மண்ணும் சொல்லும்: மஹ்மூத் தர்வீஷின் கவித்துவ இயக்கவியலும் , எம்.ஏ. நுஃமானின் மொழிபெயர்ப்பு அரசியலும்! (பகுதி 2) - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) -

அத்தியாயம் 2: எதிர்ப்பின் அழகியலும் சீற்றத்தின் மொழியும் (The Aesthetics of Resistance and Rhetoric of Rage)
2.1 அரசியல் கருத்துநிலையும் மதச்சார்பற்ற மார்க்சியப் பார்வையும் (Ideological Landscape and Secular Marxism)
மஹ்மூத் தர்வீஷ் வெறும் உணர்ச்சிவசப்பட்ட தேசபக்தக் கவிஞர் மட்டுமல்ல; அவர் ஆழமான அரசியல் மெய்யியல் (தத்துவப்) பின்னணி கொண்ட ஒரு மார்க்சியப் போராளி. பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தனது அறிமுக உரையில் தர்வீஷின் அரசியல் நிலைப்பாட்டை மிகத் துல்லியமாக வரைமுறைப்படுத்துகிறார்: 1961 இல் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தர்வீஷ், பலஸ்தீனப் பிரச்சினையை வெறும் மதப் பூசலாகவோ அல்லது இனவாத மோதலாகவோ பார்க்கவில்லை. மாறாக, அதை ஒரு வர்க்கப் பிரச்சினையாகவும், உலகளாவிய ஏகாதிபத்திய-சியோனிச ஆக்கிரமிப்பாகவுமே அணுகினார்.
இடதுசாரிச் சிந்தனையாளரான பிரான்ட்ஸ் ஃபனோன் (Frantz Fanon) தனது The Wretched of the Earth நூலில் குறிப்பிடுவதைப் போல, ஆக்கிரமிப்பு என்பது ஒடுக்கப்பட்டவர்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் சேர்த்தே சிதைக்கிறது; அதற்கு எதிரான பண்பாட்டுத் தற்காப்பு என்பது தவிர்க்க முடியாமல் 'மதச்சார்பற்ற தீவிரத் தன்மையைக்' (Secular Radicalism) கோரி நிற்கிறது.
தர்வீஷ் தனது நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுவதை நுஃமான் பதிவு செய்துள்ளார்:
"நான் மதம் சார்ந்த தனித்தன்மையையும் அடிப்படைவாதத்தையும் நிராகரிக்கின்றேன். பலஸ்தீனம் எப்போதும் முஸ்லிம், கிறிஸ்தவ, யூத நாடாகவே இருந்து வந்துள்ளது."
மத அடிப்படைவாதத்தை நிராகரிக்கும் இந்த இடதுசாரிச் சிந்தனையே தர்வீஷின் எதிர்ப்புக் கவிதைகளுக்கு உலகளாவிய மானுடப் பொதுத்தன்மையை (Universal Humanism) வழங்குகிறது. அவரது சீற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது அல்ல; அது ஒட்டுமொத்த மனித அடக்குமுறைக்கு எதிரானது.


1724 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இம்மானுவேல் காண்ட் ஒரு முக்கியமான சிந்தனையாளர் எனலாம். அறிவின் மீதான இவரது கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தனக்கு முன் நிலவிய அறிவின் மீதான கோட்பாடுகளை இவர் நிராகரித்தார். காண்டுக்கு முந்தைய தத்துவவாதிகள் தங்களைச் சுற்றி இருந்த உலகத்தை தங்கள் கண்களால் காண்பதை உண்மை தோற்றம் என்று நம்பினார்கள். காண்ட் அதைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘ஒரு பொருளை நாம் கண்களால் பார்ப்பது வேறு, அது இயல்பில் இருப்பது வேறு’ என்றார் அவர். ஒரு மரத்தை நாம் மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால் அது மஞ்சள் வண்ணத்தில் தெரியும். ஆனால், மரத்தின் அசல் தோற்றம் மஞ்சளாக இராது. கண்களால் காண்பதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இப்படி, பெறும் அறிவின் மேல் சந்தேகத்தைக் கிளப்பியதால் இவரது கோட்பாட்டைச் சந்தேக வாதம் என்றும் சொல்வதுண்டு.
“வீட்டை விட்டு அகலும் பேய், வீட்டு சட்டியையும் உடைக்காமல் அகலாது” என்பது சிங்களக் கிராமியப் பழமொழி. இதனையே உக்ரைனிய-ஈரானிய போரில் இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. சிறப்பாக, ஈரானிய போரில் அமெரிக்காவின், உலக ஆதிக்கம் இப்படியான ஒரு முடிவை எட்டித்தான் முற்று பெறும் என்றால், அது, அப்படியே விதி வசம் பூண்டதாய் இருக்கட்டும்.
* கட்டுரையாளர்: முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061,

இலக்கியவாதியும் ஊடகவியலாளருமான நிலாந்தன் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து முன்னாள் ஆசிரியரும், தன்னலமற்ற தொழிற்சங்கவாதியுமான சிவராசா மாஸ்டர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை படித்தேன்.




அண்மைக்காலமாகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களால் புரியப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதில் எவ்வளவு தூரம் உண்மை, பொய் என்பது பூரண விசாரணைகளின் பின்புதான் தெரிய வரும். அண்மையில் கூடப் பேராதனைப் பல்கலைககழகத்தில் பேராசிரியர் ஒருவர் இவ்விடயத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுத் தண்டிக்கப்பட்ட செய்திகளை அறிந்திருக்கின்றோம்.




வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.



நீலகிரி படகர்கள் குறிஞ்சி வாழ்வியலை இடையாறாது பின்பற்றி வருபவர்கள். அவர்களை நீலகிரியில் வாழ்கின்ற குறிஞ்சி ஆயர்கள் எனலாம். ‘நாக்கு பெட்டா’ என்று வரையறுத்து வாழ்கின்ற நீலகிரியின் இவர்தம் புழங்குவெளி சிறப்பான கட்டமைப்பினை உடையது. இயற்கை சான்றது. தகவமைப்பின் நுட்பங்களை உட்செறித்தது. காலநிலைக்கேற்பக் காப்பு நிலையைத் தரித்தது. கடும் குளிரினையும், அடர் பனியினையும், அடை மழையினையும் கொண்ட நீலகிரியில் வாழ்வதற்குப் புறப் பாதுகாப்பினைத் தாண்டி, உணர்வுநிலை நீடும் அகப் பாதுகாப்பும் அவசியம். இது, சுற்றத்தால் அமைவது. அவ்வகையில் ‘மதிலு’, ‘அக்க பக்கா’ எனும் படகர்களின் புறம் சார்ந்த தொல்கூறுகளையும், ‘ஏகித்து கட்டோது’ எனும் அகம்சார்ந்த கூறினையும் இக்கட்டுரை ஆய்கிறது. இவை மூன்றும் சங்கக் கூறுகளோடு நெருங்கிய தொடர்புடையது நோக்கத்தகுந்தவை.


ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









