நெடுங்கதை: ஓக்காடு --- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. - -

1
அன்றும் அவ்வாறே நடந்தது. மிச்சிக்கு இது பழகிப்போயிருந்தது. “அவ்வே.. அவ்வே.. அய்யோ… அய்யோ…” என்று ‘மேல்கேரியில்’ எழுந்த பேரிறைச்சல் இன்று சற்று மிகுந்திருந்தது. அது அப்படித்தான். முதலில் மிகுந்திருப்பதாகத் தோன்றி, போக போக அதன் வீரியம் குறைந்துகொண்டே போகும். பெண்பூமிக்கு ஊற்றிய நீரைப்போல.
கார்த்திகை மாதத்துக் குளிர் இறங்கிக் கொண்டிருந்தது. முகத்தை இறுக்கி மூடியிருந்த ஆங்காங்கே ஒட்டுப்போட்ட கம்பளியைக் கழுத்துவரை இறக்கினாள் அவள். மெல்ல மெல்ல மங்கிப்போயிருந்த அந்த இறைச்சலைக் காதுகொடுத்து ஓர்ந்தாள்.
“ஏய்… வெளியே வாடா… பொட்டெப் பயலே…
கொறெ பிரசவத்தலே பொறந்தவனே… ஆம்புளெயா இருந்தா வெளியேவாடா பாக்கலாம்…
பொட்டெ மாதிரி வீட்டுக்குள்ளே புகுந்து கதவ சாத்திருக்கே…
டேய் மைரா… வெளியே வாடா…
நீ இப்போ வரலே…”
“அய்யோ… அய்யோ.. ஏய் கெல்லண்ணா அவர புடிங்க…
மாதண்ணா, உனக்கு வேறெ பொலப்பே இல்லையா?
உங்கக் குடும்பத் தகராற காலையிலே வச்சிக்கோங்க…
இந்த நடு இராத்திரியிலே… அதுவு அமாவாசே நாள்ளே…
உங்களுக்கெல்லா மனசாட்சியே இல்லையா…
கொழந்தங்க தூங்கறாங்க… தூக்கத்திலே அஞ்சி ஏங்குறாங்க வேறே…
கையிலே இவ்ளோ பெரிய கல்ல எடுத்துகிட்டு.. ஆ.. ஆ..
தப்பித்தவறி எங்கமேலே பட்டா என்ன ஆகுறது…
ஏய் மாதண்ணா.. இங்கே பாரு…
மொதல இங்கிருந்து கௌம்பு…
அம்மாவாசே ஆனாலே உங்க பஜனெய தாங்க முடியலே…”
வழக்கம்போல தொண்டைத்தண்ணிர் காய கத்தினாள் குனிக்கி.

அதிகாலை கொஞ்சம் புகாரும் குளிரும் இருந்தது. சூரியகுமார் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டான். பிக்கறிங்ஸ் வீதியை நோக்கி விரைந்த அவன், இடது புறம் திரும்பிக் கொண்டான். தூரத்தே சாப்பாட்டுக் கடைக்கு முன்னால் நாலைந்துபேர்கள் நிற்பது தெரிகின்றது. ஏழைகளுக்கான பெட்டிக்கடை தான். பெட்டிக்கடைக்குள் ஒரு நீட்டு மேசையும், தோதாக அதன் இருபுறங்களிலும் வாங்குகளும் இருக்கின்றன. ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். வழமையான தேங்காய்ப்பூ போட்ட வட்ட வடிவ ரொட்டி. விரலளவு தடிப்பத்தில் உள்ளங்கையால் மூடக்கூடிய அளவு. தொட்டுக்க ஆவி பறக்கும் கடலைக்கறி.
அண்மையில் மறைந்த சமூக, அரசியல் செயற்பாட்டாளரும் , நண்பருமான எழுத்தாளர் மகாதேவன் ஜெயக்குமரனுடன் (ஜெயன் தேவா) ஆகஸ்ட் இறுதியிலும், செப்டெம்பர் ஆரம்பத்திலும் முகநூல் மெசஞ்சர் மூலம் உரையாடினேன். அதிலவர் தெரிவித்திருந்த கருத்துகள் தற்போதுள்ள சூழலில் முக்கியமானவையாகப் படுவதால் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். எனக்குக் கிடைத்த தகவல்களின்படி மறைவதற்குப் பத்து நாட்கள் வரையில் சிறுநீரகச் சுத்திரிப்புக்குச் செல்லவில்லையென்றும், அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் மரண விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென்றும் அறிகின்றேன். அதன்பின்பே அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படுமென்று தெரிய வருகிறது.


தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது. 1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் இவர் பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் – மாணவர் விழாவில் கலந்து கொண்டார்.
நாட்டுப்புற மருத்துவமானது பாட்டி வைத்தியம் வீட்டு வைத்தியம், கை வைத்தியம், நாட்டு மருத்துவம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயர்கள் மருத்துவப் பொருள்களின் அடிப்படையில் மாறுபடுகின்றன.


தனது எல்லையிலிருந்து, கிட்டத்தட்ட 500கி.மீ தொலைவிலுள்ள, ரஷ்ய விமான தளமான, ஏங்கெல்ஸ்-2ஐ, உக்ரைன் 04.12.2022 இல், தனது ட்ரோன்கள் மூலம் தாக்கியதற்கூடாக, ரஷ்ய-உக்ரைன் போரை இன்னுமொரு புதிய தளத்திற்கு, உக்ரைன் கொண்டுசென்று சேர்த்தது என கூறலாம். அதாவது கிரைமியாவின் பால-தாக்குதல், பின் ரஷ்யாவின் கடலுக்கடியிலான, எரிவாயு குழாய் தாக்குதல், இவற்றுக்கு பின்னதாக நடைபெற்றுள்ள ரஷ்யாவின் இவ்விரு விமான தளங்களின் மீதான தாக்குதல்கள் உலக அவதானிப்பை பரந்த அளவில் பெற்றுள்ளது. ரைசன் விமானதள தாக்குதலை விட ஏங்கெல்ஸ் விமான தள தாக்குதல் நிர்ணயகரமானதாக கருதப்படுகின்றது. காரணம், இவ்விரு தளங்களிலும், இத்தளமே, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை உள்ளடக்கியதாய் இருந்தது. இத்தாக்குதல் தொடர்பில், இதுவரை, இரண்டு பொருட்கோடல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, கார்டியன் போன்ற மேற்குலக ஊடகங்களின் கூற்று. மற்றது, மெக்ரோகர் போன்ற யுத்த வல்லுனர்களின் கூற்று. 



அறம் என்ற ஒற்றைச் சொல்லால், மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் செயல்படுத்திய, பண்டைத் தமிழரின் அறவோர் வாழ்க்கை நெறி இன்று தனது பழம் வடிவத்தை இழந்து நிற்கிறது. கொடை, நீதி, இன்பம், தலைமை, பொது நலம் என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறைகளால் புதிய வடிவாக்கம் பெறுகின்றன. கொடை என்பது இன்று புகழ் தரக்கூடிய விளம்பரச்சூழ்ச்சி; நீதி என்பது தனது மனதின் எண்ணத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் தலையாட்டி பொம்மை; இன்பம் என்ற பெயரில் தீய அறிவின் வழியே புலன்களை மயக்கம் காட்டிச் செல்வது அழியா இன்பம்; தலைமை என்பது தனக்கென மட்டுமே வாழும் கொள்கை; பொதுநலம் தனது அகராதியின் பொருள் இழந்து காட்சி அளிக்கின்றது. அவ்வகையில் வழக்கிழந்த நீதிகளின் நிலைமைகளை முதுமொழிக் காஞ்சியின் வழி எடுத்துரைப்பதோடு, சமூகத்தில் அறம் தகவு பெற்று, புத்துயிர் பெற வழி காட்டுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
இதற்கு மேலே செல்கிறார்கள் . புளொமின்டன் " லுக் அவுட் " , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது . அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம் . கண் கொள்ளாக் காட்சிகள் கண்களை நிறைக்கின்றன . அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும் இருக்க வேண்டும் . சற்று செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை . ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள் . மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும் . நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும் . மண்ணும் தான் . அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள் இருக்கின்றன .


இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









