கிளிம்மின் சரித்திரம் - கார்க்கியின் இறுதி நூல் ஓர் அறிமுகம்! (சென்ற இதழ் தொடர்ச்சி) - ஜோதிகுமார் -

கார்க்கியே ஒரு கட்டத்தில் கூறுவார்: அடிமைகளின் ஒழுக்கமுறை போலவே எசமானர்களின் ஒழுக்கமுறையும் எனக்கு அந்நியமானதுதான். கலகம் செய்ய நிமிர்ந்தவனுக்கு உதவி செய் என்ற ஒழுக்கமுறை எனக்குள் வளர்ந்திருந்தது, என. ஒரு புறம் பைபிள் போன்றவை ஏற்படுத்தியிருந்த அல்லது நியாயப்படுத்தியிருந்த ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் வசதியாக ஏந்திக் கொடு என்பது போன்ற அடிமைகளின் கலாச்சாரம். மறுபுறம், நீட்சே போன்றோர் நியாயப்படுத்தியிருந்த – ‘மக்கள் என்போர், ஒரு சிலரால் அடக்கி ஆளப்பட பிறந்தவர்களே’ என்று போதித்த முதலாளிகளின் அறம். இவ்அறங்களிடையேத்தான், தான் தனது மூன்றாவது ஒழுக்கமுறையை கைக்கொண்டதாக கார்க்கி கூறுவார்.
அவர் மேலும் கூறுவார்: “ வாழ்க்கையில் செயல்பட்டு வருகிற ஏதோ ஒரு சக்தி எல்லோரையும் விகாரப்படுத்தி வருகின்றது. அந்த ‘சக்தியைத்தான்’ இலக்கியம் பிரதிபலிக்க வேண்டுமே தவிர அது விகாரப்படுத்தி வைத்திருக்கும் ‘விஷயங்களை’ அல்ல” என்று. இக்காரணங்களின் நிமித்தமே, சாராம்சத்தில், தஸ்தவாஸ்க்கி முதல் மேலும் அநேகரில் இருந்து கார்க்கி அடிப்படையில் வித்தியாசப்படுவதாய் இருக்கிறார். இப்பார்வையில் நின்றே, கார்க்கி, கிளிம் என்ற பாத்திரத்தை அணுகி உள்ளார் என நம்பலாம். இத்தகைய ஓர் பின்னணியில் கிளிம் ஒரு புதிய படைப்பாக புதிய வார்ப்பாக தோன்றுகிறான். (இதுவரை கார்க்கி படைத்தளித்த தாயின் பாவெல், பிரம்மச்சாரி மாட்வி போன்றவர்களிடமிருந்து வித்தியாசமுற்று…)

எழுத்தாளர் கோமகனின் எதிர்பாராத மறைவு பலரையும் நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். அவர் அவ்வப்போது உட்பெட்டியில் வந்து தொடர்பு கொள்வார். அவருடனான உட்பெட்டி உரையாடல்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். அவரது ஆளுமையினை எடுத்துக்காட்டும் உரையாடல்கள் இவை என்பதால் இவற்றைப்பகிர்ந்து கொள்வதும் அவசியமென்று நான் கருதுகின்றேன். இவற்றிலிருந்து அவர் தனது 'நடு' இணைய இதழைத் தனது சுய முயற்சியினால் இணையத்தில் கிடைத்த தகவல்களின் உதவியுடன் வடிவமைத்தார் என்பதை அறிய முடிகின்றது. அது அவரது சுய முயற்சியின் மூலம் கற்கும் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அந் 'நடு' இதழைச் சிறப்பாக வடிவமைத்து, காத்திரமான இதழாகக் கொண்டு வந்தது அவரது ஆற்றலின் வெளிப்பாடே.


பத்திரிகைகளோ அல்லது சஞ்சிகைகளோ சிறுவர்களுக்கான பகுதிகளுக்கும் இடம் கொடுப்பது மிகவும் அவசியமானதொன்று. சினிமா நடிகைகளின் உடலழகைக் காட்டும் கவர்ச்சிப்படங்களை வெளியிடுவதில் காட்டும் ஆர்வத்தை விட அதிக ஆர்வத்தைக் குழந்தைகளுக்கான (அல்லது சிறுவர்களுக்கான) பகுதிகளை நடத்துவதில் காட்ட வேண்டும்.


ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று வரும்போது, யாரும் இத்தனை சொற்களுக்குள் சிறுகதை இருக்க வேண்டும் என்று வரையறை செய்வதில்லை. இப்பொழுது வாசிப்புப் பழக்கம் மிகவும் அருகி வருகின்றது. பத்திரிகைகள் சஞ்சிகைகள் கூட சிறுகதைகளின் அளவை மட்டுப்படுத்துகின்றன. நீண்ட கதைகளை விரும்புவதில்லை.
எழுத்தாளரும் ‘ நடு ‘ இணைய இதழின் ஆசிரியருமான கோமகன் பாரிஸிலிருந்து விடுமுறைக்கு இலங்கைக்கு வந்து திரும்புகையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மாரடைப்பு வந்து மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியைத்தருகிறது. அற்பாயுளில் மறைந்திருக்கும் கோமகனின் இயற்பெயர் இராஜராஜன். சுறுக்கர் என்ற புனைபெயரையும் கொண்டிருந்தவர். சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நேர்காணல் முதலான துறைகளில் தொடர்ந்து எழுதிவந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட குரலற்றவரின் குரல் நேர்காணல் தொகுப்பு இலக்கியப்பரப்பில் கவனத்தை பெற்றிருந்தது. கோமகனின் தனிக்கதை, முரண் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வரவாக்கியிருப்பவர்.
“ ஏலி ஏலி லாமா சபக்தானி “ என் தேவனே என் தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…? “ யேசு சிலுவையில் அறையப்பட்ட போது உதிர்த்த வார்த்தைகள் . 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக அன்றைய நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டது. அதிலும் இழுபறிகள் நிகழ்ந்தன.

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களில் ஒருவர் என மதிக்கப்பட்ட விற்கன்ஸ்ரைன் பற்றிப் பல்வேறு மொழிகளில் கட்டுரைகளும், ஆய்வுகளும், புனராய்வுகளும் வெளிவந்துகொண்டிருந்த போதிலும் தமிழ் மொழியில் ஆய்வாளர் செ.வே.காசிநாதனின் இத்தகைய ஒரு நூலைப் படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது. அவரின் இத்தகைய முயற்;சி மிகுந்த வரவேற்புக்கும், பாராட்டுக்குமுரியதாகும். ஆஸ்திரியாவில் பிறந்த பேராசிரியர் விற்கன்ஸ்ரைன் இங்கிலாந்தில் கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டுவரை மெய்யியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அளவையியல், கணித அடிப்படைகள் போன்ற கருத்துக்களை சிந்தனை வழிகளில் நின்று அர்த்தம், மொழி, மனம் என்ற ஆய்வு நூலை எழுதியிருந்தார். இருந்தும் அவர் எழுதியவற்றை அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1953 ஆம் ஆண்டே இரண்டு பாகங்களாக வெளிவந்திருந்தமையை அறியமுடிகிறது.
ஆய்வுச் சுருக்கம்
அவனுடைய மனம் குழப்பமாகவே கிடக்கிறது .எழுத்து வேலையில் , ' மனசு இறங்க மாட்டேன் ' என முரண்டு பிடிக்கிறது .தேத்தண்ணீர் ஆற்றுறவன் ஆற்றிக் கொண்டே இருக்க வேண்டும் . , மரதன் ஓடுறவன் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் . எழுதுறவனும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் . முகமூடியைப் போட்டு விட்ட நடிகன் பிறகு அதை கழற்றி வைக்க முடியாதல்லவா . அவன் நிறுத்தி விட்டால் , யார் கோகுலனா , அப்படி ஒரு பிறவி இருந்ததா ? புறநாடாக இராது சொந்த நாட்டில் இருந்திருந்தால் , அங்கேயும் சொந்தமாக காணி நிலமும் வேண்டுமய்யா , ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவி நினைவு கூர்ந்து வருவார்கள் .ஒரு மாமரக்கன்றை அல்லது ஒரு முருங்கையை நட்டு விட்டு அது பலன் தருகிற போதெல்லாம் அரூபமாகவும் அவனும் வலம் வந்து கொண்டிருப்பான் . இது கண்டம் விட்டு கண்டம் மாறி பனி விழும் மண்ணிலே இங்குள்ள சிறிதுபனிபிடித்த மக்களிற்கு மத்தியில் ...அடையாளமே இல்லை . தன் இருப்பை மறக்கடிக்கக் கூடாது என்று நம்மாள் , வீட்டிலே அடிக்கடி முறைக்கிறார், திட்டுறார் ....சிந்தித்துப் பாருங்கள்.என்ன செய்வது உலகம் இப்படி தான் இயங்கிறது .எமக்கெல்லாம் ஒரு நல்ல குரு ,வழி நடத்த ஒரு அமைப்பு வந்து அமைவதில்லை . வெளியிலும் அதே தான் நிலமை .

முன்னுரை
“பாருவதி….. இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்….. என்னபண்ண…. ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு ஏம்பாடு… சரிசரி… நம்ம எல்லைச்சாமி கோயில் கொடைக்கு குடும்பத்துக்கு நூத்தியொரு ரூவா குடுத்திடணும்னு ஊர்க் கூட்டத்தில முடிவுபண்ணினது தெரியுமில்லே…. ஒரு வாரமாகியும் துட்டு ஏதும் குடுக்காம இருந்தா என்ன அர்த்தம்….”
தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்திலா, அல்லது சித்திரை மாதத்திலா என்ற கேள்வியால் எழுந்த குழப்ப நிலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இலங்கைத்தமிழ் மக்கள்தான் என்றால் மிகையாகாது.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









