(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (2): அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம் - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம்
பள்ளங்கி போகும் வழியில், சப்த கன்னிமாரை பார்த்து, அவர்கள் பொருத்து கேட்டுவிட்டு போகும் நோக்கில், அந்த ஸ்டாப்பில் இறங்கி, அருகில் இருந்த தேனீர் கடைக்குள் நுழைந்தேன். காப்பியை குடித்து முடித்து, மாதிடம் கேட்டேன், கன்னிமார் கோயில் பொருத்து. ஏதேதோ தரவுகளை தர முயற்சித்துவிட்டு, “ஆனா இன்னும் தெரிஞ்சிக்கிறதுன்னா ரெண்டு வீடு தள்ளி இருக்கிற பச்ச வீட்டுல கேளுங்க… அவுக அந்த பூசாரிக்கு சொந்தகாரவுக – சம்பந்தம் இருக்கு…” என்று தணிந்த குரலில் ரகசியமாய் சொன்னாள்… அவள்.
“ஓ கன்னிமாரூ கோயிலா… குமாருன்னு ஒரு பூசாரி இருக்காரு… வில்லேஜ்ஜில கேளுங்க… சொல்லுவாங்க…” என்று அங்கு கூறப்பட்டது.
அட்டுவம்பட்டி என்பது (அப்போது) – அதாவது ஒரு ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு – ஒரு முப்பது நாற்பது வீடுகளை ஒன்று சேர்த்து ஒருபிடி பிடித்து வைத்தது போன்ற ஒரு தொகுதி. ஒடுங்கிய, அந்த பஸ் செல்லும் பாதையின் இரு மருங்கிலும், நெருக்கி நெருக்கி நிற்கும் வீடுகள். அனைத்துமே சிமென்டால் கட்டப்பட்டவை. அதாவது குடிசைகள் இல்லை – இதைத்தான் ஒரு விலேஜ் – கிராமம் என்று இப்பகுதியில் வர்ணிக்கின்றார்கள். இங்கு மாடுகளையும் காணமுடிவதில்லை… இரண்டொன்று தோட்டங்களில் தலையை குனிந்து அப்புறம் இப்புறம் பார்க்காமல் மேய்ந்து கொண்டிருப்பதுடன் சரி…
இது ஒரு மலைப்பகுதி… இரு புறமும் மலைத்தொடர்களின் சரிவுகள்… அச்சரிவுகள் சந்திக்ககூடிய பள்ளத்தாக்குகள் அல்லது படுக்கைகள் – இவற்றில்தான் இந்த குடியிருப்புகள் – வாகன பாதை அனைத்துமே அமைந்து கிடந்தன. பாதையை ஒட்டி இருந்த அந்த குட்டையான சிமென்ட் கட்டடத்திற்குள் இரண்டொரு நடுத்தர வயது பெண்கள் அமர்ந்து சாவதானமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகே ஒருத்தி சிறு சாப்பாட்டு கூடையுடன் நின்றவாறு பேசிக்கொண்டிருந்தாள். வினவினேன்.



ராணுவம் அடுத்த முன்னகர்வுக்கு வழக்கமாக எடுக்கும் ஓய்வை அந்தமுறை எடுக்கவில்லைப்போல் தெரிந்தது. எரி குண்டுகளும், ஷெல்களும் விழுந்து சிதறின. அங்கே நிறையப் போராளிகளும் கூடியிருந்தனர். ஒரு யுத்தத்திற்கான முன்னாயத்தங்கள் தெரிந்தன. அது அவ்வாறுதான் இருக்கும். புலிகள் இயக்கத்து தலைமையின் மையம் அது. போராளிகளின் பிரசன்னம் பாதுகாப்புக்கான அம்சமாக ஒரு காலத்தில் இருந்ததுதான். அப்போது இல்லை. அதன் அர்த்தம் போராளிகள் நிறைய இருக்கிறவரையில் புதுக்குடியிருப்பு இனி பாதுகாப்பில்லை என்பதுதான். முருகமூர்த்தி உஷாரானான். “பையை எடு, ஜோதி” என்றான்.
“சாமி….. முகூர்த்த டைம் முடியிறத்துக்கு இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல இருக்கு…. நாமெல்லாம் மனசுவெச்சா இந்தக் கேப்புக்குள்ள கலியாணத்தையும் முடிச்சிடலாம் இல்லியா….”


நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.


பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.
‘உலகிலே அதி உயரமான மலையின் உச்சியில் இப்போது நீங்கள் நிற்கிறீர்கள்’ என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி தந்தாள் வரவேற்பில் நின்ற, தலைமுடியில் ஒற்றைப்பூ செருகிய இளம் பெண்மணி. ஹவாயில் உள்ள மௌனாகியா மலையின் உச்சியில் நாங்கள் அப்போது நின்றிருந்தோம். இமயமலை ஆசியாவில்தான் இருக்கிறது என்ற எனது நம்பிக்கையை ஒரு கணம் கேள்விக்குறியாக்கினாள். நேபாளத்திற்கும், தீபெத்திற்கும் இடையே உள்ள இமயமலையின் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலே அதிக உயரமான சிகரம் என்பதும், அதன் உயரம் 29,028 அடி என்பதும் மாணவப்பருவத்தில் இருந்தே என் மனதில் பதிந்திருந்தது. அதன்பின் இன்றுவரை இமயமலை 4 அங்குலம் வளர்ந்திருந்ததும் தெரியும். வரவேற்பில் நின்ற பெண்மணிக்கு அனுபவம் போதவில்லை, எவெரெஸ்ட் பற்றி இவர் அறிந்திருக்கவில்லை என்ற நினைவோடு, அவரைப் பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவரோ அருகே இருந்த பதாதையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டினார். மௌனாகியா மலையின் படத்தையும் அதைப்பற்றிய குறிப்பையும் வாசித்த போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருகணம் தடுமாறிப் போனேன்.

எனக்கு நடிகரும் பாடகருமான மு.க.முத்து மீது எப்போதுமே ஒருவித அனுதாபமுண்டு. கலைஞர் எம்ஜிஆரின் அரசியல் மற்றும் திரையுலகச் செல்வாக்கைப்பற்றித் தப்புக் கணக்கு போட்டார். அரசியலில் அவர் போட்ட தப்புக்கணக்கு எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்கியது. விளைவு? எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரையில் கலைஞரால் ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை. அதுபோல் எம்ஜிஆரைக் கட்சியிலிருந்து விலக்க முன்னர் எம்ஜிஆரின் திரையுலக வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தன் புதல்வனான மு.க.முத்துவைக் கதாநாயகனாக வைத்து எம்ஜிஆரைப்போல் நடிக்க வைத்தார். அது அவர் போட்ட எம்ஜிஆர் பற்றிய முதலாவது தப்புக் கணக்கு. விளைவு? நடிப்புத் திறமை, பாடும் திறமை மிக்க மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை உதித்த வேகத்திலேயே அஸ்தமித்துப்போனது. எம்ஜிஆருக்கு எதிராக மு.க.முத்துவை நடிக்க வைத்ததற்குப் பதிலாக நடிக்க வைத்திருந்தால் மு.க.முத்துவின் கலையுலக வாழ்க்கை பிரகாசித்திருக்கும் என்பதே என் கணிப்பு. 



கேள்வி: சென்ற தடவை உங்களுக்கு பிடித்தமான ஓவியர் வான்கோ எனக் கூறினீர்கள். இதற்கான காரணத்தை உங்களால் கூற முடியுமா?
சிலர் தாம் சார்ந்த அமைப்புக்கு அல்லது நிறுவனத்துக்கு விசுவாசமாக இறுதிவரை வெளிச்சத்துக்கு வராமல் இயங்கிக்கொண்டிருப்பார்கள். எவ்விதத்தேவையற்ற பிரச்சினைகளிலும் சிக்காமல் , எல்லோருடனும் அன்புடன் பழகும் இவர்கள் கடமையே கண்ணாக இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவ்வகையான மனிதர்களில் ஒருவராகவே அண்மையில் மறைந்த தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி அமைப்புகளில் இயங்கிக்கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் சதானந்தன் (ஆனந்தி) அவர்களை நான் அறிந்துகொண்டிருக்கின்றேன். புரிந்துகொண்டிருக்கின்றேன். இவரைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் எவற்றையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஆரம்பத்தில் இவர் காந்திய அமைப்பிலும் இயங்கிக்கொண்டிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
என் பதின்ம வயதுகளில் இரவுகளில் படுக்கையில் சாய்ந்திருந்தபடி படுக்கையறைச் சுவரில் பூச்சிகளைப் பிடிக்க வரும் பல்லிகளை அவதானித்திருக்கின்றேன். அந்த அவதானிப்பின் விளைவுகளாக மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கின்றேன். பல்லி சொன்ன பாடம் (ஈழநாடு வாரமலர்), பல்லிக்கூடம் (ஆனந்த விகடன்) & பல்லி (தாயகம்). கவிஞர் நீலாவணனும் என்னைப்போல் பல்லிகளை அவதானிப்பவர் என்பதை பெப்ருவரி 71 அஞ்சலி இதழில் வெளியான அவரது 'பல்லிகள்', கவிதை மூலம் அறிய முடிகின்றது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









