இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் 1971 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் நடந் சிங்கள இளைஞர்களின் ஆயுதக்கிளர்ச்சியை மறந்திருக்கமாட்டீர்கள்.   பல்கலைக்கழக மாணவர்களும், படித்துவிட்டு வேலை வாய்ப்பில்லாமல் அவதியுற்ற ஏழை – மத்தியதர இளைஞர்களும் தென்பகுதியில் முன்னெடுத்த அந்தப் போராட்டம் குறுகிய காலத்தில் அரசின் தீவிர அடக்குமுறையினால் முறியடிக்கப்பட்டது. அப்போது கைதானவர்கள்தான் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, டி. ஐ. ஜி. தர்மசேகர, விக்டர் ஐவன்,  உபதிஸ்ஸ கமநாயக்க முதலான இளைஞர்கள்.

இவர்களில் ரோகண விஜேவீரா, ரஷ்யாவில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு திரும்பியிருந்தவர். லயனல் போப்பகே பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தில் படித்தவர். இந்தப்பெயர்களை,  அன்றைய ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா – என். எம். பெரேரா – பீட்டர்கெனமன் ஆகியோரின் ( ஶ்ரீல. சுதந்திரக்கட்சி – சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி ) கூட்டரசாங்கத்தின் காலத்தில் நீதியரசர் அலஸ் தலைமையில் நடந்த குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது வெளியான செய்திகளிலிருந்து அறிந்திருந்தேன்.

தோழர் பாலாதம்பு குறிப்பிட்ட அரசியல் கைதிகளுக்காக வாதிட்டார்.  எனினும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்தனர். கிளர்ச்சி நடந்தபோது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரது சடலங்கள் மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் மிதந்தன. கதிர்காமத்தில் நடக்கும் சித்திரை புத்தாண்டு விழாக்களில் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பிரேமாவதி மனம்பேரி, அந்த புனித பிரதேசத்தில் ஒரு இராணுவ அதிகாரியினால் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்தப்பெண்ணின் கதையை சித்திரிக்கும் கங்கை மகள் என்ற சிறுகதையை பின்னாளில் எழுதியிருக்கின்றேன். இச்சிறுகதை  “ கங்காவே துவெனிய  “ என்ற தலைப்பில் சிங்களத்திலும் வெளிவந்துள்ளது.   அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரும் இயக்கத்தில் நானும் இணைந்திருந்தேன்.

இவ்வியக்கம்,  கொழும்பில் மலேவீதியில் அன்றைய கல்வி அமைச்சிற்கும் பரீட்சைத் திணைக்களத்திற்கும்  அருகில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனையில் தோழர் லீனஸ் திஸாநாயக்காவால் முன்னெடுக்கப்பட்டது. அந்த இயக்கத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தோழர் சண்முகதாசன், வாசுதேவ நாணயக்கார, குமாரி ஜயவர்தனா,  தினேஷ் குணவர்தனா ( இன்றைய பிரதமர் ) ஆகியோருடைய பெயர்களுடன் எனது பெயரும்  இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட இலங்கை ஆசிரியர் சங்க பணிமனையில் நானும் சிறிது காலம் வேலை செய்தேன். அச்சங்கம் வெளியிட்ட ஆசிரியர் குரல் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தேன். தற்போது இங்கிலாந்தில் வதியும் தோழர் காதர்  எமக்கு அரசியல் வகுப்பு நடத்தி, சுயநிர்ணய உரிமை  பற்றிய விளக்கங்கள் அளிப்பார்.

1977 ஆம் ஆண்டு  நடந்த தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் படுதோல்வியடைந்து,  ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக்கட்சியும் மிகக் குறைந்த  ஆசனங்களையே பெற்றது. அதனால், தமிழர் விடுதலைக்கூட்டணி பிரதிநிதியான அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார். அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற அறப்போராட்டம் தொடர்ந்தது.  ஜே.ஆரின் ஐக்கிய தேசியக்கட்சி , தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. இக்கட்சிக்கு அந்தத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை கிடைத்தமையால்,  கண்டி போகம்பறை, யாழ்ப்பாணம் கோட்டை ,  கொழும்பு வெலிக்கடை – மகசின் சிறைகளிலிருந்த சகல அரசியல் கைதிகளும் விடுதலையானார்கள்.  அவ்வாறு விடுதலையானவர்களில்  ஒருவர்தான் தோழர் லயனல் போப்பகே.  

