ஆங்கிலத்தில் வெளியாகும் முருகபூபதி எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை ( Mystique of Kelani River) - மணிமாறன் -
எழுத்தாளர் முருகபூபதியின் 71ஆவது பிறந்ததினம் ஜூலை 13. அவருக்குப் பதிவுகள் இணைய இதழும் ,வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெட்சுமணன் முருகபூபதிக்கு இம்மாதம் 13 ஆம் திகதி 71 ஆவது பிறந்த தினமாகும். அதனை முன்னிட்டு, அவர் ஏற்கனவே எழுதிய நடந்தாய் வாழி களனி கங்கை நூல் Mystique of Kelani River என்ற தலைப்பில் இம்மாதம் கிண்டிலில் மின்னூலாக வெளியாகிறது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் திரு. நூர் மகரூப் முகம்மட் , ஏற்கனவே முருகபூபதியின் சில ஆக்கங்களை மொழிபெயர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. நூர் மகரூப் முகம்மட் , கவியரசு கண்ணதாசனின் வனவாசம் நூலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவராவார். நடந்தாய் வாழி களனி கங்கை கிழக்கிலங்கையிலிருந்து வெளியான அரங்கம் இதழில் முன்னர் தொடராக வெளியாகி, கொழும்பு குமரன் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. அரங்கம் இதழின் ஆசிரியர் திரு. சீவகன் பூபாலரட்ணம் தனது அணிந்துரையில் இந்நூல்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: