நாவல்: 14/40 கொண்டை ஊசி வளைவு - சுப்ரபாரதிமணியன்
வெளியீடு - உயிர்மை பதிப்பகம்  |  விலை -ரூபா  135


மனிதன் என்பவன், என்னதான் அறிவாலும், ஆற்றலாலும், சிந்திக்கக்கூடிய செயல்திறன் படைத்தவனாக உயர்ந்து விளங்கினாலும், இவ்வுலகில் வாழும் மற்ற உயிர்களைப் போலத்தான் அவனும். இவற்றிற்குள் இருக்கக்கூடிய வேறுபாட்டை புரிந்துகொள்ளுதல் அவசியம். ஓர் உயிர் பிறக்கிறதென்றால் அதற்கென்று உரிய கடமைகள் இருக்கின்றது. முதலில் ஆரோக்கியமான வாழ்வு சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தன் இனத்தை, தலைமுறையை அடுத்தக்கட்ட நகர்விற்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதான் எல்லா உயிர்க்கும் பொதுவான, முக்கியமான கடமை. மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன்பின் தான் மனிதனுக்கான அறிவு, நாகரீகம், மற்ற பிற எல்லாம். ஆனால் மனிதன் தன்னுடைய எண்ணவோட்டங்களுக்கு ஏற்ற, சூழ்நிலைக்கும் ஏற்றவாறு நிலையான மனநிலைப்பாட்டோடு இருப்பது கடினம். நடைமுறை வாழ்க்கைக்கும், இப்படித்தான் வாழவேண்டும் என்று யூகித்து எழுதிய வாழ்க்கைக்கும், நிலைத்தன்மை என்பது உறுதியானதாக இருப்பது அரிதானது. இதற்குள் எப்போதும் ஓர் அலை என்பது இருந்துகொண்டே இருக்கும். அவ்வலையைத்தான்  சுப்ரபாரதிமணியனின் 14/40 கொண்டை ஊசி வளைவு எனும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்களின் வழியாக விவரிக்கிறது.

                கூற்று முறை என்பது கதைக்குள் பலவாறாக அமைகிறது. கதை சொல்லியோ அல்லது குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தை வைத்தோ அல்லது கதைக்குள் இடம்பெறும் எல்லா பாத்திரங்களின் மனநிலைப் பதிவுகளை உதிரியாக விவரிக்கும் பாணியும், இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து இடம்பெறலாம். அவ்வகையில் மூன்றாவது பாணியை முன்வைத்து நகர்ந்தாலும், இக்கதை பெயர் சொல்லப்படாத ஒரு பெண்ணைச் சுற்றி, அவளின் வாழ்க்கையை  மையமிட்டு அமைகிறது.

                இந்நாவலின் கதையளவு நான்கு நாட்கள் என்று தீர்மானிக்கப்படுகிறது. நேர்கோட்டு உத்தி அமைப்பில் எழுதப்பட்டாலும், இறுதியில் காட்சிப்படுத்தப்படும் களன் நான்காவது நாள். ஆகவே கடந்தகாலம், நிகழ்காலம் என்கிற வகையில் அமைகிறது. பரளியாறு தேவரிஷி  அலுவலகம் கதையில் வெளி சார்ந்த இடச்சூழலாக வருகிறது. அமைதி மண்டபம், உணவு விடுதி, தங்கும் அறை இறுதியில் மலைக்காட்சிகள் என்று கதைக்குள் காட்சிப்படுத்தப்படும் இடங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன.

                மனித வாழ்க்கையில் ஆசைகள் தான் அவனை எந்த இடத்தில் வைக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்கிறது. அவ்வகையில் நகர வாழ்க்கையில் இருந்து பிதுங்கி வந்த மனங்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக மன அமைதியை தேடிவரும் நிலை என்பது, ஏதோவொரு வகையில் அவர்களுக்கான மன ஆசுவாசத்தைக் கொடுக்கிறது என நம்புகிறார்கள். அதனடிப்படையில் முதல் நிலைப் பாத்திரமாக வரும் இராஜகுமாரன், இரண்டாம் நிலைப் பாத்திரமாக வரும் பெயர் சொல்லப்படாத ஒரு பெண் பாத்திரம். இவ்விரு பாத்திரங்களின் போக்காகவே கதை நகர்த்தப்படுகிறது.