வீரகேசரியில்  நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது,  1978 ஆம் ஆண்டு ஒருநாள் மாலை அலுலகத்தின் வாயிலில் கடமையிலிருந்து பாதுகாப்பு ஊழியரிடமிருந்து ,  என்னைப்பார்க்க ஒருவர் வந்திருப்பதாக தகவல் வந்தது.  சென்று பார்த்தேன். ஒருவர் தன்னை லயனல் போப்பகே எனச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு, கைகுலுக்கினார்.  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அப்போதைய தலைவர் எச். என். பெர்னாண்டோவும், செயலாளர் சித்ராலும் என்னைப்பற்றி தம்மிடம் சொல்லியிருப்பதாகக் கூறினார்.  எச். என். பெர்னாண்டோவின் தங்கையைத்தான் தோழர் ரோகண விஜேவீரா மணம்முடித்தார்.

இவ்வாறு 1978 ஆம் ஆண்டு  முதல் முதலில் எனக்கு அறிமுகமான தோழர்  லயனல், 45 வருடகாலமாக எனது ஆழ்ந்த நேசத்திற்கும் நெருங்கிய தோழமைக்குமுரியவராக விளங்குகிறார். இவரது தலைமையில் 1983 ஆம் ஆண்டு நடந்த மேதின ஊர்வலத்தையும் மாபெரும் கூட்டத்தையும் பார்த்து, அன்றைய ஜே.ஆரின் அரசு கதிகலங்கியது. தருணம் பார்த்திருந்த ஜே.ஆர். 1983 நடுப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியை தடைசெய்தார். அதனால், லயனல் போப்பகே மீண்டும் கைதாகி தடுத்துவைக்கப்பட்டார். பின்னர் விடுதலையாகி ஜப்பான் சென்ற லயனல், அங்கிருந்து அவுஸ்திரேலியா வந்து,  படித்து  கலாநிதிப்பட்டமும் பெற்றார்.

அன்று 45 வருடங்களுக்கு முன்னர் இவரது அழைப்பினை ஏற்று , மக்கள் விடுதலை முன்னணியின் செஞ்சக்தி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியதுடன், மொழிபெயர்ப்புகளையும் செய்து கொடுத்தேன். குறிப்பிட்ட செஞ்சக்தி இதழில் கவிஞர் புதுவை ரத்தினதுரையின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

தோழர் லயனல்போப்பகே, கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் கட்டுரைகளும் எழுதுபவர்.  இந்த ஆற்றல்களை பல்கலைக்கழகத்தில் படிக்கின்றபோதும், 1971 முதல் சிறைவாசம் அனுபவித்த காலத்திலும் வளர்த்துக்கொண்டவர். சிறையிலிருந்த காலத்தில் பாடல்கள் இயற்றி,  வெற்றுத்தகர டின்கள், தண்ணீர் அள்ளும் வாளிகள் ஆகியனவற்றை  பயன்படுத்தி இசை எழுப்பி சிறையிலிருந்த சக  தோழர்களுடன் பாடியவர். அதற்கு விடுதலைக்கீதம் எனத் தலைப்பிட்டிருந்தார். விடுதலையாகி வந்த பின்னர்,  என்னிடமும் சில பாடல்களைத்தந்து தமிழ்ப்படுத்தி இசையோடு பாடினார்.  விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சி 1978 முதல் 1983 ஜூன் வரையில் இலங்கை எங்கும் நடந்தது.   அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, ஃபீனிக்ஸ் பறவையைப் போன்று எழுச்சி பெற்றது.  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரில் மாதம் இந்த இயக்கம் 1971 கிளர்ச்சியில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக நடத்தும் மாபெரும் கூட்டங்களில் விடுதலைக்கீதம் பாடல்களும் இடம்பெறும். அதில் ,   “வேலுப்பிள்ளை அண்ணா என்னை மன்னிப்பாய்… “ என்ற பாடலும்,  “ மனம்பேரி சகோதரியே… “  என்ற பாடலும்   பிரசித்தம். இதனை இயற்றியவரும் – பாடியவரும் தோழர் லயனல் போப்பகேதான். இவருடைய மனைவி சித்ராவும் சிறந்த பாடகி. தற்போது அவுஸ்திரேலியா மெல்பனில் குடும்பத்தினருடன் வதியும் தோழர், மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும், தன்னார்வத்தொண்டராகவும்  இயங்கியவாறு, இன ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டுக்கும் குரல் கொடுத்து வருவதுடன், சிறந்த தமிழ் அபிமானியாகவும் விளங்குகிறார். மெல்பனில் முன்னர் வெளியான உதயம்  ( இருமொழிப்பத்திரிகை ) ஆண்டு விழா பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடந்தபோது, இடம்பெற்ற கருத்தரங்கிலும் சிறப்புரையை நிகழ்த்தினார்.

