இலாப நோக்கற்று இயங்கும் ஓராயம் அமையம்! - வ.ந.கி-
உலகம் கொரோனாப் பெருந்தொற்றில் மூழ்கிக் கிடந்த காலகட்டத்தில் , 1971-1977 காலப்பகுதியில் யாழ் இந்துக்கல்லூரியில், சமகால வகுப்புகளில் கல்வி கற்று வெளியேறி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வசித்துவரும் மாணவர்களில் சிலர் இணைந்து உருவாக்கிய, சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும், கனடாவிலும், இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட, இலாப நோக்கற்று இயங்கும் அமைப்பே ஓராயம் அமையம் ஆகும். இவ்வமைப்பு புலத்து மக்களோடு இணைந்து செயற்படும் வகையில் கல்வி, விவசாயம், நீர்வளப்பாதுகாப்பு, சுகவாழ்வு, சூழற்பாதுகாப்பு, ஆரம்பக் குழந்தைக் கல்வி எனப் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருவதுடன், கடந்த மூன்று வருடங்களாகப் பல்வேறு திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை, ஏப்ரில் 22, 2023 அன்று ஓராயம் அமையம் 'செல்நெறியும் பகுப்பாய்வும்' என்னும் தலைப்பில் மெய்நிகர்க் கலந்துரையாடலொன்றினை நடத்தியிருந்தது. இதில் கடந்த மூன்று வருடங்களாக இயங்கிவரும் ஓராயம் அமையம் தன் கடந்த கால, நிகழ்கால, எதிர்காலத் திட்டங்கள் பற்றி உரையாடியது. இந்நிகழ்வில் முன்பள்ளிக் கல்வி மேம்பாடு, பாடசாலை மற்றும் வீட்டுத்தோட்டங்கள், கிராமியக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுகவாழ்வு ஆகிய நான்கு விடயங்களையொட்டிக் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் இத்துறைகளைச் சார்ந்த ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் பங்குபற்றியிருந்தார்கள்.




“கள்ளா! ஏய்… கள்ளா!
உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத்திகழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா. இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.

சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான். 





ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.


முன்பனி பின்பனி மாறிய பின்னே


நீங்கள் அதிசயமானவர்கள்


இன்று, ஏப்ரில் 10, சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









