அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன் - த.சிவபாலு B.Ed.Hons. M.A.Cey. - -

- அண்ணாவியார் குமுழமுனை நாகலிங்கம் நெல்லிநாதன்-
பிறந்தகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனை என்பது அண்ணாவியார் நாகலிங்கம் நெல்லிநாதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் ஊராகும். இக்கிராமம் வன்னியின் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட கிராமமாகும். சோழராட்சிக்காலத்தில் திருகோணமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த வளந்தொட்டுக் குளம் பெருக்கிய மன்னான குளக்கோட்ட மன்னனின் ஆட்சிக்கும் இக்கிராமம் உட்பட்டிருந்தது. தண்ணிமுறிப்புக் குளம் இவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு. இக்கிராமத்தில் ‘வன்னியன் வளவு’ ‘வன்னியன் கிணறு’ ‘யானை கட்டிய புளி’ என்னபன வன்னியர் இக்கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகளாகக் காணப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் இக்கிராமத்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கோலாட்டம், கும்மி, கூத்துப் போன்ற கலைகளில் செலவு செய்துள்ளனர். வெளியிடங்களிலிருந்து அண்ணாவிமாரை அழைத்துவந்து கூத்துக்களைப் பழகி மேடையேற்றி ஆடி வருவது வழமையாக இருந்துவந்துள்ளது.
குடும்பப் பின்னணி
குமுளமுனை சின்னப்பிள்ளை நாகலிங்கம் மற்றும் ஆறும் இரத்தினம்மா தம்பதியினரின். நான்காவது மகவாகப் பிறந்தவர் நெல்லிநாதன். மூத்த சகோதரர் நடனசபாபதி நீர்பாபசனத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டாவது சகோதரர் ஈஸ்வரபாதம் கூத்துக்கலையில் இவரும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளமையிலேயே மறைந்தவர். அடுத்ததாகப பிறந்த சகோதரி யோகேஸ்வரி திருமணமாகி வேறு பழம்பாசி என்னும் கிராமத்தில் குடியேறியுள்ளார். அடுத்தவர் குகன் என்னும் இளைய சகோதரர், அடுத்தவர் சந்திரகுமாரி திருமணமாகி ஊரிலேயே வாழ்நதவருகின்றார். லலிதகுமாரி ஆசிரியையாக குமுளமுனை ம.வி.யில் கற்பித்துவருகின்றார். திருமணமாகிப் பிள்ளைகளோடு குமுளமுனையில் வாழ்ந்து வருகினறார். நேசமலர் இளைய சகோதரி முள்ளியவளையில் திருமணம் செய்து அங்கேயே வாழந்து வருகின்றார்.
நெல்லிநாதன் சம்மளங்குளத்தைச் சேர்ந்த செல்வரத்தினம், அன்னலட்சுமி தம்பதியினரின் புதல்வி சூரியபவானியைத் தனது வாழ்க்கைத் துணவியாக்கி இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் உள்ளார்.



மிஸஸ் மல்லார்டுக்கு (Malard ) இதய சிக்கலால் பாதிப்புள்ளது என்பதைப் பார்த்து, அவரது கணவரின் இறப்பின் செய்தியை மிக மெதுவாகச் சொல்ல மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.






சுயமாக நடமாடக்கூடியதாக இருக்கும்வரை, வருடத்துக்கொரு தடவை எங்காவது ஒரு பயணம் செல்லவேண்டும் என்பது என் முதுமைக்கால இலக்குகளில் ஒன்றாகும். பயணங்களுக்கான ஆயத்தங்களையும், பயணங்களில் இருக்கும்போது நாளாந்தம் செய்யக்கூடியவற்றுக்கான பட்டியல்களையும் பிள்ளைகள் செய்துதந்தாலும்கூட, அவர்களில் ஒருவருடன் பயணிக்கும்போதே பயணங்கள் சிறப்புப் பெறுகின்றன. அதற்கு ஒத்த ரசனையுள்ளவர்கள் பயணிக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது என்பதும், பயணத்தின்போது வரும் பிரச்சினைகளை பிள்ளைகள் தீர்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் காரணங்கள் எனலாம். அவ்வகையில், இவ்வருடப் பயணத்தைப் பற்றிச் சிந்தித்தபோது, சின்ன மகளின் அடுத்த இரண்டு வருடக் கற்கையின்போது, சுற்றுலாவுக்கான நேரம் அவவுக்கு கிடைக்காது என்பதால், அவவுடன்தான் இம்முறை பயணிக்கவேண்டுமென நான் விரும்பினேன். அந்த விருப்பத்தைச் சாத்தியமாக்குவதானால் பயணம் ஒரு கிழமைக்குட்பட்ட செப்ரெம்பர் மாதப் பயணமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதற்கு San Francisco பொருத்தமாக ஓரிடமாக இருக்குமென மூத்த மகள் ஆலோசனை கூறினா.

தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர். 



அண்மையில் ரொறன்ரோவில் மார்க்கம் விளையாட்டரங்கில் கண்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. கனடாவில் கோடைகாலம் முடிந்து இலையுதிர் காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. அத்துடன் குளிரும் வந்துவிட்டது. மரங்கள் எல்லாம் நிறம் மாறி இலைகளை உதிர்க்கத் தொடங்கி விட்டன. இலை உதிர்க்குமுன் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஒரேன்ச் என்று பலவிதமாக மரங்களின் இலைகள் மாறி இருப்பதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு மாறுபட்ட காட்சியாகத் தெரியும். இங்கே உள்ள ஊசியிலை மரங்கள் பனிக்காலத்தில் இலை உதிர்ப்பதில்லை, அவை மாற்றமின்றி அப்படியே இருக்கும்.



இலண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும். ‘ஆற்றல் மிகுந்த மூளையின் தூண்டுதலாலும் வேகமான வாசிப்பாலும்தான் இவரது பேச்சுகள் இத்துணை நுட்பமாக அமைகின்றனவோ?‘ என்று எனக்கு வியப்புண்டு.



அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அ.எப்தா நிஷான் A.bdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று இல்பொருள் உவமை அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் இல்பொருள் உவமை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