அப்பயிற்சி வகுப்புக்காக கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே காணக்கிடைக்கிறார்கள். அதில் ஒருவளாக அப்பெண் வருகிறாள். தான் யார் என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாதவளாக அவள் தன்னை மற்றவர்களிடத்தில் காட்டிக்கொள்கிறாள். இராஜகுமாரன் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள முற்படுகிறான். அது இறுதி வரையிலும் கிட்டாமலே செல்கிறது. அப்பெண்ணின் பின்புல வாழ்க்கை, துயரம் மிகுந்ததாக காட்சிப்படுத்தப் படுகிறது. “அவன் காதலிப்பதாகச் சொன்னான். பிறகு பல மாதங்கள் கடந்து பின்னால் இப்படி ஒரு இடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டான். அவளுக்குத் துயரமாக இருந்தது”(ப.43). “தன் உடம்மைப் பயன்படுத்திச் சம்பாத்தித்தவர்கள் மத்தியில் அவள் அகப்பட்டு விட்டது ஒரு பெரிய கதை. அந்தத் தளத்தில் பல பெண்கள் இருந்தார்கள். அப்படித்தான் ஒரு நாள் எப்படியாவது அங்கிருந்து தப்பிப் போய்விடுவது என்ற வகையில் அவர்கள் யோசித்தார்கள். பரஸ்பரம் உதவி செய்வதும்தான், தப்பிப்பதுதான் திட்டமாக இருந்தது”(ப.42). “அங்கிருந்து நயன்தாரா தப்பித்து வந்தபோது கூட அவளின் மனதில் எந்த மாற்று திட்டமும் இருக்கவில்லை. இன்னொரு ஆணிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோம். அவனும் ஏமாற்றப் போகிறான் என்பது மட்டும்தான் தெரிந்தது. இப்படி ஆண்களிடம் மாட்டிக்கொள்வதை விட அவர்களைப் பின்தொடர வைப்பதுதான் சாகசம் என்று நினைத்தாள். அந்த சாகச விளையாட்டில் பல அபாயங்கள் காத்திருந்தன. எப்படியோ அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு அவள் தப்பிச் செல்கிறாள். அதெல்லாம் தவிர்க்கிறபோது இப்படி பரளியாறு வந்து உடற்பயிற்சி, தியானம் என்று நான்கு நாட்கள் இருந்து விட்டு சென்று விடுவாள். அதுதான் ஆறுதலாக இருக்கிறது”(ப.43). இவ்வாறான அப்பெண்ணின் வாழ்க்கைப் பின்புலம் துயரம் நிறைந்ததாக அறியப்பட்டாலும், ஏமாறுவதும் - ஏமாற்றப்படுவதும், அதனின் பின்விளைவுகள் மனம் சார்;ந்த சிக்கலில் அகப்பட்டு கொள்ளுமே தவிர வேறு வடிவங்களில் பெரிதாக அமையப் போவதில்லை. தன்னை ஒரு வட்டத்திற்கு கொண்டு வருகிறாள். ஆண் மீதான வெறுப்பு ஒருபுறமிருந்தாலும், அவற்றிலிருந்து விடுபடவே பரளியாறு தியானப் பயிற்சிக்கு வந்து செல்கிறாள். இவ்வந்து செல்லுதலில் ஒருமுகமாக இராஜகுமாரனின் நட்பும், அந்நட்பு காமம் சார்;ந்த ஒரு பார்வையாய் வெளிப்படுகிறது.

                இந்தப் பார்வை கதையின் கடைசி இலைவரினும் தொடர்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அப்பெண் உடன்படாதவளாகவே இராஜகுமாரனோடு பயணிக்கிறாள். தனக்கான ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். அவ்வலைதல் அவனுக்குப் பிடிபடாததாகவே இருக்கிறது. கொரானா லாக்டவுண், அடுத்து எப்போது சந்திக்க போகிறோம் என்கிற அச்சம், அதனாலயே எப்படியாவது அவளோடு தனிமையில் இருக்க வேண்டும் என்கிற ஆசை அவனைத் துரத்துகிறது. ஆனால் இறுதி வரையிலும் ஆசை என்பது கானல் நீராகவே செல்கிறது. அவளைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் கொண்டாலும், அதற்கெல்லாம் அவள் முட்டுக்கட்டை இடுகிறாள். முக்கியமாக, “நான் கிளம்புறேன். மாயமாகப் போறன். அரை நேரத்துக்கு முன்னால காணாமல் போனதா சொல்லித் தேடுனீங்க. இப்போ உண்மையாகவே காணாமல் போக போறேன். மாயமா போகப்போறன். என் பெயர் பொய். நீங்க வெச்ச பேரும் பொய்தாம். நான் உங்ககிட்ட நடந்துகிட்ட எல்லாம் பொய். நான் வேற ஒரு ஆளு.. வரட்டுமா”(ப.105). “வரட்டுமா நாம சந்திக்கிறது இனிமேல் இருக்காது. எல்லாம் மாயை”(ப.106). இவ்வாறாக காட்சிப்படுத்தப்படும் ஒரு பெண்ணின் அகவாழ்க்கை, எந்தளவிற்கு அவள் துயரத்தை உள்வாங்கியிருப்பாள் என்பதை யூகிக்க முடிகிறது. மனிதனின் ஆகப்பெரும் பிரச்சனையாக இந்த உடல் இருப்பது தெரிய வருகிறது. என்னதான் திருமணம் ஆனாலும், வயது மூப்பாகயிருந்தாலும் காமம் எனும் வளைக்குள் சிக்குவது மனித மனம் இயல்பாகவே அதில் மாட்டிக்கொள்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக இருக்கிறாள் அப்பெண். தன்னுடைய அனுபவம் அவளுக்கு அதிகமாகவே கற்றுக்கொடுத்திருக்கிறது.

                எண்ணங்களும், அதனினூடாக வரும் ஆசைகளுமே மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் ஏதோ ஒரு வகையில் தங்களின் மன அழுக்குகளைக் கழுவுவதற்காக வருகிறார்கள். பல பெண்கள் தங்களின் அடையாளங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. அரசன், இனியன், காசிநாதன், நமச்சிவாயம் போன்ற பாத்திரங்கள் இடம்பெற்றாலும், அவர்களின் எண்ணவோட்ட பதிவுகளும் பக்கங்களை நிரப்புகின்றன. ஆனால் முழுமையான கதைச்சூழல் என்பது காதலனால் ஏமாற்றப்பட்டு பாலியல் வலைக்குள் சிக்கி, அதிலிருந்து தப்பித்து நிம்மதியைத் தேடிச்செல்லும் ஒரு பெண்ணின் அவலநிலையை அலை அலையாக வெளிப்படுத்துகிறது.

அவ்வெளிப்படுத்துதலுக்குள் உடல் எனும் பண்டம் நிலையாக இருக்கிறது. மனித எண்ணத்தில் உடல் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனின்  இந்நாவலும், இராஜகுமாரனும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ))


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்