எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு வருட நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  என் வாசிப்பனுவத்தில் எழுத்தாளர் அகிலனின் படைப்புகளுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. அகிலனின் புகழ்பெற்ற படைப்புகள் பல கல்கியில் வெளியானபோது அவற்றை நான் அறிந்திருக்கவில்லை. 'வேங்கையின் மைந்தன்', 'கயல்விழி' வெளியானபோது நான் தவழ்ந்துகொண்டிருந்தேன்.  எனக்கு மிகவும் பிடித்த 'பாவை விளக்கு' கல்கியில் தொடராக வெளியானபோது நான் இவ்வுலகில் அவதரித்திருக்கவில்லை. நான் 'பொன்னியின் செல்வன்'  உட்பட வாசிப்பை ஆரம்பித்திருந்த காலகட்டத்தில் ஆனந்தவிகடனில் ஓவியர் கோபுலுவின் ஓவியங்களுடன் 'சித்திரப்பாவை' தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது. கலைமகளில் 'எங்கே போகின்றோம்' நாவலும் அக்காலகட்டத்தில்தான் தொடராக வெளிவந்தது. ஆனால் அவை என்னைப் பெரிதும் கவரவில்லை.

இந்நிலையில் என் கவனத்தை ஈர்த்த படைப்பாக அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' நாவலைக் குறிப்பிடலாம்.  என் அம்மாவின் கடைசித்தம்பி , மாமா, அண்மையில் கனடாவில் மறைந்தவர், 1970இல் கனடா செல்வதற்கு முன் சிறிது காலம்  புளியங்குளத்தில் ஏ9 பாதையில் அமைந்திருந்த பண்ணையொன்றை நிர்வகித்து வந்தார். நகரத்து இளைஞரான அவருக்குக் காட்டுச்சூழல் பெரிதும் பிடித்திருக்கவில்லை. அடிக்கடி 'அக்கா, அக்கா' என்று வவுனியாவுக்கு வந்து செல்வார். அவருக்கு என் வாசிப்பார்வம் தெரியும். அவ்விதம் வருகையில் ஒரு தடவை அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட 'வேங்கையின் மைந்தன்' நாவலையும் கொண்டு வந்து தந்தார். அப்பொழுதுதான் 'பொன்னியின் செல்வன்' நாவலில் மூழ்கிக் கிடந்த எனக்கு , முதலாம் இராசராச சோழனின் மகனான முதலாம் இராசேந்திர சோழனின்  வரலாற்றைக் கூறும் 'வேங்கையின் மைந்தன்'  நாவல் பிடித்து விட்டது.  நாவலின் நாயகன் கொடும்பாளூர்க் கோமகன் இளங்கோவேளும், இராசேந்திர சோழரின் மகளான அருள்மொழி நங்கையும் என்னைக் கவர்ந்து விட்டார்கள். இராசேந்திர சோழரால் சிறை பிடிக்கப்பட்டு வந்த இலங்கை மன்னர் ஐந்தாம் மகிந்தரின் மகளான ரோகிணியும் இளங்கோவின் காதலுக்குரியவளாக வருவாள். தொடராக வெளியானபோது இறுதியில் ரோகிணி இறப்பதாக அகிலன் முடித்திருப்பார். பின்னர் நாவல் நூலுருப்பெற்றபோது அம்முடிவை மாற்றி ரோகிணியைத் தப்ப வைத்திருப்பார். நினைவிலிருக்கின்றது.

இதன் பின்னர் அக்காலகட்டத்தில் வெளிவரத்தொடங்கியிருந்த ராணிமுத்து பிரசுரமாக வெளியான அகிலனின் 'சிநேகிதி' என்னைக் கவர்ந்த அவரது சிறு நாவலாகக் கூறுவேன். அக்காலகட்டத்தில் வெளியான கல்கி, விகடன், தினமணிக்கதிர், கலைமகள் ஆகிய சஞ்சிகைகளின் தீபாவளி மலர்களில் ஏதாவதொன்றில் நிச்சயம் அகிலனின் சிறுகதையொன்றாவது பிரசுரமாகியிருக்கும். அவற்றையும் விரும்பி வாசிப்பேன். 'வேங்கையின் மைந்தன்' எனக்கு அகிலனின் ஏனைய படைப்புகளையும் தேடி வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட வடிவில் கிடைத்த 'பாவை விளக்கு', 'கயல்விழி, 'புது வெள்ளம்' ஆகிய நாவல்களையும் வாசித்தேன். இவற்றை வாசித்தபோது நான் பதின்ம வயதுகளில் நடைபோட்டுக்கொண்டிருந்தேன். அவ்வயது காரணமாகக் காதலை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த 'பாவை விளக்கு' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையில் இன்று வரை அகிலனின் சமூக நாவல்களில் என்னைக் கவர்ந்த நாவலாக அதனையே கூறுவேன். அதன் காரணமாகவே 'பாவை விளக்கு' திரைப்படம் மீண்டும் யாழ் றிகலில் திரையிடப்பட்டபோது இரவுக் காட்சியாகச் சென்று பார்த்தேன்.

இதன் பின்னர் அவரது 'வாழ்வு எங்கே' நாவலை யாழ்  பொதுசன நூலகத்தில் இரவல் பெற்று வாசித்தேன். அது 'குலமகள் ராதை'  என்னும் பெயரில் திரைப்படமாகவும் வெளியானது. அது மீண்டும் யாழ் புது வின்சர் திரையரங்கில் திரையிடப்பட்டபோது பார்த்திருக்கின்றேன். படத்தின் பாடல்கள் எல்லாம் இனியவை.

அகிலன் காந்தியக் கருத்துகளில் ஊறிப்போனவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தனது படிப்பை இடை நடுவில் நிறுத்தியவரென்று வாசித்திருக்கின்றேன்.  அதே சமயம் அவரது படைப்புகளில் சமூக மீறல்கள் துணிச்சலாக வெளிப்பட்டிருக்கும். பொருந்தா மணத்தைத் துணிச்சலுடன் எதிர்த்து மீண்டும் தம் காதலருடன் இணையும்  பெண்களை அவரது  சித்திரப்பாவை, சிநேகிதி போன்ற நாவல்கள் வெளிப்படுத்தின. 'வாழ்வு எங்கே' தீண்டாமையைச் சாடிய நாவல்.  பொதுவாக வெகுசன எழுத்தாளர்கள் பலரிடம்  இல்லாத துணிச்சல் அகிலனிடமிருந்ததை இவ்வகைப்படைப்புகள் வெளிக்காட்டின.  முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்ட எழுத்தாளர் நாரண துரைக்கண்ணனிடமும் இத்தகையை துணிச்சலைக்  காணலாம்.

அகிலனின் நூற்றாண்டு நிகழ்வுகள் பற்றிய இணையச் செய்திகள் மீண்டும் எழுத்தாளர் அகிலனின் நினைவுகளை மீண்டும் ஏற்படுத்திவிட்டன.   என் வாசிப்பனுவத்தின் பரிணாமப் படிக்கட்டுகளில் அகிலனின் படைப்புகளுக்கும் நிச்சயம் இடமுண்டு.



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


இப்பதிவை முகநூலில் பிரசுரித்தபோது பதிவான எதிர்வினைகள்

Vijaya Baskaran
நான் வாசித்த முதல் நாவல் அகிலனின் வெற்றித்திருநகர். அடுத்து சித்திப்பாவை.

Sivanesaselvan Arumugam
The writer who developed my reading habit during my school years later even during my university life I had the pleasure of rereading all his flow of writing excellent

Kopan Mahadeva
MY CONGRATULATIONS TO PATHIVUKAL EDITOR Giritharan Navaratnam FOR HIS SERIES OF EXPERT & COMPREHENSIVE REVIEWS ON THE STALWART TAMIL WRITERS OF THE PAST DECADES LIKE TODAY'S AHILAN. FANTASTIC! -- Prof. Kopan Mahadeva.
   
