கவிஞர் தமயந்தி கவிதைகள் ஏழு! - தமயந்தி -
- தமயந்தி (தமயந்தி சைமன்) கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்கலைஞர், காணொளிக் கலைஞர், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமை மிக்கவர். ஏப்ரில் 8 அவரது பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். சொல்லும், செயலும் ஒன்றாக இயங்கும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர்களில் எழுத்தாளர் தமயந்தியும் ஒருவர். முகநூலில் அவர் பதிவு செய்திருந்த இக்கவிதைகள் அவர்தம் ஆளுமையினை வெளிப்படுத்தும். கடலுடனான அவர்தம் பிணைப்பை வெளிப்படுத்தும். தமயந்தி கடலின் மைந்தன். நவீனத்தமிழ் இலக்கிய உலகில் கடலைப்பற்றிய இவரது கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முக்கியமானவை. - பதிவுகள்.காம் -

1. சாட்சிகள் செத்த இரவு
எதுவுமே தெரியாததுபோல்
காலையில்
எழுந்துவரும் சூரியனிடம்
எதைத்தான் எடுத்துரைக்கும்
முகமுடைந்த பனந்தீவுகள்?
இரவோடு இரவாக
எல்லாவற்றையும் அள்ளிச்சென்ற
புயலின் வழித்தடம் பற்றி
எஞ்சியிருக்கும் கோரைப்புற்களிடம்
சாட்சியம் சொல்ல ஏது வார்த்தைகள்?
நிலமெங்கும்
கடற்கரை மணலைப்போல
சிந்திக்கிடக்கும் நட்சத்திரங்களை
கடகத்தில்
அள்ளிச் செல்கிறது கடல்.
புயல் பிரித்தெறிந்த
ஏதாவதோர் குடிசையின் கீழ்
நிலவு
உடைந்து கிடக்கக்கூடுமென
எல்லா திசைகளிலும்
தேடி அலைகிறது கடல்.
காரான் சுழி உறிஞ்சி
கரையில் போடப்பட்ட மீன்களுக்கு
பால் கொடுத்துக்கொண்டிருந்த
நிலவைக் கண்டு
விம்மி அழுதது கடல்
நிலவும் கடலும்
ஒன்றையொன்று தழுவிக்கொண்டபோது
பாதிப்பகலை முடித்துக்கொண்டு
மீண்டும்
பனந்தீவுகளுக்குப் பின்னால்
மறைந்துகொண்டது சூரியன்.
நாளையிரவோ
அல்லது
இன்னொரு நாளின் இருளிலோ
மீண்டும் புயல் வரக்கூடும்.
அப்போதும் சூரியனுக்கு
எதுவுமே தெரியாதுபோம்.


சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.


“31.4 ட்ரில்லியன் டாலர் கடன்?”
“ சொல்லுங்க சுமணாவதி……. சுகமா இருக்கியளா……” கம்பீரமாக்க் கேட்டேன்.
கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் தனது பவளவிழாவையும், பிறந்தநாளையும் நேற்று கொண்டாடினார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்கின்றேன். அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தது யாழ் பல்கலைக்கழகத்தில். நண்பர் ஆனந்தகுமார் அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்தார். யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு அவர் ஒரு வருடம் சீனியர். பால்ய காலத்திலிருந்து அறிமுகமான நட்பு. அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை கற்றுக்கொண்டிருந்தேன். 80/81 வருட மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராகவிருந்தேன். 'நுட்பம்' சஞ்சிகைக்கு கலாநிதி கா.சிவத்தம்பி, கலாநிதி க.கைலாசபதி ஆகியோரிடமிருந்து ஆக்கங்கள் வேண்டி அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். அப்பொழுது ஆனந்தகுமார் மூலம் அறிமுகமானவர்தான் அப்போது அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மு.நித்தியானந்தன் அவர்கள்.
கடந்த நான்காண்டுகாலமாக ( 2019 – 2022 ) தொடர்ந்தும் அஞ்சலிக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். மீண்டும் இந்த ஆண்டு ( 2023 ) முதல் இந்தவேலையை தொடக்கிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார் மொழிபெயர்ப்பாளர் தேவா. இவரது இயற்பெயர் திருச்செல்வம் தேவதாஸ். சந்திப்பதற்கு நான் பெரிதும் விரும்பியிருந்த ஒருவர்தான் தேவா. இவருடன் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விட்டதே என்ற சோகம் மனதை வாட்டுகிறது. இவரது சிறந்த மொழிபெயர்ப்பில் வெளியான இரண்டு நூல்களை படித்து, எனது வாசிப்பு அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். முதலாவது உகண்டாவைச் சேர்ந்த சைனா கெய்ரெற்சி எழுதிய தன்வரலாற்றுச் சித்திரிப்பான குழந்தைப்போராளி என்ற நாவல். மற்றது இலங்கையைச் சேர்ந்த கடற்படைத் தளபதி அஜித்போயாகொட எழுதிய சிறை அனுபவங்களான நீண்ட காத்திருப்பு. இரண்டு நூல்களுமே போரின் அனுபவங்களை பேசியவை.

இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின் கல்வி, அரசியல், சமூகம், இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.


நாவல் பல்வேறு தரப்பாராலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாகும். கதைகளிலும், வரலாறுகளிலும் விருப்பம் கொள்ளுகின்ற உணர்ச்சியுள்ள மனித மனமானது நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல எனலாம். நாவல்கள் தனி மனிதச் சிக்கல்களையும், சமுதாயச் சிக்கல்களையும் எடுத்துக் காட்டும் கதைக்களங்களையும், கற்பனையான உரை நடைகளையும் கொண்டிருக்கும். நாவல்கள் முதலாம் நிலை அனுபவங்களாகவும், இரண்டாம், மூன்றாம்நிலை அனுபவங்களாகவும் அல்லது இவைகளுடன் கற்பனைகள் கலக்கப்பட்டதாகவும் காணப்படலாம். நாவலை சரியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
இந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளில் ஒன்று காவிரி. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி வழிபாடுகள் செய்கின்றனர்.காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும், பொன்னி ஆற்றையும், பொன்னான சோழநாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். கம்பர் காலத்திலும் காவிரிஆறு, கங்கை ஆற்றுக்கு ஒப்பானது என்று மக்கள் கருதி வந்தனர்.கம்பரும் கங்கையை நினைவு கூறும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். அவ்விடங்களில் சிலவற்றை ஆராய்வோம்.
இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.

மொட்டெ அக்கா வீட்டின் முன்ஜன்னலை உடைத்தபோது முகத்தில் அறைந்த, குடலைப் பிரட்டும் பிணநாற்றம் செள்ளியைப் பீடித்திருந்தது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு முற்றத்தின் மூலையில் முழங்காலிட்டு வாந்தியெடுத்த நினைவு அவளின் தலைக்கேறியிருந்தது. வாயை அகலத்திறந்து, நாக்கை நீட்டி நீட்டி, காற்றை இழுத்து இழுத்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கெல்லாம் சிக்காது, பிரட்டலாக அடிவயிற்றிலேயே நின்றெரிந்த அந்த நாளைவிட இந்தநாள் அதிகக் கனத்தது.



மாதுயர்ப்படு முஸ்லிம் 
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









