கவிதை: பாடல்களைத் தொலைத்தவள். - தமயந்தி (தமயந்தி சைமன்) -
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
தனது குழந்தைகளுக்கான
ஏராளமான இனிய பாடல்களை
நாலாதிசைக் கரைகளின்
மணற்பரப்பெங்கும் எழுதிவைத்த அவள்
அவ்வப்போது வந்து தொட்டுத்தடவி
புவுத்திரம் பார்த்துச் செல்வாள்.
ஆழியரவிந்த மைகொண்டு எழுதிய பாடல்கள்.
அத்தனை எழுத்தும்
கொத்தடங்கா முத்துக்களால்
ஆழிப்பட்டு நூல் திரித்து
கோத்துக் கட்டிய பாடல்கள்
சொல்லுக்குச் சொல்
நாவடத்தில் குழைத்த
மீனாம்பல் திரவியம் பூசிய பாடல்கள்.