பேராசிரியர் இரமணிதரன் கந்தையாவின் 'டிஜிட்டல்' ஓவியங்கள் (1) - இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள்!

- பேராசிரியர் க.கைலாசபதி -
ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர்.
செயற்கைத் தொழில் நுட்பம், 'கிராபிக்ஸ்' மென்பொருட்கள் பாவித்து இவர் உருவாக்கி வரும் 'டிஹிட்டல்' ஓவியங்கள், 'அனிமேஷன்'கள் முகநூலில் பலரையும் கவர்ந்தவை.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரின் புகைப்படங்களை மேற்படி தொழில் நுட்பங்களைப் பாவித்து , உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் 'டிஜிட்டல்' ஓவியங்களாக்கி வருகின்றார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு: இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah)
இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) ஒரு குறிப்பிடத்தக்க ஈழத்து எழுத்தாளர் ஆவார். ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் அமெரிக்க சுற்றுச்சூழல் பொறியியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கழகத்தின் (AAEES) சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியற் துறையில் சிறந்த கல்வியாளருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.


யப்பானில் உள்ள தென் பகுதி தீவான குயிசு (Kyushu) வின் உள்ளே ஒரு சிறிய நகரம் (Dazaifu) சென்றோம். அங்கு ஒரு புராதனமான ஷின்டோ கோவில் உள்ளது. அது காலை நேரம். மக்கள் அதிகமாக வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். அங்கு அந்த கோவிலின் முன்பாக நின்று மக்களை வேடிக்கை பார்த்தபடி நின்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான காட்சி தரிசனமாகியது. அந்த முன்றிலில் பெரிய நந்தியின் சிலை இருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்திய சிவன் கோவில்களில் கருங்கல்லால் நந்தியை பார்த்திருக்கிறேன். அது பார்த்தபோது, நிழலில் இரை மீட்டியபடி இயல்பாக படுத்திருப்பது போன்ற நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கு பார்த்தபோது இன்னமும் பாரமான வண்டியை இழுத்தபடி செல்லும் களைத்த காளை மாடாகத் தெரிந்தது. உருவாக்கிய கலைஞனின் எண்ணமும் அதுவாகவே இருக்க வேண்டும். அதனது முகம் தனியாக உடலைவிட மினுக்கியது காரணம் , யப்பானிய பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து அந்த நந்தியின் முகத்தில் தொடுவதும் முகத்தை வைத்து அதனருகே நின்று படம் எடுப்பதுமாக இருந்தார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பிரார்த்தனையின் படிமம் தெரிந்தது. எல்லோரும் பாடசாலை சீருடையில் இருந்ததால் 12 வகுப்பில் படிக்கும் இளவயதினர் போலிருந்தார்கள். நந்தி சிலையருகே நாங்கள் செல்வதற்கு சந்தர்ப்பம் தராமல் தொடர்ந்து மாணவர்கள் வரிசையாக வந்தபடியிருந்தனர்.







அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும். அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும். 
“தன் தந்தை கொல்லப்பட்டதைத் தனயன் மறந்துபோவான். ஆனால், தன் பூட்டனின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதை, அவன் ஒருபோதும் மறந்துபோகமாட்டான்.” - மாக்கியவல்லி.





கம்பர் இயற்றிய இராமாயணத்தில் கூறப்படும் கதாப்பாத்திரங்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர் ஜனகர். இவர் மிதிலாபுரியின் மன்னர். சீதையைக் கண்டு எடுத்து வளர்த்தவராவார். மாவீரர். குடிமக்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்.பெரு வேள்விகள் செய்தவர். கம்பராமாயணத்தில் ஜனகரின் மாட்சி குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
பிள்ளைப்பருவத்துக்கும் (childhood) வளர்ந்தோர் என்ற நிலைக்கும் (
]



வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம். ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள். மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரசானது ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஒரு காலப்பகுதி. மூன்றாவது, திருமணம் முடிந்து, ஒரு குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









