நூல் அறிமுகம்: நினைத்ததை முடித்த எஸ்.ரி.ஆரின் 'எண்ணம் போல் வாழ்வு' - வ.ந.கிரிதரன் -

'எஸ்.ரி.ஆர் (சி.தியாகராஜா) - நினைத்ததை முடித்தவர்' நூல் எனக்கு நேற்று கிடைத்தது. அதற்காக எஸ்.ரி.ஆர் அவர்களின் புதல்விகளிலொருவரான திருமதி விஜிதா கேதீஸ்வரநாதனுக்கு நன்றி. நூல் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நூலின் ஆக்கங்களை விஜிதா கேதீஸ்வரநாதனும், 'தமிழ்த் தேசியப் பசுமை இயக்க'த் தலைவரும், சூழலியலாளரும், நண்பருமான பொ.ஐங்கரநேசனும் தொகுத்துள்ளார்கள்.
எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நினைவு மலர் பல வகைகளில் முக்கியத்துவம் மிக்கது. நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுள்ளது. முதற் பகுதியில் கலை, இலக்கியும், சமூக மற்றும் அரசியல் ஆளுமைகள் பலரின் எஸ்.ரி.ஆர் பற்றிய நினைவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. பொ.ஐங்கரநேசன், கம்பவாரிதி ஜெயராஜ், மறவன்புலவு க.சச்சிதானந்தன், வீ.ஆனந்தசங்கரி, மாவை சோ.சேனாதிராசா, டாக்டர் வி.ஜி.சந்தோஷம், நவரத்தினம் கிரிதரன், கலோபூஷணம் ராசையா பீதாம்பரம், மாலி, சங்கர், தேசமானுய வீ.ஶ்ரீசக்திவேல், வே.கந்தசாமி, செ.இராகவன், சி.கந்தசாமி, தம்பு துரைராஜா, தம்பி ஐயா தேவசாஸ், அனந்த பாலகிட்ணர் 7 எஸ். ராஜேந்திரன் செட்டியார் ஆகியோரின் நனவிடை தோய்தல்கள் நூலிலுள்ளன.


“வாழ்க்கை சவால்களால் நிறைந்துள்ளது. வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள், சில நேரங்களில் வலி நிரம்பியவையாக உள்ளன. சிலநேரம் அப்பாடங்கள் நாம் வளர வாய்ப்பளிக்கின்றன. அவை சவால்கள் போலத் தோன்றினாலும்கூட, அவை சாதனையாக மாற வல்லவை என்பதை மறுப்பதற்கில்லை. வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. என்னால் செய்யமுடியும் என்று முன்வராமல், யாராவது நம்மைத் தேர்ந்தெடுத்து வாய்ப்பைத் தட்டில் வைத்து தருவார்கள் என எதிர்பார்ப்பதும் வாய்ப்புகள் வரும்போது, நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதும் முட்டாள்தனம்“ மேற்சொன்ன வரிகளுடன் தொடங்குகிறது, முனைவர் சந்திரிக்கா சுப்பிரமணியன் எழுதியிருக்கும் பெண் நூறு என்ற நூல். ஒரு பெண்ணாக, பெண்களுக்கென்றே சந்திரிக்கா இதனை எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. இக்கருத்து ஆண்களுக்கும் பொருந்தும்.
அத்தியாயம் இருபத்தியிரண்டு: ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)!
அளவில்லாத ‘எம்மெ’ அவரையின் இளங்கொழுந்துகளை உண்டிருந்த அந்த எருமைக்கு நிற்காமல் கழிந்துகொண்டிருந்தது. அது எவ்வளவோ அடக்க முயன்றது போலும். பயனில்லை. அதன் கட்டுப்பாட்டையும்மீறி விரிந்த குதம் இடைவிடாது கக்கிக்கொண்டிருந்தது.



"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம். 

சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.


அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தங்கள் பதிவுகளில் எஸ்.ரி. ஆர். பற்றியும் ஜோர்ஜ் குருஷ்ஷேவ் பற்றியும் நீங்கள் எழுதியிருந்த குறிப்புகளை படித்தேன். அருமை. ஜோர்ஜ் குருஷ்ஷேவை 2007 இல் கனடா வந்த சமயம் ஒரு சந்திப்பில் கண்டு பேசியிருக்கின்றேன். அவரது முகத்தில் தவழும் மந்திரப் புன்னகையையும் நீங்கள் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. அவருக்கு பெப்ரவரி 27 பிறந்த தினம் என தங்கள் மூலம் அறிந்து வாழ்த்துகின்றேன்.
முன்னுரை
மானுட மற்றும் சமூக விஞ்ஞானத்துறைகளில் நடைபெறவுள்ள இரு வாரப் பயிற்சிப்பட்டறை மற்றும் ஆய்வில் கலந்துகொள்வற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றும் 'ஆர். பென் டில்கரன்' (R.Ben Dilharan) ஐக்கிய இராச்சியத்திலுள்ள 'யுனிசர்சிடி ஒஃப் எக்ஸேடெர்' (University of Exeter) சென்றுள்ளார். இவர் யாழ் அராலி வடக்கைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