Vetri Chelvan
கடந்த கால வாசித்த புத்தகங்களில் நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றி

Akilan Kannan
மிகவும் ஆழமான உள்வாங்கல் ! அழகான பிரதிபலிப்பு ! மகிழ்ச்சி நண்பரே. அகிலன் நூல்களின் பட்டியல் காண வலைத்தளம் : tamilputhakalayam.in புத்தகங்கள் பெற ஆன்லைன் புத்தக விற்பனையாளர்கள் எண்கள் இதோ. அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள லாம் : சிட்டி ஆட்ஸ் : +91 98410 16016 , Common folks : +91 90948 01812

VN Giritharan
நன்றி அகிலன் கண்ணன் உங்கள் கருத்துகளுக்கு. அகிலன் அவர்களின் மகனிடமிருந்து இவ்வார்த்தைகள் வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

Akilan Kannan
VN Giritharan நல்வரவு நண்பரே

Nadarajah Karuppaiah
பால்மரக் காட்டினிலே

Yogananthan Kanakasooriyam
அகிலன் பற்றிய பதிவு அருமை. அவரின் வாரிசுகள் எழுத்துத் துறையில் உள்ளார்களா? அறியத் தரவும்

VN Giritharan
Yogananthan Kanakasooriyam மேலுள்ள அகிலன் அவர்களின் மகன் அகிலன் கண்ணனின் கருத்துகளை நீங்கள் வாசிக்கவில்லையென்று நினைக்கின்றேன். எழுத்தாளர் அகிலன் கண்ணன் அகிலனின் மகன். தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தின் உரிமையாளர். தமிழ்ப்புத்தகாலயம் இணையத்தளத்தில் (அகிலன் கண்ணனின் குறிப்பிலுள்ளது) அவரது நூல்களையும் வாங்கலாம். அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு - https://ta.wikipedia.org/.../%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF...

Akilan Kannan
VN Giritharan  அகிலன் , அகிலன் கண்ணன் நூல்களின் பட்டியல் காண வலைத்தளம் : tamilputhakalayam.in புத்தகங்கள் பெற ஆன்லைன் புத்தக விற்பனையாளர்கள் எண்கள் இதோ. அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள லாம் : சிட்டி ஆட்ஸ் : +91 98410 16016 , Common folks : +91 90948 01812

Yogananthan Kanakasooriyam
VN Giritharan உண்மைதான், தகவலுக்கு நன்றி கவிஞரே

VN Giritharan
அகிலனின் 'சிநேகிதி' ராணிமுத்தாக வெளியாவது பற்றிய அறிவிப்பு.

Akilan Kannan
VN Giritharan அருமை ! ராணிமுத்து உருவாக ஐயாவே மூலகாரணம்.‌ "சாமான்யர்களைச் செய்தித் தாள் படிக்கச் செய்த நீங்கள் அவர்களை இலக்கியம் நாவல்கள் படிக்கவும் வைக்க வேண்டும்" என்று ஆதித்தனார் அவர்களிடம் அகிலன் கோரினார். உடனே ஆதித்தனார் , " நீங்களே ஒரு திட்டம் தாருங்கள் " என்றார். அப்போது " ஏற்கனவே அச்சு வடிவில் புத்தகமாக பதிப்பகங்கள் மூலம் வெளிவந்த நாவல்களை மலிவு விலையில் மாதமொரு நாவலாக பெருவாரியான சாமானிய வாசகர்களுக்கு வழங்கும் மாத நாவல் " திட்டத்தைத் தந்தார் அகிலன். " நல் ஆரம்பம்.‌ இதில் முதல் நாவலாக உங்கள் நாவலே வரவேண்டும்.‌அதோடு வருடந்தோறும் முதல் நாவல் உங்கள் நாவலாகவே இருக்கவேண்டும்" என அன்புக் கட்டளை இட்டார்.‌ இப்படி உருவானதே ராணிமுத்து மாதநாவல் முன்னோடியாக ! இதில் முதல் நாவலாக அகிலனின்" பொன் மலர் " வெளிவந்தது. முதல் நாளிலேயே சில மணிநேரங்களிலேயே முதற் பதிப்பு லட்சம் பிரதிகள் விற்பனையானது ! சில நாட்களில் மறுபதிப்பும் வந்தது.‌ இந்த சிநேகிதி பொன்மலரை நினைவுபடுத்தி விட்டாள். நண்பர் VN Gritharan அவர்களுக்கு நன்றி

