுவீகரித்துக் கொள்ளும் என்று கூறுவா். இதனால் இலக்கிய உருவாக்கத்தில் வரலாற்றுப் பின்னணியின் முதன்மை இடத்தை உணர முடிகின்றது. வரலாற்றிற்குப் பலமுகங்கள் உள்ளன. அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, கலை வரலாறு, அறிவியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு எனப்படும் பல முகங்களுக்கும் அடிப்படையானது – அனைத்துத் துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது அரசியல் வரலாறு ஆதலால் படைப்பு, படைப்பாளா் வரலாறு அறிவதற்கும், அரசியல் வரலாறு அவசியமாகின்றது. இலக்கியம் உருவாகி வளா்ந்திட்ட, தமிழகத்தின் அரசியல் வரலாறாகிய படைப்புச்சூழல், படைப்பாளா் வரலாறு அறியப்பட்டால் பக்தி இலக்கியங்களைச் செம்மையாக அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் மாணிக்கவாசகா் வரலாறையும் படைப்புச் சூழலையும் ஆராய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.
மாணிக்கவாசகா் பிறப்பு
பாண்டிய நாட்டில் வைகை ஆற்றங்கரையில், மதுரை நகரிலிருந்து ஏழுமைல் தொலைவில் உள்ள திருவாதவூரின் கண், மானமங்கலத்தில் மறையோதும் ஓா் அந்தணா் குடியில் பிறந்தவா் மாணிக்கவாசகா். இவா் தாய் தந்தையார் பெயா் புலப்படவில்லை. ஆயினும் சிலா் இவரது தாய் தந்தையார் பெயா் சம்புபாதாசிரியா் என்றும் சிவஞானவதியார் என்றும் கூறுவா். ஆனால் மறைமலைஅடிகள் இக்கருத்தை பின்வருமாறு மறுத்துக் கூறுகின்றார்.
- இசை & குரல்: AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zNGlkKq8ZPc
கனடாவுக்குச் செல்லும் வழியில் டெல்லா எயார் லைன்ஸ் பொச்டனிலிருந்து மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால் பொஸ்டனில் அகதியாக அடைக்கலம் கோரினேன். என்னை நியு யோர்க் மாநகரிலுள்ள புரூக்லின் என்னும் தடுப்பு முகாமில் மூன்று மாதம் தடுத்து வைத்திருந்தார்கள். அது பர்றி விபரிக்கும் கவிதை இது.
அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -
அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.
அகதியாகக் கனடா செல்லும் வழியில்
ஆகாய விமானம் , டெல்டா ஆகாய விமானம்
மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால்
மாநகர் பாஸ்டனில் அடைக்கலம் கோரினேன்.
அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.
பூலோகத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்பட்ட இலங்கைக்கும் இராமாயணத்திற்கும் தொடர்பு இருப்பதை ஐதீகக் கதைகள் மூலம் அறிகின்றோம். இராமாயணத்தில் வரும் இராவணன் தமிழனாகவும் இராமன் ஆரியனாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு பாத்திரங்களின் குணவியல்புளை வைத்து இன்றும் பட்டிமன்றங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். வால்மீகி இராமாயணம் – கம்பராமாயணம் ஆகியன குறித்தும் மாறுபட்ட கதைகள் தொடருகின்றன.
இந்தியாவில் உத்தரபிரதேசம் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்று சொல்லிக்கொண்டு 32 வருடங்களுக்கு முன்னர் ( 1992 – டிசம்பர் 06 இல் ) ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பாபர் மசூதியை இந்துத்துவா கரசேவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர். இது இவ்விதமிருக்க, தாய்லாந்தில்தான் இராமர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு கோயில் அமைத்து வழிபடுகிறார்கள்.
இந்தோனேஷியாவின் ஆளுகைக்குள்ளிருக்கும் பாலித்தீவில்தான் அவர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு சிலைகள் எழுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு இராமாயணக் கதைகள் பலவுள்ளன.
- திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே -
ஆனால், அவன் மனைவி சீதையை கடத்தி வந்து இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்த இராவணன் இலங்கை மன்னன் என்பதனால் இவனுக்கு இலங்கேஸ்வரன் எனவும் பெயர் உண்டு. குறிப்பிட்ட அசோகவனம் அமைந்துள்ள இடத்தில் நாம் சீதையம்மன் கோயிலை பார்க்க முடியும். சிங்கள மக்களும் வழிபடும் இவ்விடத்திற்கு சீதா எலிய என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாகவும் இவ்விடம் காணப்படுகிறது.
- ஓவியம்: AI -
“கண்ணை மூடிக்கொண்டு, ரிகார்ட் பிளேயரில் ஒலிக்கும், மென்னிசை தாலாட்டு ஒலிக்க, படுத்துக்கிடப்பேன். ஒரு நங்கையானவள் மலை உச்சியிலிருந்து மென் ஓட்டத்தில் இறங்கி ஓடி வருவது போல் ஒரு பிம்பம் மனத்திரையில் தோன்றும்…”
இது அவனது நிசப்தம் நிறைந்த இரவு.
பகலும், மாலைகளும் வேறு விதமானது.
கோர்ட் வேலை முடிந்தவுடன், இவனும் இவனது நான்கு அல்லது ஐந்து நண்பர்களுமாய் சேர்ந்து கூடிவிடுவார்கள்.
பகல் நேரத்தில், நேரமிருந்தால், ஒரு மூத்த தொழிற்சங்கவாதியின் அலுவலகத்தில்… அவனும், ஒரு வித்தியாசமான ஆள். தோழமை மிகுந்த ஒரு அரசியல்வாதி.
மாலை நேரமென்றால் வைட் ஹவுஸ் தேனீர் சாலையில். நான்கு மணியளவில், இந்த நால்வரையும், அந்த வைட் ஹவுஸ் தேநீர் சாலையில் வழமையான மூலையில் காணலாம்.
அங்குள்ள சிப்பந்தியில் - அதிலும் சீனியர்கள் - அவர்கள் ஏதோவொரு வழியில், ஏதோவொரு தொழிற்சங்க நடவடிக்கையில் தம்மை இணைத்து, ஏதோவொரு வகையான வழக்கு வம்பென்று ஊடாடி வந்திருந்ததால், இவன், அவர்களது கதாநாயகன் ஆனான். எனவே இவர்கள் நேரம் போவது தெரியாமல் கதைப்பதை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அதனாலேயே இது வழமையாகியது. அத்தேநீர் சாலையில் இது இவனுக்குத் தரப்படும் தனி மரியாதை. பாலற்ற வெறும் தேநீரை சுவைத்து சுவைத்து இவனும் இவனது நண்பர்களும் ஆர அமற நாட்டு நிலவரங்கள், உலக நடப்புகள், பத்திரிகை செய்திகள், கட்சி விவகாரங்கள்- இத்தியாதி என்று ஒருமுறை வைத்து கதைத்து இறுதியாய் புறப்பட ஓரிரண்டு மணி நேரம் சென்று, மாலை மங்கவும் ஆரம்பித்திருக்கும்.