2004 ஆம் ஆண்டு நாம் கன்பர மாநிலத்தில் நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவையும் கவிஞர் அம்பியின் பவளவிழாவையும்  நடத்தியபோது, அதற்கான மண்டபத்தை ஏற்பாடு செய்து தந்தவர்.  மெல்பனிலிருந்து சென்றிருந்த கலை, இலக்கியவாதிகளை தமது இல்லத்தில் தங்கவைத்து உபசரித்ததுடன், அந்த விழாவிலும் உரையாற்றினார்.  எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மெல்பனில்  நடத்திய இலக்கிய மொழிபெயர்ப்புகள் தொடர்பான கருத்தரங்கிலும் கலந்துகொண்டு உரையாற்றினார். கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் அகதிகளை மனிதாபிமான ரீதியில் விடுவிக்கவேண்டும், என்ற அறப்போராட்டத்தையும்  மெல்பனில் இயங்கும் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் முன்னால் ஆரம்பித்து முன்னெடுத்தவரும் லயனல் போப்பகேதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர், குறிப்பிட்ட ஈழத் தமிழ்அகதிகள் ( எண்பது பேருக்கும் மேல் ) விடுவிக்கப்பட்டனர். அவர்களை வரவேற்று உபசரித்து, எமது சமூகத்துடன் ஒன்றிணைக்கும் இராப்போசன -  இசை நிகழ்ச்சியையும் தோழர் லயனல்,  வடக்கு மெல்பன் பிரதேசத்தில் நடத்தினார்.

எனது மணிவிழா 2011 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்தபோதும் உரையாற்றினார். அவரது உரை ரஸஞானி ஆவணப்படத்திலும் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு  மனிதநேயத்துடனும் இன ஐக்கியத்தை பேணும் வகையிலும் அயர்ச்சியின்றி இயங்கிவரும் தோழர் லயனல் போப்பகே பற்றிச்  சொல்வதற்கு பல நல்ல விடயங்கள் இருக்கின்றன.  தோழர் லயனல் பற்றி மைக்கல் கொலின் என்ற எழுத்தாளர், THE LIONEL BOPAGE STORY என்ற 565 பக்கங்கள் கொண்ட விரிவான நூலை எழுதியுள்ளார்.  கொவிட் பெருந்தொற்று இலங்கையிலும் பரவியிருந்தபோது, தோழர் லயனல் முன்னின்று ஆரம்பித்த தன்னார்வத் தொண்டு அமைப்பு,  இலங்கையில் ரோட்டரி கழகம் செஞ்சிலுவைச்சங்கம் முதலான அமைப்புகளின்  ஊடாக மேற்கொண்ட  சேவைகள் குறிப்பிடத்தகுந்தவை. அண்மையில் இலங்கை,  75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடியபோது, லயனல் ,  “ இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கும் 1971 நிலைவரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகள் மீது ஒரு சிந்தனை  “  என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, ஆங்கில, தமிழ்,   சிங்கள ஊடகங்களில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here