பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம் – பேகம் கதீஜாவின் கஸ்ட ஜீவிதம் மீளெழுதப்பட வேண்டிய அற்புத காவியம்! - ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்), சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம். -

- அண்மையில் ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) எழுதிய எம்.எம்.நெளஷாத்தின் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' என்னும் அவரது முகநூற் பதிவிது. நாவலைப்பற்றிய நல்லதொரு , மனத்தைக் கவரும் வகையில் எழுதப்பட்டிக்கும் விமர்சனமிது. நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகின்ற விமர்சனம். முகநூலில் வெளியான இக்கட்டுரை விபரிக்கும் 'பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்' நாவலினை உலகளாவியரீதியில் வசிக்கும் பதிவுகள் வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்துவதன் அவசியம் கருதி மீள்பிரசுரமாகின்றது. பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, - பதிவுகள்.காம் -
1.
நாவல் பல்வேறு தரப்பாராலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாகும். கதைகளிலும், வரலாறுகளிலும் விருப்பம் கொள்ளுகின்ற உணர்ச்சியுள்ள மனித மனமானது நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல எனலாம். நாவல்கள் தனி மனிதச் சிக்கல்களையும், சமுதாயச் சிக்கல்களையும் எடுத்துக் காட்டும் கதைக்களங்களையும், கற்பனையான உரை நடைகளையும் கொண்டிருக்கும். நாவல்கள் முதலாம் நிலை அனுபவங்களாகவும், இரண்டாம், மூன்றாம்நிலை அனுபவங்களாகவும் அல்லது இவைகளுடன் கற்பனைகள் கலக்கப்பட்டதாகவும் காணப்படலாம். நாவலை சரியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
சமீபகாலமாக தமிழில் அந்நியப் பெயர்களை (குறிப்பாக அறபுப் பெயர்களை) வைக்கும் ”மோஸ்தர் நிலவுகின்றது. உதாரணமாக மூமின், சலாம் அலைக், பர்தா, ஆயத் போன்றவைகளைக் குறிப்பிடலாம். இதன் இன்னொரு வகையாக சமீபத்தில் மலையாள வாடை அடிக்கக்கூடிய இரண்டு தமிழ் வரவுகள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று ”என்டெ சீவியத்திலிருந்து…” என்ற எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களுடைய கட்டுரைத் தொகுப்பு. மற்றையது டொக்டர் எம்.எம். நௌசாத் அவர்களின் ”பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம்” என்ற நாவலுமாகும்.
பேகம் கதீஜாவின் சாமானிய ஜீவிதம், பக்கங்கள் 188, முதலாவது வெளியீடு 2022, கஸல் பதிப்பகம், ஏறாவூர், இலங்கை. விலை ரூ 900.00, இந்தியா ரூ 220.00. லார்க் பாஸ்கரனின் அட்டை வடிவமைப்பும், நீல நிறத்தில் தரமான அட்டையும், சந்தோஸ் கொலன்ஜியின் புத்தக வடிவமைப்பும், சிறப்பான துாய்மையான நுாலாக்கமும், நாவலுக்கு மேலும் ஒரு பெறுதியைச் சேர்க்கின்றது.
மொனறாகலை நகரிலிருந்து பதுளை நகரிற்கு செல்லும் வழியில் பதினாறாவது மைல் துாரத்தில் இடது பக்கம் மேல் நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு கிராமம் இருக்கின்றது. அது குக்கிராமம். அதன் பெயர் சாம்பல்மேடு. இந்தக் கிராமம் வருடாந்த கந்துாரி ஒன்றுக்கும் பெயர் போனதாகும். இந்த மக்கள் விருநதோம்பலுக்கும், ஆதரிப்புக்களும் பெயர் போனவர்கள். அங்கு வாழ்ந்துவரும் பேகம் கதீஜா என்னும் பெண்ணுடன் அல்லது பெண்ணை மையமாக வைத்து அவளின் சாமானிய ஜீவியக் கதை தொடங்குகின்றது. பேகம் கதீஜா பிறக்கும் போது அவளது தாய் இறந்து போகிறாள். பிறந்தது பெண் பிள்ளை என்று தெரிந்ததும் தகப்பனும் அவளை விட்டு அல்லது அந்தக் கிராமத்தை விட்டு ஓடிப் போகிறான். அதன் பின்னர் கதீஜா அன்பானவளும், கண்டிப்பானவளுமான தனது பாட்டியுடன் வளர்கிறாள். (கதீஜாவின் தாய், கதீஜாவின் பாட்டிக்கு திருமணம் முடித்து ஒரு மாத இல்லற வாழ்வில் கிடைத்தவள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பாட்டியின் கணவனும் சந்தேகம் கொண்டு பல காலங்களுக்கு முன்பு பாட்டியை விட்டுப் பிரிகிறான் என்ற கிளைக்கதையும் இங்கு இருக்கின்றது).


இந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளில் ஒன்று காவிரி. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி வழிபாடுகள் செய்கின்றனர்.காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும், பொன்னி ஆற்றையும், பொன்னான சோழநாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். கம்பர் காலத்திலும் காவிரிஆறு, கங்கை ஆற்றுக்கு ஒப்பானது என்று மக்கள் கருதி வந்தனர்.கம்பரும் கங்கையை நினைவு கூறும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். அவ்விடங்களில் சிலவற்றை ஆராய்வோம்.
இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.

A Long Watch: War, Captivity and Return in Sri Lanka by Commodore Ajith Boyagoda, as told to Sunila Galappatti, is published by Hurst - தமிழ்பதிப்பு ( நீண்ட காத்திருப்பு ) - வடலி வெளியீட்டகம்- தமிழில் தந்தவர் - தோழர் தேவா - நேற்று அவரும் மரணித்தார். 
மொட்டெ அக்கா வீட்டின் முன்ஜன்னலை உடைத்தபோது முகத்தில் அறைந்த, குடலைப் பிரட்டும் பிணநாற்றம் செள்ளியைப் பீடித்திருந்தது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு முற்றத்தின் மூலையில் முழங்காலிட்டு வாந்தியெடுத்த நினைவு அவளின் தலைக்கேறியிருந்தது. வாயை அகலத்திறந்து, நாக்கை நீட்டி நீட்டி, காற்றை இழுத்து இழுத்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கெல்லாம் சிக்காது, பிரட்டலாக அடிவயிற்றிலேயே நின்றெரிந்த அந்த நாளைவிட இந்தநாள் அதிகக் கனத்தது.



மாதுயர்ப்படு முஸ்லிம் 
நீங்கள் என்றவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழுங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே.


'நாம் விரும்புகின்றவையும் திட்டமிடுபவையும் எப்போதும் நடந்து விடுவதில்லை .விரும்பாதவையும் எதிர்பாராதவையும் நடந்து விடுகின்றன ' . யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அம்மையாரின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பில் படைப்பாளியின் உரை இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. தத்துவார்த்தமான வசனங்கள் மட்டுமல்ல, சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகவும் இதுவே அமைந்துள்ளது.



"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.
திருச்சூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இளம் பெண் கவி அனிஷா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவருடன் கவிதை சார்ந்த ஒரு உரையாடல் :




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









