நதியில் நகரும் பயணம் (6) : ரீஜன்ஸ்பேர்க், ஜேர்மனி - நடேசன் -

- ரீஜன்ஸ்பேர்க் நகரக் காட்சி -
எங்களது பயணத்தில் அடுத்ததாக வரும் நாடு ஜெர்மனி : அதாவது ஜெர்மனியின் கிழக்குப் பகுதியான பவேரியா மாநிலம். ஒரு முக்கியமான விடயம் இங்கு சொல்ல வேண்டும். ஜெர்மனியின் வடக்கு பிரதேசங்கள் ஸ்கண்டினேவியா நாடுகள் போல் புரட்ஸ்டான்ட் மதத்தை தழுவியவர்கள். ஆனால், பவரியா மற்றும் தென்பகுதியினர் கத்தோலிக்க மதத்தினர். இங்கு இன்னமும் இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரி செலுத்துகிறார்கள்.
டானியுப் நதியில் நாங்கள் சென்ற அடுத்த நகரம் மிகவும் முக்கியமானது . பவேரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பழைய தலை நகரமான ரீஜன்ஸ்பேர்க் (Regensburg) நதியோரத்தில் உள்ளது.
இங்கே காலையில் படகிலிருந்து இறங்கி, வழிகாட்டியுடன் நதிக்கரையோரமாக நடந்தபோது, அது பழமையான நகரமாகவும், அதே நேரத்தில் அந்த பழமை பாதுகாப்பாகவும் உள்ளது. புதிய கட்டிடங்களும் எங்களால் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது. புதுமையும் பழமையும் அழகாக இணைந்து இருந்தன. பழமையை பேணியபடி, புதுமையை உருவாக்குவது எப்படி என்பதை ஐரோப்பியர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டிய முக்கிய பாடமாகும்.



தொல்காப்பியர் அடிப்படையில் அகத்திணைகள் ஏழாகப் பகுக்கப்படுகின்றன. அகத்தைச் சார்ந்த வாழ்வாக புறம் அமைகின்றது. மக்களின் ஒழுகலாறுகளைக் கூறும் அகம ;ஐந்திணைப்பாடல்களில் இயற்பெயர் சுட்டாமல் அமையும் என்று இலக்கணநூலார் வரையறை செய்வர். ஒருவரும் தம் பெயரைச் சுட்டி கூறும் மரபுவழக்கில் இல்லை என்பதை ,
ஒரு ஓவியனின், புதிய சித்திரத்திற்கான தயாரிப்புகளுடன் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' நாவல் ஆரம்பமாகின்றது. ஓவியன் பின்வரும் பொருள்படக் கூறுவான் :


பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
உனது மண்ணில் பூக்கும்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 26-1-2025 கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பால் அல்பியன் வீதியில் உள்ள 925, திஸ்டில் நகர மண்டபத்தில் ஆசிரியர் திருமதி கமலவதனா சுந்தாவின் தலைமையில் தமிழ் மரபுத்திங்கள் மற்றும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக வீடு விற்பனை முகவர் வாருணன் ஸ்ரீகுமரகுரு கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நடந்த கண்காட்சியில் தமிழ் வளர்த்த பெரியோர் மற்றும் தமிழ் மன்னர்களின் படங்களும், தமிழ் மரபு சார்ந்த காட்சிப்படங்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.








இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று நுட்ப அணி அணியாகும். தண்டியலங்காரத்தில் நுட்ப அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில்,

கடந்த கால கசப்புகளை மனதிற்குள் விழுங்கியிருந்த சைமனுக்கு கொஞ்ச நாட்களாகத்தான் அவனிடமிருந்து அந்த எண்ணங்களும் நினைவுகளும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கி இருந்தன. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அவன் கொடியின் மீது கொண்ட அளவற்ற பிரியமே. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்ற சைமனுக்கு ;ஓய்வு நேரம் என்பது மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மேசன் வேலைக்கும், தச்சு வேலைக்கும் போய் வருவான். அப்படிப் போய் வருகிற வருமானத்தில் பெரும் பகுதியை அவனுடைய அம்மாவிடம் கொடுப்பான். ஒரு குறிப்பிட்ட தொகையை அவனுடைய கைச் செலவுக்கு வைத்துக் கொள்வான். இவ்வளவு பிரச்சனையும், சிக்கலும் நிறைந்து இருக்கின்ற அவனுடைய வாழ்க்கையில் மலர்க்கொடி மீது தீராக் காதல் எப்படியோ வளர்ந்து உறைந்து கிடக்கிறது. எப்போது அவளைப் பார்க்கின்றானோ அப்போதெல்லாம் தன் உயிரில் அவள் உயிர் உரசியது போல் உணர்வான். அலையற்ற பெண் கடலின் மீது ஒரு சருகொன்று மிதந்து தன் உடல் முழுவதும் ஊர்ந்து செல்வது போல் தோன்றும். அவள் அவனைக் கடந்து செல்லும் போகும் போதெல்லாம் தன்னுள் ஊறும் உயிர் ஒன்று எப்படி தன்னிடம் இருந்து விலகிப் போகும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான். காலத்தையும் நேரத்தையும் கடந்து செல்ல முடியாமல் அவள் நினைவில் ஊறிக் கிடந்தது அவனுடைய உணர்வும் உடலும் .

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