VN Giritharan
Akilan Kannan //இதில் முதல் நாவலாக அகிலனின்" பொன் மலர் " வெளிவந்தது.// நினைவிலுள்ளது. அப்பா ராணிமுத்துவை அதன் இரண்டாவது பிரசுரத்திலிருந்துதான் வாங்கத்தொடங்கினார். இரண்டாவது பிரசுரமாக அறிஞர் அண்ணாவின் 'பார்வதி பீ.ஏ' வெளிவந்தது. முதலாவது பிரசுரமான 'பொன்மலர்' கிடைக்கவில்லை. வந்த பிரதிகள் அனைத்தும் உடனடியாக விற்றுப்போனதே காரணமாகவிருக்க வேண்டும். உங்கள் பிரசுரம் வெளியிட்ட நூல்கள் பலவற்றை (அகிலன் , நா.பா உட்பட) எழுத்தாளர் திலீப்குமார் மூலம் தமிழகத்திலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். அதில் 'பொன்மலரு'ம் ஒன்று. என் பால்ய பருவத்து வாசிப்பு நினைவுகளைப் பேணுவதற்காக அவற்றில் பலவற்றை வாங்கி வைத்துள்ளேன்.

VN Giritharan
Akilan Kannan ராணிமுத்து பிரசுரத்தின் நோக்கம், தோற்றம் பற்றிய தகவல்களுக்கு நன்றி. இவை எனக்குப் புதிய தகவல்கள். முதலிரண்டு வருட ராணிமுத்துப் பிரசுரங்கள் எங்களிடமிருந்தன.

Akilan Kannan
VN Giritharan மகிழ்ச்சி நண்பரே. பழைய இதழ்கள் சேகரிப்பு ஒரு பெட்டகம் அடுத்த தலைமுறைக்கும். அகிலனை ஆதித்தனார் தாம் தொடங்க நினைத்த வார இதழுக்கு ஆசிரியராக இருக்க வேண்டும் என்று அகிலனிடம் கேட்டார்.‌அகிலன் தனது இயலாமையைத் தெரிவித்தார். பின்னரே ராணி பிறந்தார் ! இப்படிப் பலப்பல ... தீபம் இதழில் அகிலன் எழுதிய' எழுத்தும் வாழ்க்கையும்' தொடர் நூலில் பதித்துள்ளார்.

VN Giritharan
மேலும் சில ராணிமுத்து பிரசுரங்களாக அகிலனின் 'பால் மரக்காட்டினிலே', 'வாழ்வு எங்கே' மற்றும் 'முப்பது இரவுகள் 'ஆகிய நாவல்கள் வெளிவந்துள்ளன. இவை வெளிவந்தபோது நான் ராணிமுத்து பிரசுரங்களை வாங்குவதை நிறுத்தி விட்டிருந்ததால் எனக்குக் கிடைக்கவில்லை. அண்மையில் யு டியூப் காணொளியொன்றில் இவற்றைக் கண்டெடுத்தேன்.

Akilan Kannan
VN Giritharan மகிழ்ச்சி நண்பரே . முன்னர் குறிப்பிட்டது போல வருடந்தோறும் ஜனவரி நாவல் அகிலன் நாவலாக வந்தது... பெரிய நாவலைக்கூடச் சுருக்கித் தந்தார் அகிலன் - ஆதித்தனார் அன்புக் கட்டளையால்...


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here